Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:04 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
தீக்கோழி நினைவுக் கருத்தியல் போன்ற சிங்களத்தின் படைத்துறை!
2 posters
Page 1 of 1
தீக்கோழி நினைவுக் கருத்தியல் போன்ற சிங்களத்தின் படைத்துறை!
தனது தலையை மட்டும் மணலில் புதைத்துக்கொண்ட தீக்கோழி நினைக்குமாம்... அப்பாடா, இனித் தன்னை யாருமே கண்டுகொள்ள முடியாதென! அவ்வாறான தீக்கோழி நினைவுக் கருத்தியல் போல, நவிபிள்ளையின் வடக்குப் பயணத்தில் சிங்களத்தின் படைத்துறை நடந்துகொண்டாலும், இவ்வாறான தகிடுதத்தங்களையெல்லாம் அவதானித்தபடியே நவிபிள்ளை தனது வடக்கு நிகழ்ச்சிநிரலை முடித்துக்கொண்டு சென்றும் விட்டார். நவிபிள்ளை வடக்கிலிருந்து அகன்றதுமே பழைய குருடி கதவைத் திறவடி பாணியில் சிங்களப் படைத்துறை நடந்து கொண்டதன் மூலமாக, முள்ளிவாய்க்காலில் வைத்து நவிபிள்ளையிடம் மக்கள் கூறிய ஒரு உண்மையும் ஆதாரப்படுத்தப்பட்டுவிட்டது.
நவிபிள்ளையின் வடக்கு பயணத்தின்போது அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் ஒரு உண்மை நிலைமை அவருக்குக் கூறியிருந்தனர். அதாவது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் என்ற அவரது தகுதிநிலைப் பயணமானது வேறுவழியின்றி வடக்கிலுள்ள ஶ்ரீலங்கா படைத்துறை பிரசன்னத்தின் மீது ஒரு தற்காலிக கிரகண நிலையை ஏற்படுத்தி இருந்ததை மக்கள் தெளிவாகவே அவரிடம் எடுத்துரைத்திருந்தனர்.
நவிபிள்ளை பயணம் செய்த கிளிநொச்சி, முல்லைதீவு உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆனையிறவு சோதனைச் சாவடி உட்பட்ட காவலரண்களை படைத்துறை தற்காலிகமாக அகற்றியிருந்தது. இதேபோல வேறு சில காவலரண்களை பகிரங்கமாகக் காண முடியாதவாறு உருமறைப்பும் செய்திருந்தது. அதாவது, ஆகக்குறைந்தது நவிபிள்ளை பயணம் செய்யும் வீதிகளில் இராணுவப் பிரசன்ன தாழ்வு நிலையை அவர் காண வேண்டுமென்பது கொழும்பின் தந்திரம்! ஆனால் கொழும்பின் இந்தத் தந்திரத்தை மக்கள் நவிபிள்ளையிடம் நேரடியாகவே அம்பலப்படுத்தியமை அதற்குக் கிடைத்த ஒரு அடியாகவும் மாறிவிட்டது.
இப்போது நவிபிள்ளை சென்றவுடன் மீண்டும் தனது அரிதாரத்தைக் கலைத்துள்ள படைத்துறை, பழையபடி மீண்டும் வன்னியில் தனது இராணுவப் பிரசன்னத்தைக் கொண்டுவந்துள்ளது. ஏ9 ஆனையிறவு வீதிச் சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டு ஶ்ரீலங்கா படைத்துறையின் பதிவுகள் இடம்பெறுகின்றன. எது எப்படியோ, நவிபிள்ளைக்காக உருமறைப்பு செய்யப்பட்ட சகல படைத்தறை தில்லாலங்கடிகளும் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துவிட்டதால் வடக்கு வீதிகளில் படைத்துறைப் பிரசன்னம் மீண்டும் வலுவாகிவிட்டது.
ஆனால் தமது தரப்பில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரிதாரப் பூச்சுக்கள் மற்றும் கலைப்புகள் குறித்து நவிபிள்ளை மேற்பார்த்த ஜெனிவா மனித உரிமை பொறிமுறை மிகத் துல்லியமாக உணர்ந்திருப்பது தான் இங்கு கொழும்பு உணரத்தவறிய ஒரு விடயமாகும்! ஐ.நா. மனித உரிமைப் பேரவை தனது வரலாற்றில் எத்தனை மனித உரிமை நாசகாரிகளின் தில்லாலங்கடித்தனங்களை ஏற்கனவே எடைபோட்டுள்ளது. கொழும்பு போன்ற 'கொசுறுகள்' இனியும் அதனை இவ்வாறான தந்திரங்களால் ஏமாற்ற முடியுமா என்பது சந்தேகமே!
எது எப்படியோ, நவிபிள்ளையின் பயணம் நிறைவடைந்தும்விட்ட நிலையில், இன்னுமொரு அசாதாரண விடயத்தையும் கண்டுகொள்ள முடிகிறது. அதாவது மகிந்த & co வின் மேர்வின் சில்வா மற்றும் உருமறைப்பு செய்யப்பட்ட ராவணா பலய அமைப்பு போன்ற அரைவேக்காடுகள் நவிபிள்ளை மீது தமது மூன்றாந்தரக் கருத்துக்களைக் கட்டவிழ்த்துவிட்டாலும், விமல் வீரவங்ச, சம்பிக்க ரணவக்க போன்ற வீராதி வீரர்களும் சூரர்களும் சற்று மௌனமாகவே இருந்தனர்.
தமது உடலங்களின் மீதுதான் நவிபிள்ளையின் பயணம் இடம்பெற வேண்டுமென வீரம் பேசியவர்கள் அடங்கிக்கிடக்க, நவிபிள்ளையின் இலங்கை நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றமைக்கு ஒரு முக்கிய காரணம், அவரது பயணம் நவிபிள்ளை என்ற தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல என்ற யதார்த்தமே! உலகின் மனித உரிமை ஒழுங்குக்குப் பொறுப்பான ஜெனிவா பொறிமுறை வழங்கிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே ஆணையாளர் என்ற பொறுப்பில் அவர் இலங்கையின் சுற்றிச் சுழன்றதை மகிந்த & co உணர்ந்துள்ளது.
இதனால்தான் மகிந்த கூட பெலாரசில் வைத்து நவிபிள்ளை குறித்து எதுவித சாடல்களையும் மேற்கொள்ளாது மனித உரிமைப் பேரவை மீதே தனது காட்டமான அர்ச்சனையை வழங்கியிருந்தார். ஜெனிவாவில் வைத்து, நவிபிள்ளை இலங்கை விடயத்தில் நடந்துகொள்ளும் முறை சரியில்லை எனச் சாடிய சிங்களத்தின் மனித உரிமைகள் தொடர்பான மகிந்தவின் சிறப்புப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க, ஶ்ரீலங்கா வந்த நவிபிள்ளை சந்திக்க வேண்டிய நிலையும் உருவாகியது.
நவிபிள்ளையிடம் மறைக்க வேண்டிய அளவுக்கு தம்மிடம் ஒன்றுமில்லையென சமரசிங்க சமரசம் செய்ய முனைந்தாலும் நவிபிள்ளையின் தரப்பில் இருந்து நோக்கினால், கொழும்பு நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் நிறையவே உள்ளன. இதனால்தான் ஆகக் குறைந்தது ஏற்கனவே உள்ள ஜெனிவா-கொழும்பு விரிசலை மேலும் விரிசலாக்கும் வகையில் நவிபிள்ளையின் பயணக் காலத்தில் தாம் நடந்துகொள்ளக் கூடாது என கொழும்பு சற்றுப் பம்மியது போலும்! குறிப்பாக அண்மையில் வெலிவேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்ற கொள்ளியை எடுத்து மகிந்த & co தனது தலையில் சொறிந்து கொண்டதால் வேறுவழியின்றி நவிபிள்ளையின் பயணத்தில் சிங்கள வீராதிவீர சூராதி சூரயோக்கள் சற்று அடக்கம் பேணினர் போலும்!
[You must be registered and logged in to see this link.]
நவிபிள்ளையின் வடக்கு பயணத்தின்போது அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் ஒரு உண்மை நிலைமை அவருக்குக் கூறியிருந்தனர். அதாவது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் என்ற அவரது தகுதிநிலைப் பயணமானது வேறுவழியின்றி வடக்கிலுள்ள ஶ்ரீலங்கா படைத்துறை பிரசன்னத்தின் மீது ஒரு தற்காலிக கிரகண நிலையை ஏற்படுத்தி இருந்ததை மக்கள் தெளிவாகவே அவரிடம் எடுத்துரைத்திருந்தனர்.
நவிபிள்ளை பயணம் செய்த கிளிநொச்சி, முல்லைதீவு உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆனையிறவு சோதனைச் சாவடி உட்பட்ட காவலரண்களை படைத்துறை தற்காலிகமாக அகற்றியிருந்தது. இதேபோல வேறு சில காவலரண்களை பகிரங்கமாகக் காண முடியாதவாறு உருமறைப்பும் செய்திருந்தது. அதாவது, ஆகக்குறைந்தது நவிபிள்ளை பயணம் செய்யும் வீதிகளில் இராணுவப் பிரசன்ன தாழ்வு நிலையை அவர் காண வேண்டுமென்பது கொழும்பின் தந்திரம்! ஆனால் கொழும்பின் இந்தத் தந்திரத்தை மக்கள் நவிபிள்ளையிடம் நேரடியாகவே அம்பலப்படுத்தியமை அதற்குக் கிடைத்த ஒரு அடியாகவும் மாறிவிட்டது.
இப்போது நவிபிள்ளை சென்றவுடன் மீண்டும் தனது அரிதாரத்தைக் கலைத்துள்ள படைத்துறை, பழையபடி மீண்டும் வன்னியில் தனது இராணுவப் பிரசன்னத்தைக் கொண்டுவந்துள்ளது. ஏ9 ஆனையிறவு வீதிச் சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டு ஶ்ரீலங்கா படைத்துறையின் பதிவுகள் இடம்பெறுகின்றன. எது எப்படியோ, நவிபிள்ளைக்காக உருமறைப்பு செய்யப்பட்ட சகல படைத்தறை தில்லாலங்கடிகளும் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துவிட்டதால் வடக்கு வீதிகளில் படைத்துறைப் பிரசன்னம் மீண்டும் வலுவாகிவிட்டது.
ஆனால் தமது தரப்பில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரிதாரப் பூச்சுக்கள் மற்றும் கலைப்புகள் குறித்து நவிபிள்ளை மேற்பார்த்த ஜெனிவா மனித உரிமை பொறிமுறை மிகத் துல்லியமாக உணர்ந்திருப்பது தான் இங்கு கொழும்பு உணரத்தவறிய ஒரு விடயமாகும்! ஐ.நா. மனித உரிமைப் பேரவை தனது வரலாற்றில் எத்தனை மனித உரிமை நாசகாரிகளின் தில்லாலங்கடித்தனங்களை ஏற்கனவே எடைபோட்டுள்ளது. கொழும்பு போன்ற 'கொசுறுகள்' இனியும் அதனை இவ்வாறான தந்திரங்களால் ஏமாற்ற முடியுமா என்பது சந்தேகமே!
எது எப்படியோ, நவிபிள்ளையின் பயணம் நிறைவடைந்தும்விட்ட நிலையில், இன்னுமொரு அசாதாரண விடயத்தையும் கண்டுகொள்ள முடிகிறது. அதாவது மகிந்த & co வின் மேர்வின் சில்வா மற்றும் உருமறைப்பு செய்யப்பட்ட ராவணா பலய அமைப்பு போன்ற அரைவேக்காடுகள் நவிபிள்ளை மீது தமது மூன்றாந்தரக் கருத்துக்களைக் கட்டவிழ்த்துவிட்டாலும், விமல் வீரவங்ச, சம்பிக்க ரணவக்க போன்ற வீராதி வீரர்களும் சூரர்களும் சற்று மௌனமாகவே இருந்தனர்.
தமது உடலங்களின் மீதுதான் நவிபிள்ளையின் பயணம் இடம்பெற வேண்டுமென வீரம் பேசியவர்கள் அடங்கிக்கிடக்க, நவிபிள்ளையின் இலங்கை நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றமைக்கு ஒரு முக்கிய காரணம், அவரது பயணம் நவிபிள்ளை என்ற தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல என்ற யதார்த்தமே! உலகின் மனித உரிமை ஒழுங்குக்குப் பொறுப்பான ஜெனிவா பொறிமுறை வழங்கிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே ஆணையாளர் என்ற பொறுப்பில் அவர் இலங்கையின் சுற்றிச் சுழன்றதை மகிந்த & co உணர்ந்துள்ளது.
இதனால்தான் மகிந்த கூட பெலாரசில் வைத்து நவிபிள்ளை குறித்து எதுவித சாடல்களையும் மேற்கொள்ளாது மனித உரிமைப் பேரவை மீதே தனது காட்டமான அர்ச்சனையை வழங்கியிருந்தார். ஜெனிவாவில் வைத்து, நவிபிள்ளை இலங்கை விடயத்தில் நடந்துகொள்ளும் முறை சரியில்லை எனச் சாடிய சிங்களத்தின் மனித உரிமைகள் தொடர்பான மகிந்தவின் சிறப்புப் பிரதிநிதி மகிந்த சமரசிங்க, ஶ்ரீலங்கா வந்த நவிபிள்ளை சந்திக்க வேண்டிய நிலையும் உருவாகியது.
நவிபிள்ளையிடம் மறைக்க வேண்டிய அளவுக்கு தம்மிடம் ஒன்றுமில்லையென சமரசிங்க சமரசம் செய்ய முனைந்தாலும் நவிபிள்ளையின் தரப்பில் இருந்து நோக்கினால், கொழும்பு நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் நிறையவே உள்ளன. இதனால்தான் ஆகக் குறைந்தது ஏற்கனவே உள்ள ஜெனிவா-கொழும்பு விரிசலை மேலும் விரிசலாக்கும் வகையில் நவிபிள்ளையின் பயணக் காலத்தில் தாம் நடந்துகொள்ளக் கூடாது என கொழும்பு சற்றுப் பம்மியது போலும்! குறிப்பாக அண்மையில் வெலிவேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்ற கொள்ளியை எடுத்து மகிந்த & co தனது தலையில் சொறிந்து கொண்டதால் வேறுவழியின்றி நவிபிள்ளையின் பயணத்தில் சிங்கள வீராதிவீர சூராதி சூரயோக்கள் சற்று அடக்கம் பேணினர் போலும்!
[You must be registered and logged in to see this link.]
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: தீக்கோழி நினைவுக் கருத்தியல் போன்ற சிங்களத்தின் படைத்துறை!
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
» பின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்
» "அணு உலையை தொடர்ந்து பராமரித்து வரும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய்க்கான மருத்துவ இழப்பீடு உள்ளது. சீராக பணியாற்றும் அணு உலை ஊழியர்களுக்கே இது போன்ற இழப்பீடு வழங்கப்படுவதே அணு உலையில் நிச்சயம் ஆபத்து உண்டு
» இலங்கையில் அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு தடை! சிங்களத்தின் தோல்விக்கான அறிகுறி.
» சிங்களத்தின் அரச பயங்கரவாதம்...புலத்தில் ஒரு உயிரைப் பலி வாங்கியது.
» பின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்
» "அணு உலையை தொடர்ந்து பராமரித்து வரும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய்க்கான மருத்துவ இழப்பீடு உள்ளது. சீராக பணியாற்றும் அணு உலை ஊழியர்களுக்கே இது போன்ற இழப்பீடு வழங்கப்படுவதே அணு உலையில் நிச்சயம் ஆபத்து உண்டு
» இலங்கையில் அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு தடை! சிங்களத்தின் தோல்விக்கான அறிகுறி.
» சிங்களத்தின் அரச பயங்கரவாதம்...புலத்தில் ஒரு உயிரைப் பலி வாங்கியது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|