TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Go down

பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்? Empty பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

Post by mmani Thu Jul 03, 2014 6:22 am

டீசல் விலை உயர்வு உட்பட, செலவினங்கள் அதிகரிப்பை காரணம் காட்டி, தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டண உயர்வு குறித்து, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, எப்போது வேண்டுமானாலும்,வெளியாகும் என, போக்குவரத்துக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலம் மூலம், 20,654 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவற்றில் தினந்தோறும் சராசரியாக, 1.98 கோடி முதல் 2.10 கோடி வரையிலான பயணிகள் பலன் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும், 55 லட்சம் பேர், தினமும் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

ரூ.20 கோடி வருவாய்:

போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும், 20 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும், பேருந்துகளின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவை சொல்லிக்கொள்ளும் படி இல்லாததால், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தை சந்தித்துவருகின்றன.கடந்த, 2011 வரை, பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால், போக்குவரத்துக் கழகங்கள், பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதில், முதல்கட்டமாக, 2012ல் பேருந்து கட்டணம்உயர்த்தப்பட்டதோடு, போக்குவரத்துக் கழங்களுக்கு ஆண்டுக்கு, 1,000 புதிய பேருந்து வழங்கப்பட்டு, பழைய பாடாவதி பேருந்துகள், கண்டம் செய்யப்பட்டன. போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளித்து வந்த நிலையில், மாதந்தோறும் டீசல் விலை உயர்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. 2012ல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் லிட்டர், 46.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், லிட்டருக்கு, 15.14 ரூபாய்உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாதந்தோறும், டீசல் விலையை உயர்த்தி வந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை, அரசே ஏற்று வந்தது. 2014ல் ஜனவரி துவங்கி நேற்று முன்தினம் வரை, டீசல் விலை, 3.80 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு, லிட்டர், 61.64 ரூபாய்க்கு விற்கிறது.எரிபொருள் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி, மே மாதம்கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாத தோறும் டீசல் விலை அதிகரிப்பால், பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.கட்டண உயர்வு குறித்து நிர்ணயம் செய்ய, இன்று போக்கு வரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்காக, அந்தந்த கோட்டங்களில் இருந்து அதிகாரிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என, போக்குவரத்துக் கழக வட்டாரதகவல்கள் தெரிவிக்கின்றன.

வேறு வழியில்லை:

கோட்ட நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. அந்தந்த மாவட்டங்களில் இருந்து வெளியிடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் கட்டணம், ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து கட்டணம்உயர்த்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.கடந்த, 2012ல் பேருந்து கட்டண உயர்வுக்கு பின், நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு உள்ளதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுவதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம், என்றார்.

ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பு:

"டீசல் விலை உயர்வால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்பட்டு வருகிறது,” என, அரசு போக்குவரத்துக் கழக, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க, மாநில உதவித் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தினந்தோறும், ஒரு கோடியே, ஆயிரத்து 589 கி.மீ., தூரம் இயங்குவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவு தூரத்துக்கு பேருந்துகளை இயக்க, தினந்தோறும் குறைந்தபட்சம், 40 லட்சம் லிட்டர் டீசல் பயன் படுத்தப்படுகிறது.போக்குவரத்துக் கழகங்கள், ஒரு லிட்டர் டீசலில், ஆறு கி.மீ., தூரம் இயக்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்கின்றன. தற்போதுள்ள சூழலில், 4.8 கி.மீ., தூரம் முதல் அதிகபட்சமாக, 5.5 கி.மீ., தூரம் வரை, பேருந்துகளை இயக்கி வருகிறோம்.டீசல் விலையில், ஒரு ரூபாய் அதிகரிக்கும் நிலையில், 840 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலைக்கு, போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டு உள்ளன.நடப்பாண்டில், கடந்த ஆறு மாதத்தில், ஆறு முறை டீசல் விலை, 3.80 ரூபாய் வரை, ஆயில் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்காரணமாக, 3,300 கோடி ரூபாய் வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்புஏற்பட்டு உள்ளது.கடந்த ஆண்டில் மட்டும், 5,000 கோடி ரூபாய் வரை, போக்குரவத்துக் கழகங்களுக்கு, டீசல் விலை உயர்வால், இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பை அரசு வழங்குவதாக தெரிவித்தாலும், அதற்கான ஒதுக்கும் நிதி, உரிய நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களை வந்தடைவது இல்லை.அதன் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத நிலை, அகவிலைப்படி, உயர்வை அமல்படுத்த முடியாத சூழல், உருவாகி உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: கருணாநிதி பேட்டி
» காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு நிபந்தனை
» ரயில்வே நலன் கருதி எடுத்த முடிவு: தினேஷ் ; கட்டணத்தை உயர்த்த விடமாட்டேன்: மம்தா
» சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !
» தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum