TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல்

Go down

நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் Empty நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல்

Post by ஜனனி Thu Dec 05, 2013 9:03 pm

நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல்

நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் 1472998_617281998351684_1013515739_n
உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது.

எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது,

அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இரு அமைப்புக்களின் ஆதரவாளர்களைக் கொண்ட ஓர் மகிழ்ச்சியான கலவையாக இருந்தது.

வரவேற்பு உரையையும் தொடக்க உரையையும் தொடர்ந்து, கெய்த் லொக்கெ (Keith Locke) அவர்கள் சில பயனுள்ள பின்னணித் தகவல்களை வழங்கினார்.

2003 இல் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் அங்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவருடைய உரையில் மிகவும் உறைக்கக்கூடிய விடயம், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போதான வல்லாதிக்க சர்வதேசத்தின் கதையை முற்றிலும் மறுதலிக்கின்றமை ஆகும்.

அங்கே போர் நடத்தவேண்டிய தேவை இருந்ததாகவும் அது பயங்கரவாதிகளுக்கு எதிரான அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கின்றதுமான ஓர் எண்ணம் எங்கும் பரவலாக நிலவுகின்றது.

இந்த குற்றச் சாட்டுக்கள் எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உண்மை சற்று வேறாக இருப்பதைக் காண்பதற்கு நீங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அங்கு எல்லாப் பக்கங்களிலும் பயங்கரத் தந்திரங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தின் விளைவாகவே தமிழ்ப் புலிகளின் பலமும் வளர்ச்சியும் தூண்டப்பட்டது என்றார் கெய்த் லொக்கெ.

ஜோன் லோகி அவர்கள், இலங்கை அரசின் கடந்தகால பதிவுகளின் காரணமாக தாம் அங்கு பயணம் செய்வதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய செனட்டர் லீ றிஹியானனும் தானும் நுழைவுச் சீட்டுக்கள் தொடர்பான அறிவுரையை கவனமாகக் கேட்டறிந்ததாக விளக்கினார்.

அண்மையில் இரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் 15 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டிருந்தனர் - மகிந்த ராஜபக்ச அரசு பேச்சுக்கான சுதந்திரத்தை சிறிதேனும் மதிக்கவில்லை என்பது சர்வதேச மட்டத்தில் பெருவாரியாக ஏற்றுகொள்ளப்படுகிறது.

நியூசிலாந்து அமைச்சரினதும் அவுஸ்திரேலிய செனட்டரினதும் ஊடகவியலாளர் மாநாட்டைத் தடுத்து நிறுத்துவது என்பது நுழைவுச் சீட்டுடன் தொடர்பான பிரச்சனை இல்லை அது பேச்சுச் சுதந்திரத்தை மீறுகின்ற முற்றிலும் கீழ்த்தரமான செயலாகும் என்றார் கெய்த் லொக்கெ.

நடந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து பேச வந்தபோது மண்டபம் எங்கும் போதிய வெறுப்பின் வெளிப்பாடுகளும் அதிருப்தியும் கொண்ட சூழல் நிலவியது.

மனித உரிமைகள் விடயத்தில் உண்மைகளைக் கண்டறியும் பணிக்காக சனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரை இலங்கையில் கைது செய்து தடுத்துவைக்கப்பட்ட செயலுக்கு பிரதமர் ஜோன் கேய் மற்றும் வெளி வவகார அமைச்சர் முறாய் மைக்குலி ஆகியோரும் சிறப்பாக துணைபோயிருந்தனர். அது இறையாண்மைக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாக பார்க்கப்பட முடியும் - குறைந்த பட்சம் இதுவொரு பாதிப்பை உண்டாக்கக்கூடிய, திமிர்பிடித்த வன்செயலாகும்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

இலங்கை அரசால் ஒரு திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் சிலவற்றை வெளியிட்டார். தமிழ்ச் சிறுவர்கள் தமது குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறப்பு வீடுகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அங்கே அவர்கள் சிங்களம் மட்டும் கற்பிக்கப்படுகின்றனர் அத்துடன் சிலர் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.

அந்த குடும்பத்தினர் காவற்றுறையிடம் சென்று முறையிட்ட போது நடவடிக்கை எடுக்கப்படாமை மட்டுமல்லாது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வீதிகளில் சுதந்திரமாகத் திரிவது காணப்பட்டது.

அரசியற் செயல்நோக்கம் கொண்ட பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் என்பன 'மிகவும் பொதுவான மீறல்களாக இருக்கையில், இதற்கு ஐ.நா. மற்றும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் என்பவற்றிடமிருந்து வெளியான அனைத்து (போதிய அளுத்தமற்ற) வெளியக அறிக்கைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.

பத்து மாதங்களாக சிறையிலிருக்கும் ஒருவரோடு நாங்கள் பேசினோம், அவர் எந்தவித குற்றமும் சுமத்தப்படாது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். என்றார் ஜோன் லோகி.

தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மற்றுமொரு விடயமாக ஆழமான பக்கச்சார்பு கொண்ட, நீதிக்குப் புறம்பான நீதிமுறைமையால் ஏமாற்றறப்படுவது காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தலைமை நீதியரசரை நீக்கி, தனது சொந்த சட்ட ஆலோசகரை அந்தப் பதவியில் அமர்த்தியது.

காவற்துறை மற்றும் நீதிமன்ற முறைமையின் மீதான நம்பகத்தன்மை அடிமட்டத்தோடே குழிபறிக்கப்பட்டுள்ளது வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்கள் சாட்சிகள் வழங்குவதை மறைமுகமாக பதிவு செய்யக்கூடிய வகையில் கட்டடங்களில் ஒட்டுக்கேட்கும் இரகசியக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் நிலவுகின்றன.

தேர்தல்கள் சுதந்திரமானதாக நடத்தப் பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என காவற்றுறையால் அச்சுறுத்தப்பட்டு, வாக்களிக்காது தடுக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அங்கு சுதந்திரமான நீதிமுறைமை இல்லை, ஊடகம் இல்லை அல்லது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஊடகம், பிரச்சினைகளைக் கூடிக் கதைக்கின்ற அல்லது பிரச்சினைகள் குறித்து ஒழுங்குகளை மேற்கொள்கின்ற மக்கள் வழக்கமாக அச்சுறுத்தப்படுதல் அல்லது துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுதல். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் உள்ளுர் மக்கள் இடப்பெயர்வு என்பது செயற்பாட்டில் உள்ள ஒரு நிகழ்ச்சிநிரலாக உள்ளது.

அது தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிடமிருந்து கிடைத்த தொடர்ச்சியான தகவலாக இருந்தது. சொந்த நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற எமது மரபை நியூசிலாந்து பின்பற்றும் என்பது எனது நம்பிக்கை. தங்களால் பேசமுடியாத மக்களுக்காக, பேசுவதற்கான கடமை எங்களுக்கு உண்டு என ஜோன் லோகி கூறினார்.

மனித உரிமைகளை நாம் பாதுகாக்கிறோம் என்பது காட்டப்பட வேண்டுமானால், நற்பேறின்றி நியூசிலாந்து அரசு மிகவும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஜோன் கேய் காணாமற்போனோர் குறித்து கேள்வி எழுப்பியிருந்த போதிலும், அவர் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தவில்லை.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து தனது குற்றச்சாட்டுக்களை தலைப்புச் செய்திகள் ஊடாக வெளிப்படுத்தினார். அத்துடன் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்திருந்தார்.

எமது நாட்டுப் பிரதமரின் நிலைப்பாடு உண்மையாகவே வேறுவிதமாக இருப்பதை தெரிவிக்கிறது. மக்கள் தற்பொழுது சுதந்திரத்தை உணர்கிறார்கள் மற்றும் எல்லாப் பிரச்சனைகளின் சரி-பிழைகளை ஆராய்வது எமக்கான வேலை அல்ல என்பது போன்ற திகைப்பை ஏற்படுத்தும் கருத்தை பிரதமர் கேய் கொண்டுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் வடக்கில் தான் சந்தித்த அந்த மக்களின் உருகவைக்கும் அனுபவங்களை பேசிய வேளை, மைக்குலி புதிய வீதிகள் பற்றி உரையாடினார்.

தேசிய அமைச்சர் கன்வல்ஜித் சிங் பக்சியும் கூட இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டினார். அவர்களுடைய மீழ்குடியேற்ற திட்டம் கவனத்தை ஈர்ப்பதாகவும் அத்துடன் சரியான திசையில் செல்வதாகவும்' தெரிவித்தார்.

பிரதமர் கேய் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளார். அத்துடன் ஜோன் லோகி அவர்கள் தனது உண்மைகளைக் கண்டறியும் பணியின் போது ஆதரவு வழங்கவில்லை.

உண்மைகளைக் கண்டறிந்து தகவல் பரிமாற்றம் செய்ய முன்வரும்போது ஒருவேளை எமது அரசாங்கம் இலங்கையைக் காட்டிலும் அதிகம் சிறப்பாக செயற்படவில்லைப் போலும்.

அந்த ஒன்றுகூடல் நடைபெற்று இரண்டாம் நாளில், சர்வதேச மன்னிப்புச் சபை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் லோகி அவர்களின் உணர்வுகள் எதிரொலித்திருந்ததுடன், பொதுநலவாய மாநாட்டில் ஜோன் கேயின் செயற்றிறன் ஒரு தோல்வி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் மீது சுயநலப் போக்கான அக்கறையை தெரிவுசெய்வதன் மூலமும், போர்க் குற்றங்களை புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒரு நாட்டு அரசாங்கத்துக்கு தனது ஒத்துளைப்பை செயல்திறனோடு வழங்குவதன் மூலமும், ஜோன் கேய் (எமது தராதரங்களைப் பாதுகாப்பதற்கான) அந்த நல்வாய்ப்பை இழந்திருப்பதுடன், இதன் மூலம் அவர் நியூசிலாந்து நாட்டுக்கு தவறிழைத்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை நிறைவேற்று இயக்குநர் கிறான்ட் பைல்டன்.

மூலம்:- பிலிப் நன்னெஸ்ரட்

தமிழாக்கம்: கலைவண்ணன்

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே! இலங்கை சென்று திரும்பிய திரிணமுல் எம்.பி"
» கூடங்குளத்தில் அரசின் ஏமாற்று வேலைகள் -அம்பலப் படுத்தியது உண்மை கண்டறியும் குழு!
» பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய பட்சிசோலி கிராமத்துக் குழந்தைகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வைகோவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டார்கள்
» இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் : இலங்கை எதிர்ப்பு
» கோரிக்கையை கிண்டல் செய்ததால் தி.மு.க.,விடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்., குழு அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum