TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும்: பிரவீன்குமார் பேட்டி...

Go down

ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும்: பிரவீன்குமார் பேட்டி... Empty ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும்: பிரவீன்குமார் பேட்டி...

Post by logu Sat May 03, 2014 7:19 am

சென்னை, மே.3-
ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும்: பிரவீன்குமார் பேட்டி... 10313401_776631412356353_8302639963029315284_n
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது புதிய முறை கடைபிடிக்கப்படுவதால், முதல் முடிவு வெளிவர தாமதம் ஆகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

சென்னையில் நிருபர்களுக்கு, பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

இந்த முறை ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், முன்பிருந்ததைவிட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரண்டாவது காரணம், ஒவ்வொரு ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், அந்த முடிவுகளை வேட்பாளர்கள் அல்லது ஏஜெண்டுகளிடம் நகலெடுத்து கொடுத்த பிறகே 2-வது ரவுண்டைத் தொடங்குவோம்.

முன்பு ஒரு அரங்கில் 14 மேஜைகளிலும் ஒரு ரவுண்டு முடிந்ததும், ஏஜெண்டுகளிடம் மொத்த கூட்டுத் தொகையை காட்டிவிட்டு அடுத்த ரவுண்டைத் தொடங்கிவிடுவோம்.

தற்போது அப்படி அல்ல. ஒவ்வொரு மேஜையில் பெறப்படும் வாக்கு எண்ணிக்கை முடிவையும் அவர்களிடம் நகலாகக் கொடுக்க இருக்கிறோம். இந்த நடைமுறை, தமிழகத்தில் முதன்முறையாக அமல்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டு கூறுவதை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மேஜையின் ரவுண்டு அடிப்படையிலான வாக்கு எண்ணிக்கை முடிவும், கண்காணிப்பாளர் மேஜைக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அங்கொன்று இங்கொன்றாக தேர்தல் பார்வையாளர் சரிபார்ப்பார். பின்னர் அந்த ரவுண்டு முடிவுகள், கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். இந்த முடிவு குறித்த அறிக்கை, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அது நகல் எடுக்கப்பட்டு ஒவ்வொரு ஏஜெண்டிடமும் அளிக்கப்படும். இதற்கு 20 நிமிடங்கள் ஆகும்.

இப்படி ஒவ்வொரு ரவுண்டிலும், 14 மேஜைகளில் பெறப்பட்ட முடிவு குறித்து தனித்தனி நகல்கள் கொடுக்கப்பட்ட பிறகு, அடுத்த ரவுண்டு தொடங்கும். என்றாலும், முதல் ரவுண்டு முடிவுகள் வருவதற்குத்தான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அடுத்தடுத்த ரவுண்டுகள் அதைவிட குறைவான நேரத்தில் முடிக்கப்படும்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் மட்டும், பாராளுமன்றத் தொகுதிக்கான ஓட்டுகளை எண்ணுவதற்கு 7 மேஜைகளும், சட்டமன்ற தொகுதிக்காக 7 மேஜைகளும் போடப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளர், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே அனுமதி பெற்று பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களை நடத்தலாம்.

ஆனால் தேர்தல் அதிகாரியிடம் இருந்து சான்றிதழை வேட்பாளர் வாங்குவதற்கு முன்பு, பட்டாசு கொளுத்துவது, சாப்பாடு வாங்கிக் கொடுப்பது, இனிப்பு வழங்குவது போன்றவற்றில் ஈடுபட்டால், அவற்றுக்கு ஆகும் செலவு அனைத்தும், அந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத 6 ஐ.டி. நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரண்டு பெறாமலேயே கைது செய்யக்கூடிய குற்றச்சாட்டு இது இல்லை என்பதால், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.

நோட்டா ஓட்டுகளை கணக்கில் எடுக்க மாட்டோம். அனைத்து வேட்பாளர்களையும் விட நோட்டாவில் பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதற்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை பெற்றுள்ள வேட்பாளர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஓட்டுக்கள் எண்ணப்படும் ஒவ்வொரு மேஜையும் வீடியோ படப்பிடிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கான விதியின்படி, வாக்கு எண்ணிக்கையின்போது அது நடைபெறும் அரங்கத்தை வீடியோ படம் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மேஜையாக வீடியோ படம் பிடிக்க வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்போம்.

இதுசம்பந்தமான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. இதில் தேர்தல் கமிஷன் எடுக்க இருக்கும் நிலைப்பாடு அன்று தெரியவரும்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மேஜைக்கு 500 தபால் ஓட்டுகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். கூடுதலாக தபால் ஓட்டுக்கள் இருந்தால், இரண்டாம் மேஜைக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்றிருந்தேன். என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் என்று அங்குள்ள அதிகாரிகள் கேட்டறிந்தார்கள். மேலும் ஓட்டு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட விதிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

தமிழகத்தில் 5 முதல் 6-ந் தேதிகளில் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த இருக்கிறேன்.

வாக்கு எண்ணிக்கையின் போது என்னென்ன விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி, அனைத்து வேட்பாளர்களுடனும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டம் நடத்துவார்கள்.

மறுவாக்குப் பதிவு குறித்து தேர்தல் பார்வையாளர்கள் பரிந்துரைக்கவில்லை. கட்சியின் ஆண்டு விழா நடத்துவது குறித்து ம.தி.மு.க. கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படுவதால், அங்குள்ள அதிகாரிகளின் அனுமதி பெற்று நடத்தலாம்.

சென்னை சென்டிரல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெடிகுண்டு சம்பவத்தை இங்கு தேர்தலுடன் தொடர்புபடுத்தத் தேவையில்லை. ஆனாலும் அனைத்து சூழ்நிலைகளையும் உற்று கவனிக்கிறோம்.

தற்போது வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒரு அடுக்குக்கு 120 பேர் வீதம் 3 அடுக்குக்கு 360 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அங்கு யாருமே புகுந்துவிட முடியாது.

அதுபோல் வாக்கு எண்ணிக்கை நேரத்திலும் பாதுகாப்புக்காக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.

வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு சம்பந்தமாக என்னிடம் அரசு சார்பில் கருத்து கேட்கப்படவில்லை. சென்னையிலும் நல்ல பாதுகாப்பு உள்ளது.

காஞ்சீபுரம் தொகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பேனர் வைத்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை திருமண அழைப்பிதழில் எம்.பி. என்று குறிப்பிட்டுள்ளதாக என்னிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. எம்.பி. என்றால் அதற்கு வேறு பல அர்த்தங்களைக் கூறவும் வாய்ப்புள்ளது.

இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால், குறிப்பிட்ட அளவு ஓட்டில் வெற்றிபெற்றார் என்று கணக்கிட்டு (வாக்குச்சாவடிக்கு வெளியே எடுத்த கருத்துக்கணிப்பின்படி) கூறவில்லை. என்றாலும், திருமண அழைப்பிதழ் அச்சடித்தவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை ஓட்டு எண்ணிக்கை: பாதுகாப்பு பணிக்கு ராணுவம் வந்தது; மத்திய பார்வையாளர்களும் கண்காணிப்பு
» ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு : 234 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பம்
» தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு: மன்மோகன்சிங், ஜெர்மனி அதிபர் கூட்டு பேட்டி
» ராஜீவ் கொலை கைதிகள் 4 பேர் விடுதலையில் சட்டப்படி முடிவு: ஜெயலலிதா பேட்டி...
» தேமுதிக-பாஜக கூட்டணி குறித்து ஒருவாரத்தில் முடிவு: விஜயகாந்தை சந்தித்த பின் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum