TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் ! தமிழக மாணவர்களே இதற்கான திறவுகோல்: - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Go down

இந்தியா பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் ! தமிழக மாணவர்களே இதற்கான திறவுகோல்: - பிரதமர் வி.உருத்திரகுமாரன்  Empty இந்தியா பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் ! தமிழக மாணவர்களே இதற்கான திறவுகோல்: - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Post by மாலதி Mon Sep 09, 2013 9:24 pm

இந்தியா பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் ! தமிழக மாணவர்களே இதற்கான திறவுகோல்: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் 
இந்தியா பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் ! தமிழக மாணவர்களே இதற்கான திறவுகோல்: - பிரதமர் வி.உருத்திரகுமாரன்  1236107_630898333616833_2051315531_n
சிறிலங்காவினை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதற்கும் முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டியது இந்திய அரசின் ஒரு கடமை எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தென்னாசியப் பிராந்தியத்தின் முதன்மை நாடு என்ற வகையில் இந்தியா தனது தார்மீகப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


தமிழகம - சென்னையில் சேவ் தமிழ் இயக்கம், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு சார்பில் இடம்பெற்ற பன்னாட்டு இளைஞர் மாநாட்டுக்கு அனுப்பி வைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தியிலேயே இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலையினைப் பொறுத்தவரை இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியில் கனதியான பங்கினை ஆற்றக்கூடியவை என்பது பரலவாக உணரப்பட்டதொரு விடயம் எனத் தெரவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆனால், சிறிலங்கா தொடர்பாக இந்தியா ஒரு மென்மையான நட்புறவான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறதெனவும் இது சிறிலங்காவின் தமிழன அழிப்புக்கு உறுதுணையாகவும் அமைந்து வருகிறது எனத் இடித்துரைத்துள்ளார்.

மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையினை புறச்சூழல் மட்டும் தீர்மானிப்பதில்லை. வெளியுறவுக் கொள்கையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு நிலைமைகளுக்கும் காத்திரமான பங்கு இருப்பதுண்டு. இந்த வகையில் இந்தியாவின் சிறிலங்கா தொடர்பான வெளியுறவுக் கொள்கையினை மாற்றியமைப்பதில் தமிழகம் காத்திரமான பங்கை ஆற்ற முடியும். இந்தப் பொறுப்பைத் தமிழக மாணவர்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இம் மாற்றத்தை இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்துவதற்கான திறவுகோல் தமிழகத்திடம் குறிப்பாகத் தமிழக மாணவர்களிடம்தான் இருக்கிறது எனத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநாட்டில் கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது, கொமன்வெல்த் அமைப்பிலிருந்து சிறிலங்காவை நீக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்றால் மற்ற உறுப்பு நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனும் விடயங்களை வலியுறுத்தியதாக ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் முழுமையான மாநாட்டுச்செய்தி:

தமிழினப்படுகொலை மேற்கொண்டு வரும் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக்குழுவினராலும் 'சேவ்' தமிழர் இயக்கத்தாலும் ஏற்பாடு செய்யப்படும் பன்னாட்டு இளைஞர் மாநாட்டுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தும் இவ்வேளையில் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருநிறைவடைகிறேன்.

இம் மாநாட்டில், தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் சிறிலங்காவில் பொதுநலவாய மாநாடு நடாத்தப்படக்கூடாது எனவும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் இந்தியா இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இக் கோரிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் வலியுறுத்துவதோடு இதற்கான போராட்டங்களோடு தனது கைகளையும் இணைத்துக் கொள்கிறது.

உலகில் வெவ்வேறு காலகட்டத்தில் வரலாற்றை முன்னோக்கி நகர்த்தும் பணியில் மாணவர்கள் காத்திரமான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களின், ஒடுக்குமுறையாளர்களின் அடக்குமுறை அரச இயந்திரங்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல் உறுதியாகப் போராடியிருக்கிறார்கள். மாணவர்கள் எழுச்சியடையும் போது, சரியான முறையில் தமது போராட்டப்பாதையினை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும்போது, அவர்கள் தம்கையில் எடுக்கும் போராட்டங்கள் வெற்றிப்பாதையினை எட்டுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடிவதில்லை.

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்துக்கும், குறிப்பாகத் தமிழக மாணவர்களுக்கும் பெரியதொரு பங்கிருக்கின்றது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் தமிழீழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் தமிழக மாணவர்கள் வெளிக்காட்டிய எழுச்சி இரு விடயங்களைத் தெளிவாக வெளிக் கொணர்ந்தது. ஒன்று, தமிழீழத்துக்கு ஆதரவாகத் தமிழக மக்களை ஒரு திரளாக (in a mass) அணிதிரட்டும் ஆற்றல் மாணவர்களுக்கு இருக்கிறது என்பது. இரண்டாவது, தமிழகத்தில் நடைபெறும்.

தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படல் தான்; வலுவுள்ளதாக அமையும் என்பது. இந்த வகையில் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் இம் மாநாடு மாணவர்களது தலைமையில் நடைபெறுவது மிகவும் பொருத்தம் வாய்ந்தது.

தமிழீழ விடுதலையினைப் பொறுத்தவரை இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியில் கனதியான பங்கினை ஆற்றக்கூடியவை என்பது பரலவாக உணரப்பட்டதொரு விடயம். ஆனால், சிறிலங்கா தொடர்பாக இந்தியா ஒரு மென்மையான நட்புறவான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறது. இது சிறிலங்காவின் தமிழன அழிப்புக்கு உறுதுணையாகவும் அமைந்து வருகிறது. சிறிலங்கா தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுத் தமிழீழ மக்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு சுதந்திரத் தமிழீழம் அமைவது தவிர வேறு வழியேதும் இல்லை என்ற புரிதல் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்பட வேண்டும்.

தனித் தமிழீழம் அமைவதால் தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் புதிதாகத் தனிநாட்டுக் கோரிக்கைகள் எழமாட்டா என்ற நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். இந்தியாவும் தமிழீழமும் மட்டுமே நீடித்து நிலைக்கக்கூடிய நட்புறவு நாடுகளாக அமைய முடியும் என்ற புதியபார்வை தோன்ற வேண்டும். அப்போதுதான் தமிழீழம் அமைதற்கான உகந்த அனைத்துலகச் சூழல் தோற்றம் பெற முடியும்;. இம் மாற்றத்தை இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்துவதற்கான திறவுகோல் தமிழகத்திடம் குறிப்பாகத் தமிழக மாணவர்களிடம்தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையினை புறச்சூழல் மட்டும் தீர்மானிப்பதில்லை. வெளியுறவுக் கொள்கையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு நிலைமைகளுக்கும் காத்திரமான பங்கு இருப்பதுண்டு. இந்த வகையில் இந்தியாவின் சிறிலங்கா தொடர்பான வெளியுறவுக் கொள்கையினை மாற்றியமைப்பதில் தமிழகம் காத்திரமான பங்கை ஆற்ற முடியும். இந்தப் பொறுப்பைத் தமிழக மாணவர்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும். சென்னையினைத் தொடர்ச்சியாக உதாசீனம் செய்து கொண்டு கொழும்புடன் நட்புறவு கொள்வது சாத்தியப்படமுடியாது என்ற நிலையினை தமிழகம் டில்லிக்கு உணர்த்தும் தருணத்தில் தமிழீழத்துக்குச் சாதகமான அனைத்துலகச் சூழல் தோற்றம் பெறும். இதற்காக அரசியல் வழியில் போராட்டங்களையும் இராஜதந்திர வழியில் உரையாடல்களையும் காய் நகர்த்தல்களையும் மேற்கொள்ள வேண்டியதாகவிருக்கும். ஏனைய மாநிலங்களிலும் ஆதரவினை வென்றெடுக்க வேண்டியதாக இருக்கும்.

இன்றைய மாநாடும் இந்தியாவின் சிறிலங்கா தொடர்பான கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கோரும் அரசியல் போராட்டத்தில் ஓரங்கமாக உள்ளது என்பதனைக் இங்கு குறிப்பிடல் பொருத்தம் வாய்ந்ததாகும்.

சிறிலங்கா ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் புரிந்துணர்வு, சட்டத்தின் ஆட்சி;, நல்லாட்சி போன்ற பொதுவநலவாயக் கொள்கைகைளில் பலவற்றைக்; காற்றிலே பறக்க விட்டு, அக்கொள்கைகளைக் கடுமையாக மீறும் ஒரு கெட்ட அரசாகவே இருந்து வருகிறது. இத்தகையதொரு சிறிலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயம் மிகுந்ததொரு கோரிக்கையாகும்.

சிறிலங்காவில் பொதுநலவாய மாநாடு நடைபெறும் பட்சத்தில் பொதுநலவாய அமைப்புக்கான தலைவர் பதவியில் சிறிலங்காவின் ஜனாதிபதியே அடுத்த இரு வருடங்கட்கு இருக்கும் நிலை தோற்றம் பெறும். இது பொதுநலவாய அமைப்புக்கும் அதன் கொள்கைகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அவமதிப்பாகவே நாம் கருதுகிறோம்;. இருந்த போதும் நலன்களின் அச்சில் இயங்கும் இன்றைய உலக ஒழுங்கில் பல பொதுநலவாய அரசுகள் இதனை ஒரு முதன்மைப் பிரச்சினையாகக் கொள்ளவில்லை. இனஅழிப்பின் சூத்திரதாரியொருவர் பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருப்பது என்பதை விட வேறு என்ன சிறுமை பொதுநலவாய அமைப்புக்கு வந்துவிடப்போகிறது?

பொதுநலவாய அமைப்பிலிருந்து நைஜீரியா, பாகிஸ்தான், சிம்பாவே, பிஜி போன்ற நாடுகள் பொதுநலவாயக் கொள்கைகளை மீறிய காரணத்தால் வௌ;வேறு நிலைகளில் நீக்கப்பட்டிருக்கின்றன. இந் நாடுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்ட போது நைஜீரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பின்னர் இணைக்கப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவும் தற்போது நீக்கல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப் படவேண்டிய நாடு என்பதில் நீதியின் அடிப்படையில் சிந்திக்கும் எவரிடையேயும் ஐயம் ஏதும் ஏற்படப் போதில்லை. இதனைப் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த மக்களதும் ஊடகங்களதும் கவனத்துக்கு கொண்டு வரவேண்டிய பணியினையும் இம் மாநாடு தனதாக்கிக் கொள்ளும் என்று நம்புகிறோம். இந்த மாநாடு இந்திய அரசினது மட்டுமின்றி ஏனைய பொதுநலவாய அரசுகளது மனச்சாட்சியினைத் தட்டுவதற்கு முயல வேண்டும் என்பது எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும்.

தென்னாசியப் பிராந்தியத்தின் முதன்மை நாடு என்ற வகையில் இந்தியா தனது தார்மீகப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டிருக்க வேண்டும். சிறிலங்காவினை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதற்கும் முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டியது இந்திய அரசின் ஒரு கடமை. ஆனாலும் நீதியை விட, தார்மீக அடிப்படையை விட மேலானதொன்றாக இன்றைய உலகஒழுங்கில் நாடுகளுக்கிடையிலான உறவுகள் அமைந்து விட்ட சூழலில் நீதி கோரிப் போராட்டங்களை நடாத்த வேண்டியது அவசியமான ஒன்றாகி விட்டது. இந்த வகையில் இம் மாநாட்டினைத் தொடந்து சுழற்சி முறையிலான போராட்டங்களை முன்னெடுக்குமாறும் நாம் தமிழக மாணவ சமூகத்தைக் கோருகிறோம்.

அன்பானவர்களே!

இன்று நாம் முன்னெடுத்திருக்கும் போராட்டம் சிங்களத்தின் இனவெறியால் கருக்கி வீழ்த்தப்பட்ட நமது மக்களதும,; விடியல் வேண்டிப் போராடி ஆகுதியாகி விட்ட உத்தமர்களதும் ஈகங்களை நமது நெஞ்சக்குழியில் தாங்கிய வண்ணம் நாம் நடாத்தும் போராட்டம். நமது கைகளில் இப்போதிருக்கும் ஆயுதங்கள் போராயுதங்கள் அல்ல. எதிரியை நாம் சந்திக்கும் களமும் புதியது. இந்தக் களத்தில் எமது கையிலுள்ள இரு பெரும் ஆயுதங்கள் அரசியலும் இராஜதந்திரமும்தான். இவை சிறப்பாக இயங்குவதற்கு அனைத்துலகும் திரும்பிப்பார்க்கும் வகையிலான மக்கள் எழுச்சி அவசியம். இதில் நாம் வெற்றி காண்பதற்கு தமிழகத்தின் முழுமையான எழுச்சி இன்;றியமையாததாக உள்ளது.

இந்த எழுச்சியினை உயிர்ப்போடு பரவவைப்பதில் தமிழக மாணவர்கள் முழு வெற்றியடைவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

வாழ்க தமிழக மாணவர் அணி! வெல்க தமிழர்தம் போராட்டம்!!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மாநாட்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவ் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.செந்தில் அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர், தோழர்.தங்க தமிழ்வேலன் , பேராசிரியர் மணிவண்ணன்.,பொதுவுடைமை கட்சியை சார்ந்த வீரபாண்டியன் சிறப்புரை எழுத்தாளர்.பா.செயப்பிரகாசம் தமிழக வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன் , மருத்துவர் எழிலன் , ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பேராசிரியர் ஜவாருல்லா எம்.எல்.ஏ, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தமிழ் தேசப் பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், மாணவர் இளங்கோவன், மாணவி திவ்யா உள்பட பல்வேறு சமூக அரசியல் தளப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்னர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்: நா.க.த.அ. பிரதமர் உருத்திரகுமாரன்
» காமன்வெல்த்தை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்: சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேறியது!
» சீனப்பாம்பு இலங்கையினை விழுங்கிக் கொண்டிருக்கின்றது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
» "எரிக் சொல்ஹேம் கூற்றுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் மறுத்துரைப்பு"
» பொதுநலவாய மாநாட்டை ஏன் இலங்கையில் நடத்த வேண்டும்: கெலம் மக்ரே கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum