TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கள்ளஉறவை இந்தியா மறைத்துவிட்டது.இலங்கை கசியவிட்டது!

Go down

கள்ளஉறவை இந்தியா மறைத்துவிட்டது.இலங்கை கசியவிட்டது!  Empty கள்ளஉறவை இந்தியா மறைத்துவிட்டது.இலங்கை கசியவிட்டது!

Post by Tamil Thu Nov 14, 2013 7:46 am

கள்ளஉறவை இந்தியா மறைத்துவிட்டது.இலங்கை கசியவிட்டது! 
கள்ளஉறவை இந்தியா மறைத்துவிட்டது.இலங்கை கசியவிட்டது!  1468659_672889956076163_1360241906_n
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் விவகாரம் தமிழ்நாட்டில் சூடு பிடித்திருந்த நிலையில், இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் இரண்டு விடயங்களை வெளியே கசிய விடாமல் மறைத்துவிட்டன.

முதலாவது காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இலங்கைக் கடற்படைக்கும், இந்தியக் கடற்படைக்கும் இடையில் நடந்த சந்திப்பு.

இரண்டாவது இலங்கைக் கடற்படையுடன், இந்தியக் கடற்படை நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி.

இந்த இரண்டுக்கும் கடந்த காலங்களில் இந்தியா அதிக முன்னுரிமை கொடுத்து வந்திருந்தது. ஆனால் இந்த முறை இந்த இரண்டு விவகாரங்களையும் இந்திய அரசாங்கம் அமுக்கி வைத்து விட்டது.

காரணம், கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்கு எதிராக, அதில் இந்தியா பங்கேற்பதற்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்துள்ள உணர்வலைகள் தான். ஏற்கனவே இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் விவகாரமும் இலங்கைக் கடற்படை மீது தமிழ்நாட்டில் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில் இலங்கைக் கடற்படையுடன் சந்திப்பு, போர் ஒத்திகை போன்ற செய்திகளை வெளியிடுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று இந்திய மத்திய அரசு நினைத்திருக்கலாம்.

கடந்த முதலாம் திகதி காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள இந்திய - இலங்கை கடல் எல்லையில் இந்தியக் கடற்படையின் சுகன்யா போர்க் கப்பலில் தான் இருநாட்டுக் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடந்திருந்தது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய சந்திப்பு நடப்பது வழக்கம்.

மீன்பிடிப் பிரச்சினைகள், கடத்தல்கள், எல்லை மீறல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும். ஒருமுறை இந்தியக் கப்பலில் சந்திப்பு நடக்கும். மறுமுறை இலங்கைப் போர்க் கப்பலில் சந்திப்பு நடக்கும்.

இத்தகைய சந்திப்பு தான் கடந்த முதலாம் திகதி நடந்திருந்தது. இதில் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் திசாநாயக்க தலைமையில் இலங்கைக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகளும், தமிழ்நாடு கடற்படைத் தளபதி கொமடோர் மகாதேவன் தலைமையிலான இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இது போன்ற சந்திப்புகள் தொடர்பாக இந்தியக் கடற்படை செய்தி வெளியிட ஒருபோதும் தவறியதில்லை.

ஆனால் இம்முறை அதனைத் தவிர்த்துக் கொண்டிருந்தது.

ஒருவகையில் இந்தச் சநதிப்பை மறைக்கவே இந்தியா விரும்பியது.

ஆனால் இலங்கை கடற்படை செய்தியைப் படங்களுடன் வெளியிட்டு விட இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

எதற்காக இந்தச் செய்தியை இந்தியக் கடற்படை மறைத்தது என்று புதுடில்லியில் உள்ள கடற்படைத் தலைமையகத்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

ஆனால் வழக்கத்தில் இதையெல்லாம் ஒரு பாதுகாப்பு இரகசியமாக இந்தியக் கடற்படை மறைத்து வைத்திருந்ததில்லை.

அதேவேளை இந்தியப் பாதுகாப்பு அமைச்சும் இந்தச் சந்திப்பை கடற்படைகளுக்கிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்பாகவே, வெளியிட முனைந்தது.

இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையில் சுமுகமான உறவு இருப்பதால் இதற்கு மத்திய அரசின் அனுமதி பெறத் தேவையில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறிய நியாயம் இது மத்திய அரசுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறி சமாளிப்பதற்கான உத்தியே.

அதேவேளை இன்னொரு விடயத்தையும் இந்தியக் கடற்படை மறுத்துவிட்டது. அது மிகவும் முக்கியமான, இந்திய - இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி.

SLINEX என்ற பெயரில் இருநாட்டுக் கடற்படைகளும், முதல்முறையாக 2005ம் ஆண்டு கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.

அதற்குப் பின்னர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலால் தடைப்பட்டுப் போன கூட்டுப் பயிற்சி மீண்டும் 2011ல் ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலையில் நடந்த இந்தப் பயிற்சியில் பங்கேற்க இந்தியக் கடற்படையின் ஆறு போர்க் கப்பல்கள் வந்திருந்தன. இம்முறை இந்தியாவின் கோவா மாநிலக் கடற்பகுதியில் SLINEX 2013 போர்ப்பயிற்சி கடந்த 4ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வரை இடம்பெற்றது. முன்னதாக இந்தப் பயிற்சியை தமிழக கடற்பகுதியில் மேற்கொள்ளவே திட்டமிடப்பட்டது.

ஆனால் இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து இழுபறிக்குள்ளான இந்தப் போர்ப்பயிற்சியை தென் மாநிலங்களுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் நடத்துவதற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி அனுமதி அளித்திருந்தார்.

இதையடுத்தே கர்நாடக மாநிலத்திற்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் இடையிலுள்ள கோவாவில் இந்தப் போர்ப்பயிற்சி நடத்தப்பட்டது. திருகோணமலையில் 2011ல் நடந்த போர்ப்பயிற்சியின் போது ஊடகங்களுக்கு தகவல்களை அள்ளி அள்ளி வழங்கிய இந்தியக் கடற்படை இந்தப் போர்ப்பயிற்சி நடக்கவுள்ள தகவலையே முழுமையாக மறைத்து விட்டது.

அதேவேளை கடந்த வாரம் சென்னைத் துறைமுகத்துக்கு வந்திருந்த யு.எஸ்.எஸ் மக்கம்பல் என்ற அமெரிக்க போர்க்கப்பல் பற்றிய தகவல்களுக்கும், அமெரிக்க கடற்படையுடன் இந்தியக் கடற்படை இணைந்து நடத்திய மலபார் 2013 போர்ப்பயிற்சி குறித்த தகவல்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்தது. கோவாவில் நடத்தப்பட்ட கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையின் ஆழ்கடல் ரோந்துப் படகான சாகர மாத்திரம் பங்கேற்றிருந்தது.

அதுபோலவே இந்தியக் கடற்படையின் தரப்பில் ஐ.என்.எஸ் தேக் என்ற போர்க்கப்பலும், இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் செடெக் ஹெலிகொப்டர்களுமே பங்குபற்றின.

திருகோணமலையில் கடைசியாக நடத்தப்பட்ட கூட்டுப் பயிற்சியுடன் ஒப்பிடுகையில், இது மட்டுப்படுத்தப்பட்டளவானது. எனினும், இலங்கைக் கடற்படையுடன் போர்ப்பயிற்சியை மேற்கொண்டது குறித்து, இந்தப் பத்தியை எழுதும் வரை இந்தியக் கடற்படை மூச்சுக் கூட விடவில்லை.

ஆனால் கோவாவில் இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள எஸ்.எல்.என்.எஸ் சாகர போர்க் கப்பல் புற்ப்படுகிறது என்று முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டு இலங்கைக் கடற்படையும் பாதுகாப்பு அமைச்சும் இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தின.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினது புதுடில்லிப் பயணத்திற்கு இந்தியா தடை போட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் இலங்கை இவ்வாறு நடந்து கொண்டதோ தெரியவில்லை. இந்த மாத் தொடக்கத்தில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச புதுடில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இதனை இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதிலும், இந்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. ஆனால் கடைசியில் அவரது பயணம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கொமன்வெல்த் மாநாட்டு விவகாரத்தில் மத்திய அரசு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சூழலில், கோத்தபாய ராஜபக்ச புதுடில்லி வருவது மத்திய அரசுக்கு நெருக்கடிகளை அதிகப்படுத்தும் என்று கருதப்பட்டது.

அதனால் கோத்தபாய ராஜபக்சவை புதுடில்லிக்கு வரவேண்டாம் என்று நட்பு ரீதியாக இந்திய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் கசிந்தன.

கோத்தபாய ராஜபக்சவின் பயணத்தை தடைப்படுத்தியதன் மூலம் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயன்ற இந்திய அரசுக்கு இந்திய - இலங்கை கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி, சந்திப்பு பற்றிய தகவல்களை அவிழ்த்து விட்டு நெருக்கடியை ஏற்படுத்தியது இலங்கை அரசாங்கம்.

எது எவ்வாறாயினும் தமிழ்நாட்டில் அழுத்தங்கள் இருந்தாலும் இலங்கைக் கடற்படையுடனான உறவுகளை முறிக்கவோ, கூட்டுப்பயிற்சிகள், சந்திப்புக்களை நிறுத்தவோ இந்தியக் கடற்படை தயாராக இல்லை.

ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய கரையோரப் பகுதிக்கு ஏற்பட்டுள்ளய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, இலங்கை ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது. இந்தியா மீது கடல்வழியாக தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று வெளியாகும் புலனாய்வு எச்சரிக்கைகளின் பின்னணியில், இலங்கைக் கடற்படையுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வது இந்தியாவுக்கு முக்கியமானது.

எனவே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கினாலும் கூட இந்த விடயத்தில் தமிழ்நாட்டு அழுத்தங்களுக்குப் பணிந்து இலங்கைக் கடற்படையுடனான பயிற்சிகள், உறவுகளை இந்தியக் கடற்படையால் முறித்துக்கொள்ள முடியாது. ஊடகங்களுக்கு மூச்சுக் கூட விடாமல் இலங்கைக் கடற்படையுடன் நடத்தி முடித்துள்ள சந்திப்பும், கூட்டுப்பயிற்சியும் இதையே தான் எடுத்துக் காட்டியுள்ளது.

சுபத்ரா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்
» கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா. -
» இந்தியா எந்தவித நெருக்குதலும் தரவில்லை: இலங்கை அமைச்சர்
» இலங்கை குறித்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது: ஆர்எஸ்எஸ்
» இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியா வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum