TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டி' காரணம் : சாக்கு சொல்கிறார் தோனி

Go down

தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டி' காரணம் : சாக்கு சொல்கிறார் தோனி Empty தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டி' காரணம் : சாக்கு சொல்கிறார் தோனி

Post by ஜனனி Thu May 13, 2010 7:33 am

தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டி' காரணம் : சாக்கு சொல்கிறார் தோனி Tblfpnnews_19597589970







செயின்ட்
லூசியா : உலக கோப்பை தொடரில் இந்திய அணி சந்தித்த படுதோல்விக்கு,
ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' தான் காரணம் என, கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீசில் நடக்கும் மூன்றாவது
'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது.
இலங்கைக்கு எதிரான முக்கிய 'சூப்பர்-8' போட்டியில் இந்திய அணி முதல் 10
ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்தது. பின் அடுத்த 10 ஓவரில்
பேட்டிங்கில் சொதப்பி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டும்
எடுத்தது.பின் இலங்கை அணிக்கு கேப்டன் சங்ககரா, மாத்யூஸ் தலா 46 ரன்கள்
அடித்து கைகொடுத்தனர். கடைசி பந்தில் கபுகேதரா 'சூப்பர்' சிக்சர் அடிக்க,
20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இதையடுத்து, 'சூப்பர்-8' சுற்றில் ஒரு வெற்றிகூட பெறாமல், 'ஹாட்ரிக்'
தோல்வியுடன் இந்தியா வெளியேறியது.

இதுகுறித்து தோனி கூறியது:ஐ.பி.எல்.,
காரணமாகத்தான் உலக கோப்பை தொடருக்கு தயாராக முடியவில்லை எனக் கூறவில்லை.
இத்தொடர், நமது பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலமாகத்தான்
ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா போன்ற வீரர்கள்
உருவாகினர். ஆனால் அதிக போட்டிகளில் விளையாட வேண்டிய நிலையில் வீரர்கள்
தங்கள் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஐ.பி.எல்.,
போட்டிகளுக்கு பின் நடந்த 'இரவு பார்ட்டிகள்' மற்றும் அடிக்கடி பயணம்
செய்தது போன்றவைகள்வீரர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்திவிட்டது.

நல்ல இலக்கு: இலங்கைக்கு
எதிராக 163 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான், இருப்பினும் 180க்கும்
அதிகமாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும். தவிர, சேவக், ஜாகிர்
கான் மற்றும் பிரவீண் குமார் போன்ற வீரர்கள் இல்லாததும் இழப்பு தான்.
ஆனால் வீரர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை என்பது தான்
உண்மை. இது ஏன் எனத்தெரியவில்லை. இருப்பினும் இந்தியா தான் சிறந்த
'டுவென்டி-20' அணி என்பதில் சந்தேகமில்லை.

அணியின் பிரச்னை: 'ஷார்ட்
பிட்ச்' பவுலிங் தான் இந்திய அணிக்கு பெரும் பிரச்னை என்கிறார்கள். இந்த
கருத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. தொடர்ந்து 140-150 கி.மீ.,
வேகத்தில் பவுலிங் செய்யும் வீரர்கள் நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை.
ஏனெனில் இந்திய மைதானங்களும் வேகத்துக்கு ஒத்துழைக் காது. ஆனால் தரமான
சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

தேசமே பெரிது: பொதுவாக மற்ற
அனைத்தையும் விட தேசம் தான் பெரிது. இதைத்தான் எப்போதும் உயர்வாக
எண்ணுவோம். எங்களால் முடிந்தவரைக்கும் ஒவ்வொருமுறையும் சிறப்பாக விளையாட
முயற்சிப் போம். ஆனால் எப்போதும் தொடர்ந்து வெற்றிபெற முடியாது.

இது சகஜம்: தோல்வி குறித்து
பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. இதுகுறித்து எனக்கு கவலையில்லை. ஏனெனில்
இந்திய அணிக்காக விளையாடும் போதெல்லாம் எப்போதும் ஒருவித நெருக்கடி
இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் விளையாட்டில் ஒருபகுதிதான். இவ்வாறு
தோனி கூறினார்.

மீண்டும் சொதப்பல் :
ஐ.சி.சி., நடத்தும் சர்வதேச தொடர்களில் இந்தியா தொடர்ந்து சொதப்புகிறது.
கடந்த 2007 உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் முதல் சுற்றுடன் திரும்பியது.
பின் 2009 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் மோசமான தோல்வியை பதிவு
செய்தது. பின் நடந்த சாம்பியன்ஸ் லீக் (மினி உலக கோப்பை) தொடரில் லீக்
சுற்றுடன் திரும்பியது. தற்போது இரண்டாவது முறையாக 'டுவென்டி-20'
தொடரில்'சூப்பர்-8'சுற்றுடன் வெளியேறியுள்ளது. வரும் 2011ல் உலக கோப்பை
(50 ஓவர்) தொடர் நடக்க இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இந்திய
கிரிக்கெட் போர்டு விழித்துக் கொள்ள வேண்டும். மோடியுடன் வீண் அரசியல்
செய்வதை தவிர்த்து, திறமை வாய்ந்த இளம் வீரர்களை விரைவில் கண்டறிய
வேண்டும்.

தேசம் முக்கியமல்ல :
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெற்றி
பெற்ற தோனி கூறுகையில்,'' ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் ஏராளமான பணத்தை
இதில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்.
குறைந்தது அரையிறுதி வரையிலாவது அணியை கொண்டு வரவேண்டும். அப்போதுதான்
அவர்களுக்கு மகிழ்ச்சி,'' என்றார். ஆனால் தேசத்தின் மானம் காக்கும் உலக
கோப்பை தொடரில், கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.

தவறான தேர்வு : ஐ.பி.எல்.,
தொடரில் சாதித்த 'ஆல் ரவுண்டர்' இர்பான் பதான், அதிக விக்கெட் கைப்பற்றிய
பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா, மனிஷ் பாண்டே புறக்கணிக்கப் பட்டனர். மாறாக
பீல்டிங், பவுலிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் ரவிந்திர
ஜடேஜா அடுத்தடுத்து வாய்ப்பு பெற்றார். ஜாகிர் கான் காயத்துடன்
பங்கேற்றார். அவ்வப்போது பேட்டிங் ஆர்டரை மாற்றியதும் தோல்விக்கு
காரணமாகிவிட்டது.

வரலாறு தெரியாதா? :கடந்த
1983 உலக கோப்பை, 2007 உலக கோப்பைபைனல்களில் 'டாஸ்' வென்று முதலில்
பேட்டிங் செய்த இந்திய அணி கோப்பை வென்றுள்ளது. ஆனால், 2003 உலக கோப்பை
பைனலில் 'டாஸ்' வென்றும், பீல்டிங் தேர்வு செய்ததால் மோசமாக தோற்றோம்.
இந்த வரலாறு தெரியாத தோனி, 'சூப்பர்-8' சுற்றின் இரண்டு போட்டிகளிலும்,
பீல்டிங் தேர்வு செய்து பெரும் தவறு செய்தார்.

பவுலிங் ஏமாற்றம் : இந்திய
அணியின் பவுலிங்கில் ஆஷிஸ் நெஹ்ரா மட்டும் அதிகபட்சமாக 10 விக்கெட்
வீழ்த்தியுள்ளார். இவரை அடுத்து யூசுப் பதான் 4, தவிர, பிரவீண் குமார்,
ஜாகிர் கான், வினய் குமார் (ஒரு போட்டி), ரவிந்திர ஜடேஜா, யுவராஜ் ஆகியோர்
தலா 2 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம்
என்னவென்றால், முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன், 5 போட்டியில் ஒரு
விக்கெட் கூட வீழ்த்தாது பெரும் அதிர்ச்சி.

கேப்டன் தான் பொறுப்பு :
'டுவென்டி-20' உலககோப்பையில், இந்திய அணியின் வீழ்ச்சிக்கு, கேப்டன்
தோனியின் தவறான யுக்திகளே காரணம் என்று முன்னாள் வீரர்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.

இவர்களது கருத்து:

ரவி சாஸ்திரி: இந்திய
அணியின்படுதோல்விக்கு கேப்டன் தோனி, எந்தக்காரணம் கூறினாலும் அது
ஏற்புடையது அல்ல. ஒரு கேப்டனாக மிகவும் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி
உள்ளார் தோனி. பிடிவாதத்துடன் தோனி எடுத்த முடிவுகள் தான் தோல்விக்கு
வழிவகுத்துள்ளன. .

அசாருதின்: உலககோப்பை
தோல்விக்கு, இந்திய வீரர்களின் மட்டமான செயல்பாடுகள் தான் காரணம்.
ஐ.பி.எல்., தொடரின் போது, இரவு முழுவதும் 'பார்ட்டிகளில்' கலந்து கொள்வது
வரவேற்கத்தக்கது அல்ல. 'பார்ட்டிகளில்' கலந்து கொள்வதை வீரர்கள்
தவிர்த்து, போட்டிகளில் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

மதன் லால்: உலககோப்பை
தோல்விக்கு, தோனி கூறும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமாக உள்ளன. அவர்
இவ்வாறு கூறுவார் என நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை.

கிர்மானி: மூன்றாவது
'டுவென்டி-20' உலககோப்பை தொடரில், இந்திய வீரர்கள் பொறுப்பின்றியும்,
நம்பிக்கை இன்றியும் விளையாடினர். இது தான் தோல்விக்கு காரணம். அணியின்
வெற்றிக்காக பாராட்டுக்களை பெற்றுக் கொள்ளும் கேப்டன் தோனி, தோல்விக்கும்
பொறுப்பேற்றாக வேண்டும்.

வெங்சர்க்கார்: ஐ.பி.எல்.,
தொடரில் ஓய்வின்றி விளையாடிய வீரர்கள், உலககோப்பையில் மிகவும் சோர்வுடன்
காணப்பட்டனர். மனதளவிலும், உடலளவிலும் அவர்களுக்கு பலன் இல்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum