TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

3 posters

Go down

தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!? Empty தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

Post by மாலதி Thu Mar 27, 2014 8:03 pm

எம்.பரக்கத் அலி
[You must be registered and logged in to see this image.]'அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் குறுக்குச் சந்து மாடி வீடு ஒன்றில் உட்கார்ந்து அரட்டையடிப்போம். தெருவில் இரண்டு மூன்று பேருடன் பேசிக்கொண்டிருந்தால்... அது ஸ்டாலின். பத்துப் பதினைந்து பேருடன் திரிந்தால்... அது அழகிரி என்று சொல்வார்கள்!'' - தயாநிதி மாறனின் திருமணத்தில் இப்படி சகோதரர்களைப் பற்றி சிலாகித்தவர் ரஜினி. அப்போது ரஜினி சிலாகித்த அழகிரி - ஸ்டாலின் இடையிலான யுத்தம், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் திரைமறைவு மோதல்!
தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட அழகிரி, மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்; ரஜினியை மன அமைதி நிமித்தமாகச் சந்திக்கிறார்; கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட தொண்டர்களைச் சந்திக்கிறார். அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஹேஷ்யம் கிளம்புகின்றன. மறுநாள், 'தி.மு.க-வையும் கலைஞரையும் காப்பாற்றுவதே என் நோக்கம்!’ என்று முஷ்டி முறுக்குகிறார். 'அழகிரியோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது!’ என்று கட்சித் தலைமை அறிக்கை விடுகிறது. 'தென் தமிழகத்தில் அழகிரி, கலகக்காரர். அவரை இந்தச் சமயம் இப்படி கொம்பு சீவிவிட்டிருக்கக் கூடாது. பலமான கூட்டணிக் கட்சிகள் துணை இல்லாமல் போட்டியிடும்போது, உள்கட்சி கோஷ்டிப் பூசலும் தன் பங்கு பாதகத்தை தி.மு.க. வேட்பாளர்களுக்கு உண்டாக்கும்!’ என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. சரி, 'அழகிரி ஃபேக்டர்’ அத்தனை வீரியமானதா என்ன? ஒரு ஃப்ளாஷ்பேக்...
''பொதுக்குழுவில் பேசும்போது, 'வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன்!’ '' என கடந்த ஆண்டு தொடக்கத்தில் கருணாநிதி சொன்ன வார்த்தைகள்தான் இப்போதைய அழகிரியின் ஆவேசத்துக்கான ஆரம்பம்.
[You must be registered and logged in to see this image.]ஆனால், 'அழகிரியா... ஸ்டாலினா?’, 'யார் அடுத்தத் தலைவர்?’ என்ற வாரிசுச் சண்டை இப்போது தொடங்கியது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. 2000-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த முப்பெரும் விழாவில், 'தி.மு.க-வின் அடுத்த வாரிசு ஸ்டாலின்’ என்று சொல்லப்பட, கொந்தளித்தார் அழகிரி. ''தி.மு.க-வில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுங்குகிறேன்'' என்று அதிரடியாக அறிவித்தார். அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி ஆகிய மூவரும் முப்பெரும் விழாவைப் புறக்கணித்தார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகளிலும், கட்சித் தொண்டர்களிடையே உள்ள கட்டுக்கோப்பைக் குலைக்கும் முயற்சியிலும் அழகிரி ஈடுபட்டுள்ளார். அவருடன் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் அறிவித்தார் பேராசிரியர் அன்பழகன்.
அவ்வளவுதான். மதுரை கொளுந்துவிட்டு எரிந்தது. பேருந்துகளை எரித்தார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். கல்வீச்சு, கலவரம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என மதுரையே தகிக்க, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொது மற்றும் தனியார் சொத்துகள் சேதம் அடைந்தன. அப்போது ஆளும் கட்சி தி.மு.க. என்பதால் காக்கிகள் கைகட்டிக்கொண்டார்கள். மதுரை திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தனது ஆதரவாளர் வட்டச் செயலாளர் முத்துவை மீட்டார் அழகிரி. அதுவரை போலீஸுடன் பார்த்தேயிராத பேராசிரியர் அன்பழகனே, காக்கிகள் புடைசூழ பாதுகாப்புடன் நடமாட வேண்டி வந்தது. மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தை, பழனிவேல்ராஜனிடம் ஒப்படைத்தார்கள். நிலைமை நாளுக்கு நாள் மோசமாக, ஆற்காடு வீராசாமியும் தயாளு அம்மாளும் மதுரைக்கு வந்து சமாதானம் பேசினார்கள். ஆனாலும், அழகிரியின் கொதிப்பு அடங்கவில்லை.
தி.மு.க. என்ற கட்சி மீது அழகிரி கடுங்கோபத்தில் இருந்த அந்தச் சமயம்தான், 2001-ல் தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. அழகிரியின் கோபம் அதில் எதிரொலித்தது. தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக 12 தொகுதிகளில் 'அழகிரி பேரவை’ என்ற பெயரில் போட்டி வேட்பாளர்களைக் களம் இறக் கினார் அழகிரி. அதன் காரணமாக தென் தமிழகத்தில் தி.மு.க-வின் மூத்த தலைகளே தோற்றுப் போனார்கள். வெறும் 708 ஓட்டுகள் வித்தியாசத்தில் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன் தோல்வி அடைந்தார். தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓர் இடத்தில்கூட தி.மு.க-வால் ஜெயிக்க முடியவில்லை. திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டத்தில் தலா ஓர் இடத்தில் மட்டுமே வென்றது. அதன் பிறகு காட்சிகள் மாறின. 'நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கும்’ என்று அண்ணாவின் பொன்மொழியைச் சொல்லி அழகிரியைக் கட்சிக்குள் இணைத்துக்கொண்டார் கருணாநிதி.
ஆனால், அழகிரியின் அந்த 'வியூகம்’ இப்போது மீண்டும் எடுபடுமா என்பதே இப்போதைய கேள்வி!
அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. இப்போது அ.தி.மு.க. அதனால் அழகிரி கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். ஆனால், ஜெயா டி.வி-யில் அழகிரி தொடர்பான செய்திகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மூலம் அவருக்கு ஆளும் கட்சியின் மறைமுக ஆதரவு இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. 'அழகிரியின் கோபத்தை தன் கட்சிக்கு அறுவடை செய்துகொள்ள நினைக்கும் அ.தி.மு.க. அதனாலேயே தயா பார்க், கிரானைட் மோசடி வழக்குகளில் அழகிரியின் மகன் துரை தயாநிதியை போலீஸ் இன்னும் விசாரணை செய்யவில்லை. அமைச்சராக இல்லாத அழகிரிக்கு இப்போதும் லோக்கல் காக்கிகளின் பாதுகாப்பு தொடர்கிறது. இதெல்லாம் ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் என்று எங்களுக்குப் புரியாதா என்ன?’ என்று முணுமுணுக்கிறார்கள் தி.மு.க-வின் சீனியர்கள். தினமும் சலசலப்பு கிளம்பும் விதத்தில் அழகிரியின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பது ஆளும் கட்சித் தரப்பின் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்பவே ரஜினியுடன் சந்திப்பு, தொண்டர்களுடன் மீட்டிங் என ஃப்ளாஷ் அடித்துக்கொண்டே இருக்கிறார் அழகிரி.
மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் என தென் மாவட்ட பெல்ட்டில் 10 எம்.பி. தொகுதிகள் அடக்கம். இந்தப் 10 தொகுதிகளிலும் கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே ஒன்பதை வென்றது. அதிலும் பத்தில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களால் ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க-வின் கோட்டை என கருதப்பட்ட தேனி, திண்டுக்கல் தொகுதிகளும் அதில் அடக்கம். உச்சகட்டமாக விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட வைகோ தோல்வி அடைந்தார். தென்காசியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வென்றது. அந்த 10 தொகுதிகளில் 9-ல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறக் காரணமாக இருந்தது அழகிரிதான் என்பது அவரது ஆதரவாளர்களின் வாதம்!
[You must be registered and logged in to see this image.]
இப்போது அந்த வியூகத்தை அப்படியே புரட்டிப் போட்டு அறிவாலயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தர நினைக்கிறார் அழகிரி. அதன் வெளிப்பாடுதான் தேனி எம்.பி. ஆரூண் ரஷீத்தைச் சந்தித்திருக்கிறார். இந்த முறை வைகோவை ஜெயிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார். விமானப் பயணத்தில் வைகோவைச் சந்தித்த அழகிரி, 'உங்கள் மீது பழி சுமத்தியது போல என் மீதும் பழி சுமத்தியிருக்கிறார்கள்’ என்று பொருமலாக பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநெல்வேலியில் கருப்பசாமி பாண்டியன், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி, சிவகங்கையில் பெரியகருப்பன், தூத்துக்குடியில் என்.பெரியசாமி ஆகியோர் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருந்தபோதும், அவர்களை தன் ஆளுகையை மீறாமல் பார்த்துக்கொண்டவர் அழகிரி. ஆனால், இப்போது அவர்களின் சிபாரிசில் ஸ்டாலின் ஆதரவாளர்களாக களமிறங்கி இருக்கும் 9 தி.மு.க. வேட்பாளர்களையும் (தென்காசி கூட்டணிக்குப் போய்விட்டது) வீழ்த்த குறி வைத்துவிட்டார். பி.ஜே.பி. கூட்டணி, அ.தி.மு.க. ஆளுமை... இவற்றுக்குச் சமமாக 'அழகிரி அலை’யையும் உஷாராக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தி.மு.க.!
''கருணாநிதிக்கு, இரண்டு மிகப் பெரிய சொத்துகள் உள்ளன. ஒன்று தி.மு.க. இன்னொன்று அவரது மகன்களான அழகிரியும் ஸ்டாலினும். தி.மு.க-வை அழகிரியும் ஸ்டாலினும், இவர்களை தி.மு.க-வும் காக்க வேண்டும்!' என்று ஒருமுறை ரஜினி சொன்ன வார்த்தைகள் பலிக்காமல் போய்விடுமோ?
-விகடன் -


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!? Empty Re: தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

Post by sakthy Thu Mar 27, 2014 8:42 pm

தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

என்று பாடிக்கொண்டே அழகிரி சென்னைக்குப் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கோபாலபுரத்தில் போய் இறங்கி, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை தயாளு அம்மாளிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னரும் நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன் எனக் கூறும் அழகிரி, தனது வீட்டை கோபாலபுரத்துக்கே மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் அண்ணா அறிவாலயம் உமது உழைப்பால் உருவாக்கப்பட்டது என கூறியுள்ள அவர், கோபாலபுரத்து வீட்டிலும் தனக்கு உரிமை இருக்கிறது என சொல்ல முடியும் அல்லவா?

கோபாலபுரம் வீட்டுக்கும் விசிட் அடித்திருக்கிறார்.

சால்வை போட்ட அனைவருக்கும் பட்டை நாமம் தான். கோவிந்தா கோவிந்தா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!? Empty Re: தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

Post by piraba Fri Mar 28, 2014 6:58 am

சால்வை போட்ட அனைவருக்கும் பட்டை நாமம் தான். கோவிந்தா கோவிந்தா?

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் [You must be registered and logged in to see this link.] 
Under Creative Commons License: Attribution


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!? Empty Re: தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum