TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டு இருக்கார்! என் பிள்ளைகளையும் கொல்லப்போவதாக மிரட்டினார்கள்! சங்கரராமன் மனைவி பரபரப்பு பேட்டி

Go down

எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டு இருக்கார்! என் பிள்ளைகளையும் கொல்லப்போவதாக மிரட்டினார்கள்! சங்கரராமன் மனைவி பரபரப்பு பேட்டி Empty எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டு இருக்கார்! என் பிள்ளைகளையும் கொல்லப்போவதாக மிரட்டினார்கள்! சங்கரராமன் மனைவி பரபரப்பு பேட்டி

Post by ஜனனி Sat Nov 30, 2013 9:18 pm

3369 நாட்கள்... 24 குற்றவாளிகள்... 1873 பக்க குற்றப்பத்திரிகை... 189 அரசு தரப்பு சாட்சிகள்... என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். 
தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கரராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.எஸ்.முருகன் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்தார்.
'சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ் சாட்சியாக ஆனார்கள்’ என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். ''சங்கரராமன் குடும்பத்தினரே சரியாக ஒத்துழைக்கவில்லை'' என்று அரசு வழக்கறிஞர் தேவதாஸ் சொல்லி இருக்கிறார்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் சங்கரராமன் குடும்பத்தினரைச் சந்திந்தோம். [You must be registered and logged in to see this image.]கண்ணீரோடு முடங்கிக்கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். 'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத்துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக்கொண்டு தொடர்கிறார்.
''போலீஸ்காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப்போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன். அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்கலாம். ஆனா, போலீஸ்காரங்க, சர்வசாதாரணமா பஸ்ல திரும்பிபோகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் பஸ் ஏறினேன். அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக்கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு? அநாதையாதானே இருக்கோம்? இனி நமக்கு யாரும் பாதுகாப்பில்லைனு முடிவுபண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?'' என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.
''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை [You must be registered and logged in to see this image.]இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.
அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார் அவரது மகன் ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா?
2001-ல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, 'மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் புகார்களாக எழுதினார். இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல் துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டுசென்றனர். அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும்.
உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின்போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச்சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலைபாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.
[You must be registered and logged in to see this image.]
[color][font][color]
சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசினோம். 'இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.'' என்று சொன்னார்.
- எஸ்.கிருபாகரன்
அட்டைப்படம்: பா.கந்தகுமார்
படங்கள்: ஜெ.முருகன், எஸ்.தேவராஜன், தே.சிலம்பரசன்
 'மேல் முறையீடு செய்வோம்!''
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த புதுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.முருகன், குற்றம் சாட்டப்பட்ட 24 பேரையும் விடுதலை செய்ய 19 காரணங்களை அடுக்கியுள்ளார். ''சங்கரராமனின் மனைவி பத்மா மற்றும் மகன் ஆனந்த் சர்மா வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சங்கரராமன் கொலைக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, சங்கரராமன் கடைசியாக எழுதி அனுப்பிய 30.08.2004 தேதியிட்ட கடிதம் தொடர்பாக போதுமான விசாரணையை நடத்தவில்லை. அப்பு மற்றும் கதிரவன் சங்கரராமன் கொலை சதி திட்டத்தில் ஈடுபட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதை அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்துள்ளனர். சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகிய இருவரும் கொலையாளிகளை அடையாளம் காட்டவில்லை. மேலும், அவர்கள் வழக்கு விசாரணைக்கும் போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை. கொலை நடப்பதற்கு முன்னும் பின்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆறு பேரையும் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை. ஒரு சாட்சியம்கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டவில்லை. மொத்த சாட்சியங்கள் 189 பேரில் 83 சாட்சியங்கள் சங்கரராமன் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிரமாக ஆராய்ந்து பார்க்கப்பட்டது. ஆனால், சாட்சியங்கள் வழக்கு விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை'' என்று நீள்கிறது காரணங்கள்.
தீர்ப்பு தொடர்பாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தேவதாஸிடம் பேசினோம். ''சங்கரராமன் கொலைக்கு 24 பேரும் காரணம் என்பதற்கு அரசு தரப்பிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. தற்போது நீதிபதியின் தீர்ப்பை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கண்டிப்பாக மேல் முறையீடு செய்யப்படும்'' என்றார் உறுதியாக.
- க.பூபாலன்,
நா.இள.அறவாழி
[You must be registered and logged in to see this image.] இவர்தான் நீதிபதி முருகன்!
 சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சி.எஸ்.முருகன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் ஆரம்ப காலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2009-ம் ஆண்டு சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய போது ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கை விசாரித்தார்.பிறகு, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 2012-ல் புதுச்சேரியில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.ராமசாமி பெரம்பலூருக்கு மாற்றப்பட, தலைமை நீதிபதியாக சி.எஸ்.முருகன் பொறுப்பேற்றார். 2015 ஜனவரி மாதம் முருகன் ஓய்வு பெறுகிறார். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. மனைவியும் நீதிபதியாக இருக்கிறார்.
-vikatan.com-[/color][/font][/color]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியா? ஜெ.,பரபரப்பு பேட்டி
» ராணா தாமதம் ஏன்? ரஜினி பரபரப்பு பேட்டி!
» வீட்டுச் சிறையில் பின்லேடனின் மனைவி, குழந்தைகள்! பரபரப்பு வீடியோ (2 ஆம் இணைப்பு)
» "மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது' : முதல்வர் ஜெ., பரபரப்பு பேட்டி
» கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum