TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிறுநீர் மருத்துவம் என்றால் என்ன?

2 posters

Go down

சிறுநீர் மருத்துவம் என்றால் என்ன? Empty சிறுநீர் மருத்துவம் என்றால் என்ன?

Post by sakthy Thu Jul 24, 2014 2:08 am

சிறுநீர் மருத்துவம்- Urine Therapy -urotherapy-urinotherapy - uropathy என பலவாறாகச் சொல்லப்படும் மருத்துவம் என்பது, தன் சொந்த சிறுநீரை வாயால் அல்லது மூக்கால் அல்லது உடலில் பூசி சில நோய்களைக் குணப்படுத்துவது எனச் சொல்லப்படுகிறது. இது அமுரி-சிவநீர் எனவும் ஆரிய இந்துமதத்தவர்கள், ஆரிய இந்து வேதத்தை ஆதாரம் காட்டி சொல்கிறார்கள்.அமரி என்பது அமுரி என்று மாறி விட்டது.
அமரி -அமிழ்தம்

இது தமிழர்களிடம் இருந்ததாக சான்றுகள் இல்லாவிடினும், அன்றைய ரோமர்கள் சிறு நீரால்-பல் துலக்கினால் வெண்மையடையும் எனவும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் எனவும் நம்பினார்கள், இஸ்லாமியர்கள் இதைக் haram -என ஒதுக்குகிறார்கள், பைபிள் மீது அதி நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் சிலரும்,ஆரிய இந்துக்கள்-ஆரிய வேதங்கள் சொல்வதாலும் நம்பினார்கள்.சில homeopathy மருத்துவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தியதற்குச் சான்றுகள் உள்ளன.ஆனாலும் தமிழ் சித்தர்கள் இந்த முறையை ஆதரிக்கவில்லை.

மருத்துவ அறிவியல் ரீதியில், சிறுநீர் மருத்துவ ஆதரவாளர்கள் கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கவே செய்கிறது. பெற்றோல் குடிப்பதால்,அதில் உள்ள மதுசாரப் பொருட்களால் மயக்க நிலை ஏற்பட்டு வலி குறைவது போல்,சிறு நீரிலும் உடலில் இருந்து பல பொருட்கள் -minerals-சேர்ந்து வெளியேற்றப்படுகிறது.

உதாரணமாக நாம் எடுக்கும் உணவில் அல்லது மேலதிகமாக எடுக்கும் விட்டமிங்கள், உடலால் சீரணிக்கப்படும் போது, உடல் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மேலதிகமாக இருப்பதை சிறுநீருடன் வெளியேற்றி விடுகிறது. அதனால் தான் விட்டமிங்கள் மற்றும் மினரல்களை மேலதிகமாக எடுக்கும் போது, நமக்குத் தேவையா என்பதைத் தெரிந்து கொண்டு எடுப்பதே மேலானது. கரையும் விட்டமிங்கள் வெளியேறினாலும், கரையாத கால்சியம் போன்றவை வெளியேற்றப்படாமல் சிறு நீரகக்கல் உட்பட சில சிரமங்களை தந்து விடுகிறது.

நமது உடல் நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையானவற்றை எடுத்த பின், தேவைக்கு அதிகமாக உள்ள விட்டமின் மினரல்களுடன், வேறு பல பொருட்கள் சேர்ந்து,(vitamins,minerals,hormones ,estrogens,urea ,melatonin ,tumor antigens, calcium, folic acid, iron, magnesium, zinc........போன்றவை ) சிறு நீருடன் வெளியேற்றப்பகிறது.இவை அதிகாலை அதிகமாகக் காணப்படுகிறது. இவை மருந்தாகப் பயன்படலாம் என்பது அவர்களின் வாதமாகும்.

ஆனாலும் சித்தர்களோ,தமிழர்களோ இதை ஏற்றுக் கொள்ளவில்லை.அதாவது சிறுநீரைக் குடிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த இடத்தில் சிலர் திருமந்திரம் சொல்லும் தந்திரத்தை ஆதாரமாக வைத்து தவறான விளக்கத்தை கொடுக்கிறார்கள்.

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

இங்கே சொல்லப்பட்ட சிவநீர் என்பதோ,அமரி என்ற சொல்லில் இருந்து வந்த, அமுரியை சிறுநீர் என விளக்கம் தந்தால் அது தவறான விளக்கமாகும். திருமந்திரத்தில் வரும், அமுரி தாரணை,என்பது ஒரு யோக முறையைக் குறிக்கிறது என தருமபுரி ஆதீனத்தார் விளக்கம் தருகிறார்கள்.

அமுரிதாரணை என்பது மனத்தை ஒன்றன்மீது சிந்தை வைத்திருத்தலாகிய அட்டாங்க யோகத்துள் ஒன்று என்று சென்னைப் பல்கலைக்கழக அகராதி விளக்கம் தருகிறது.,

அமுரி எனப்படுவது சிறுநீரே என்பாரும் உளர். அது பொருந்தாமை, இங்கு வரும் திருமந்திரங்களாலே அறியப்படும் என்று பொருள் சொல்லப்படுகிறது.
இந்தப் பாடலையும் சிறிது பார்க்கலாம்.

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.

இந்தப் பாடலின் பொருளை சிலர் மாற்றி தவறாக பொருள் கொள்ளுகின்றனர். சித்தர்கள் இதற்கு கூறும் விளக்கம்,சில யோக முறைகளை செய்து கட்டுப்பாட்டுடன் செயற்படுவதால், உடலில் இருக்கும் சில நீரை-நீருடன் உள்ள பொருட்களை உடலிலே தொடர்ந்து உடலில் தங்கச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். இது சாத்தியமான அறிவியல் பூர்வமான ஒன்றாகும்.

இயற்கை முறையில் நமது உடல், குருதி உறைதல் போன்று, தன்னைக் காத்துக் கொள்ள பல வழிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. எப்படி Oil pulling ற்கு தவறான விளக்கம் தரப்படுகிறதோ, அப்படி இந்த சிறுநீர் மருத்துவமும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நல்ல மருத்துவ முறையைப் பயன்படுத்துவதை விட்டு எதிர்/பக்க விளைவுகளைத் தரக்கூடிய சிறுநீரை அருந்துவது, இன்னமும் அறிவியல் உலகில் நிரூபிக்கப்படவில்லை.

வேறு சிலர் புற்று நோயைக் குணப்படுத்தும் என்றும் வாதிடுகிறார்கள். இதற்கு அவர்கள் தரும் காரணம் சிறு நீருடன் வெளியேறும் tumor proteins, மீண்டும் பருகும் போது நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என்பதாகும். அதாவது அம்மை போன்ற சில நோய்களுக்கு நோய் தடுப்பு மருந்து கொடுக்கிறோம். அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, குறித்த நோயின் கிருமிகள் பயன்படுத்தப்படுகின்றன.அதுபோல் இதுவும் செயல்படும் என்பது வாதம். இது நிரூபிக்கப்படவில்லை.சரியானதாகவும் படவில்லை. அந்த வாதம் சரியானதென்றால்,அம்மைக் கிருமிகளை நேரடியாக அம்மை நோயாளியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமே.அதை விட்டு அந்த நோயாளியிடமிருந்து ஏன் தொற்றிவிடும் என விலகி இருக்கிறோம்?

வேறு சிலர், தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுழற்சி சிசு வளர உதவுகிறது என்றும் சிறு நீரில் கிருமிகள் கிடையாது எனவும் வாதம் செய்கிறார்கள்.

கருவறையில் உள்ள குழந்தையையும் நடமாடும் மனிதனையும் ஒப்பிடுவது சரியாகாது. தவிர உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து,சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பதாலும், பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றாலும் எரிச்சலுக்கு ஆளாகி நீர்க்கடுப்பும், ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறுவதும், சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவையும் அனேகமாக பலருக்கு பொதுவாக சில சமயங்களில்,தண்ணீர் குறைவாக எடுக்கும் போதும் காணப்படுகிறது. இந்த நிலையில் சிறுநீர் கழிவு நீரல்ல,கிருமிகளற்ற சுத்தமான நீரெனக் கூறும் சிலரது வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

இதைவிட போகர் சித்தர் பாடல் வரியை, செய்யவே பதினெட்டுக் குட்டம் சூலை, தீரவே சிறுநீரில் கட்சங் கேளு, பையவே பேய்த்தேற்றான ஒன்று செய்து வைத்துக் கொண்டு, நையவே காலைதனில் எழுந்திருந்து நன்மையுடன் சிறுநீரில் ஒரு சேர் வாங்கி ,என்ற வரிகளை ஆதாரமாக வைக்கிறார்கள்.

ஆனால் சித்தர்கள் சொன்னவை எல்லாம் சரியா என்ற கேள்வியை யாரும் வைக்க ஏன் முன்வருவதில்லை? சித்தர்கள் சொன்னதாகவே இருந்தாலும், அவை எல்லாமே உண்மை என எடுத்துக் கொள்ள முடியுமா? வள்ளுவன் சொன்ன பல உவமைகளில் சில ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதை அவர் அன்றைய மக்களின் நம்பிக்கைகளை வைத்து எழுதி இருப்பார் என பாவானர் விளக்கம் சொல்கிறார்.

இந்த மருத்துவம் பற்றி தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் சங்கர், அமுரி என்பது சிறுநீர் என்று சொல்வது பொருந்தாது என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறுகிறார்.

அதே போல் தேனி சிறு நீரகவியல் மருத்துவர் அபிமன் கவுதம் கூறுகையில், அலோபதி மருத்துவமுறையில் இது குறித்து எந்தவித தகவலும் இல்லை. இணையதளங்களில் இதுகுறித்து செய்திகள் உலா வருகிறது. இது குறித்து கூறுபவர்கள் தான் இதை நிரூபிக்க வேண்டும் என்கிறார்.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடல் இயற்கையாகவே மருத்துவராக செயல்படுகிறது.உடலில் உள்ள அனைத்துப் பாகங்களிலும், கருவறையில்,குருதியில் என்று எங்கும் எது தேவையோ அதை நம்மைக் கேட்காமலேயே செய்கிறது.இயற்கை முறையில் நமது உடல், குருதி உறைதல் போன்று, தன்னைக் காத்துக் கொள்ள பல வழிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. தேவையானவற்றை செய்யும் உடல், தேவையற்ற சிறு நீரை வெளியேற்றுகிறது. அது உடலுக்கு தேவை என்றால், உடல் அதை மீள உபயோகிக்கும் முறையை ஏற்படுத்தி இருக்கும்.

இந்த சிறுநீர் மருத்துவத்தை, அன்றில் இருந்து இன்றுவரை, தமிழர்கள் தவிர்ந்த, இஸ்லாமியர்கள் தவிர்ந்த,மற்றைய சமய ஈடுபாடு உடையவர்களாலேயே வைக்கப்பட்டன,வைக்கப்படுகிறது.

மேல் நாடுகளில் இந்தத் தாக்கம் ஓரிரு வருடங்களாக இருந்து வந்ததற்குக் காரணம் பாழய்ப் போன தொலைக்காட்சி-சினிமா தான். நம்மவர்கள் சினிமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு அவற்றை உண்மை என நம்புவதைப் போல்,அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் -My Strange Addiction – வரும் ஒரு நடிகை சிறு நீரைப் உடலிற்குப் பயன்படுத்துகிறாள்.

சிறுநீர் ammonia ,urea, சில நச்சுப் பொருட்களும் கொண்ட கழிவு நீர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இவை நாம் குடிக்கும் போது வயிற்றில்,வாயில்,குடலில் பிரச்சனைகளை தொற்றுக்களைக் கொண்டு வரலாம்.சிறு நீரகம் சரியாக இயங்காவிட்டால் வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக அழுக்குகளைக் கொண்டிருக்கும்.

சொந்த சிறுநீரைக் குடிக்கும்படி சொல்லப்பட்டது ஒரு வழியில் நிம்மதி என்றே சொல்ல வேண்டும். இல்லையேல் யாருடைய சிறு நீரில் எந்த நோய் இருக்கிறதோ யாரறிவார்? இதை ஆதரிப்பவர்கள் பல காரணங்களை சொல்லிக் கொண்டாலும், இதற்கு இதுவரை அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

நமது சினிமா தயாரிப்பாளர்கள் போல் ஒரு படம் வெற்றியடந்தால் அதுபோல் தொடர்ந்து எடுப்பது போல், ஒருவர் சொல்லத் தொடங்கியதும்,ஆராயாது தெரிந்து கொள்ளாது, அப்படியே ஏற்றுக் கொண்டு தொடரும், சிலரின் கருத்துக்களை நம்புவதோ நிராகரிப்பதோ உங்கள் முடிவாகும்.

முடிவாக கருவறையையும் வெளியுலகில் வாழும் மனிதனையும் ஒப்பிடுவது சரியா, உடலைப் புண் என்று வெறுத்த சித்தர்கள் சிறுநீரை மருந்தாக்கி இருப்பார்களா, ஆரிய வேதங்கள் சொல்வதை அப்படியே நம்புவதா, ஏற்றுக் கொள்வதா, மூலிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள், சிறுநீரை மருந்தாக்கி இருப்பார்களா இப்படியான கேள்விகளை கேட்டு விடை காணுங்கள். ஒன்று மட்டும் உண்மை.தமிழ் சித்தர்கள் சிறுநீரை மருந்தாக்கும்படி சொல்லவில்லை.ஆன்மீகவாதிகள் கூட அமுரியையும் சிவ நீரையும், சிறுநீர் என பொருள் சொல்லி விளக்கம் தரவில்லை.

பழமொழிகளை பிழைமொழி ஆக்கினோம். தமிழ் சொற்களை மாற்றினோம். இப்படி எத்தனை அழிக்கப்பட்டது. இவையெல்லாம் தெரிந்தும் தொடர்ந்து அழிக்க முயலுகிறோம்.

நாம் கொஞ்சமாவது சிந்தித்தால் தமிழ் வாழும்.

Morarji Desai ,பிரித்தானிய நடிகை Sarah Miles போன்றவர்கள் பிரபலமான சிறுநீர் இரசிகர்கள்.இந்து வேதம், பிரபலமான ஒருவர் அல்லது வெள்ளைக்காரர்கள் செய்தால்/சொன்னால் உடனே அவையெல்லாம் வேத வாக்காக ஏற்றுக் கொள்வது இயல்பானதாகும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சிறுநீர் மருத்துவம் என்றால் என்ன? Empty Re: சிறுநீர் மருத்துவம் என்றால் என்ன?

Post by மாலதி Thu Jul 24, 2014 7:28 am

சிறுநீர் மருத்துவம்- Urine Therapy -urotherapy-urinotherapy - uropathy  பற்றி அருமையான கட்டுரை 


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» ‘ சன் ஸ்ரோக் ’ என்றால் என்ன? இது எதனால் வருகிறது? இதன் பாதிப்புகள் என்ன?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» சிறுநீர் மருத்துவம் அல்லது Urine Therapy பற்றி கூறுங்கள்
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum