TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை!

Go down

மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை! Empty மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை!

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:37 pm

ஐ.நா.வின் உடைந்த நாற்காலி முன்பே போரின் வடுப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிக் கேட்டுக் கொண்டிருக்க, மீண்டும் புலிகள் கட்டமைய தொடங்கியுள்ளார்கள் என சர்வதேசத்துக்கு தீவிரவாத மாயையினை இலங்கை ராணுவம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
 

பொட்டு அம்மானுக்கு கீழ் பணியாற்றிய கோபி, புலிகளை மீள் கட்டமைக்க முயற்சித்து வருகிறார் என்றும் தர்மபுரத்தில் துப்பாக்கி சூடு நடத்தி தப்பி விட்டார் என்ற பெயரிலும் கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி பகுதி எங்கும் பல ராணுவ சுற்றி வளைப்புகளோடு தமிழ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
அப்படித்தான் காணாமல் போன கணவனை தேடிக்கொண்டிருக்கும் ஜெயகுமாரியும், அவரது 13 வயது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டனர். இப்போது புனர்வாழ்வுக்காக சிறுவர் இல்லத்தில் உள்ள விபூசிகா, தான் எழுதிய கடிதத்தில், "என்னையும் எனது அம்மாவையும் 13.3.2014 அன்று பிற்பகல் 4 மணியளவில் பொய்க் குற்றம் சுமத்தி அதிக ராணுவப் பாதுகாப்புடனும் போலீஸ் பாதுகாப்புடனும் பெரிய குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போல எம்மை நடத்தி என்னைப் பயமுறுத்தியும், எனது அம்மாவை கால்களால் உதைத்தும், தலைமயிரை பிடித்து இழுத்தும், கன்னங்களில் அறைந்தும்,  பொய்யான தகவல்கள் எழுதப்பட்ட கடிதத்தில் என்னிடம் இருந்தும் எனது அம்மாவிடம் இருந்தும் கையொப்பம் பெறப்பட்டன. எனது அம்மா இருந்தும் நான் ஒரு அனாதையாக இருக்கிறேன்...!" என அக்கடிதம் சில வரிகளில் முடிகிறது.

இதே போல்தான் மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்னேன்டோவும், பாதிரியார் பிரவீனும் புலிகளோடு தொடர்புடையவர்கள் என அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அங்கிருந்து வரும் அழைப்புகளில் எல்லாம் முதலில்'ஆர்மிக்காரன் வீடு வீடாக வருகிறான்' என்ற வார்த்தைகள் தான் வருகிறது. அதுமட்டுமின்றி புனர்வாழ்வு பெற்ற முன்னால் புலிகள் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

[You must be registered and logged in to see this image.]
இப்படியான பதட்டமான சூழ்நிலை உள்ள நிலையிலும், தமிழகம் நாடாளுமன்ற தேர்தலில் மூழ்கியிருக்கும் பரபரப்பான நேரத்திலும்தான், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை 25 வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் மார்ச்  3 தொடங்கி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அமெரிக்கா இரு தீர்மானங்களை கொண்டு வந்தது. முன்பு கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்களுமே இலங்கைக்கு போதுமான வாய்ப்பை கொடுத்தும், அதைப் பற்றி இலங்கை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

[You must be registered and logged in to see this image.]கடந்த செப்டம்பர், 2013 நவநீதம் பிள்ளை இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராய சென்றிருந்த பொழுது போரில் பாதிக்கப்பட்ட்ட மக்கள் மட்டுமின்றி இலங்கையின் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்திருந்தன. அதில் குறிப்பாக வெலிவெரியாவில் தண்ணீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது ராணுவ தாக்குதல், புத்த துறவிகளால் மசூதிகள் மீது நடைபெறும் தாக்குதல், பத்திரிகை அலுவலகங்கள் மீது நடக்கும் தாக்குதல் என பல கூறப்பட்டன.

இதோடு கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகள், பாலச்சந்திரன், கேணல் ரமேஷ், இசைப்பிரியா படுகொலை, வெள்ளைக்கொடி சம்பவம், சிங்கள பத்திரிகையாளர் பிரகீத் எக்னோல்டா காணாமல் போனது பற்றியும் பிப்ரவரி 24, 2014 வெளியான நவநீதம் பிள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச நீதி விசாரணைக்கும், மனித உரிமைகள் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதை மையமாக வைத்தே அமெரிக்கா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இக்கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள பல மனித உரிமையாளர்கள், இதை வலுவற்ற தீர்மானமாகவே கூறுகின்றனர். ஆனாலும் அமெரிக்க தீர்மானத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது. அப்படி இதையும் நிராகரித்து விட்டால் இலங்கை மீது எந்தவித சர்வதேச பிடியும் இல்லாமல் போகிவிடும். அதனால் இதை வைத்து இலங்கை மீதான் நடவடிக்கைகளில் அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும். இத்தீர்மானம் மார்ச் 26 ஆம் தேதி சமர்பிக்கப்பட்டு, மார்ச் 27 ல் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தின் நிறைவில் பத்திரிகையாளர்களிடையே பேசிய
[You must be registered and logged in to see this image.]இங்கிலாந்து பிரதமர் டேவிட கேம்ரூன், "நான் இலங்கையின் நிலைமை தொடர்பாக ஆழமாக அக்கறை கொண்டுள்ளேன். கடந்த கால சம்பவங்களை சரியாக கவனிப்பதோடு, மீள்கட்டமைக்கப்பட்ட இலங்கையை காண விரும்புகிறேன். ஆனால் ராஜபக்சே இதையெல்லாம் செய்ய தவறிவிட்டார். அதனால் இப்போது போர்க் குற்றங்களுக்கான சர்வதேச சுதந்திர விசாரணை தேவை" என்றார்.

போர்க் குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, 'போர்க் குற்றம் என்றால் ஒருவித விசாரணை முறையும், இனப்படுகொலை என்றால் ஒருவித விசாரணை முறையும் இருப்பதால், அடுத்தக்கட்டமாக இனப்படுகொலைக்கான  அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் போர்க் குற்ற விசாரணை என்று வந்தால் போர் காலத்தில் நடந்த குற்றங்கள் மட்டும்தான் விசாரிக்கப்படும். ஆனால் இப்பொழுது போருக்கு இணையாக அடக்குமுறைகளும், நில அபகரிப்புகளும், பாலியல் சித்ரவதைகளும் நடைபெறுகிறது" என்று இனப்படுகொலை விசாரணைக்கான தேவையினை குறிப்பிட்டார்.

ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் 'இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை' என்று அறிவித்திருந்தாலும், பெரும்பான்மையான நாடுகள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

 - ஜெனிவாவிலிருந்து மகா.தமிழ்ப் பிரபாகரன்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை வரலாற்றின் துன்பியல் கதையைச் சொல்லும் செய்மதி ஒளிப்படங்கள்
» இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!
» பி.பி.சி. நிகழ்ச்சிக்கு மீண்டும் இலங்கை அரசு இடையூறு
» இலங்கை ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் : மீனவர்களின் வலை, கருவிகள் நாசம்
» "இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு!- இலங்கை கடற்படை அட்டூழியம்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum