TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரட்டை (Chat) அடிப்பது எப்படி?

2 posters

Go down

அரட்டை (Chat) அடிப்பது எப்படி? Empty அரட்டை (Chat) அடிப்பது எப்படி?

Post by sakthy Tue Mar 18, 2014 8:17 pm

அரட்டை அடிப்பது எப்படி?

எழுதக் காரணம்,இந்தத் தளத்தில் வந்த அரட்டை அடிப்போம் வாருங்கள்....? என்பது தான் .

அரட்டை அடிப்பது என்பது, டீக்கடை பெஞ்சில் இருந்து ,முகநூல், அரட்டைத்தளம் (Chat), இணையத்தளம் என  வேறுபடுகிறது. எங்கே அரட்டை அடிக்கிறோமோ,அதைப் பொறுத்து அரட்டை அடிக்கும் முறைகளும் வேறுபடுகிறது. இது விதிமுறை அல்ல, ஏற்புடையது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

டீக்கடை பெஞ்சில் இருந்து, அன்றைய அல்லது பழைய நாளிதழை வைத்துக் கொண்டு, டீக்கடை உரிமையாளர் அடித்துத் துரத்தாதவரை, அரட்டை அடிக்கலாம்.அவசரமாக டீ குடிக்க வரும் என்னைப் போல் நல்லவர்கள் சிலர், வெட்டிப்பயலுகள் என்று பட்டம் சூட்டாத வரை, அரட்டை அடிக்கலாம்.
வீட்டில் இருந்து,தெருவில் இருந்து,அரசியல் சினிமா என எதையும், அருவாள்,கத்தி,கம்பு விரட்டாத வரை தலைப்பாக எடுக்கலாம்.

முகநூல் அரட்டை, யாருடனும் அரட்டை அடிக்கலாம். ஆண்கள்,பெண்கள்,நண்பர்கள் என்று யாராகவும் இருக்கலாம். ஆனாலும் நன்கு அறிமுகமான,தெரிந்த நண்பர்கள் தவிர,வேறு யாருக்கும் தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்கக் கூடாது. நிச்சயமாக மின் அஞ்சல் முகவரியை கொடுக்கக் கூடாது. இரண்டு மூன்று வார்த்தைகள்,ஒரு வசனம் இப்படி இருக்க வேண்டும். LOL,IDC,NVM ,TTYL,OMG,WRT,TC,WB,IDK, இப்படி குறுகிய சொற்களைப் பாவிக்கலாம். தாராளமாக smileys பாவிக்கலாம்.(Smileys பாவிப்பது எப்படி கட்டுரையைப் பார்க்கவும்) ASL இப்படிக் கேட்டால் நிச்சயம் கொடுக்கக் கூடாது.

சிலர் தங்கள் பெயரை வெளியிடாது,புனைபெயரில் செல்வதும்,ஆண் பெண் பெயரிலும், பெண் ஆண் பெயரிலும்  அரட்டை அடிப்பது வழக்கமாக உள்ளது. இவர்களை-Poser என்கிறார்கள். இது முக நூல் மற்றும் Chat தளங்களில் சர்வ சாதாரணம்.
அல்லது பெயரில்லாது,anonymous என்று அரட்டை அடிப்பார்கள். நகைச்சுவையாக எடுத்து ,தளத்தை மூடியவுடன் மறந்துவிட வேண்டும். இல்லையேல் எந்தப் புற்றில் எந்தப் பாம்போ இருந்து, போட்டுத் தள்ளி விடும்.

பொதுவான Chat தளங்களில் அரட்டை அடிக்கு முன் ,முதலில் நீங்கள் நல்லவர் தானா என்று ஒருமுறை உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் அரட்டைக்குச் செல்லுங்கள். காரணம் பொதுவான தளங்களில் குழந்தைகள், பொழுதுபோக்காக வில்லங்கமானவர்கள்? தவிர,  நல்ல பெண்கள் கூட சில விசயங்களை தெரிந்து கொள்ள வரலாம். உதாரணமாக நோய் பற்றி,தொழில் பற்றி,பரீட்சை பற்றி,வேறு சில முக்கிய தகவல்களைப் பெற வரலாம்.

அதனால் அரட்டை தொடங்க முன்னர், நல்லவற்றையும், துஷ்பிரயோகம் செய்யாத வார்த்தைகள், குழந்தைகளைப் பாதிக்காதபடி, (neat and kid-friendly , nope abuse ) பார்த்துக் கொள்வது சிறந்தது. சில சமயம் உங்களுக்கு வேண்டிய யாரோ கூட, அக்கா தங்கை கூட, வேறு பெயரில் வரலாம்.அதனால் முக நூல் அரட்டை போல், பொதுவான அரட்டைத் தளங்களைப் பாவிப்பது நல்ல முறை அல்ல. ஆனாலும் பொழுது போக்கலாம்.

அடுத்து இணையத்தள அரட்டை.இந்த தளத்தில் வரக்கூடிய, அரட்டை அடிக்கலாம், போல என்று சொல்லலாம். ஒரு நாள் ஒருமுறை அல்லது சில தினங்களுக்கு ஒரு முறை வரக் கூடியவர்கள் என வேறுபட்டு இருப்பார்கள். மேலே குறிப்பிட்டது போல் அவசர வேலைகள்,தகவல்கள் தெரிந்து கொள்ள என வேறுபடுவதால், இங்கே முகநூல்,பொது அரட்டைத்தளம் போல் செயற்படக்கூடாது. எந்த அரட்டையாக இருந்தாலும்,டீக்கடை அரட்டை தவிர, முக்கியமான தகவல்கள் இருந்தால் தவிர,எப்போதும் இரண்டு மூன்று வார்த்தைகள்,ஒரு வசனம்,வரியுடன் நிறுத்திவிட வேண்டும்.அதிகமானால் அது இணையப்பதிவாகி விடும்.

இணையத்தள அரட்டையில்,முக்கிய செய்திகளாக இருப்பதும்,அவை கேலியாக, நகைச்சுவையுடன், நையாண்டியாகவும் இருக்கலாம். கொடுக்கும் செய்தி முக்கியமானதாக, நல்லதாக இருப்பது சிறந்ததாகும். பதிலும் அப்படியே கேலியுடன் ஓரிரு வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

அதே போல் என்னைப் போல் உணர்ச்சிவசப்படாது,கோபப்படாது பதில் கொடுக்க வேண்டும். எழுதும் பதிவுகள்,கட்டுரைகளில் உணர்ச்சி,கோபம் காட்டலாம். முகம் தெரியாதவர்களுடன் அரட்டை அடிக்கும் போது, தவறுகளை ஏற்றுக் கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும் உங்களைக் குறைத்துக் கொள்ள,தாழ்த்திக் கொள்ள,அதே சமயம் அதிஉயர்வாகவும் காட்டிக் கொள்ளக் கூடாது. சமூக தளங்கள்,சாட் தளங்களை விட உண்மைத்தனமை இணையத்தள அரட்டையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக மருத்துவர்,தகவல் அறிவது போன்றவற்றை சொல்லலாம்.அதே சமயம் இணையத்தள அரட்டை பொதுவாக Live Chat ஆக இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பதில் கொடுப்பவர், அன்றைய தினமோ அல்லது மறு நாளோ,மறு வாரமோ,இணைப்பில் இருக்கும் போதோ எப்போது வேண்டுமானாலும் பதில் கொடுக்க முடியும்.

எந்த அரட்டையாக இருந்தாலும்,smileys இணைக்கலாம். ஆனால் ஒன்றோ இரண்டோ இருப்பதுடன்,தேவையான இடத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும். அதிகமாக smileys சேர்ப்பது நம்மை நாமே கேலிக்குரியவர்களாக,ஒன்றும் தெரியாதவர்களாக,புதியவர்களாகக் காட்டுவதுடன், குழந்தை வரையும் ஓவியம் போல்,childish ஆகக் காட்டிக் கொடுத்து விடும். இந்த மாதிரியான இணையத்தள அரட்டை வாசகர்கள் வருகையை அதிகரிக்கும்.காரணம் சிலர் முக்கிய தகவல்களைப் பெற,பரீட்சை முடிவுகள்,சில தகவல்கள்...போன்றவற்றைக், கண்டறிய வருவார்கள்.

அரட்டை ஓரிரு வார்த்தைகள்,ஒரு வசனம் இப்படி இருக்க வேண்டும்.உதாரணமாக சொல்வதானால்....................
ஜெயலலிதா பிரதமரானால் ராஜபக்சேயை தூக்கிலிடுவாரா?
nope quotes
முதலில் அகதி முகாம்களை மூடுவாரா?
…........
இந்தத் தளத்தில் தமிழுக்கு என்று ஒரு தலைப்பு இல்லையே!
NOPE---Quote: sakthy wrote, இந்தத் தளத்தில் தமிழுக்கு என்று ஒரு தலைப்பு இல்லையே! ….NOPE,NOPE.
என்ன பெயர் வைக்கலாம்?
…...........
ஈரோட்டில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி.ஆலை நிர்வாகிகள்கைது.என்ன கொடுமை சரவணா?

இன்று கைது ,நடவடிக்கை,நாளை மீண்டும் பலி தொடரும். அரசியல்வாதிகளின் அராஜகம்.
…....
அதே சமயம், இணைய அரட்டைகளில், ….காலை டிபன் ஆச்சா ,நான் காலையில் இப்படி செய்தேன்,இரவு இது என் பிடித்தது ..இவையும்,ஒவ்வொன்றிற்கும் smileyஉம் பொருந்தாது. இவை சமூகத் தளங்கள்,chat தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.அதனால் இவற்றை இணைய அரட்டையில் தவிர்ப்பது நல்லது.

அரட்டைகளில் எந்தக் காரணம் கொண்டும் மேற்கோள்- quotes – இருக்கக் கூடாது.
janani wrote,aruL wrote,Tamil wrote என்று போடக் கூடாது. இந்தக் quote பதிவுகளுக்குக் கூட,அது ஒப்புக் கொள்ளும் செய்தியாக -acknowledgment – இருந்தாலும் கூடப் போடுவது நல்ல முறையல்ல. acknowledgment என்பது ஒரு பதிவு கிடைத்தது,அஞ்சல் கடிதம் கிடைத்தது என்பவற்றுக்கு சரியாக இருக்குமே தவிர,அரட்டைகளுக்கோ அல்லது பதிவுகளுக்கோ அல்ல. ஒரு இணைய உரிமையாளருக்கு அனுப்பபட்ட பதிவு கிடைத்தது,வெளியிடுவது பற்றி ஆலோசிக்கலாம், என்பதற்கு இது சரியானதாகும். வெளியிடப்பட்ட பதிவிற்கு acknowledgment quote கொடுப்பது பொருந்தாது.

சரியானது என்னவென்றால் பதிவுகளுக்கு quote போடுவதை தவிர்த்து, நன்றி, பாராட்டுக்கள்,தொடரட்டும், நன்றாக இல்லை,வேஸ்ட் என்பவை பாவிக்கலாம். மேற்கோள் -quotation-என்பது ஏற்கனவே கொடுக்கப்பட்ட செய்திக்கு, கொடுக்கும் பதிலாக,கேள்வியாக, அல்லது அதைக் காரணப்படுத்தி, உதாரணப்படுத்தி கொடுக்கும் பதில்-expression -அல்லது எடுத்துக்காட்டுவது ஆகும்.
இதற்கு வேறு பொருளும்(quotation mark,price quotation ....) உண்டு.
அரட்டை அடிக்கலாமா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

அரட்டை (Chat) அடிப்பது எப்படி? Empty Re: அரட்டை (Chat) அடிப்பது எப்படி?

Post by logu Tue Mar 18, 2014 9:15 pm

அரட்டை என்பதில் இவ்வளவு இருக்கா ?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» அரட்டை அடிக்காதீர்கள்: ஷங்கர்
» அரட்டை அடிப்போம்..வாருங்கள்.....மனதில் உள்ளதை.......@@@
» Google FACEBOOK அரட்டை மற்றும் கருத்துக்கள் ட்ராக் செய்ய போகிறது
» WINDOWS7&WINDOWS8 எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum