TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா?

2 posters

Go down

பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா? Empty பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா?

Post by sakthy Fri Jul 18, 2014 2:18 pm

பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா?
குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா?

திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்ற கவிஞர் வைரமுத்துவின் போராட்ட சமயத்தில் இப்படி ஒரு கேள்வி.

வள்ளுவன் சொன்ன குறள்கள் பலவற்றில், உவமானங்களை ஆழமாக எடுத்து வைத்திருப்பான். சில சமூகம் சார்ந்ததாகவும்,வேறு சில அறிவு சார்ந்த அல்லது அறிவியல் சார்ந்ததாகவும் இருப்பதைக் காணலாம். இந்த வரிசையில் ஒரு திருக்குறளை ஆய்வு செய்தால்,.........

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் .

இந்தக் குறள் பலருக்கும் தெரிந்தது தான். இதற்கு பொருள் சொன்னவர்களில் பரிமேலழகர், பாவாணர் போன்றோர் -கவரிமா- என்று குறிப்பிட்டு பொருள் கூறி இருந்த நிலையில்,அய்யா கலைஞர் கருணாநிதி அவர்கள் கவரிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். இது சரியா என்பது கேள்வி.

முதலில் குறளுக்குப் பொருள் ,
தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமா வைப் (னைப்) போல வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் மானம் போகும் நிலை ஏற்படுமானால் கவரிமா-னைப் போல உயிர் விடுவார்களாம்.

இந்தக் கருத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பது, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலனைக் கள்வன் என்று சொல்லிக் கொல்வித்ததால்,பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய,நானோஅரசன்! நானே கள்வன் ,என்று சொல்லி தன் செங்கோல் தவறியதென்று,  உயிர் துறந்த சிலப்பதிகார சம்பவமாகும்.

கலைஞர் தன் உரையில் இப்படிப் பொருள் சொல்கிறார்....................
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான்
என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள்
உயிரையே விட்டு விடுவார்கள். (எங்கும் சாதுரியமாகத் தப்பி விடும் அவர், கவ்ரிமான் , கவரிமா சர்ச்சையிலும்  சிக்காது தப்பி விட்டார்.)

இது பாவாணர் உரை.................
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.

இது தான் கவரிமா.......
பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா? Vglgd2

கவரிமான் இப்படி உயிர் விடுவது உண்மையா? மான் இனத்தில் இப்படி உடலில் மயிர் இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் மனிதனின் தலையில் இருக்கும் மயிர் போல், தினமும் உதிர்ந்து முளைக்கும். வீட்டில் வளர்க்கும் நாய்,பூனை போன்ற விலங்குகள் வீட்டில் இருந்தால்,அந்த வீட்டில் மயிர் உதிர்ந்திருப்பதைக் காணலாம். இது போன்றதே மான் இனத்திலும் ஆகும்.
பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா? 34edb2h
எந்த விலங்கியல் புத்தகத்திலும் இந்தச் செய்தி இல்லை! கவரிமான் என்பதைச் சட எருமை Yak என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். கம்பரும் இந்த உவமையைக் கையாள்கிறார்,மானம் நோக்கின் கவரிமா அளைய நீரார், என கம்பராமாயணம், மந்திரப் படலத்தில் சொல்லப்படுகிறது. கம்பர் காலம் வேறு,வள்ளுவன் காலம் வேறு.

ஆனால் கம்பன் சொன்னதும் வள்ளுவன் சொன்னதும் கவரிமா எனும் போது, எப்படி பொருள் கவரிமான் ஆயிற்று?
பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா? 2hq5mp5
கவரிமான் எங்கு வசிக்கிறது? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா? எப்படி தற்கொலை செய்து கொள்ளும்? இப்படிச் சில கேள்விகள்.

கலைஞரும் வேறு சிலரும், ஏன் நாமும் குழப்பிக் கொண்ட கவரிமான் என்பது தவறானதாகும். கவரிமா என்று வள்ளுவனும்,கம்பனும்,தேவாரமும்,பதிற்று பத்து,புறனானூற்றிலும் கூறப்பட்டது கவரிமா வே தவிர கவரிமான் அல்ல.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்….............என்கிறது புற நானூறு.

இதற்குப் பொருள்..............இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பதாகும்.

கவரிமா என்று ஒரு விலங்கு இருக்கிறது. இமயமலைப் பகுதியில் அதாவது குளிர்ப் பிரதேசங்களில் வாழும் இந்த விலங்கு, குளிரில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இயற்கை கொடுத்த நீண்ட சடை கொண்டது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..இதன் மயிரை அகற்றி சீனர்கள் பெண்களுக்கான செயற்கை முடியை-சவரி- (பெண்கள் பாவிக்கும் பொய்முடி,கவரி -சவரி ஆயிற்று.) ஏற்றுமதி செய்தனர்.

வள்ளுவன் சொன்ன இந்தக் கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் விலங்கு.
மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல்.(அரி மா=சிங்கம்)
இந்தியா முழுவதும் இமயம் வரை தமிழர்கள் வாழ்ந்ததால்,சங்க இலக்கியங்கள் இதை சொல்லி இருக்கலாம்.கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல. மாடு வகையை சார்ந்தது.

வள்ளுவன் சொன்ன குறளிலும்  தவறு இல்லை,பெரும்பாலானான உரைகளிலும் தவறு இல்லை.

வள்ளுவன் அறிவியல் ரீதியாக சொன்னதை மாற்றி விட்டனர்.கவரிமா வும் கவரிமானும் ஒன்றல்ல.
கலைஞரும், நாமும்  கவரிமா வை, கவரிமான் என புரிந்து கொண்டதுதான் தவறு..

இதே போல் கடமா (Bos gaurus,gaur,Indian bison ) அல்லது காட்டெருது எனப்படுவது இந்தியக் காடுகளில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆவினம். அக்குடும்ப இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது கடமா ஆகும். இவ்விலங்கு கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது.
இது கடமா................
பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா? Fegz7o
ஆமா/ஆமான்(Indian bison, i.e, bos guarus), மரையா/மரையான் (Nilgai), கவரிமா/கவரிமான் (Yak), கலைமா/கலைமான் (black buck), வெளிமா/வெளிமான் (Indian gazelle) என்பது போல கடமா என்றாலும், கடமான் Sambur deer என்றாலும் ஒன்றுதான். இப்படி கவரிமா என்பது கவரிமான் ஆக்கப்பட்டு  இருக்கலாம். ஆனாலும் திருக்குறள் சொல்லாததை நாம் மாற்றிச் சொல்வது நியாயமல்ல.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா? Empty Re: பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் சொன்ன குறள் தவறாய்ப் போனதா? குறள் தவறா இல்லை கலைஞர் உரை தவறா?

Post by mmani Fri Jul 18, 2014 3:06 pm

கலைஞரும், நாமும்  கவரிமா வை, கவரிமான் என புரிந்து கொண்டதுதான் தவறு..

அருமையான் விளக்கம்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum