TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும்

2 posters

Go down

கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும் Empty கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும்

Post by Tamil Sat Jun 07, 2014 5:36 pm

கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும் 10411419_726313874092402_4330755973490368154_n
கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும்
அல்-ஹைடா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் சிறீலங்காவினைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் அருகே வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது இவர் பாகிஸ்தான் உள்ளகப் புலனாய்வு அமைப்புடன் இணைந்து பணியாற்றிய மொஹமது ஹ§சைனி என்று மலேசியக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புபட்டவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு, சென்னையில் வைத்து இன்னொரு சிறீலங்காவின் பிரசையான ஷாகிர் உசைன் கைது செய்யப்பட்ட நிலையில் இவர் கைதாகியிருந்தார். இந்த இருவரும் இணைந்தே பணியாற்றியதாகவும், இருவருக்கும் தொடர்புகள் இருப்பதாகவும், ஹ§சைனியின் நெருங்கிய உதவியாளர்தான் ஷாகிர் உசைன் எனவும் விசாரணையின் போது மேலும் தெரியவந்தது.
சென்னை மற்றும் பெங்களூரிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கு உதவும்படி தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக விசாரணையின்போது ஹ§சைனி மலேசியக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையே சென்னையில் கைது செய்யப்பட்டவரும் விசாரணையின்போது கூறியிருந்தார். அத்துடன், பாகிஸ்தான உளவு நிறுவனம், மாலைத்தீவிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இருவரை அனுப்ப திட்டமிட்டது எனவும் அவர்களுக்கு தேவையான பயண ஆவணங்கள் மற்றும் மறைவிடங்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் ஹ§சைனி மலேசியக் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் ஹ§சைனியின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்த மலேசிய சிறப்புக் காவல்துறைப் பிரிவினர், ஹ§சைனியின் திட்டம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல்களை வழங்கியிருந்துள்ளனர். இந்நிலையிலேயே சென்னையிலும் சில நாட்களின் பின் மலேசியாவிலும் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. மலேசியாவில் கைது செய்யப்பட்டவரை இந்தியாவிற்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடப்பட்டுவருகின்றது. ஹ§சைனியை விரைவாக இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி இந்திய புலனாய்வு துறையிடம் தமிழ்நாடு காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பல்வேறு சட்டக்காரணங்களால் ஹ§சைனியை ஒப்படைப்பதற்கு மலேசியா காலம் தாழ்த்தி வருகின்றது.
ஆனால், இதே மலேசியாதான் கசாப்புக் கடைக்காரன் கையில் ஆட்டைப் பிடித்துக் கொடுத்ததுபோல, அப்பாவித் தமிழர்கள் மூவரைப் பிடித்து சிறீலங்காவின் கைகளில் பலிக்கடாக்களாக ஒப்படைத்திருக்கின்றது. இலங்கையில் தமிழர்களை அடக்கியடுக்கிவிட்ட திமிருடன் இருக்கும் சிங்களப் பேரினவாதம், புலம்பெயர்ந்த தமிழர்களை ஒடுக்கமுடியாமற் திணறிவருகின்றது. அவர்களை ஒடுக்குவதற்காக அண்மையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் தடை உத்தரவைக் கொண்டுவந்தது. ஆனால், சிறீலங்காவிற்கு ஆதரவு வழங்குகின்ற அவுஸ்திரேலியா உட்பட கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள், எந்தவொரு ஆதாரங்களும் இல்லாத இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்து, இதற்கு வெளிப்படையாகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், சிறீலங்காவிற்கு உதவ முன்னிற்கின்ற நாடுகள் இவர்களைக் கைது செய்து கொடுக்க முன்வந்தன. இதில் இந்தியா முன்னணியாக நடவடிக்கை எடுத்து அவர்களை ஒப்படைக்கத் தயாராக இருந்த நிலையில், தற்போது மலேசியா மூன்று தமிழர்களைக் கைது செய்து சிறீலங்கா இனப்படுகொலையாளிகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது.
அகதிகள் தொடர்பாக சர்வதேச ரீதியாக உள்ள சட்டங்களையும் மதிக்காமல், கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைத் தேடுவதற்கு கால அவகாசமும் வழங்காமல் கொடுங்கோலர்களின் கைகளில் அவர்களை அவசர அவசரமாக ஒப்படைத்துள்ளது. ஏன் என்று கேட்பதற்கு, தமிழர்களுக்கென்றொரு நாடோ அல்லது தமிழர்களுக்கென்றொரு பலம்மிக்க அமைப்போ இல்லை என்பதால், தமிழர்கள் விடயத்தில் தான்தோன்றித்தனமாக சில நாடுகள் செயற்படத் தொடங்கிவிட்டனவோ என்ற அச்சமே, மலேசியாவின் நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் பேரழிவில் இருந்து தப்பிய மக்கள் இன்று பல்வேறு நாடுகளிலும் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றார்கள். அவர்களின் தஞ்சக்கோரிக்கையை பல நாடுகள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றது. ஆனால், தஞ்சம்கோரியவர்களை மலேசிய அரசு கைது செய்து கொலையாளிகளின் கையில் ஒப்படைத்துள்ளமையானது சர்வதேச அகதிகளுக்கான சட்டத்தையும், சர்வதேச மனித உரிமை விதிகளையும் முற்றாக மீறிய செயலாகும். அத்துடன், ஓர் இனஅழிப்புக்குத் துணைபோகும் செயலாகவுமே இதனைப் பார்க்கமுடியும். பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஒருவரை ஒப்படைக்க ஆயிரம் சட்டக் காரணங்களைக் கூறும் மலேசியா, பாதிக்கப்பட்ட தமிழர்களை ஒரு கொலைகார அரசின் கைகளில் ஒப்படைப்பதற்கு எந்தவொரு சர்வதேச சட்டவிதிகளையும் பொருட்படுத்தவில்லை.
“பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களையும் தேடிப்பிடித்து உயிரை எடுக்க துடிக்கும் சிறீலங்கா இனவெறி அரசுக்கு மலேசியக் காவல்துறை வேலை செய்கின்றதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, “தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக தோற்கடிப்பட்டுவிட்டதாகக் கூறி சிறீலங்கா அரசாங்கம் வெற்றிவிழாவே கொண்டாடிவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க விளைகிறார்கள் என்று கூறி மூன்று தமிழர்களை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது முற்றிலும் வேடிக்கையான ஒன்றாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கைதான மூவரில் இருவருக்கு ஏற்கனவே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது என்றும் ஒருவர் அரசிடம் தஞ்சம் கேட்டிருந்தார். ஆனால் அப்படிப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பியது தவறானது. இது ஐ.நா.சபையினுடைய விதிமுறைக்கும் எதிரானது. இலங்கையில் அவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் நிலையிலும் அவர்களை அனுப்பி இருப்பது தவறான நடைமுறை’ என்று ஐ.நா. அகதிகள் அமைப்பின் நிர்வாகி யந்தி இஸ்மாயில் கூறியிருக்கின்றார்.
மூவரை மலேசியா நாடு கடத்தியிருப்பதையிட்டு கவலையடைந்திருக்கும் ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்), இப்போது அவர்கள் பாரதூரமான பாதிப்பான நெருக்கடி நிலையில் இருப்பதாகவும் எச்சரித்திருக்கிறது. அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆனால், இவர்களுக்காக கவலைப்படுவதற்கும் சர்வதேச சட்டவிதிகளை மீறிய மலேசியா தொடர்ந்து மேற்கொண்டுவரும் இவ்வாறான நடவடிக்கையை எதிர்காலத்தில் என்றாலும் தடுத்து நிறுத்துவதற்கும் யாரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத்துணியவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, மேலும் பலரைச் சிங்களப் பேரினவாதக் கரங்களில் ஒப்படைக்கும் துணிவை ஏனைய நாடுகளுக்கும் கொடுத்துவிடக்கூடும். இலங்கையில் இன்னமும் தமிழர்கள் காணாமல்போய்க்கொண்டும், மர்மமான முறையில் சாவைத் தழுவிக்கொண்டிருக்கும் நிலையில், கொலைக் கரங்களில் ஒப்படைக்கப்படும் இவ்வாறானவர்களை தடுக்க யார் முன்வரப்போகின்றார்களோ?
ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும் Empty Re: கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்கப்படும் ஆடும் சிறீலங்கா கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களும்

Post by அனுராகவன் Sun Jun 08, 2014 5:50 pm

கொடுமை...எப்போ மாறும் ஏக்கம்
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு கையில் ரூ.17 ஆயிரம்; மறு கையில் ரூ.33 கோடி: ஆசை காட்டும் இணையதள மோசடி
» மோடியின் கையில் '13' - ஜெயலலிதாவின் கையில் தனிநாடு - அவ்வாறாயின் கூட்டமைப்பிடம்?
» உலகிலேயே அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் இடம் சுவிஸின் சூரிச்.
» தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கொன்றதால் “சிறீலங்கா மீது
» போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum