TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! நிஜமா, விற்பனை தந்திரமா? ஆன்லைன் ரீடெயில் அட்டகாசங்கள்! ச.ஸ்ரீராம்

2 posters

Go down

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! நிஜமா, விற்பனை தந்திரமா? ஆன்லைன் ரீடெயில் அட்டகாசங்கள்! ச.ஸ்ரீராம் Empty பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! நிஜமா, விற்பனை தந்திரமா? ஆன்லைன் ரீடெயில் அட்டகாசங்கள்! ச.ஸ்ரீராம்

Post by அருள் Sun Oct 19, 2014 7:52 am

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பண்டிகை ஆஃபர்கள் நம் வீட்டின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. முன்பு கடைகளுக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வழக்க மாகக் கொண்டிருந்தனர் நம் மக்கள்.
ஆனால், தற்போது வீட்டிலிருந்தபடியே பண்டிகை பர்ச்சேஸை பக்காவாக முடித்துக்கொள்ளும் வசதியை ஆன்லைன் நிறுவனங்கள் கொண்டுவந்துவிட்டன. புத்தாடைகள் தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ் என அனைத்துப் பொருட் களையும் கணினி திரையில் பார்த்தபடி வாங்கிக் குவிக்கிறது இளைஞர் கூட்டம்.
இதனை நன்றாகப் புரிந்துகொண்ட இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஆஃபர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கி வருகின்றன.
ஒரு நாளைக்கான ஆஃபர், ஒரு மணி நேரத்துக்கான ஆஃபர் என பல ஆஃபர்களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருவதுடன், இடையிடையே அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட செய்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள்.
[You must be registered and logged in to see this image.]
இதனைச் சமாளிக்க நேரடியாகப் பொருட்களை விற்கும் சில ரீடெயில் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு ஆஃபர்களை வழங்கத் தொடங்கி விட்டன. குறிப்பிட்ட தொகைக்கு நீங்கள் பொருட்களை வாங்கினால், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கான பொருட்களை இலவச மாகவே பெறலாம் என்று சொல்லி, தாங்களும் இந்த ஆஃபர் மழையில் இலவசங்களை கொட்டத் தயார் என்று களத்தில் குதித்திருக்கின்றன. இந்த ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபரையும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது. 
இந்தியாவில் ரீடெயில் நிறுவனங் களின் வர்த்தகத்தில் அமைப்பு சார்ந்த ரீடெயில் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.1,76,700 கோடியாக உள்ளது. அதேசமயம், அமைப்பு சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.13,900 கோடியாக உள்ளது. மொத்த ரீடெயிலுடன் ஒப்பிட்டால்,  வெறும் 7.9 சதவிகிதத்தையே ஆன்லைன் நிறுவனங்கள் ஆக்கிரமிக் கின்றன.
[You must be registered and logged in to see this image.]
என்றாலும் ஆஃபர்களை அள்ளி வழங்குவதில் முதலிடம் பிடிப்பவை ஆன்லைன் நிறுவனங்களாகவே இருக்கின்றன. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்று அறிவித்து,  அன்றைக்கு ஆரவாரமான பம்பர் தள்ளுபடி விற்பனையை நடத்தியது.
அன்று மட்டும் ஏறக்குறைய ஒரு பில்லியன் முறை (100 கோடி) மக்கள் இந்த இணையதளத்தை அணுகி பொருட்களைத் தேடியுள்ளனர் என பெருமையோடு சொல்லிக் கொண்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஒரு ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது தொடங்கி, பொருளின் விலையில் 90% வரை ஆஃபர் வழங்கும் அதிசயம் அன்று நடந்ததால், காலை 8 மணி தொடங்கி பலரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து பல பொருட்களை வாங்கத் தயாரானார்கள்.
 
இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சாதாரண மாக எல்லா கடைகளிலும் கிடைப்பது தான். என்றாலும், நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர், அதுவும் மிகச் சில மணி நேரங்களுக்குத்தான் என்கிற பரபரப்பினால் பலரும் பல பொருட்களை வாங்க முற்பட்டனர். குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் காலையில் மிகக் குறைந்த விலையும், நேரம் ஆக ஆக அதிக விலையும் இருந்தது. இருந்தாலும், ரீடெயில் கடைகளைவிட விலை குறைவுதான் என்பதால், அதிகமான பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்தனர்.

ஆன்லைன் நிறுவனங்கள் இந்த அளவுக்கு ஆஃபர்களை அள்ளித் தருகிறதே, இதெல்லாம் நிஜமா என்று கேட்டால், நிஜம்தான் என்கிறார்கள் ஆன்லைன் துறையைச் சேர்ந்தவர்கள். எப்படி என்று கேட்டோம்.
‘‘ஆன்லைன் நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள செய்யும் பல்வேறு முயற்சிகளில் முக்கியமானது இந்த விலை குறைப்பு. 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 20 ரூபாய்க்கு விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தங்களது கண்காணிப்பில் முதலில் கொண்டுவர நினைக்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள். கடைக்கான வாடகை இல்லை; பொருட்களை வாங்கி வைக்க வேண்டிய முதலீடு இல்லை; நூற்றுக் கணக்கில் ஊழியர்கள் தேவை இல்லை என பல விஷயங்கள் ஆன்லைன் துறைக்கு சாதகமாக இருப்பதால், அதிரடித் தள்ளுபடியில் அவர்களால் பொருட்களை எளிதாக விற்க முடிகிறது’’ என்கிறார்கள் அவர்கள்.
இவர்கள் சொல்ல மறுக்கும் இன்னொரு உண்மை என்னவெனில், மிகக் குறைந்த விலையில் பொருட்களைத் தருவதன் மூலம் நேரடியாக பொருட் களை விற்கும் கடைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, அதன்பிறகு தாங்கள் சொல்கிற விலையில் பொருட்களை விற்க இந்த நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பதே.
[You must be registered and logged in to see this image.]
தவிர, ஆன்லைன் நிறுவனங்கள் தரும் இந்த ஆஃபர்கள் வெறும் மார்க்கெட் தந்திரமே என்றும் எஃப்எம்சிஜி துறையைச் சார்ந்த நிபுணர் கள் சொல்கிறார்கள். ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்பதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு நஷ்டம்தான் என்கின்றனர். 
உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 2013-ம் ஆண்டு நிகர விற்பனை ரூ.1,247 கோடி. அதேசமயம் அந்த நிறுவனம் கண்ட நஷ்டம் ரூ.644 கோடி. இந்த நிலை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, பிற ஆன்லைன் நிறுவனங்களுக்கும்தான் என்கிறார்கள் அவர்கள்.

 பில்லியன் சொதப்பல்கள்!
‘பிக் பில்லியன் டே’ அன்று ஏறக்குறைய ரூ.600 கோடிக்கு வியாபாரம் செய்ததாகச் சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஆனால், அன்றைய தினத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. காரணம், இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை விற்பனை தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்துவிட்டது.
சில பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஆஃபர் விலை ஒன்றாகவும், அதனை வாங்கும்போது வேறொரு விலையாகவும் இருந்தது கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். அழகான சுடிதார் 500 ரூபாய் விலையில் கிடைக்கிறதே என்று ஆசையாக வாங்கப்போனவர்கள், பணம் கட்டும் போது அது 1,200 ரூபாய் என்று மாறியதைப் பார்த்து அதிர்ந்தனர். 
ஒரு பொருளை வாங்கியவர் அதற்கான பணத்தைக் கட்டிவிட்டு ஆவலாகக் காத்திருக்க, மறுநாள் காலையில் இந்தப் பொருளைத் தருவதில் எங்களுக்குச் சிரமம் உள்ளது. அதனால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வந்த மெயிலைப் பார்த்து கடுப்பானவர்கள் பலர்.
பரிசாகத் தரப்பட்ட கூப்பனிலும் பல குளறுபடிகள். ரூ.500 மதிப்புள்ள கூப்பனைத் தந்துவிட்டு, இதனை நீங்கள் பயன்படுத்த 3,000 ரூபாக்குமேல் பொருளை வாங்க வேண்டும் என்று நிபந்தனைப் போட்டதும் அதிர்ச்சிதான்.
இன்னும் சிலர், சில பொருட்களின் விலையைக் கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இப்போது மீண்டும் குறைத்துள்ளனர். இதெல்லாம் தள்ளுபடியே கிடையாது என  இணையதளங்களில் வெறுப்பு மழை கொட்டினார்கள்.
பலரும் இப்படி வெறுப்பில் இருப்பதைப் பார்த்து, மறுநாள் காலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.
 அடுத்தது அமேசான்!
ஃப்ளிப்கார்ட்டின் இந்த மெகா ஆஃபரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் [You must be registered and logged in to see this image.]இதேமாதிரியான தள்ளுபடி கொண்டாட்டத்துக்குத் தயாரானது. ஏற்கெனவே மிஷன் மார்ஸ் என்கிற பெயரில் ஆஃபர்களைத் தந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் இழுத்துக்கொண்ட வாடிக்கை யாளர்களை இப்போது தனது பக்கம் இழுத்துக் கொள்ள தயாராகிவிட்டது.
இனிவரும் காலத்தில் ஆன்லைன் நிறுவனங்களை நம்மால் தவிர்க்க முடியாது. விலை குறைவு, வீட்டுக்கு பொருள் வந்து சேரும் வசதிகளால் இனி பலரும் பொருட்களை வாங்க  ஆன்லைனை நாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது   எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். எந்தப் பொருளை வாங்கவதாக இருந்தாலும் 5 முக்கிய விஷயங்களைக் கவனித்தாக வேண்டும். அவை இதோ...
1. நீங்கள் வாங்கும் பொருளின் விலை கடந்த மூன்று மாதங்களுக்குமுன் என்ன விலையில் இருந்துள்ளது என ஒப்பிட்டுப் பாருங்கள். இதே விலைதான் என்றால், இன்னமும் விலை குறையும். எனவே, அவசரப்பட்டு வாங்காமல் சற்று யோசித்துப் பிறகு வாங்கலாம்.
2. ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருளை இன்றைய ரீடெயில் விலையுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அதிலிருந்து விலை எவ்வளவு வேறுபட் டுள்ளது என்பதையும் பாருங்கள்.
 நீங்கள் வாங்கும் பொருளுக்கு குறைந்தபட்சம் 35% விலை தள்ளுபடி கிடைத்தால், ஆன்லைனில் நீங்கள் அந்தப் பொருளை வாங்குவதில் லாபம் இருக்கும். ஏனெனில், தற்போது பண்டிகைக் காலம்  என்பதால் ரீடெயில் கடைகளிலேயே 20 - 25% தள்ளுபடி கிடைக்கும்.
3. ஆஃபரில் தருகிறார்கள் என்று தேவையில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படுவதை மட்டுமே தேர்வு செய்யுங்கள். நீங்கள் மொத்தமாக வாங்கிய பொருளில் சேமித்த பணத்தை அடுத்தப் பொருளை வாங்கி வீணடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
4. இந்த ஆஃபர் தினத்தில் சில பொருட்களைப் பற்றிய ரெவியூ படித்துவிட்டு, அது நன்றாக இருந்தால், உடனே அந்த பொருளை வாங்கிவிடுவது கூடாது. காரணம், அனைத்து விற்பனை யாளர்களும் தங்கள்  பொருளை ரெவியூ மூலம் பிரபலப்படுத்துவார்கள். அதனால் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களிடம் இந்தப் பொருளை வாங்கிய அனுபவம் பற்றி விசாரித்து வாங்குங்கள்.
5. ஒரு பொருளை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் சரியான தள்ளுபடி இருக்கும்போது அதே விலைக்கு அப்போதே வாங்கிவிடுங்கள். ஒருசில மணி நேரம் கழித்து வாங்கினால், அதன் விலை அதிகரித்துவிடும். காரணம், இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை விலையை மாற்றியமைக்கின்றன.
[You must be registered and logged in to see this image.]
 ரீடெயில் நிறுவனங்களின் ஆஃபர்கள்!
சரி, ஆன்லைன் நிறுவனங்கள்தான் ஆஃபர்களை வாரி வழங்குகின்றன என்றால், ரீடெயில் நிறுவனங்களும் இந்த ஆஃபர் மோகத்தைக் காட்டி வாடிக்கையாளர்களைக் கவரத் தயாராகிவிட்டன. சமீபத்தில் ஒரு ரீடெயில் நிறுவனம் தீபாவளி ஆஃபராக அறிவித்துள்ள விளம்பரம் எல்லோரை யும்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 குறிப்பிட்ட 12 நாட்களுக்குள் 10 லட்சம் ரூபாய்க்குப் பொருட்களை வாங்கினால், மாதம் 25,000 ரூபாய்க்கு ஒரு வருடத்துக்கு இலவசமாக எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னது அந்த விளம்பரம். அதாவது, 10 லட்ச ரூபாய்க்கு பொருளை வாங்கினால், 3 லட்சம் ரூபாய் லாபம். இப்படி ரூ.5,000 தொடங்கி ரூ.10 லட்சம் வரை 11 ஆஃபர்களை இந்த நிறுவனம் அளித்துள்ளது.
இது நல்லதுதானே! இதன் மூலம் மாதாமாதம் இலவசமாக பொருட்களை வாங்கலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த ஆஃபரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பொருள் வாங்குபவருக்குத்தான் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதற்குக் குறைவாக இருப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அளவில்தான் லாபம் கிடைக்கும். ஆனால், தீபாவளிக்காக யாரும் ஒரு  லட்சம் ரூபாயை செலவழிக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் 10,000 ரூபாய் செலவழித்தால் வெறும் 125 ரூபாய் மட்டுமே இலவச ஆஃபர் கிடைக்கும். இதற்கு அவர்கள் குறிப்பிடும் கடையில் ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட்தான் வாங்க முடியும்.
[You must be registered and logged in to see this image.]
இந்த ஆஃபரில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நீங்கள் 7,000 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினால், நீங்கள் இன்னமும் 3,000 ரூபாய்க்கு வாங்கினால்தான் 10,000 ரூபாய்க்கு ஆஃபரைப் பயன்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகிறது. அதனால், உங்கள் பர்ஸிலிருந்து இன்னமும் 3,000 ரூபாயை நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களை நாடும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
1. உங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்குங்கள். இன்னமும் 2,000 ரூபாய்க்கு வாங்கினால் தான் ஆஃபர் என்றால், அதனைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் மிச்சப்படுத்த நினைத்த தொகை ஆஃபரை அடைய நீங்கள் கொடுத்த தொகைக்குச் சமமாகிவிடும்.
2. ஆன்லைனில் பொருளை வாங்கிக் குவிப்பது ஃபேஷன் என நினைத்துப் பணத்தை விரயமாக்காதீர்கள். பக்கத்தில் உள்ள ஒருவர் 12,000 ரூபாய்க்குப் பொருட்களை வாங்கியுள்ளார்; அவரை விட நான் 100 ரூபாய்க்காவது அதிகமாக வாங்குவேன் என்று போட்டி போடாதீர்கள். 
3. ஆன்லைனில் எந்தப் பொருளை வாங்க வேண்டும், ரீடெயிலில் எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று முதலில் பட்டியலிடுங்கள். சில பொருட் களை டச் & ஃபீல் எனப்படும் தொட்டு பார்த்து வாங்கினால்தான் சரியாக இருக்கும். சில பொருட்கள் ரீடெயில் கடைகளில் அதிக விலைக்கு இருக்கும். அதனை ஆன்லைனில் வாங்குவது சிறந்ததாக இருக்கும்.

4. ஆஃபர் என்று மூன்று பொருட்களைச் சேர்த்து 2,000 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்றால் அதனை வாங்காமல், உங்களது தேவைக்கு வாங்கும் பொருள் 600 ரூபாய்தான் என்றாலும் அதை மட்டும் வாங்குங்கள்.
ஆன்லைனோ அல்லது ரீடெயிலோ பொருட்களை வாங்கும்போது தேவையான பொருளை மட்டும் கவனித்து வாங்கினால், நம் பர்ஸ் வீண்செலவுகளில் இருந்து நிச்சயம் தப்பிக்கும்.
தீபாவளி போன்ற பண்டிகை களின்போது நீங்கள் பொருட்களை வாங்க நினைத்தால், சரியான நிதித் திட்டமிடலை செய்தோ அல்லது உங்களுக்குத் தேவையான பணத்தை வங்கி டெபாசிட்டுகளில் சேமித்தோ வாங்குங்கள். ஆசை வார்த்தைகளில் நீங்கள் ஏமாறாமல் தப்பித்தால், நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!


‘‘ஆஃபர்கள் வணிக உத்திகளே!’’
‘‘ஆன்லைன் மற்றும் ரீடெயில் நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்கள் அனைத்துமே வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கத்தான். இந்த ஆஃபர்களை ரீடெயில் நிறுவனங்களைவிட ஆன்லைன் நிறுவனங்கள் அதிகம் வழங்குகின்றன. காரணம், அவை அதிகமான முதலீட்டு நிதியைத் திரட்டி அதிலிருந்து பணத்தை எடுத்து இந்த ஆஃபர்களை வழங்குகின்றன. அதேசமயம், ரீடெயில் நிறுவனங்களும் இந்த ஆஃபரில் இறங்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றால் சிறிய அளவிலான ஆஃபர்களையே வழங்க முடிகிறது.
[You must be registered and logged in to see this image.]

ஆர்.குமார், சிஇஓ, ரீடெயில் அசோசியேஷன் ஆஃப் இந்தியா.
ரீடெயில் கடைகளில் நேரடியாக ஆஃபரில் ஒரு பொருளை வாங்கிவிட முடியும். சில நாட்களுக்காவது அந்த ஆஃபர் இருக்கும் என்பதால் நீங்கள் பதற்றமில்லாமல் நன்கு யோசித்து வாங்க முடியும். ஆனால், ஆன்லைன் ஆஃபர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் வாங்கவில்லை எனில், உங்களால் அந்த ஆஃபரை அனுபவிக்க முடியாது. அதேசமயம், ஆன்லைனில் சில சமயம் 70% வரை ஆஃபர் கிடைக்கும். அதனை ரீடெயில் கடைகளால் தர இயலாது.
இந்த ஆஃபர்களைப் போட்டியாக நினைக்காத சில நிறுவனங்களும் உள்ளன. அந்த நிறுவனங்கள் பொருள், வடிவமைப்பு மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி சரியான விலையில் பொருட்களை விற்கின்றன. அதற்கும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் இந்த நிறுவனங்களின் ஆஃபர் என்பது நமது தேவைக்குச் சரியாக இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி ஆஃபர்கள் என்பது அந்தந்த நிறுவனத்தின் வணிக உத்திதான்!’’


ஃப்ளிப்கார்ட் மீது பாயும் நிறுவனங்கள்!
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பைக் கண்டித்து சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள், இனி அந்த நிறுவனத்துக்கு புதிய பொருட்களை விற்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளன. ஃப்ளிப்கார்ட் மீது சட்டரீதியான வழக்குத் தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
இந்திய வணிகர்கள் கூட்டமைப்பும் மத்திய வணிகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஆஃபர்களை அள்ளி வழங்கும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை  வைத்துள்ளனர். இதற்கு மத்திய அமைச்சரும் தங்களுக்கு பல தகவல்கள் வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், வணிகர்கள் கூட்டமைப்போ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால், இன்றைக்கு சரிபாதி மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களை வாங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே உண்மை!


குறைந்த விலை தவறில்லை!
ஆன்லைன் நிறுவனங்கள் அடக்க விலைக்குக் குறைவாகப் பொருட்களை விற்கின்றன என்று அரசிடம் ரீடெயில் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளதற்கு, இந்திய போட்டித்திறன் ஆணையத்தின் சேர்மன் அசோக் சாவ்லா அளித்துள்ள பதிலில் ‘‘ஆன்லைன் நிறுவனங்கள் இதுபோல விலை குறைத்து விற்பது தவறு என்று நான் நினைக்கவில்லை. ஒருநாளைக்கு மட்டும் என்று அறிவிக்கும் ஆஃபர்கள்தான் இவை. மேலும், சில ரீடெயில் நிறுவனங்களும் இதுபோன்ற ஆஃபர்களை வழங்குவதால், இது தவறில்லை’’ எனக் கூறியுள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! நிஜமா, விற்பனை தந்திரமா? ஆன்லைன் ரீடெயில் அட்டகாசங்கள்! ச.ஸ்ரீராம் Empty Re: பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! நிஜமா, விற்பனை தந்திரமா? ஆன்லைன் ரீடெயில் அட்டகாசங்கள்! ச.ஸ்ரீராம்

Post by Tamil Mon Oct 20, 2014 8:40 am

ஆஃபர் என்பது நமது தேவைக்குச் சரியாக இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி ஆஃபர்கள் என்பது அந்தந்த நிறுவனத்தின் வணிக உத்திதான்!’’
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum