TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மன்மோகன் சிங் சொல்வதை இலங்கை மதிப்பதில்லை: ஞானதேசிகன்

Go down

மன்மோகன் சிங் சொல்வதை இலங்கை மதிப்பதில்லை: ஞானதேசிகன் Empty மன்மோகன் சிங் சொல்வதை இலங்கை மதிப்பதில்லை: ஞானதேசிகன்

Post by ஜனனி Thu Oct 03, 2013 7:23 pm

[You must be registered and logged in to see this image.]கோவை: தமிழக மீனவர் பிரச்னையில், இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன பிறகும், அவர்கள் அவ்வாறு நடப்பதில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

தேர்தல் காய்ச்சல் தமிழக காங்கிரஸ் கட்சியிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக துவங்கியிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி, பல ஆண்டுகளுக்கு பின்னர் கட்சியின் பேச்சாளர்களை அழைத்து, அவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது.

தேர்தலில் எதை மையப்படுத்தி பிரசாரம் செய்வது, விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது எப்படி? என அவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளனர்.

சென்னையைத் தொடர்ந்து, கோவை அருகே உள்ள சாடிவயல் பகுதியில் பேச்சாளர்களுக்கான பயிற்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டம் இரு தினங்கள் நடந்தது. இதில் கலந்து கொண்ட 90க்கும் அதிகமான பேச்சாளர்களில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்கள். இவர்கள் பலரும், பல ஆண்டுகளாக கட்சியில் உள்ள தங்களை கட்சி கண்டுகொள்வதே இல்லை என புகார் எழுப்ப, பயிற்சியை விட புலம்பல்களே அதிகம் இருந்தன.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசின் சாதனைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் காமராஜரின் பொற்கால ஆட்சி ஆகிய தலைப்பில் 3 புத்தங்கள் வழங்கப்பட்டு, இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி முகாமினிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விகடன் டாட் காமிற்கு அளித்த பேட்டி.

என்ன திடீர்னு பேச்சாளர்களுக்கு பயிற்சி எல்லாம்?

காமராஜர் காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் பேச்சாளர்களுக்கு இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மூப்பனார் ஒரு முறை இது போன்ற கூட்டத்தை நடத்தினார். பல ஆண்டுகளாக பேச்சாளர்களுக்கு இது போன்ற எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை. மத்திய காங்கிரஸ் அரசின் சாதனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிற்சி நடத்தி வருகிறோம். நான் வந்த பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி பப்ளிகேஷனில் பேச்சாளர்கள் படித்து அறிந்து கொள்ள வசதியாக 6 புத்தகங்களை ரிலீஸ் செய்துள்ளோம். இதில் உள்ள தகவல்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி.

காங்கிரஸ் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்ட  கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கிற சூழலில், இந்த பயிற்சி எல்லாம் கைகொடுக்குமா என்ன?

எந்த குற்றச்சாட்டும் அரசின் மீது இல்லை. தனி நபர் மீது தான் இருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தான் முக்கியம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்மாடி மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமைச்சரவையில் இருந்த கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை விட, நடவடிக்கையை தடுக்கவில்லை. எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக இருக்கிறது. இதற்கு அடிப்படை காங்கிரஸ் அரசு தான் தகவல் அறியும் சட்டத்தையே கொண்டு வந்தார்கள். மடியில் கனம் இருந்தால், இதை நாங்கள் கொண்டு வந்திருக்க மாட்டோம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. தனி நபர் தவறு செய்யாமல் இருக்க முடியாது. நடவடிக்கை எடுக்கப்படுதா? நடவடிக்கை தடுக்கப்படாமல் உள்ளதா என்பது முக்கியம். காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் தடுக்கவில்லை.

தமிழக்கத்தில் நரேந்திர மோடிக்கு கூடிய கூட்டம்... (கேள்வியை முடிக்கும் முன்னர் இடை மறித்து)

பாரதிய ஜனதா கட்சி தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கட்சி அல்ல. எனவே மோடியால் எதையும் தூக்கி நிறுத்த முடியாது. தமிழகத்தில் உள்ள ஒரே தேசிய கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இரண்டு திராவிட கட்சியும் காங்கிரசும் தான் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கிறது. பெரிய வாக்கு வங்கியும் கிடையாது. கூட்டம் அதிகம் என்பது ஒரு மாயை. திருச்சியில் மோடி கூட்டம் நடந்த ரயில்வே மைதானத்தின் கொள்ளளவே 35 ஆயிரம் பேர் தான். 50 ஆயிரம் நாற்காலிகள் கூட அதில் போடவில்லை. அதுதான் நிஜம்.

தமிழகத்தில் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பல கட்சிகள் தயாராகி வருகிறதே? 

தமிழகத்தில் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர எந்த பெரிய கட்சியும் முயற்சிக்காது. கூட்டணி என்பது லாப, நஷ்ட கணக்கின் அடிப்படையில் தான் அமைக்கப்படுகிறது. பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்தால் நஷ்டம் தான் கிடைக்கும். எனவே யாரும் முயற்சிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் முக்கியமான கட்சியென்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி அலட்சியமாகத்தானே இருந்து வருகிறது?

தமிழர் பிரச்னையை பொறுத்த வரை, இரண்டு தான் முக்கிய பிரச்னை. முதலாவது இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை பற்றிய கேள்வி. அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே நிலைப்பாடு தான். சம உரிமை வழங்க வேண்டும் என்று தான் காங்கிரஸ் நினைக்கிறது.

மத்திய அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் தான் வடமாகாணத்தில் நடந்த தேர்தல். இதை முதல்வர் வேட்பாளர் விக்னேஸ்வரனே தெரிவித்துள்ளார். முதலில் அமைச்சரவை அமைய வேண்டும். பின்னர் அரசியல் சட்ட திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்பார்கள். அதை பெற்றுத்தர மத்திய அரசு முயற்சிக்கும்.

இரண்டாவது மீனவர் பிரச்னை. மீனவர் பிரச்னையை பொறுத்தவரை அவர்கள் நலனில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் உடனுக்குடன் விடுவிக்கப்படுகின்றனர். மீனவர் அமைப்புகள் என்னுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். தமிழக மீனவர் பிரச்னையில் கவனத்துடன் இருக்கிறோம். இது மீனவர்களுக்கு தெரியும்.


ஆனால், இலங்கை அரசால் மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்கவோ, இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறவர்களை தடுக்கவோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுதே?

எனக்கு தெரிந்து மீனவர் படுகொலை 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நடக்கவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்த போது, அவர்கள் படகு, கப்பல்கள் நடமாட்டம் காரணமாக தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். அந்த பகுதியில் அமைதி ஏற்பட்ட பின்னர் உயிர்சேதம் ஏற்படவில்லை. ராமேஸ்வரம் மீனவர் பிரச்னைக்கு இரட்டை மடி வலை. அதிக குதிரைத்திறன் கொண்ட படகுகளை பயன்படுத்துவது ஆகியவையும் காரணம். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மறுநாளே விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஆனால், கைதான மீனவர்கள் உடனுக்குடன் விடுதலை செய்யப்படுவதில்லையே? பல நாட்கள் இலங்கை சிறையில் தானே இருக்கிறார்கள்?


அது இப்போதுதான். புத்த பிட்சு தாக்கப்பட்ட பின்னர் தான். சமீபத்தில் புத்த பிட்சு தாக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு கோபம் அதிகமாக இருக்கிறது. முன்னரெல்லாம் ஒரேநாளில்தான் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது ஒரு வாரம், 10 நாள், 15 நாள், 2 மாதம் கூட ஆகிறது. ஆனா விட்டுறாங்க. இலங்கை மீனவர்களை நாமும் பிடிக்கிறோம். அவர்களும் பிடிக்கிறார்கள். நாமும் விட்டுவிடுகிறோம். அவர்களும் விட்டுவிடுகிறார்கள்.

அப்போ மீனவர் பிரச்னையில் இலங்கை அரசு செயல்பாடு காங்கிரஸ் கட்சிக்கு திருப்தியா?


இதில் திருப்தி, அதிருப்தி என்ன இருக்கிறது?. தமிழக மீனவர் பிரச்னையில் இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என மன்மோகன் சிங் சொன்னார். அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

சரி, தமிழகத்தில் யாருடன் கூட்டணி?

கூட்டணி என்பது அறைக்குள் விவாதிப்பது. வெளியில் பேசி அமைவதில்லை. எந்த அரசியல் கட்சியும் கூட்டணி முடிவாகும் வரை அதை விவாதிப்பதும் இல்லை. வெளியில் சொல்வதும் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்குமா? கூட்டணி இல்லாமல் போட்டியிடுமா? கூட்டணி என்றால் யாரோடு? என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்?

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

அவசர சட்டத்தை ராகுல் எதிர்த்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறதே?

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகாமல் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அவசர சட்டத்தை அமைச்சரவை சில காரணங்களால் கொண்டு வருகிறது. ஏன் வேண்டும் என்பது அவர்களுக்குதான் தெரியும். அவசர சட்டம்போட்டிருக்க வேண்டாம் என கட்சி நினைக்கிறது. கட்சி வேறு ஆட்சி வேறு என்பதுதான் காங்கிரசின் நிலை. பெரும்பான்மை மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் எண்ணத்தை அவர் பிரதிபலித்தார். அவ்வளவுதான்.


-ச.ஜெ.ரவி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum