Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:55 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
பறவைகள் பலவிதம்! Different birds!
2 posters
TamilYes :: சிறுவர் பூங்கா :: கதைகள்
Page 1 of 1
பறவைகள் பலவிதம்! Different birds!
பறவைகள் பலவிதம்!

‘தேக்கடியில் காலை நடை சென்றபோது ஓர் உயர்ந்த மரத்தின் மீது மரகதப்பச்சை நிறத்தில் அழகே உருவான அச்சிறிய பறவையை தொலைநோக்கி வழியாக முதல்முதலாகக் கண்டேன். அதன் பெயர் குக்குறுவான் என்று உடனிருந்த பறவை ஆர்வலரான நண்பர் கூறினார். தொடர்ந்து நடந்து சென்றபோது மலபார் விசிலிங் த்ரஷ் என்ற பறவையின் விசிலோசையை முதலில் கேட்டோம். பின்னர் தரையில் துள்ளித் துள்ளி சென்றுகொண்டிருந்த பறவையையும் பார்த்தோம். என்னுடன் இருந்த நண்பர் அந்த அதிகாலையில் பெரும் உற்சாகத்துக்கு ஆட்பட்டார். அவர் வெகுநாளாகப் பார்க்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருந்த பறவையாம் அது. பின்னர் அணைத்தேக்கத்தில் படகில் சென்றபோது ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குப் பறந்துசென்ற இருவாச்சியைப் பார்த்தோம். நண்பர் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.
தேக்கடியில் பார்த்த குக்குறுவானை மீண்டும் நான் பார்த்தது ப.ஜெகநாதன், ஆசை இருவரும் தொகுத்திருக்கும் ‘பறவைகள்’ அறிமுகக் கையேடு நூலின் முகப்பு அட்டையில்தான். க்ரியா வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்தச் சின்ன கையடக்க நூலில் அன்றாடம் நாம் பார்க்கக்கூடிய பல பெயர் தெரியாத பறவைகளின் பெயர்களும் அவை பற்றிய சின்ன சுவாரஸ்யமான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வளர்ப்புப் பறவைகள் நீங்கலாக 88 பறவைகளின் படமும் குறிப்புகளும் இருக்கின்றன. நம்மால் அந்த 88 பறவைகளையும் பார்த்தால் பெயர் சொல்லி அடையாளம் காணமுடியுமா என்று கேட்டுக் கொள்வது நல்லது. ஏனெனில் பறவைகள் இயற்கைக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கின்றன. தாவரங்களின் பரவலுக்கு உதவுகின்றன. வலசை வரும் பச்சைக் கதிர்க்குருவி ஒருநாளைக்கு 12,000 பூச்சிகளைப் பிடித்துத் தின்கிறதாம். அது இந்தியாவில் இருப்பது 200-250 நாட்கள். அதுவரை அது எத்தனை பூச்சிகளைத் தின்னும் என்று கணக்கிட்டால் அதன் உதவி விளங்கும்.
இந்தக் கையேட்டை வீட்டில் அமர்ந்து புரட்டிக்கொண்டே வந்தேன். ஒரு படத்தைப் பார்த்ததும் என் குழந்தைகள் உற்சாகமானார்கள். நாங்கள் சொந்த ஊருக்குப் போனபோது தோட்டத்தில் நீண்ட வாலுடன் பார்த்த வெள்ளைக் குருவி அது. அதன் பெயர் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் பெயர் ஈப்பிடிப்பான் என்று இந்தக் கையேடு சொன்னது. அரிவாள் மூக்கன் என்றொரு பறவை. நீண்ட கரிய மூக்கு அதற்கு. தமிழ் இலக்கியத்தில் வரும் அன்றில் என்கிற பறவைதான் இது என்ற குறிப்பு மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
கொஞ்சம் அசப்பில் சிட்டுக்குருவிகளைப் போலத் தோற்றமளிக்கும் கீச்சான்கள் என்கிற குருவிகள் பிற பறவைகளைப் போலவே குரல் எழுப்புமாம். அத்துடன் சிறு பூச்சிகள், புழுக்களைப் பிடித்து வந்து முள்ளில் குத்தி வைத்துத் தின்னுமாம் (வெள்ளைக்காரப் பறவை போலிருக்கிறது). பறவைகளின் படங்களுடன் கூடிய குறிப்புகள் அல்லாது பறவைகள் ஓர் அறிமுகம் என்கிற கட்டுரையையும் ப.ஜெகநாதன் இந்நூலில் எழுதி உள்ளார். பறவைகளைப் பற்றிய அடிப்படையான எல்லா விஷயங்களையும் இந்த கட்டுரைத் தொட்டுச் செல்கிறது. பறவை ஆர்வலர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, எப்படி பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. எளிமையான தமிழில் 166 வண்ணப்படங்களுடன் கூடிய இந்தக் கையேடு பறவைகள் மீது ஆர்வத்தைத் தூண்டக் கூடியது. நகரத்தில் வாழும் இந்த இளம் தலைமுறையினருக்கு மிக எளிதாக பறவைகளை அறிமுகம் செய்வதால் முக்கியத்துவம் பெறுகிறது.
‘பறவைகள்’
விலை: 250,
தொகுப்பு: ப. ஜெகநாதன், ஆசை
வெளியீடு: க்ரியா,
புதிய எண் - 2
(பழைய எண் 25),
17-ஆவது கிழக்குத் தெரு,
திருவான்மியூர்,
சென்னை - 41

‘தேக்கடியில் காலை நடை சென்றபோது ஓர் உயர்ந்த மரத்தின் மீது மரகதப்பச்சை நிறத்தில் அழகே உருவான அச்சிறிய பறவையை தொலைநோக்கி வழியாக முதல்முதலாகக் கண்டேன். அதன் பெயர் குக்குறுவான் என்று உடனிருந்த பறவை ஆர்வலரான நண்பர் கூறினார். தொடர்ந்து நடந்து சென்றபோது மலபார் விசிலிங் த்ரஷ் என்ற பறவையின் விசிலோசையை முதலில் கேட்டோம். பின்னர் தரையில் துள்ளித் துள்ளி சென்றுகொண்டிருந்த பறவையையும் பார்த்தோம். என்னுடன் இருந்த நண்பர் அந்த அதிகாலையில் பெரும் உற்சாகத்துக்கு ஆட்பட்டார். அவர் வெகுநாளாகப் பார்க்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருந்த பறவையாம் அது. பின்னர் அணைத்தேக்கத்தில் படகில் சென்றபோது ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குப் பறந்துசென்ற இருவாச்சியைப் பார்த்தோம். நண்பர் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.
தேக்கடியில் பார்த்த குக்குறுவானை மீண்டும் நான் பார்த்தது ப.ஜெகநாதன், ஆசை இருவரும் தொகுத்திருக்கும் ‘பறவைகள்’ அறிமுகக் கையேடு நூலின் முகப்பு அட்டையில்தான். க்ரியா வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்தச் சின்ன கையடக்க நூலில் அன்றாடம் நாம் பார்க்கக்கூடிய பல பெயர் தெரியாத பறவைகளின் பெயர்களும் அவை பற்றிய சின்ன சுவாரஸ்யமான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வளர்ப்புப் பறவைகள் நீங்கலாக 88 பறவைகளின் படமும் குறிப்புகளும் இருக்கின்றன. நம்மால் அந்த 88 பறவைகளையும் பார்த்தால் பெயர் சொல்லி அடையாளம் காணமுடியுமா என்று கேட்டுக் கொள்வது நல்லது. ஏனெனில் பறவைகள் இயற்கைக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கின்றன. தாவரங்களின் பரவலுக்கு உதவுகின்றன. வலசை வரும் பச்சைக் கதிர்க்குருவி ஒருநாளைக்கு 12,000 பூச்சிகளைப் பிடித்துத் தின்கிறதாம். அது இந்தியாவில் இருப்பது 200-250 நாட்கள். அதுவரை அது எத்தனை பூச்சிகளைத் தின்னும் என்று கணக்கிட்டால் அதன் உதவி விளங்கும்.
இந்தக் கையேட்டை வீட்டில் அமர்ந்து புரட்டிக்கொண்டே வந்தேன். ஒரு படத்தைப் பார்த்ததும் என் குழந்தைகள் உற்சாகமானார்கள். நாங்கள் சொந்த ஊருக்குப் போனபோது தோட்டத்தில் நீண்ட வாலுடன் பார்த்த வெள்ளைக் குருவி அது. அதன் பெயர் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் பெயர் ஈப்பிடிப்பான் என்று இந்தக் கையேடு சொன்னது. அரிவாள் மூக்கன் என்றொரு பறவை. நீண்ட கரிய மூக்கு அதற்கு. தமிழ் இலக்கியத்தில் வரும் அன்றில் என்கிற பறவைதான் இது என்ற குறிப்பு மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
கொஞ்சம் அசப்பில் சிட்டுக்குருவிகளைப் போலத் தோற்றமளிக்கும் கீச்சான்கள் என்கிற குருவிகள் பிற பறவைகளைப் போலவே குரல் எழுப்புமாம். அத்துடன் சிறு பூச்சிகள், புழுக்களைப் பிடித்து வந்து முள்ளில் குத்தி வைத்துத் தின்னுமாம் (வெள்ளைக்காரப் பறவை போலிருக்கிறது). பறவைகளின் படங்களுடன் கூடிய குறிப்புகள் அல்லாது பறவைகள் ஓர் அறிமுகம் என்கிற கட்டுரையையும் ப.ஜெகநாதன் இந்நூலில் எழுதி உள்ளார். பறவைகளைப் பற்றிய அடிப்படையான எல்லா விஷயங்களையும் இந்த கட்டுரைத் தொட்டுச் செல்கிறது. பறவை ஆர்வலர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, எப்படி பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. எளிமையான தமிழில் 166 வண்ணப்படங்களுடன் கூடிய இந்தக் கையேடு பறவைகள் மீது ஆர்வத்தைத் தூண்டக் கூடியது. நகரத்தில் வாழும் இந்த இளம் தலைமுறையினருக்கு மிக எளிதாக பறவைகளை அறிமுகம் செய்வதால் முக்கியத்துவம் பெறுகிறது.
‘பறவைகள்’
விலை: 250,
தொகுப்பு: ப. ஜெகநாதன், ஆசை
வெளியீடு: க்ரியா,
புதிய எண் - 2
(பழைய எண் 25),
17-ஆவது கிழக்குத் தெரு,
திருவான்மியூர்,
சென்னை - 41
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: பறவைகள் பலவிதம்! Different birds!
நன்றி லோகுlogu wrote:![]()
![]()
![]()
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010

» பறவைகள் பலவிதம்
» தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)In Tamil Nadu, the birds sanctuaries
» ஆஞ்சநேயர் பலவிதம்.
» Birds photos
» 20 most Colorful Birds
» தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)In Tamil Nadu, the birds sanctuaries
» ஆஞ்சநேயர் பலவிதம்.
» Birds photos
» 20 most Colorful Birds
TamilYes :: சிறுவர் பூங்கா :: கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|