TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்-

2 posters

Go down

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்- Empty பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்-

Post by sakthy Fri Jul 25, 2014 9:37 pm

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா,பிரபாகரன்- மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல் சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் குண்டுகளால் துளைத்து மண்ணில் சாய்ந்தது வரைக்குமான வாழ்க்கை , ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்த்தின் எழுத்து இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்க, புலிப் பார்வை என்ற பெயரில் திரைப்படமாக வருகிறது என்பது தெரிந்த செய்திதான் .

ஆனால் இந்தப் படம் உண்மையில் பாலச்சந்திரனை கேவலப்படுத்தி சிங்கள அரசு சொல்லும் கட்டுக்கதைகளுக்கு தமிழகம் கொடுக்கப் போகிற வஞ்சக சாட்சியாகவே இருக்கிறது என்று ஈழத் தமிழர்களும் இன உணர்வாளர்களும் கொந்தளிக்கின்றனர் என்பதுதான் எதிர்பாராத திருப்பம்.

தமிழகம் வாழ் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் முக நூல் மூலமாக நம்மை தொடர்பு கொண்டு தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

“பாலச்சந்திரன் என்ற பால் மணம் மாறாத பாலகன் இனவெறி காரணமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டான் என்பதால்தான் அவனது மரணம் உலகத்தையே கண்ணீர் விட வைத்தது. ஆனால் இந்தப் படத்தில் பாலச்சந்திரன் விடுதலைப் புலிகளின் இராணுவ உடையை அணிந்து கொண்டு இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. நிஜத்தில் பாலச்சந்திரன் ராணுவசீருடையில் இருந்ததுபோல ஒரு புகைப்படத்தையாவது காட்டமுடியுமா ?” என்பது உணர்வாளர்களின் முதல் கேள்வி .

“ஒரு போலீஸ்காரர் மகன் சிறுவயதில் சந்தோஷத்துக்காக போலீஸ்காரர் போல உடை அணிவது இல்லையா ? அப்படி திரைக்கதையின் அழகுக்காக பாலச்சந்திரனை அந்த உடையில் சித்தரித்து இருக்கலாமே..” என்று நான் கேட்க , அதற்கு அவர்கள் “தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் படத்தின் டிரைலரில் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போல ஒரு நொடி கூட வரவில்லையே” என்றார்கள்.

“எல்லாவற்றையும் டிரைலரில் போட முடியாது அல்லவா? படத்தில் இருக்கலாமே?” என்றேன் நான்.
“சரி….உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். ராணுவசீருடையில்காட்டுவதுஒருபக்கம்இருக்கட்டும். ஆனால் அவன் கையில் துப்பாக்கியுடன் களமாடுவது போல புகைப்படம் இருக்கிறதே .அதற்கு என்ன அர்த்தம்? அவனுக்கு தலைவர் பிரபாகரன் ஆயுதப்பயிற்சி கொடுப்பது போன்ற காட்சிகளும் பாலச்சந்திரன் இயந்திரத்துப்பாக்கியை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவது போலவும் காட்சிகள்இருக்கிறதே . அதற்குஎன்னஅர்த்தம் ?

அவனும் விடுதலைப் போராட்ட வீரன் அதாவது போராளி அதாவது தீவிரவாதி! எந்த வயதுள்ளவர்களாக இருந்தாலும் களமாடுபவர்கள் போர்க்களத்தில் கொல்லப்படுவது சகஜம்தான். எனவே பாலச்சந்திரன் கொல்லப்பட்டதில் இனத்துவேஷமோ , அநியாயமோ அக்கிரமமோ எதுவும் இல்லை என்ற சிங்கள அரசின் வாதத்துக்கு வலுசேர்க்கும் அயோக்கியத்தனம் தானே இது ?” என்கிறார்கள் அவர்கள்.
“முழுப் படத்தையும் பார்க்காமல் இப்படி முடிவு செய்வது சரியா ? “என்றால் ” ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் . படம் எப்படி இருக்கும் என்பதுதான் டிரைலரிலும் புகைப்படங்களிலும் தெரிகிறதே ” என்கிறார்கள்

தொடர்ந்து பேசும்போது “பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று ஒரு பொய்யை சொல்லி வருகிறது இலங்கை அரசு. பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியானபோது “பாலச்சந்திரன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை. அவன் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளி” என்று சுப்பிரமணிசாமியிடம் இருந்து அபாண்டமான பொய் அறிக்கை வந்தது. அதை நியாயப்படுத்துவது போல இந்தப் படத்தில் காட்சிகள் இருக்கின்றன.

இந்தப் படம் வெளி வந்தால், ‘பார்த்தீர்களா ? கைதுசெய்யப்பட, புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச்செல்லமுயன்றதால்தான்நாங்கள் சுட்டுக்கொன்றோம் என்பது இப்போதாவதுபுரிகிறதா?”என்று இந்தப்படத்தைவைத்தே இலங்கை அரசு தாங்கள் செய்த பஞ்சமாபாதகத்தை நியாயப்படுத்திக்கொள்ளும். அதற்குதான் இந்தப் படம் எடுக்க்கப்படுகிறதா?” என்று கேட்டபோது நம்மிடம் பதில் இல்லை.

மேற்கொண்டு அவர்கள் சொல்லும் சில விசயங்கள்தான் பகீர் ரகம்
“இந்தப் படத்தின் சில காட்சிகள் இலங்கை அரசின் உதவியோடு இலங்கையிலேயே படமாக்கப்பட்டதாக ஒரு செய்தி வருகிறது . இந்த கதையை இலங்கை தூதரகத்தில் கொடுத்து ஆலோசனை பெற்றதாகவும் முழுக் கதையையும் சென்சார் போர்டிடம் முன்பே காட்டி ஒப்புதல் பெற்றது கூட அவர்களின் வழிகாட்டுதல்படிதான் என்றும் செய்திகள் வருகின்றன.” என்கிறார்கள் உறுதியோடு பாலச்சந்திரன் இதையெல்லாம்இந்த குற்றச் சாட்டுகள் எல்லாம் உண்மை அல்ல என்றால் ..உண்மையிலேயே பாலச்சந்திரன் என்ற கள்ளங்கபடில்லாத சிறுவன் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டதை உலகுக்கு மனிதாபிமானத்தோடு சொல்வதுதான் புலிப் பார்வை படத்தின் நோக்கம் என்றால் …

அதை தெளிவாகவிளக்க வேண்டிய கடமை படக்குழுவுக்கு இருக்கிறது .
காரணம்.. துரோகங்கள் தொடர்ந்து வெல்வதில்லை!

திரைப்பட விமர்சகர்
ராஜதிருமகன் சு.செந்தில்குமார்

எங்கள் பிள்ளைகளை விற்பனைப் பொருள் ஆக்காதீர்கள் என்ற ஈழத்துத் தாயின் குரலைக் கேட்டாவது, ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தாமல், அந்தத் தாய் சொன்னது போல்,படமே எடுக்க வேண்டாம் தமிழக சினிமாத் துறையினரே!
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்- Empty Re: பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்-

Post by மாலதி Fri Jul 25, 2014 9:41 pm

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்- PULIPARVAI





திருவாளர் பிரவீன் காந்தி என்ன நினைத்து இப்படிப் பட்ட காட்சிகளை வைத்தார் என்பது தெரியவில்லை. இதில் தோழர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி வாங்கினேன் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், அப்படி வாங்கியிருக்கலாம் ஆனால் அவருக்கு இத்தகைய காட்சிகள் இருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. இன்னொரு பேட்டியில் இலங்கை தூதரகத்திடம் அனுமதி வாங்கினேன் என்கிறார் அதை தொடர்பு கொண்டு கேட்டால் கண் துடைப்புக்காக என்கிறார்.. இந்த அரசியல் பெரும் அரசியல் இதை கடைசியில் பார்க்கலாம்...



முதலில் பாலச்சந்திரனை கைது செய்யும் பொழுது ஈழ இராணுவ உடையில் இருப்பது போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச அரங்கில் தமிழ் சமூகம் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது. சிங்கள இனவாத அரசு பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று சொல்லி வருகிறது. அதையும் தாண்டி இங்கு சிங்கள இனவாத அரசுக்கு உதவும் வகையில் பாலச்சந்திரனை ஒரு புலிகள் இராணுவத்தின் போராளியாகவும் சித்தரித்து உள்ளார். இதைத் தான் சுப்பிரமணியன் சுவாமி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்து மாணவர் போராட்டம் நடந்த பொழுது சொன்னான் “பாலச்சந்திரனும் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளி” அவன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை புலிகள் இயக்க உறுப்பினர் என்று.  இனி இனவாத சிங்கள அரசு சொல்லும் கைது செய்து வைத்திருந்த ஒரு புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று அடுத்தக்கட்ட புளுகுமூட்டையை அவிழ்த்துவிட வழிவகை செய்கிறீரார் போல் தெரிகிறது. இல்லை சிங்கள தூதரகத்தில் இவர் சென்று கதை சொன்ன பொழுது இப்படி காட்சி அமையுங்கள் எங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லி அதன் படி செய்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.


இது வரை பாலச்சந்திரன் படங்கள் பல இணையத்தில் இருக்கின்றன ஆனால் அதில் எதாவது ஒரு பட்த்திலாவது அவன் தமிழீழ தேசிய இராணுவத்தின் உடையுடன் இருப்பதை ஆதாரமாக காட்ட முடியுமா. ஒரு இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ ஏன் எந்த ஒரு சீருடை பணியில் இருக்கும் ஒருவரின் குழந்தை தனது தந்தை தாய் போல் ஆடை அணிந்துகொள்ள விரும்புவது இயற்கை அதைப் போன்று நீங்கள் காட்சியை வ்டிவமைத்தது போல் தெரியவில்லை, சிங்கள பேரினவாத அரசுக்கு மிகவும் உதவிகரமாக கை கொடுப்பது போல் சிறுவர் போராளிகள் என்ற குற்றச்சாட்டை மறுபடியும் நிறுவ உதவுவது போலவே உங்கள் காட்சி அமைப்புகள் உள்ளன, அதுவும் பல சிறுவர்களின் நடுவே அனைவரும் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற உங்களது காட்சி அமைப்பு.





மேலும் 2009ம் ஆண்டு கடைசியாக தமிழீழ தேசிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈழ தேசியத்தில் இருந்து வெளியேறிய அமைப்பு ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பு UNICEF. இந்த அமைப்புடன் இணைந்து புலிகள் பல உடன்பாடுகளை செய்து கொண்டு சிறுவர்களின் மறுவாழ்வுக்காகவும், மற்றும் அவர்களின் படிப்பு முதற்கொண்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்த பல காரியங்கள் இருக்கின்றன, ஏன் செஞ்சோலை, காந்தரூபன் போன்ற சிறு குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை. ஏன் செஞ்சோலை படுகொலைகளும் தமிழ் சமூகத்தின் நினைவில் இருந்து அகற்ற விரும்புகிற நோக்கத்தில்இங்கு திருவாளர். ப்ரவீன் காந்தி திரும்பவும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு உதவ தனது காட்சி அமைப்புகளில் மிகவும் மெனக்கெட்டு நாம் எல்லாம் பெருமை கொள்வது போல் இருக்க செய்து, அதாவது வீர வசனங்களையும் வீரதீர செயல்கள் கயிறு ஏறுவது, மேலிருந்து குதிப்பது என்று பல செயல்களை நம் முன் நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் வீரத்தை ரசிக்கும் நேரத்தில் சிறுவர் போராளிகள் என்ற இல்லாத கட்டமைப்பை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முயல்வது போலவே தெரிகிறது. 



மேலும் தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் அன்பு பிள்ளை பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. இவரது விளம்பரப்படத்தில், ஒரு வேளை முழு படத்தில் எங்காவது வரலாம் ஆனால் அதை ஒரு சிறு துளியை இவரது ட்ரைலரிலும் காட்டியிருக்கலாம் ட்ரைலர் முழுவதுமே ஒன்று சீருடையில் இருப்பது போலவும் இல்லாவிடில் கடைசியில் பாலச்சந்திரன் இறந்த உடலில் இருக்கும் உடையுடன்  பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் இந்த இரண்டு உடைகளை மட்டுமே அணிந்திருந்தாக மட்டுமே காட்டி இருக்கிறார்.   


ஒரு படம் அதுவும் நடந்த சம்பவத்தை ஒட்டி சித்தரிக்கப்படும் பொழுது அதன் கூறுகள் சிறிதாவது நடந்த சம்பவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமையவேண்டும். அதைவிடுத்து சித்தரிப்பு என்ற பெயரில் அதுவும் நமக்கு ஆதரவாக என்ற நிலையில் இருந்தால் கூட அது தவறானதாகவே முடியும். மேலும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் சர்வதேச நாடுகளின் முன்பு நாம் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வு பாலச்சந்திரனின் மரணம் இதை ஒட்டிய கதையை பின்ணனியாக வைத்து ஒருபடம் எடுக்கப்படும் பொழுது பாலச்சந்திரனின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய இந்தியாவை, நாம் விரும்புகிறோம் என்று தனது படத்தின் இடைச்சொறுகலாக வைத்துவிட்டு பிராபகரன் ஈழத்திற்காக இந்தியா பேச வேண்டும் என்று என்றோ விரும்பியதை இன்று கோடிட்டு காட்டுகிறார். அதே போல் இந்தியாவில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்த பொழுது சென்னை பெசண்ட் நகரில் அனிதா பிரதாப் அவர்கள் எடுத்த பேட்டியில் இன்று பயிற்சி கொடுக்கும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும் என்று சொன்னதையோ அதன்பிறகு இந்திய அமைதிப் படையுடன் சண்டையிட்டதையோ அவருடன் பேசிய தோழர்களிடம் எடுத்துக்காட்டி பேசியதாக தெரியவில்லை.. 




இதையெல்லாம் தாண்டி இந்த படத்தின் ஒரு படலை எழுதியவர், இந்த படத்தை வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் தயாரித்த பச்சை முத்து ஈழ விடுதலையை ஒரே ஒருவர் தான் கேட்டார் அவருக்காக 1,50,000 லடசம் பேர் செத்தார்கள் என்று 2014 தேர்தல் நேரத்தில் பத்திரிக்கை பேட்டியில் சொன்னார். இதே பாரி வேந்தரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன தமிழர் மீட்சிக்காக கட்சி நட்த்துகிறேன் என்று சொல்கிறார் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை தமிழனும் வந்து இவர் கட்சி ஆரம்பிக்க தவம் இருந்தானா என்ன என்று.. இவர் தூக்கி பிடிக்கும் இந்திய தேசிய விடுதலைக்காக இந்தியாவில் இருக்கும் அனைவரும் போராடி சிறை சென்றானா என்ன என்று எல்லாம்.. ஆனால் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை கொச்சைப் படுத்தி பேசிய அதுவும் தேசியத்தலைவரை சர்வதேச நாடுகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று வைத்த குற்றச்சாட்டை வழிமொழியும் இந்த பச்சைமுத்து தயாரிக்கும் படம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப நாம் என்ன முட்டாளா... 

பச்சைமுத்துவின் ஊடக பேட்டி... ஈழத்தைப் பற்றி...

https://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk

-குமரிகண்டம் -


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t47724-topic#ixzz38UtZYsFL 
Under Creative Commons License: Attribution


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்- Empty Re: பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்-

Post by மாலதி Sat Jul 26, 2014 7:02 am

புலிப்பார்வையா? அல்லது,சிங்க(ள) பார்வையா?
********************************************
(இது பற்றிய என் பார்வை)
வயிற்றுப் பாட்டுக்கு இதைவிட திருடுவது சிறந்த தொழில்!
********************************************
மு.வே.யோகேஸ்வரன்
********************************
பிரபா..பாலச்சந்திரன் சிங்கள இனவாதிகளால் கொலை செய்யப்படும்போது..வயது 14 மட்டுமே..கொலை செய்யப் படுவதற்கு முன்னர் எடுத்த படத்தை பார்த்தால் வண்டியும் தொந்தியுமாக அச்சிறுவன் காட்சி அளிப்பதைக் காணலாம்.புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்ற சில நாட்களில் ஓர் சிறுவன் வண்டியும் தொந்தியுமாக இருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் புலிகளின் மிகக் கடுமையான பயிற்சியில், உடல் கட்டாக இருக்குமே தவிர ,தொந்தியாக இருக்காது.அடுத்து,தலைவரின் பாதுகாப்பில் இருந்த போராளிகள் சிலர் பாலச்சந்திரனின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருந்தவர்கள்.அவர்களின் கூற்றுப்படி பாலச் சந்திரனுக்கு ஆயுதம் என்றாலே பிடிக்காதாம்..ஏனெனில் ஆயுதப் போராட்டம் மூலமே பெருமளவில் தந்தை தன்னைவிட்டு அப்பால் நிற்கிறார் என்று நினைத்தான் அச் சிறுவன்.அதனால், ஒருநாள் தந்தையின் கைத் துப்பாக்கியை தூக்கி குளம் போன்ற நீர் நிரம்பிய இடத்தில் அவர் கண் முன்னாலேயே தூக்கி எறிந்திருக்கிறான் பாலச்சந்திரன்..அதன் பின் தலைவர் சிரித்துவிட்டு அதனைத் தேடி எடுத்து துப்பரவு செய்துள்ளார் .என்ன செய்வது மகனாச்சே அதுவும் ..தந்தைப் பாசத்துக்காக ஏங்கும் மகனாச்சே? 
இப்படியெல்லாம் இருக்கும் போது, பாலச் சந்திரனை அதுவும் 14 வயதுள்ள பாலச்சந்திரனை ஓர் சிறுவர் போராளியாக சித்தரித்து ஓர் படம் வந்திருப்பதாக நான் அறிந்தேன்..இன்னும் பார்க்கவில்லை..அப்படி வந்திருந்தால்,சர்வதேசத்துக்கு வெளிக்காட்டும் நோக்கில், புலிகள் இவர்களை போர்க் களத்தில் ஈடுபடுத்தினார்கள் என்னும் ஸ்ரீலங்கா அரசின் கருத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே அது அமையும்.எனவே இப்படியான படங்களை தயாரித்தவர்கள் நிச்சயம் தமிழ் அபிமானிகளாக இருக்க முடியாது..
அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவர்கள்..
தமிழ் மக்கள் இந்தப் படத்தை பார்க்காது ஒதுக்குவதுடன், இதில் சம்பந்தப் பட்ட அனைவரையும் எதிர்காலத்தில் முகவரி தெரியாதவர்களாக ஓரம் கட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு மட்டுமல்ல.தமிழ் இன விடுதலையை நேசிக்கும் அனைவரின் நிலைப்பாடும் ஆகும்!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்- Empty Re: பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’? -விமர்சனம்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum