TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையை பிரித்து தரும்படி கேட்கமாட்டோம்!-கூட்டணி சம்பந்தன்!

Go down

இலங்கையை பிரித்து தரும்படி கேட்கமாட்டோம்!-கூட்டணி சம்பந்தன்! Empty இலங்கையை பிரித்து தரும்படி கேட்கமாட்டோம்!-கூட்டணி சம்பந்தன்!

Post by Tamil Thu Aug 28, 2014 7:47 pm

இலங்கையை பிரித்து தரும்படி கேட்கமாட்டோம்!-கூட்டணி சம்பந்தன்!
************************************************
சென்னையில் பேட்டி!
*******************************
சிங்களவர்களின் கோமணம்தான் எங்களுக்கு முகம் துடைக்க வேண்டும் ' என்று சொல்லும் சம்பந்தன் போன்றவர்களுக்கு..அதைச் சொல்ல என்ன தகுதி உண்டு?
****************************************
மு.வே.யோகேஸ்வரன்
********************************
இலங்கையை பிரித்து தரும்படி கேட்கமாட்டோம்!-கூட்டணி சம்பந்தன்! 11297_767895119933400_1475616103917850835_n
தமிழர் கூட்டணித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள்,சில நாட்களுக்கு முன்னர் டெல்கி வந்து பல ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்களை,பிரதமர் உட்பட, சந்தித்துப் பேசினார்.அவருடன் சில ஊமைக் குழல்களும் வந்தன.
ஊமைக் குழல்கள் என்றால் புரியாதவர்கள் இருப்பது குறைவு என்று எண்ணுகிறேன் ..ஆயினும் அதுபற்றி ஓர் சிறு விளக்கம் இது!நாதஸ்வரம் வாசிப்பவர் சத்தமிட்டு ஊதுவார்,அவர் பக்கத்தில் வேறு ஒருவர், ஓர் குழலை வைத்துக் கொண்டு நாதஸ்வரத்துக்கு இசைவாக ஒரே இசையில் ஊதிக் கொண்டிருப்பார்.அவரைத்தான் ஊமைக் குழல் ஊதி ' என்று சொல்வார்கள்.
பெரு மதிப்புக்கு உரிய கூட்டணித் தலைவர் சம்பந்தனைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது..புலிகள் போராடிய காலத்தில் புலிகளின் ஆட்சி வடமாநிலத்தில் நிலவிய காலத்தில்,வன்னி சென்று தலைவரைச் சந்தித்து,தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்றவர்களில் ஐயாவும் ஒருவர்.உயிர்ப் பயத்தால் வந்ததாகச் சிலர் சொன்னாலும்,காக்காய் பிடிப்பதில் ஐயா அவர்கள் வல்லவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்!
அடிமனதில் தமிழ் ஈழக் கனவுகள் இருந்தால்,அதையே எங்கும் சொல்லும் ஒருவரே உண்மையான தமிழின வாதி.ஆனால்,இவர் சிங்களவர்களை கொழும்பில் கண்டால் கூழைக் கும்பிடு போடுபவர்.
உயிருக்கு பயந்தவர்.அதனால்தான் அங்கும் வாலை ஆட்டுவார் இங்கும் வாலை ஆட்டுவார்.அதற்காக அந்த மிருகத்தை ஒப்பிட்டு இவரைச் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்..அது நன்றியுள்ள மிருகம்!.தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று சிங்கள அரசு சொன்னதும், மேடைகளில் சிங்கக் கொடியை ஏந்தி சில காலம் வலம் வந்த கோமான் இவர்!
அதை மறந்துவிட மாட்டோம் நாங்கள்! 1958,1977,1983,என்று வரிசையாக எமது தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்தது சிங்கள அரசு..அதுவும் இலங்கை பிரிக்கப் படாமல் இருந்த காலங்களில்தான்!பின்னர்,வகை தொகையின்றி வன்னியில்2009இல் எமது மக்களை தெருநாய்களைக் கொன்று குவிப்பதுபோல் கொன்று குவித்தது சிங்கள அரசு..அதுமட்டுமன்றி, இதுவரை ஈழத்தில் நடந்திராத வகையில் எமது பெண்கள் கணக்கு வழக்கின்றி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டதும் அதே வன்னிச் சண்டையின்போதுதான்!இதுவும் இலங்கை பிரிக்கப் படாமல் இருந்த காலத்தில்தான் நடந்தது!
சரி இவைகளை விடுங்கள்..இப்போது அங்கே என்ன நடக்கிறது,,?வட மாகாணத்தையே பாலைவனம் ஆக மாற்றுகிறது சிங்கள அரசு..சிங்கள இராணுவ முகாம்களைச் சுற்றி செழித்து வளர்ந்திருந்த யாழ்ப்பாணத்தின் செல்வம் கொழிக்கும் மரங்களான பனைகளை அடியோடு பிடுங்கி,தன் இராணுவ முகாம்களை விஸ்தரித்து வருகிறது இனவாத அரசு! இராணுவ விஸ்தரிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, புதிய இராணுவ முகாம்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது! அதுமட்டுமா? முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பாகங்களிலும் சிங்களவர்களை குடியேற்றி வருகிறது சிங்கள அரசு! நாவற்குழிக்கு அருகிலேயே சிங்களக் குடியிருப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.பாலியல் வியாபாரம்,சிறுவர் துர்ப்பிரயோகம்,மதுபானக் கடைகள்,புத்த பிக்குகளின் ஊர்வலம் ,சிங்களப் பெண் பித்தர்களின் அட்டகாசம், வீதிக்கு ஒன்று என்னும் நிலையில் புத்த கோவில்கள்,இப்படியாக வட மாகாணம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிக்கித் தவிக்கிறது!
சர்வதேசத்துக்கு கணக்கு காட்டும் சாக்கில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்த்து பலவித கொடுமைகளுக்கு ஆளாக்குகிறது சிங்கள அரசு..அதுவும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் நின்றே நடைபெறுகிறது!புத்த கோவில்களின் புதிய அவதாரங்களும்,தமிழர் கோவில்களின்,தமிழ்ப் பேசும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் அழிப்பும் கூட அதே பிரிக்கப் படாத இலங்கைக்குள் இருந்தே செய்யப்படுகின்றன.
இத்தனைக்கும் மேலாக போரில் சரணடைந்த ஆயிரக் கணக்கான புலிகள் எங்கே?புலிகள் என்ற சந்தேகத்தின் பெயல் கைது செய்யப் பட்ட இளையோர்கள் எங்கே?..எல்லாமே விடை தெரியாத கேள்விகளாக இருக்கும்போது..இனியும் சிங்கள அரசின் குடைக்கு கீழ்..
ஒதுங்கி வாழ,பதுங்கி வாழ,தமிழர்கள் என்ன இளிச்ச வாயர்களா?
பிரிக்கப் படாத இலங்கைக்குள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கே பாதுகாப்பு அங்கே இல்லாத நிலையில்,அப்பாவி மக்கள்,விம்மலுடன் ,வேதனையுடன்,துன்பங்களைச் சகித்துக் கொண்டு சர்வாதிகளின் ஆட்சியின் கீழ் எத்தனை காலம் பிரிக்கப்படாத இலங்கைக்குள் இருந்து வாழமுடியும்?
லெட்சக் கணக்கான மக்கள் காலத்துக்கு காலம் அழிக்கப் பட்ட பின்னும், ' சிங்களவர்களின் கோமணம்தான் எங்களுக்கு முகம் துடைக்க வேண்டும் ' என்று சொல்லும் சம்பந்தன் போன்றவர்களுக்கு..அதைச் சொல்ல என்ன தகுதி உண்டு?..கடந்த காலங்களில் ஏற்பட்ட இனப்பிரச்சனைகளால் இவர்கள் மயிரளவு கூடப் பாதிக்கப் பட்டிருப்பார்களா?இல்லை..அப்படி இருக்கும்போது இலங்கையைப் பிரித்து தரும்படி நாம் கேட்கவில்லை..எங்கள் பாரம்பரிய மண்ணை எங்களிடம் தாருங்கள் என்றுதான் எமது மக்கள் கேட்கிறார்கள்..நாம் தொடர்ந்தும் அடிபட்டு,வதை பட்டு,மான பங்கப் பட்டு,கொல்லப்பட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சேர்ந்து வாழமுடியாது!அதை சொல்லும் உரிமை சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கும் சம்பந்தன் போன்றவர்களுக்கு நிச்சயம் இல்லை!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum