TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எத்தனை எத்தனை மலர்கள்

Go down

எத்தனை எத்தனை மலர்கள்  Empty எத்தனை எத்தனை மலர்கள்

Post by மாலதி Thu Jul 10, 2014 8:24 am

பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்தனர். எனவே, இயற்கையைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர். இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட இயலாவண்ணம், மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர். வாழும் முறைமைக்கு அடிப்படையான நானிலப்பாகுபாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர். இவையே பின்னர்த் திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று. (படங்கள் தந்த விக்கி பொதுவிற்கு நன்றி)
எத்தனை எத்தனை மலர்கள்  798px-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D 
பூக்களை உவமையாகவும் உருவகமாகவும் கையாளும் வண்ணம் மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து நோய் நீக்கவும் தளர்ச்சி போக்கவும் ஊட்டம் பெறவும் பயன்படுத்தியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கபிலர் தம்முடைய குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கியத்தில் வரிசையாக 99 வகைப் பூக்களைக் குறிப்பிடுகின்றார். இந்நூல் ஆரிய அரசர் பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக இயற்றப் பெற்றது. எனவே, இந்நூலில் பூக்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றுள்ளதால் தமிழர் வாழ்வில் பூக்கள் பெற்றுள்ள முதன்மை இடத்தை எளிதில் அறியலாம்.

கபிலர் பெருமானால் குறிக்கப்பெறும் பூக்கள் வருமாறு : -



  1. அடும்பு

  2. அதிரல்

  3. அவரை

  4. அனிச்சம்

  5. ஆத்தி

  6. ஆம்பல்

  7. ஆரம்

  8. ஆவிரை

  9. இலவம்

  10. ஈங்கை

  11. உந்தூழ்(பெருமூங்கிற்பூ)

  12. எருவை

  13. எறுழம்

  14. கஞ்சங்குல்லை

  15. கரந்தை

  16. கருவிளம்

  17. காஞ்சி 

  18. காயா

  19. காழ்வை(அகிற்பூ)

  20. குடசம் (வெள்ளை நிற ப்பாலைப்பூ)

  21. குரவம்

  22. குருக்கத்தி

  23. குருகிலை(முருக்கிலை)

  24. குருந்தம்

  25. குவளை

  26. குளவி

  27. குறிஞ்சி

  28. குறுநறுங்கண்ணி

  29. கூவிரம்

  30. கூவிளம்

  31. கைதை

  32. கொகுடி

  33. கொன்றை

  34. கோங்கம்

  35. கோடல்

  36. சண்பகம்

  37. சிந்துவாரம்

  38. சிறுசெங்குரலி (கருந்தாமக்கொடிப்பூ)

  39. சிறுபூளை

  40. சிறுமாரோடம்(செங்கருங்காலி)

  41. சுள்ளி

  42. சூரல்

  43. செங்காந்தள்

  44. செங்கொடுவேரி

  45. செம்மல்

  46. செருந்தி

  47. செருவிளை

  48. சேடல்

  49. ஞாழல்

  50. தணக்கம்

  51. தளவம்

  52. தாமரை

  53. தாழை

  54. தில்லை

  55. திலகம்

  56. தும்பை

  57. துழாய்

  58. தேமா (தேமாம்பூ)

  59. தோன்றி

  60. நந்தி

  61. நரந்தம்

  62. நள்ளிருள்நாறி(இருவாட்சிப்பூ)

  63. நறவம்

  64. நாகப்பூ

  65. நெய்தல்

  66. பகன்றை

  67. பசும்பிடி

  68. பயினி

  69. பலாசம்

  70. பாங்கர்

  71. பாதிரி

  72. பாரம்

  73. பாலை

  74. பிடவம்

  75. பிண்டி

  76. பித்திகம்

  77. பீரம்

  78. புழகு(எருக்கம்பூ)

  79. புன்னாகம்

  80. புன்னை

  81. போங்கம்(மஞ்சாடிப்பூ)

  82. மணிக் குலை

  83. மணிச்சிகை(செம்மணிப்பூ)

  84. மராஅம்(மரவம்)

  85. மருதம்

  86. மா

  87. முல்லை

  88. மௌவல்

  89. வகுளம்

  90. வஞ்சி

  91. வடவனம்

  92. வழை

  93. வள்ளி

  94. வாகை

  95. வாழை

  96. வானி

  97. வெட்சி

  98. வேங்கை

  99. வேரல்(சிறுமூங்கிற்பூ)



பழந்தமிழர்கள் அறிவியல் துறைகளில் இன்றைக்கும் பிறர் எட்டாத உயரத்தைத் தொட்டு உள்ளனர் என்பதற்கு அவர்கள் உணர்த்திய பயிரறிவியலே சான்றாகும். ஆரம் - சந்தனம், துழாய் - துளசி, நரந்தம்- ஆரஞ்சு, பித்திகம் - பிச்சிப்பூ, பீரம்- பீர்க்கம்பூ, என்பன போன்று சில பூக்கள் வேறு பெயர்களில் இப்போது குறிக்கப்பெற்றாலும் கபிலர் பெருமான் குறிக்கும் பூக்கள் யாவும் இப்போதும் உள்ளன என்பதும் சிறப்பானதாகும். அதற்கு எடுத்துக்காட்டாக மலர்களின் பலவகை நிலைகளை வேறுபடுத்தி உள்ளமையைக் கூறலாம்.
எத்தனை எத்தனை மலர்கள்  800px-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF 
பூக்களின் நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என ஐந்து வகையாகப் பகுத்தனர்; பின்னர் மலருக்கு அடுத்து அலர் என்னும் நிலையையும் பகுத்தனர்.

பூ தோன்றும் நிலை அரும்பு எனப்படுகிறது. மேலும் முல்லை அரும்பு அல்லது மல்லிகை அரும்பு போல் சிறியதாயும் கூர்மையாயும் இருப்பது அரும்பு; அடுக்கு மல்லிகை அரும்பு போல் சற்றுப் பெரியதாகவும் மொட்டையாகவும் இருப்பது மொட்டு; தாமரை அரும்பு போல் பெரிதாக இருப்பது முகை; இதுவும் பசு முகை, எதிர்முகை, கொழுமுகை என மூவகையாகும்.

பூக்கள் விரியாத நிலையில் இதழ் பொதிந்து இருக்கும்; அஃதாவது மகரந்தப் பைகள் அவிழாமல் பொதிந்து இருக்கும்; அஃதாவது கருவை ஏற்றுக் கொள்ளும் கருப்பை பொதிந்து கிடக்கும்; இந்நிலை போது எனப் பெறும். பொதிந்து கிடப்பது போது என்றாயிற்று எனக் கூறலாம். (பொதிந்து வைத்தல் என்றால் பொட்டலம் கட்டுவது போல் ஒன்றை உள்ளே வைத்திருத்தல்.)

மல் என்பதற்கு வளம் என்றும் பொருள் உண்டு. எனவே தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையான வளம் உடையதான பூவின் நிலை மலர் எனப்பெறும். (இவ்வாறு வளத்தை உருவாக்காதவை - மல் அற்றவை - மலடு எனப்பெறும்.) 

மலர்ந்த பின்பு தேன் நீங்கி, மகரந்தம் கெட்டு வாடிப்போன - அலர்ந்து போன - பூ அலர் எனப் பெறும்.

எத்தனை எத்தனை மலர்கள்  450px-Pink_tulips_closed 
பூ வாடிய நிலை செம்மல் ஆகும்.

மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே வீழும் பூ வீ எனக் குறிக்கப் பெறும். 

மகரந்தப்பை, கருப்பை முதலியன பூக்களின் அடிப்படை உறுப்புகளாகும். இவை உரிய பக்குவ நிலைக்கு வரும்வரை, இவற்றைத் தழுவி இருப்பது - புல்லி இருப்பது புல்லி எனக் கூறப்பெறுகிறது. அவ்வாறு புல்லுதல் அல்லாதது (அல்+இ) அல்லி ஆகும். சுருக்கமாகக் கூறுவதாயின் அகஇதழ் அல்லி என்றும் புற இதழ் புல்லி என்றும் சொல்லப்படும்.

பூக்காம்பு - தண்டு சிறியதாக இருப்பது காம்பு எனப்பெறும். 

பருமனாகவும் மென்மையாகவும் இருக்கும் காம்பு தாள் அல்லது தண்டு எனப்பெறும். உள்துளையுள்ள காம்பு நாளம் எனப்பெறும்.

அக்காலத்தில் தமிழ்நாட்டவரிடமே இருந்த இந்நுட்பமான அறிவியல் அறிவு இக்காலத்திலும்கூடப் பிறமொழிகளில் அமையவில்லை.

பூவின் பாகங்கள்



  1. புல்லி வட்டம்

  2. அல்லி வட்டம்

  3. மகரந்த வட்டம்

  4. சூலகம் 



என நான்கு வகைப்படும்.

இவற்றுள் புல்லி வட்டம் பூவின் புற அடுக்காகும். இது பச்சை நிறத்தில் இருக்கும். அல்லி வட்டம் என்பது பூவிதழின் தொகுப்பாகும்.

மகரந்தவட்டமானது



  1. அல்லி

  2. மகரந்தப்பை

  3. மகரந்த இழை

  4. சூல்

  5. புல்லி

  6. பூத்தளம்



எனப் பகுக்கப்படும்.



  1. சூலகத்தில் 

  2. சூல்முனை

  3. சூல்தண்டு

  4. சூல்பை 



ஆகியவை உள்ளன.

இப்பாகுபாட்டை எல்லாம் பண்டைக்காலத்திலேயே பாங்குடன் நம் முன்னைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதுதான் தமிழில் உள்ள அறிவியல் வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» * ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்? *உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை? *ஆண், பெண், அலியாவது ஏன்? *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் * உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு?
» மலர்கள்
» மலர்கள்
» "செஞ்சோலையில் உதிர்ந்த மலர்கள் 14.08.2006 "
» வேலன்-பட்டர்பிளை மலர்கள்-அழகிய ஸ்கிரீன்சேவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum