TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு!

2 posters

Go down

தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு! Empty தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு!

Post by ஜனனி Sat May 22, 2010 1:24 pm

தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு! Seeman02


தோற்றத்தில்
மட்டுமல்ல, சீற்றத்திலும் சீமான் ஒரு புலிதான் என்பதை நிருபித்தது அந்த
முதல் கூட்டம்! அவரது 'நாம் தமிழர்' அரசியல் கட்சியின் முதல்
பொதுக்கூட்டமல்லவா? 18-5-10 அன்று நடந்த அந்த கூட்டத்தையும் அவரது ஒவ்வொரு
அசைவையும் சக அரசியல் கட்சிகளும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களும்
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாகவே உணர
முடிந்தது. நெருப்பை பொட்டலத்தில் கட்டிய மாதிரி தீயாக தகித்துக்
கொண்டிருந்தார்கள் திரளாக கூடியிருந்த சீமானின் தம்பிகள்.


சங்கம்
வைத்து தமிழ் வளர்த்த மதுரையைதான் முதல் மேடைக்கு பொருத்தமான இடமாக தேர்வு
செய்திருந்தார் சீமான். ஊருக்கு ஒதுக்குபுறமாக மைதானம் இருந்தாலும்,
அன்றைய தினம் ஊரே அங்குதான் இருந்தது. மாலை நாலு மணிக்கு துவங்கிய பேரணி
பெரும் முழக்கங்களுடன் மைதானத்தை வந்தடைந்த போதும் ஏழரை மணி வரை ஊர்வலம்
தொடர்ந்து கொண்டிருந்தது!

மேடையின்
இருபுறமும் தமிழீழத்திற்காக உயிரை கொடுத்தவர்களும், தமிழறிஞர்களும்,
வீரர்களும், சில முக்கியமான அரசியல் தலைவர்களும் புகைப்படமாக
இருந்தார்கள். (அடடே, அதில் சந்தன வீரப்பன் படமும்...) தியாகி
முத்துக்குமாரின் படம் தாங்கிய அந்த மேடையின் எதிரிலேயே அவரது அப்பாவும்
அமர்ந்திருந்தார். நாம் தமிழர் கட்சியின் முதல் கொடியையும் அவர்தான் ஏற்றி
வைத்தார். முன்னதாக தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி. "நமது தேசிய
தலைவர் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் உயிரோடுதான்
இருக்கிறார்கள். நமக்கு சிக்னல் வந்து கொண்டுதான் இருக்கிறது. தலைவரது
ஆலோசனைபடிதான் சீமான் கட்சி ஆரம்பித்திருக்கிறார்" என்று அவர் சொல்ல
சொல்ல, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம்!

கடைசியாக தொண்டர்களின் உற்சாக கூச்சலுக்கு நடுவே மைக்கை பிடித்தார் சீமான். அந்த மிக நீண்ட சொற்பொழிவில் சில பகுதிகள் மட்டும் இங்கே-

"நாங்கள்
கட்சி ஆரம்பித்ததை பலர் விமர்சிக்கலாம்.அதைப்பற்றி கவலைப்படவில்லை.
அமைதியான கடல் நல்ல மாலுமிகளை உருவாக்க முடியாது. அதனால் விமர்சனங்களை
வரவேற்கிறோம். நாம் தமிழர் இயக்கத்தை நாங்கள் தொடங்கவில்லை; தொடர்கிறோம்.
ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் இது. எந்த தேவைக்காக எந்த
நோக்கத்திற்காக இது தொடங்கப்பட்டதோ அது அப்படியே இருக்கிறது. அதனை
நிறைவேற்றவே இதனை தொடர்கிறோம். நான் இதற்கு தலைவன் இல்லை. என்றைக்குமே என்
தலைவனுக்கு (பிரபாகரன்) நான் தம்பிதான். கட்சி தொடங்குவதற்கு நாங்கள்
பணக்காரர்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் என்ற இனக்காரர்களாக
இருக்கிறோம்.

இதனை செய்ய தமிழன் என்ற
தகுதி இருக்கிறது அதனைத்தவிர உண்மையும் நேர்மையும் மக்களுக்காக களமாற்றும்
துணிவும் இருக்கிறது. தமிழுக்காக ஒரு கட்சி தமிழனுக்கு தமிழன் ஆட்சி.உடல்
மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் தொடங்கியுள்ளோம்.
ஈழ விடுதலைக்காக மட்டுமல்ல தமிழன் எங்கு வாழ்ந்தாலும் போராடும் கட்சியாக
இருக்கும.

7கோடி தமிழர்கள் வாழும்
தேசம் அருகில் நம் கண்முன்னே தாய்நிலம் தரிசாக்கப்பட்டு கிடக்கிறது. இதன்
காரணம் என்ன? 1 கோடி சிங்களன் சிங்களனாக இருக்கிறான் 7 கோடி தமிழன்
தமிழனாக இல்லை. சாதி தமிழனாக, மத தமிழனாக பிரிந்து கிடக்கிறான். என் இனம்
கண்முண்ணே செத்துக்கொண்டிருக்கும்போது என் இனத்தின் எதிரியாக
ஜெயலலிதாவும், துரோகியாக கருணாநிதியும் இருக்கிறார்கள்.

ராஜிவ்காந்தி
கொலையை மட்டுமே காரணம் சொல்கிறீர்களே, இந்திய ராணுவத்தால் 12000 தமிழ்
உயிர்கள் போனதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஒரு மரணத்திற்கு ஒரு இனத்தின்
மரணம் சமமா?

சிங்களனுக்கும்
தமிழனுக்கும் மட்டும் யுத்தம் நடந்திருந்தால் ஒரு சிங்களன்கூட உயிரோடு
இருந்திருக்கமாட்டான். ஏன் போருக்கே வந்திருக்க மாட்டார்கள். 20
வல்லாதிக்க நாடுகளின் துணையோடுதானே வீழ்த்தினீர்கள்? அப்படியென்றால்
உலகத்திலேயே சர்வ வல்லமை படைத்த ராணுவத்தை என் தலைவன் பிரபாகரன்தான்
வைத்திருந்தான். தமிழர்களின் விடுதலை போராட்டம் முடிந்தது என்று
நினைப்பவர்களே, தமிழ் இனம் இன்னுமும் இத்துப்போகவில்லை செத்து போகவில்லை
என்பதை பார் (கூட்டத்தை சுட்டி காட்டுகிறார்) ரத்தம் சிந்தாத
யுத்தத்திற்கு நாங்கள் தயாராகிவிட்டோம். உலகத்தில் கடைசி தமிழன்
இருக்கும்வரை தமிழின போராட்டம் நிற்காது.

கொஞ்சம்
ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் என்றான் சுபாஷ்சந்திரபோஸ்.
நாங்கள் நிறைய ரத்தம் சிந்திவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள்
என்றுதானே கேட்கிறோம். இந்திய தேசம் தமிழனுக்கு ஒரு நன்மையும்
செய்துவிடவில்லை. ஒரு கோடி தீமைகள்தான் தந்திருக்கின்றது. ஆட்சி
அதிகாரத்தை அடைய அந்த அதிகாரத்தை கருணாநிதியிடமிருந்து பறிக்கும்வரை
தமிழர்கள் ஓயக்கூடாது.

பணத்தை நம்பி
இந்த இயக்கத்தை தொடங்கவில்லை. இனத்தை நம்பி தொடங்கியுள்ளேன். இனம்
சேர்த்தால் பணம் சேரும். உங்கள் முன்னே நிற்கும் சீமான் தலைவன் இல்லை.
மூத்தவர்களுக்கு தம்பி; இளைஞர்களுக்கு அண்ணன். என் வருமானத்தை
விட்டுவிட்டு இந்த வேலைக்கு வந்தது என் இனமானத்தை காக்க. வீட்டுக்கு வீடு
ஒரு போராளியை பெற்றெடுப்போம். பிறகு வீட்டை வென்றெடுப்போம். பிறகு நாட்டை
வென்றெடுப்போம். அரசியல் சாக்கடை என்று நினைத்து கற்றவர்கள்
ஒதுங்குவதால்தான். கயவ்ர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். எனவே அரசியல்
அவசியமாகிறது. எனவே இனி அறிவாயுதம் ஏந்தி அரசியல் களம் காண்போம்.
தி.மு.கவின் எதிரி அதிமுக அல்ல;அதிமுகவின் எதிரி தி.மு.க அல்ல. இந்த இரு
கட்சிகளுக்குமே எதிர் கட்சி நாம் தமிழர் கட்சிதான். சந்தர்ப்பம் வரும்போது
நாம் தமிழர் கட்சி தேர்தல் களம் காணும்." என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு! Empty Re: தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு!

Post by சிவா Sat May 22, 2010 7:59 pm

அவரின் ஆவேசத்தை நான் வரவேற்கிறேன்
சிவா
சிவா
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் மோடி மாநாட்டில் வைகோ ஆவேச பேச்சு...
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» என் பாட்டி-தந்தையைப் போன்று என்னை கொலை செய்தாலும் கவலைப்பட மாட்டேன்: ராகுல் ஆவேச பேச்சு
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
» வலுவான லோக்பால் சட்டம் வரும் வரை மத்திய அரசுடன் பேச்சு இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum