TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறிலங்காவிலுள்ள சில ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றனர் என்று சனல் 4 ஊடகம்

Go down

சிறிலங்காவிலுள்ள சில ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றனர் என்று சனல் 4 ஊடகம்  Empty சிறிலங்காவிலுள்ள சில ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றனர் என்று சனல் 4 ஊடகம்

Post by ஜனனி Tue Nov 26, 2013 7:14 am

சிறிலங்காவிலுள்ள சில ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றனர் என்று சனல் 4 ஊடகம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. அந்த ஊடகவியலாளர்களை பிரித்தானியாவிலுள்ள நாய்களுக்கு ஒப்பிட்டுள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் ஜொனாதன் மில்லர்.
சிறிலங்காவிலுள்ள சில ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றனர் என்று சனல் 4 ஊடகம்  1425670_673644639342202_1902100730_n
தாங்கள் சிறிலங்காவில் தங்கிநின்ற காலப்பகுதியில் அந்த ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றும் ஜொனாதனன் மில்லர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஊடகவியலாளர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

பொதுநலவாய மாநாட்டுக்காக சிறிலங்காவுக்குச் சென்ற சனல் 4 ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜொனாதன் மில்லர் தனது பயணத்தின் திட்டமிட்ட நாட்கள் முடிவடைவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் விமானத்தில் இருந்தவாறு அவர் அந்த மடலை எழுதியிருக்கின்றார். 

அவர் எழுதியுள்ள இந்த மடலை சிறிலங்காவிலுள்ள தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.

அந்த மடலில் ஜொனாதன் தெரிவித்துள்ளவை வருமாறு,

சிறிலங்காவில் எனக்கும் எனது சனல் 4 இன் சக பணியாளர்களுக்கும் நாட்டின் புலனாய்வுத் துறையினர், பொலிஸார் மற்றும் குடிவரவு துறையினரால் தொடர்ச்சியாக துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் துணிச்லுடன் ஆபத்தினை எதிர் கொண்டிருக்கும் சிறிலங்கா ஊடகவியலாளர்கள் மத்தியில் பிறரது துன்பத்தில் இன்பம் காணும் சுவையான காட்சிகளை என்னால் அவதானிக்க முடிந்தது.

ஆனால் அரசுக்காக பலத்த ஒலியில் பிரசாரம் மேற்கொண்ட ஆத்திரம் கொண்ட ரொட்வெயிலர் (ஒரு வகை கட்டையின நாய்) ஊடகவியலாளர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் அவர்களும் பிறர் கேட்டில் இன்பம் கண்டிருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. 

ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் இவ்வாறான துன்புறுத்தல்களை எதிர்கொண்டும் அது தொடர்பாக முறையிட முடியாதிருக்கும் உங்களை பற்றியே நான் கூறுகின்றேன். இவர்களில் சிலர் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது சில தடவைகளில் கடினமானதாகவே உள்ளதென்பதனை என்னுடன் இணங்கிக் கொண்டனர். இதனை ஏற்றுக்கொள்ளுங்கள். வெப்ப மண்டலத்தின் சொர்க்கமான, அழகான நாட்டில் ஊடகங்கள் மீதான அரசு ஒடுக்குமுறையின் உஷ்ணமான காற்றை பிரித்தானியர்களாகிய நாம் உணர்ந்தோம்.

எம்முடன் பயணித்த உளவுத் துறையினரே நாம் வடக்கை நோக்கிச் சென்ற ரயிலில் பயணிக்கின்றோம் என்பதை அறிவித்த பின்னர் தான் எமது பயணம் அரசு ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டது என்பதனை உங்களில் சிலர் கூட இரகசியமாக அறிந்திருக்கவில்லையா? எமது பயணத்தின் இறுதி நாட்கள் சில அரச புலனாய்வுத் துறையினரின் 5 வாகனங்களால் பின் தொடரப்பட்டதனை அறிந்தமை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதற்காக ஒரு சிறு புன்னகையினை கூட உங்களால் காட்ட முடியவில்லையா ?

சனிக்கிழமையன்று நாங்கள் நேர்முகம் ஒன்றிற்காக கிளம்பிய போது வன்முறைக் கும்பல் எம்மை கல்லால் அடித்தமைக்காக நீங்கள் அனுதாபம் தெரிவிக்கவில்லையே என்ற தருணத்தினை நான் இங்கு கூறவில்லை. எனது நண்பனான கலும் மக்ரே உள்ளிட்ட குழுவினரை அரச தொலைக்காட்சிகள் மிகவும் வஞ்சனையுடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சித்திரித்து மிகவும் நேர்த்தியாக செய்திகளை ஒளிபரப்பின.

சந்தோஷம் நிறைந்த உங்களின் ஜனாதிபதியின் (எம்மை தன்னுடன் தேநீர் பருக அழைத்திருந்தவர்) ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் எமது பெயர் நீக்கப்பட்ட போதான வெறுப்பையும் கோபத்தையும் நீங்கள் பகிர்ந்து கொண்டதை நாம் அறிந்துள்ளோம்.

பொதுநலவாய ஊடகப் பேச்சாளர் ரிச்சர்ட் உக்கு, எமது ஆசிரியர் பென்டி பீர் மற்றும் உங்களின் ஊடகத் துறை அமைச்சின் உறுதியான பேச்சு இல்லாவிடில் நாம் அந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு சென்றிருக்க முடியாது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் நீங்கள் பிறர் கேட்டில் இன்பம் காணவில்லையெனில் கவலைப்படாதீர்கள். இது ஒரு கோபம் நிறைந்த பணி. ஆனால் நாம் அதனை அனுபவித்தோம். உங்கள் நாட்டையும் விரும்புகின்றோம். 
இங்கு எமக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் எமது நண்பர்கள் பலர் இரகசியமாக தமது கதைகளை கூறியுள்ளனர். கட்டை விரலை உயர்த்தியும் இமையினை உயர்த்தியும் தமது ஆதரவை எமக்கு வெளிப்படுத்தினர். இவர்கள் தமது ஆதரவினை சில அதிர்ச்சியான இடத்திலும் வெளிப்படுத்தினர்.

ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் ஒடுக்குமுறை நிறைந்த நாட்டில் சினமூட்டும் புலனாய்வுப் பிரிவினரை தவிர வேறு வேறு விடயங்கள் எமது கமராக்களில் உள்வாங்கும் முக்கியத்துவத்தினை பெற்றிருக்கவில்லை. கொழும்பின் உள் நகரங்களில் எம்மால் அதனை செய்ய முடிந்தது. பாரிய சர்வதேச மாநாடொன்றிலே எமது பிரதமர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோர் நகரமொன்றிற்கு செல்லும் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் நாம் உங்களுக்கு இல்லாத வகையில் பாதுகாப்புப் படையை கொண்டிருந்தோம்.

எம்மை கொல்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ கைது செய்வதற்காகவோ இல்லை என்பதனை உணர்ந்திருந்தாம். ஆனால் அவ்வாறு நடக்கலாமென அச்சுறுத்துவதற்காகவே இந்த பின் தொடரும் நடவடிக்கைகள். இங்கு வருகை தர முன்னரே எனக்கும் கலும் மக்ரேக்கும் உயிரச்சுறுத்தல் இருந்தது. ஆயினும் உங்களை விட எமக்கு பாதுகாப்பு உள்ளது. 

இதன் காரணமாகவே தமது ஜனாதிபதி கூறியதைப் போல ஜனநாயக சுதந்திர நாட்டில் எதனை செய்ய முடியுமென நாம் எதிர்பார்த்தோமோ அதனை செய்வதற்கு சில தடைகளை நகர்த்துவது முக்கியமென நாம் உணர்ந்தோம். கருத்து சுதந்திர ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பெறுமானங்களைக் கொண்ட பொதுநலவாய பெறுமானங்களை தான் கடைப்பிடிப்பதாக மகிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

உங்கள் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சிலர் நாணயக் கயிறுபோட்ட ஆடுகளாகவும் அரச தொலைக்காட்சிகள், வடகொரியாவை நோக்கியும் பயணிக்கின்றது. கடந்த 10 வருடத்தில் 9 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். லசந்த விக்கிரம துங்கவின் கொலையினை அறியும்போது என்னை சிலிர்க்க வைத்தது. தனது கணவரை இன்னமும் தேடியறிய வலியுறுத்தும் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியின் குரலை கேட்கும்போது நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

நீங்கள் அறிந்ததை விட வேறு எதனையும் நான் அறிந்திருக்கவில்லை. எக்னலிகொட இருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. ஊடக தரத்தை நிர்ணயிக்கும் நியூயோர்க்கின் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவின் தரப்பட்டியலில் ஊடக சுதந்திரத்தில் 179 நாடுகளில் இலங்கை 162 ஆம் இடத்தில் உள்ளது. 
உங்கள் வாழ்க்கையின் சிவப்பு கோட்டினை நீங்கள் தாண்டியுள்ளீர்கள். விமர்சிப்பது உங்களுக்கு சிக்கலானது தான். எம்மை போலன்றி இராணுவத்தினை விமர்சிப்பதும் போரைப் பற்றி குறிப்பிடுவதும் உங்களுக்கு முடியாத காரியம் தான். 

இலங்கையினை பாராளுமன்ற ஜனநாயக முறைமையினை கொண்ட நாடென கூறுவது முரண்பாட்டுடனான இழுபறி நிலையினையே கொண்டுள்ளது. உங்கள் பணியினை நீங்கள் மிகவும் துணிவுடன் செய்வதற்கு கண்டறிந்துள்ள வழிகளை கண்டு நான் வியப்படைகின்றேன். செய்தியாளர் மாநாடொன்றில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முதலில் கேள்வி எழுப்பிய போது உண்மையில் நான் கிட்டத்தட்ட எனது கதிரையிலிருந்து விழுந்துவிட்டேன். எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறி எம்மை திட்டமிட்ட திகதியை விட முன்னரே பயணிக்க வைத்த பின்னர் விமானத்தில் இருந்து இதனை எழுதுகின்றேன்.

உங்களின் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளை நான் வாசித்தேன். நீங்கள் சில தடவைகளில் கையாளும் கடப்பாடுள்ள வழிமுறைகளை பார்த்து தங்களின் புத்திசாலித் தனத்தை என்னால் உணர முடிகிறது. உங்களை சந்தித்தது உத்வேகமான சந்திப்பாக அமைந்தது. இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் நீங்கள் செயற்படும் விதம் குறித்து நாம் அனைவரும் மெச்சுகின்றோம் என்று கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
» இருபதாயிரம் பேர் என்று வட இந்திய ஊடகம் உண்மையைச் சொல்கிறான் ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் 2000.. 3000... என்று பொய் சொல்கின்றன... குரூணாநிதியில் வார்த்தைகளில் சொல்வதென்றால் “தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈரல் கெட்டுவிட்டது” என்று தானே சொல்ல வேண்டும்...
» சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் பொய் என்று கூற சிறைக் கைதிகளாக உள்ள சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவிமாரை நிர்ப்பந்திக்கும் அரசு
» இந்நாள் என்று வரும் என்று ஏங்கும் கோடிக்கணக்கான மக்களில் நாணும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி தான்
» சரத் பொன்சேகாவுடன் இருந்த ஊடகவியலாளர்கள் மீது விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum