TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


படித்த பாடம் மறந்து போகிறதா உங்கள் குழந்தைகளுக்கு? நியாபக மறதியைப் போக்க வழி!

2 posters

Go down

படித்த பாடம் மறந்து போகிறதா உங்கள் குழந்தைகளுக்கு? நியாபக மறதியைப் போக்க வழி! Empty படித்த பாடம் மறந்து போகிறதா உங்கள் குழந்தைகளுக்கு? நியாபக மறதியைப் போக்க வழி!

Post by அருள் Tue Oct 28, 2014 7:39 am

[You must be registered and logged in to see this image.]
ஆர்.ராஜா, தேனி
'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், ஒரே நாளில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் ஒரு பாடம் படிக்க  நினைக்கிறேன். ஆனால் ஒரு பாடம் முடிக்கும்போது அடுத்த பாடம் மறந்து போகிறது. இந்த மறதியைப் போக்க வழி இருக்கிறதா?'
டாக்டர் அபிலாஷா, மனநல நிபுணர், சென்னை
'நல்ல மதிப்பெண்கள் பெற முயற்சி செய்யும் உங்களுக்கு, முதலில் வாழ்த்துகள். எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும்தான். அதற்காக, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் படித்துவிட முடியாது. நமது மூளையில் ஒரு விஷயம் நன்றாகப் பதிவதற்கு சில நொடிகள் எடுத்துக்கொள்ளும். அந்தக் கால அவகாசம்கூட கொடுக்காமல், வெவ்வேறு பாடங்களைப் படிக்க நினைத்தால் எதுவும் மனதில் நிற்காது. ஆரம்பத்தில் படிக்கும்போது, நன்றாக நினைவிருப்பது மாதிரிதான் இருக்கும். போகப் போக அது மறந்துவிடக்கூடும். ஆரம்பத்திலேயே, எதை, எப்படி, எப்போது படிக்க வேண்டும்  என  பட்டியல் போட்டுப் படிப்பது நல்லது. அப்போதுதான், மூளையில் தகவல்களைச் சரியாகச் சேமிக்க முடியும். ஒரே நாளிலோ அல்லது குறிப்பிட்ட நேரத்துக்
குள்ளாகவோ எல்லா பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்ற  நிர்பந்தம் வராத அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பாடத்தைப் படிக்கிறோம் என்றால், முதலில் எளிமையான பகுதிகளைப் படியுங்கள். அப்புறம் கடினமாக இருக்கும் பகுதிகளைப் படியுங்கள். எளிமையாக இருக்கும்[You must be registered and logged in to see this image.] விஷயத்தை ஊன்றிப் படிக்கும் போது, அது நினைவுத்திறனில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அகலாது.
அடிக்கடி மறந்துவிடுவது ஒரு சாதாரணக்  குறைபாடுதான். அதை சுலபமாகத் தாண்டி வர முடியும். படிக்கும் சூழலில் நெருக்கடி வராமல் உங்களின் நேரத்தை சரியாகத் திட்ட மிட்டுப் படியுங்கள். படிப்பது என்பது மூளையில் பதிவாகி  இருக்கிறதா இல்லையா என்பது தான் முக்கியம். அதைக் கவனத்தில்கொண்டு படியுங்கள். வெற்றி நிச்சயம்!''
பு.கண்ணன், கோவை
'இரண்டு வருடங்களாக கடுமையான ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறேன். வலி மாத்திரைகளால் நிரந்தரமான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. ஒற்றைத் தலைவலி எதனால் ஏற்படுகிறது? இதை குணமாக்க என்னதான் வழி?'
டாக்டர் முருகன் நரம்பியல் நிபுணர், சென்னை
'பொதுவாக உடல் நலக் குறைபாடு, சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என உடல் நலம் குறையும்போது தலைவலி ஏற்படும்.  இதுபோன்ற தலைவலி ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.  
[You must be registered and logged in to see this image.]
ஒற்றைத் தலைவலி இதனால் தான் வருகிறதென குறிப்பாக எந்தக் காரணத்தையும் சுட்டிக் காட்ட முடியாது. இருந்தும், மரபியல் காரணங்கள், அதிக வெளிச்சம், இரைச்சல், மன அழுத்தம் என நம் சூழலாலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் ஏதேனும் யோசித்துக்கொண்டே இருப்பதும், அதிகம் வெயிலில் அலைவதும், தேவையற்ற பிரச்னைகளை மனதில் போட்டு உழட்டிக் கொள்வதும், மன அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலிக்கு காரணமாகலாம்.
சாக்லெட் ஐஸ்கிரீம், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் என சாக்லெட் கலந்த பண்டங்களில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயனப் பொருட்களாலும் தலைவலி அதிகரிக்கும்.  இவற்றைத் தவிர்ப்பது நல்லது.  மேலும், சிட்ரஸ் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் காபி, டீ, குளிர்பானங்கள், சீஸ், பீட்ஸா, ஜங்க் ஃபுட் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். தினமும் தியானம் செய்யலாம். வாக்கிங், ஜாகிங் போவதும் பலனைக் கொடுக்கும். இவற்றுடன், நிம்மதியான தூக்கம் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வைத் தரும். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி நீடிக்குமானால் நரம்பியல் நிபுணரைக் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.'             
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

படித்த பாடம் மறந்து போகிறதா உங்கள் குழந்தைகளுக்கு? நியாபக மறதியைப் போக்க வழி! Empty மறதியை மறக்க 7 வழிகள்

Post by logu Tue Oct 28, 2014 9:20 pm

[You must be registered and logged in to see this image.]
ஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. 
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.
[You must be registered and logged in to see this image.]நினைவாற்றல்   என்றால் என்ன?
நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்’ என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்’ என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை 'ரெட்ரிவல்’ என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.
 
எப்படி வேலை செய்கிறது?
என்கோட்: காட்சி, சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  
ஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில் இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது நீண்ட கால நினைவாற்றல்.
[You must be registered and logged in to see this image.]
ரெட்ரிவல்: நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம். கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.
[You must be registered and logged in to see this image.]
 மறதி நல்லது!
[You must be registered and logged in to see this image.] மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில், தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில் அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது. இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்
» இதை பாருங்கள்...ஒரு நிமிடம் உங்கள் துன்பங்கள் மறந்து போகும்
» உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
» உங்கள் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!
» உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum