TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தியானம் செய்வது நல்லதா? அறிவியல் என்ன சொல்கிறது?

Go down

தியானம் செய்வது நல்லதா? அறிவியல் என்ன சொல்கிறது? Empty தியானம் செய்வது நல்லதா? அறிவியல் என்ன சொல்கிறது?

Post by sakthy Sat Sep 20, 2014 4:39 pm

இயல்தமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ்,அறிவியல்தமிழ் என்பவையாக தமிழில் நான்கு பிரிவுகள் உண்டு. இதற்கு முன்னர் மதம் பற்றிய கட்டுரை பதிவாகியது.

அதில் தமிழர்கள் மதங்களில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள் என்பதை கூறி இருந்தேன். உலகில் மதங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே தவிர்க்க முடியாத நிலையில் இந்து மதம் போன்ற சில சமயங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக சைவம் என்ற சமயத்திற்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் சங்க நூல்கள்- திருக்குறள் திருமந்திரம் பக்தி இலக்கியங்கள் உட்பட அனைத்து இலக்கியங்களிலும் அறிவியலை புகுத்தி இருந்தான் தமிழன்.

இருப்பினும் சிலர் அவற்றை ஆன்மீகத்திற்குள் நுழைத்து சாக்கடையாக்கி விட்டனர். ஆன்மீகத்திற்குள் புகுத்தியதில் தவறில்லை. ஆனால் அவன் கொடுத்த அறிவியலை இன்று வரை ஆன்மீகத்தை வைத்தே பார்க்கிறானே தவிர அறிவியலாக பார்க்க மறுக்கிறான்.

வானியல் தகவல்களை வைத்து செவ்வாயையும் சூரியனையும் ஆய்வு செய்கிறது இன்றைய அறிவியல். அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட வானியல் அறிவியலை சோதிடத்திற்குள் புகுத்தி தமிழர்களின் அறிவியலில் மீண்டும் சேற்றைப் பூசி விட்டார்கள்.

அவன் அன்று உருவாக்கிய அறிவியலை ஆரியர்கள் களவாடி இந்து மதத்திற்குள் நுழைத்து தங்களுடையதாக்கி விட்டார்கள்.

அந்த அறிவியலை இன்றைய அறிவியல் போல் அபிவிருத்தி செய்திருந்தால், இன்று தமிழன் கோள்களை ஆக்கிரமித்திருப்பான்.

சமஸ்கிருதத்தை தெய்வ பாடையாக்கி தமிழை தீண்டத்தகாத மொழியாக்கியவர்கள்,இன்று அதே சம்ஸ்கிருதத்தை உயிர்பிக்க வேண்டிய நிலைக்கு போயிருக்கிறார்கள். தமிழ் சாகவில்லை. சம்ஸ்கிருதம் பேசுவார் இல்லாது நலிந்து போய் இருக்கிறது..

மதம் தோன்றிய காலம் முதல் மதத்தினால் மனிதனுக்கு ஏற்பட்ட கொடுமைகள், அவமானங்கள்,அநாகரீகச் செயல்கள்,இப்படி வழிதவறச் செய்தவை எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பல அறிவியல் கருத்துக்களை ஏதோ ஒரு விதத்தில் இன்றும் அழியாமல் ஆன்மீகப் பூச்சை பூசி வைத்திருக்கின்றன.

அவற்றில் தியானமும் ஒன்று. எல்லா மதங்களும் ஏதோ ஒரு வகையில் தியானம் செய்வதை ஏற்றுக் கொள்கின்றன. செய்யத் தூண்டுகின்றன.

தொடரும்..............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தியானம் செய்வது நல்லதா? அறிவியல் என்ன சொல்கிறது? Empty Re: தியானம் செய்வது நல்லதா? அறிவியல் என்ன சொல்கிறது?

Post by sakthy Sat Sep 20, 2014 4:44 pm

தியானம் செய்வதால் கெடுதல் உண்டா? அறிவியல் என்ன சொல்கிறது?

முதலில் இந்த இரண்டு திருமந்திரத்தையும் படித்து விடுங்கள். இதை ஆன்மீகமாக ஒரு மத நூலாகப் பார்க்காமல் படிக்கவும்.

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே-605

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ நாமே-604

Sprit என்பது ஆன்மா எனப்படுகிறது.இந்த sprit என்ற சொல் லத்தீன் மொழி சொல்லாகும். அதன் பொருள், spiritus -breath – சுவாசம் - மூச்சு -காற்றை உள்ளிழுத்தல்-வெளிவிடுதல் என்பதாகும்.spirituality -ஆன்மீகம்.

தியானம் செய்யும் போது குருதியில் ஏற்படும் மாற்றம் என்ன? மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?
[You must be registered and logged in to see this image.]

முதலில் தன்னிச்சை நரம்பு மண்டலம்- autonomic nervous system-என்றால் என்ன? நமது கட்டுப்பாடில்லாமல் செயல்படும் உடற் கூறுகளை இயக்குவது இந்த தன்னிச்சை நரம்பு மண்டலமாகும்.ANS , visceral nervous system , involuntary nervous system எனச் சொல்லப்படும் இந்த ANS நரம்பு மண்டலம் முழு நரம்பு மண்டலத்தின் -peripheral nervous system -ஒரு பகுதியாகும்.
[You must be registered and logged in to see this image.]

இதயம்,செமிபாடு,சுவாசம்,இப்படிப் (heart rate, digestion, respiratory rate, salivation, perspiration, pupillary dilation, micturition (urination), sexual arousal, breathing , swallowing) பல வேலைகளை நமது கண்காணிப்பு இன்றி செய்கிறது இந்த தன்னிச்சை நரம்பு மண்டலமாகும்.

இது மூன்று பகுதிகளாக செயல்படுகிறது.தியானத்தின் போது adrenaline,  noradrenaline  இயக்குநீராகவும் -hormone-, நரம்புக்கடத்தியாகவும் செயற்படும் கேட்டகோலமைன் (catecholamine) தியானத்தின் போது உற்பத்தியைக் குறைப்பதால்,குருதியில் இதன் அளவு குறைகிறது.இப்படி noradrenaline குறைப்பதால் படபடப்பு,பதற்றம் குறைகிறது.

இதே போல் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 அமினோ காடிகளில்-அமிலம்- குளூட்டாமிக் அமிலம்-Glutamic acid , GABA receptors-neurotransmitter gamma-aminobutyric acid – தியானத்தின் போது குருதியில் அதிகரிக்கவும் செய்கிறது. GABA (gamma aminobutyric acid) என்பது பயம்,தூக்கமின்மை,பதட்டம்,மன நிலைக் கோளாறுகள் (mood disorders. Anxiety, tension, insomnia) போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

GABA போதுமானதாக இல்லாத போது சில பழக்கங்கள் மது,போதைப்பொருள் பாவனை,போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள்.தியயானம் DHEA -dehydroepiandrosterone- அளவை அதிகரிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
இப்படி தியானத்தின் போது மூளைக்குச் செல்லும் சில கோர்மோன்கள்,அமிலங்கள் அதிகரிப்பதால் அல்லது குறைவதால் …..............................

அதிக தியானம் மூளையை தாக்குமா? பாதிப்பை ஏற்படுத்துமா?
அதிக தியானம் மூளையை தாக்குமா? பாதிப்பை ஏற்படுத்துமா?

அறிவியல் என வரும் போது அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தே ஆக வேண்டும்.
தியானத்தின் போது PFC -pre frontal cortex பகுதியில் அதிக செயற்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த prefrontal cortex (PFC) மூளையின் முற்பகுதியில் நெற்றியின் பின்னால் அமைந்துள்ளது. இதன் வேலை நமது சிந்தனை எண்ணங்களை ஆய்வு செய்வது, ஏற்படும் முரண்பட்ட எண்ணங்கள், சரி-தவறு, போன்றவற்றை பொறுப்பேற்று செயல்படுகிறது.

தியானத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்களை fMRI scans மூலம் கண்டறியலாம்.

தியானம் அதிகம் செய்யும் போது மூளையில் synaptic glutamate அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த glutamate ஐ ஊக்குவிக்கும் NMDA -N-methyl aspartate receptors -nmdar - நரம்புப் பகுதிகளைப் பாதித்து அழிக்கவும் கூடும்.

பசி,தாகம் ஏற்பட்டு உணவு தண்ணீர் எடுக்கும் போது ஒரு அளவுக்கு மேல் உடம்பு ஏற்றுக் கொள்ளாமல் நம்மைத் தடுப்பது போல,உணவைக் கண்டதும்,வாயில் போட்டதும் சுரக்கும் உமிழ் நீர்-எச்சில்-saliva- ,வயிற்றில் சுரக்கும் அமிலங்கள்,தைரொயிட்-கணைய சுரப்பு-இன்சுலின் இப்படி அனைத்தையும் உடம்பு-மூளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல், தியானத்தின் போது உற்பத்தியாகும் அமிலங்கள்,ஊக்கிகள்,என்சிம் அனைத்தினதும் சமநிலையை மூளை தன் வசம் வைத்திருக்கிறது. மேலதிகமாகவோ குறைவாகவோ சுரக்கும் போது சமநிலைப் படுத்தி விடும் சக்தி மூளைக்கு உண்டு.


அதாவது குறிப்பிட்ட அளவு குளுடமைட் உருவாகும் போது அதை உற்பத்தி செய்யும் N- acetylated -a -linked acidic dipeptidase மூளையால் கட்டுப்படுத்தப்பட்டு, குளூடமைட்டின் அளவு அதிகமாகாமல் இருக்கச் செய்யும். அதனால் தியானம் எவ்வளவு நேரம் செய்தாலும் அதனால் தீங்கு வராமல் தடுக்க, மூளையின் அமைப்பு அதற்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பாதிப்படையாமல் அழியாமல் காக்க மூளையில் ஒரு பகுதி திறன் கொண்டதாக இருக்கிறது.மூளையும் இப்படி ஒரு நிலை ஏற்படாமல்,அளவுக்கு மீறாமல் தடுக்கிறது.
தியானத்தின் போது மூளையில்  pineal gland ஆல் Melatonin என்ற கோர்மோன், serotonin
Cortisol -stress hormone- போன்ற சுரப்புகளையும்;

Amygdala,Frontal lobe,Parietal lobe,Thalamus,Reticular formation,Medial PreFrontal Cortex (mPFC) ,Dorsomedial Prefrontal Cortex (dmPFC),Ventromedial medial prefrontal cortex (vmPFC),Insula பகுதிகளையும் மூளை தன் கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்.

அத்துடன் தியானம் செய்யும் போது மூளை மனம் மட்டுமன்றி தைரொயிட், இதயம், கணையம்,சிறு நீரகம்,பாலியல் உறுப்புகள் போன்ற உடல் பகுதிகள் கட்டுப்பாடிற்கு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

ஆக தியானம் அதிக நேரம் செய்வதால் எந்தக் கெடுதலும் விளைவதில்லை. நன்மையே ஏற்படும்.

தூக்கம்-தியானம் இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு.அதனால் தியானத்திற்குப் பதில் அதிக நேரம் தூங்கி விடாதீர்கள்.

ஆனாலும் இன்றைய நாளில் யாராலும் அதிக நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருக்க முடியாது. அன்று சித்தர்கள் பல நாட்கள் உணவு கூட இல்லாமல் தியானத்தில் இருந்ததாக கதைகள் படித்திருபோம்.

அது உண்மையோ பொய்யோ என்பதை விட அன்று தூய்மையான காற்று,சுற்றாடல்,நீர், வேதிப் பொருட்கள் கலக்காத உணவு இப்படி எல்லாமே இயற்கையாக கிடைத்தது. ஆனால் இன்று அவை எதுவும் நமக்கு இல்லாத நிலையில் தியானம் நாட் கணக்காக இருப்பது என்பது முடியாத நிலை என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

கூடவே தியானத்துடன் நல்ல மூச்சுப் பயிற்சி செய்வது உடலுக்கும் மனத்திற்கும் நல்லதாகும்.நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளி விடுவது சிறந்த பயிற்சியாகும்.

தினமும் காலையில் ஐந்து நிமிட மூச்சுப் பயிற்சி,15-20 நிமிட தியானம் உடலையும் மனத்தையும் தூய்மைப் படுத்தும்.
மூச்சுப் பயிற்சி எப்படி செய்யலாம்?
[You must be registered and logged in to see this image.]
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum