Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம்
Page 1 of 1
பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம்
நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து உக்கிரம் அடைந்து முக்கிய முக்கிய நகரங்களை கைவிட்டு பின்வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்ட போது கிளிநொச்சியில் இருந்து பல இடங்களிற்கு மாறி மாறி நகர்ந்து சென்று இறுதியாக முள்ளிவாய்கால் வரை சென்று 2009 மே 10ம் திகதி வரை வெளிவந்தது.
![பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் 1237023_568445866568631_1760382536_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/1237023_568445866568631_1760382536_n.jpg)
எமது ஆளுகைக்குள் இருந்த பல ஆயிரம் சதுர கிலோமீற்றர் பகுதிகள் சில நூறு சதுர மீட்டர் பகுதிகளாக குறுகலடைந்த போதும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் வெளிவந்து கொண்டு இருந்தது.
இறுதியாக 2009 மே 10ம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவந்த வேளை….
சிறிலங்காப்படைகளின் குண்டு வீச்சில் முற்றாக தகர்க்கப்படும் வரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் தனது இயக்கத்தினை தொடர்ந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் 1234568_568445903235294_1076721663_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/1234568_568445903235294_1076721663_n.jpg)
பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழீழ விடுதலைப்போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்ட இறுதிக் காலப்பகுதிவரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியல் வெளிவந்த நிலையில் 2009 மே 10ம் திகதியுடன் தனது இயக்கத்தின தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இக்காலப்பகுதியில் தடைகளை கடந்து ஈழநாதம் மக்கள் நாளிதழ் சிறபாக வெளிவர அதன் பணியாளர்கள் ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பே காரணமாகும். அந்தவகையில் இறுதிவரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் குடும்பத்துடன் நகர்ந்து இயக்கிவந்த ஏழு பணியாளர்கள் தமது உயிர்களை உரமாக்கியுள்ளனர்.
![பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் 1240249_568445926568625_907774357_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/1240249_568445926568625_907774357_n.jpg)
ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து இறுதி யுத்தகாலப்பகுதியில் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள்
|| சசிமதன் (மதன்) (வற்றாப்பளை)
இவர் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பணம் சேகரிப்பாளர் ஆகவும் முல்லைத்தீவு மாவட்ட விநியோகஸ்தர் ஆகவும் 2001 இல் இருந்து கடமை புரிந்தவராவார்.
முள்ளியவளை வற்றாப்பளையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் இரணைப்பாலை ஆனந்தபுரத்தில் சிறிலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
|| நல்லையா மகேஸ்வரன் (யாழ்ப்பாணம்)
இவர் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஈழநாதம் பணிமனையின் முகாமையாளராக கடமைபுரிந்தவராவார். (முன்பு புதுக்குடியிருப்பு பணிமனை விளம்பர முகாமையாளர்)
1999 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் தனது பணியினை ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் இவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவர் பல ஆண்டுகள் பெரும் உபாதையுடனே எமது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்பு இவரது கால் அகற்றப்பட்டிருந்ததும் தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டிருந்தார். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் எவ்விதமான தகவல்களையும் உடனுக்குடன் அந்தந்த பிரதேச செய்தியாளர்களுக்கு அறிவித்து செய்திகளை அவர்களிடம் பெற்று எமது கிளிநொச்சி பணிமனைக்கு அனுப்புவதற்கு இவரின் பங்கு முக்கியமானது.
இவர் முன்பு புதுக்குடியிருப்பில் இருந்த நூலகம் ஒன்றில் நூலகராக கடமை புரிந்தே ஈழநாதம் பணிமனைக்கு வந்திருந்தார். இவரின் பணி அனுபவத்தில் ஈழநாதம் நாளாந்தப்பத்திரிகையினை ஆவணப்படுத்தி வைத்திருந்ததையும் குறிப்பிடத்தக்கது.
06.03.2009 அன்று மாலை பொக்கணைப்பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்ததது. இவ்விடத்தில் இயங்கிய எமது விளம்பர பணிமனையில் கடமைபுரிந்துவிட்டு மாலை 5.30 மணியளவில் சென்று பச்சைபுல்மோட்டை என்ற பகுதி நோக்கி கொண்டிருக்கையில் சிறிலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்ததுடன் சிறிது நேரத்தில் மரணமடைந்து விட்டார்.
|| மரியநாயகம் அன்ரன்பெனடிக்(அன்ரன்)
இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். கிளிநொச்சி ஜெயந்திநகரில் வசித்த இவர். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஒவ்வொரு இடம்பெயர்வுகளிலும் இவரின் பங்கு அளப்பரியது. தருமபுரத்தில் இருந்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் இடம்பெயரும் போது சிறிலங்காப்படையினர் கிட்டிய தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். இத்துடன் பலத்த எறிகணைத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈழநாதத்தின் அச்சுஇயந்திரங்களை பாதுகாப்பாக நகர்த்துவதில் முன்னின்றவர்களில் இவரும் ஒருவர்.
2006 ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு சாலைக்கான பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்த இவர் மிகக்குறுகிய காலம் ஆகிலும் இவர் மரணமடையும் வரை பணிபுரிந்து வந்தார். வட்டுவாகலுக்கும் முள்ளிவாய்க்காலும் இடைப்பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருக்கையிலேயே இவர் சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இவரின் மனைவி மற்றும் 9 வயது மகளும் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் ஒன்றில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|| வவா மேரிடென்சி (ஜெயந்திநகர் சேவியர்கடைச்சந்தி, கிளிநொச்சி )
ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில்; 2003 இல் இருந்து கணனிப்பக்கவடிவமைப்பாளராக கடமைபுரிந்த வந்திருந்தார். இடம்பெயர்ந்து பொக்கணைப்பகுதியில் வசிக்கும் போதே எறிகணைத்தாக்குதலில் இவரும் இவரது கணவரும் கொல்லப்பட்டுள்ளனர். இவரது 1 வயது பிள்ளை உயிர்தப்பியிருந்தது.
|| ஜெயராசா சுசிபரன்-சுகந்தன் ( உருத்திரபுரம்,கிளிநொச்சி )
இயந்திரப்பகுதி முகாமையாளர்
மூன்று பிள்ளைகளின் தந்தையான சுகந்தன் என்பவர் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர். ஆரம்பத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்த இவரை இவரின் நன்னடத்தை காரணமாக அச்சுஇயந்திரப்பகுதியில் பணிபுரிவதற்கு நிறுவனத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவர் 1995 இல் இருந்து ஈழநாதத்தின் இடம்பெயர்வின் போது இவரும் இவரது குடும்பமும் நிறுவனம் நகரும் இடங்களெல்லாம் இடம்பெயர்ந்து வந்திருந்தார். அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி, கிளிநொச்சி, வட்டக்கச்சி, பழைய முறிகண்டி, கரிப்பட்டமுறிப்பு, புதுக்குடியிருப்பு பின்பு கிளிநொச்சி என இடம்பெயர்வுகளை சந்தித்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், புதுமாத்தளன் வெளிப்பகுதி, பொக்கணைவெளிப்பகுதி, இரட்டைவாய்க்கால் வரைக்கும் இவர் தனது பணியினை செவ்வனே செய்திருந்தார்.
2003 ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஈழநாதத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வில் இவரது பணியின் சிறப்புக்காக தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இயந்திரப்பகுதியில் முகாமையாளராக பணிபுரிந்த இவர் ஈழநாதம் பத்திரிகை பலத்த எறிகணைத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் நாளாந்தம் வெளிவருவதற்கு இவரின் உழைப்பு மிகவும் முக்கியமானது.
அதாவது சுதந்திரபுரம் பகுதியில் ஈழநாதம் இயங்கி வந்த போது பகுதி நேர வேலையில் ஈழநாதம் பத்திரிகை அச்சுடும் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவர் ஏனைய அச்சு இயந்திரங்களை நகர்த்தும் பணியில் உடையார்கட்டுப்பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது சுதந்திரபுரம் பகுதியின் மேற்பகுதியில் கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன் போது பத்திரிகை அச்சுடும் பணி உடன்; நிறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் பத்திரிகை நின்று விடக்கூடாது என்பதற்காக பலத்த எறிகணைத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் அங்கு சென்ற இவர் ஈழநாதம் பத்திரிகையினை அச்சிட்டு தானே விநியோகம் செய்தமை என்பது மிக முக்கியமானது.
பின்பு இடம்பெயர்ந்து இரட்டைவாய்க்கால் பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்தபோது 25.04.2009 அன்று காலை 9.30 மணியளவில் ஜெ.சுகந்தன் வலைஞர்மடம் தேவாலயப்பகுதிக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போதே சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
|| மரியருளப்பன் அன்ரனிக்குமார் (அன்ரனி-குரூஸ்)
களஞ்சியப்பகுதி முகாமையாளர்
1985 ஆம் ஆண்டு பிறந்த இவர் பரந்தன் 11 ஆம் ஒழுங்கையில் வசித்து இவர் 2006 ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் சாரதியாக கடமைபுரிந்து வந்தார். பின்னர் நிறுவனத்தின் களஞ்சியப்பகுதி முகாமையாளராக கடமை புரிந்து வந்தார். இவர் ஈழநாதம் ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் களஞ்சியத்தை நகர்த்துவதற்கு இரவு பகலாக உழைத்தவர்.
பின்னர் மே 14 அன்று சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
|| சங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்) – ( கனகபுரம்,கிளிநொச்சி )
இவர் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் கணனிப்பக்கவடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். இவரும் இறுதி நாள் வரைக்கும் ஈழநாதம்பத்திரிகை வெளிவருவதற்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. வீட்டில் ஒரே பிள்ளையாக இருந்த இவர் இறுதி இடம்பெயர்வு காலத்தில் ஈழநாதத்தின் நிறுவனத்துடனேயே தங்கியிருந்த பணிபுரிந்து வந்தவர்.
25.04.2009 அன்று இயந்திரப்பகுதி முகாமையாளர் சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டபின்பு இயந்திரப்பகுதியின் பணியையும் ஏற்றுக்கொண்டு இரவு பகலாக பணியாற்றி வந்தவர். அதாவது அச்சு இயந்திரத்தை இயக்குவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இவர் அன்ரனிக்குமாருடன் இருந்த போதே இவரும் கொல்லப்பட்டுள்ளார்.
|| ஈழநாதம் மக்கள் நாளிதழ் முன்னால் பொறுப்பாளர்களாக பணியாற்றி தாயக மீட்புப் போரில் ஈடுபட்டு வீரச்சாவினை தழுவிக்கொண்ட….
மேஐர்.அழகன், லெப்டினன்ட் கேணல் பார்த்தீபன், லெப்டினன்ட் கேணல் அன்புமணி மற்றும் உதவி ஆசிரியராக பணியாற்றிய….
கப்டன்.ஜெயேந்திரன், நீண்ட காலம் பணியாற்றிய இயந்திரப்பகுதி முகாமையாளரும் போர் உதவிப்படை வீரருமான சுகந்தன், மூத்த ஊடகவியலாலளரும் நாட்டுப்பற்றாளருமான வ.அருள்சோதிநாதன் ஈழநாதம் மக்கள் நாளிதழின் வார வெளியீடான வெள்ளிநாதத்தின் உதவி ஆசிரியரும் நாட்டுப்பற்றாளருமான திரு.ஜெயசீலன், ஆகியோருடன்…
பத்திரிகை பணியில் ஈடுபட்டிருந்த காலங்களில் சிறிலங்கா இராணுவத்தினரது குண்டுவீச்சுக்களில் சிக்கி படுகொலையான சசிமதன், நல்லையா மகேஸ்வரன், மரியநாயகம் அன்ரன்பெனடிக், வவா மேரிடென்சி, மரியருளப்பன் அன்ரனிக்குமார், சங்கரசிவம் சிவதர்சன், சத்தியநாதன் ஆகியோரையும் இவ்வேளையில் நினைவு கூருவதுடன் இப்பத்திரிகை இறுதிவரை வெளிவருவதற்கு அயராது பாடுபட்ட பணியாளர்கள், போரளிகள், பொதுமக்களிற்கும் நன்றி கூறிநிற்கின்றோம்.
- இரா.மயூதரன்.
![பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் 1237023_568445866568631_1760382536_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/1237023_568445866568631_1760382536_n.jpg)
எமது ஆளுகைக்குள் இருந்த பல ஆயிரம் சதுர கிலோமீற்றர் பகுதிகள் சில நூறு சதுர மீட்டர் பகுதிகளாக குறுகலடைந்த போதும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் வெளிவந்து கொண்டு இருந்தது.
இறுதியாக 2009 மே 10ம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவந்த வேளை….
சிறிலங்காப்படைகளின் குண்டு வீச்சில் முற்றாக தகர்க்கப்படும் வரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் தனது இயக்கத்தினை தொடர்ந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் 1234568_568445903235294_1076721663_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/1234568_568445903235294_1076721663_n.jpg)
பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழீழ விடுதலைப்போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்ட இறுதிக் காலப்பகுதிவரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியல் வெளிவந்த நிலையில் 2009 மே 10ம் திகதியுடன் தனது இயக்கத்தின தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இக்காலப்பகுதியில் தடைகளை கடந்து ஈழநாதம் மக்கள் நாளிதழ் சிறபாக வெளிவர அதன் பணியாளர்கள் ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பே காரணமாகும். அந்தவகையில் இறுதிவரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் குடும்பத்துடன் நகர்ந்து இயக்கிவந்த ஏழு பணியாளர்கள் தமது உயிர்களை உரமாக்கியுள்ளனர்.
![பல ஆண்டுகாலம் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த ஈழநாதம் 1240249_568445926568625_907774357_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/1240249_568445926568625_907774357_n.jpg)
ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து இறுதி யுத்தகாலப்பகுதியில் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள்
|| சசிமதன் (மதன்) (வற்றாப்பளை)
இவர் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பணம் சேகரிப்பாளர் ஆகவும் முல்லைத்தீவு மாவட்ட விநியோகஸ்தர் ஆகவும் 2001 இல் இருந்து கடமை புரிந்தவராவார்.
முள்ளியவளை வற்றாப்பளையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் இரணைப்பாலை ஆனந்தபுரத்தில் சிறிலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
|| நல்லையா மகேஸ்வரன் (யாழ்ப்பாணம்)
இவர் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஈழநாதம் பணிமனையின் முகாமையாளராக கடமைபுரிந்தவராவார். (முன்பு புதுக்குடியிருப்பு பணிமனை விளம்பர முகாமையாளர்)
1999 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் தனது பணியினை ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் இவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவர் பல ஆண்டுகள் பெரும் உபாதையுடனே எமது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்பு இவரது கால் அகற்றப்பட்டிருந்ததும் தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டிருந்தார். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் எவ்விதமான தகவல்களையும் உடனுக்குடன் அந்தந்த பிரதேச செய்தியாளர்களுக்கு அறிவித்து செய்திகளை அவர்களிடம் பெற்று எமது கிளிநொச்சி பணிமனைக்கு அனுப்புவதற்கு இவரின் பங்கு முக்கியமானது.
இவர் முன்பு புதுக்குடியிருப்பில் இருந்த நூலகம் ஒன்றில் நூலகராக கடமை புரிந்தே ஈழநாதம் பணிமனைக்கு வந்திருந்தார். இவரின் பணி அனுபவத்தில் ஈழநாதம் நாளாந்தப்பத்திரிகையினை ஆவணப்படுத்தி வைத்திருந்ததையும் குறிப்பிடத்தக்கது.
06.03.2009 அன்று மாலை பொக்கணைப்பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்ததது. இவ்விடத்தில் இயங்கிய எமது விளம்பர பணிமனையில் கடமைபுரிந்துவிட்டு மாலை 5.30 மணியளவில் சென்று பச்சைபுல்மோட்டை என்ற பகுதி நோக்கி கொண்டிருக்கையில் சிறிலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்ததுடன் சிறிது நேரத்தில் மரணமடைந்து விட்டார்.
|| மரியநாயகம் அன்ரன்பெனடிக்(அன்ரன்)
இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். கிளிநொச்சி ஜெயந்திநகரில் வசித்த இவர். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஒவ்வொரு இடம்பெயர்வுகளிலும் இவரின் பங்கு அளப்பரியது. தருமபுரத்தில் இருந்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் இடம்பெயரும் போது சிறிலங்காப்படையினர் கிட்டிய தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். இத்துடன் பலத்த எறிகணைத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈழநாதத்தின் அச்சுஇயந்திரங்களை பாதுகாப்பாக நகர்த்துவதில் முன்னின்றவர்களில் இவரும் ஒருவர்.
2006 ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு சாலைக்கான பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்த இவர் மிகக்குறுகிய காலம் ஆகிலும் இவர் மரணமடையும் வரை பணிபுரிந்து வந்தார். வட்டுவாகலுக்கும் முள்ளிவாய்க்காலும் இடைப்பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருக்கையிலேயே இவர் சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இவரின் மனைவி மற்றும் 9 வயது மகளும் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் ஒன்றில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|| வவா மேரிடென்சி (ஜெயந்திநகர் சேவியர்கடைச்சந்தி, கிளிநொச்சி )
ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில்; 2003 இல் இருந்து கணனிப்பக்கவடிவமைப்பாளராக கடமைபுரிந்த வந்திருந்தார். இடம்பெயர்ந்து பொக்கணைப்பகுதியில் வசிக்கும் போதே எறிகணைத்தாக்குதலில் இவரும் இவரது கணவரும் கொல்லப்பட்டுள்ளனர். இவரது 1 வயது பிள்ளை உயிர்தப்பியிருந்தது.
|| ஜெயராசா சுசிபரன்-சுகந்தன் ( உருத்திரபுரம்,கிளிநொச்சி )
இயந்திரப்பகுதி முகாமையாளர்
மூன்று பிள்ளைகளின் தந்தையான சுகந்தன் என்பவர் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர். ஆரம்பத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்த இவரை இவரின் நன்னடத்தை காரணமாக அச்சுஇயந்திரப்பகுதியில் பணிபுரிவதற்கு நிறுவனத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவர் 1995 இல் இருந்து ஈழநாதத்தின் இடம்பெயர்வின் போது இவரும் இவரது குடும்பமும் நிறுவனம் நகரும் இடங்களெல்லாம் இடம்பெயர்ந்து வந்திருந்தார். அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி, கிளிநொச்சி, வட்டக்கச்சி, பழைய முறிகண்டி, கரிப்பட்டமுறிப்பு, புதுக்குடியிருப்பு பின்பு கிளிநொச்சி என இடம்பெயர்வுகளை சந்தித்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், புதுமாத்தளன் வெளிப்பகுதி, பொக்கணைவெளிப்பகுதி, இரட்டைவாய்க்கால் வரைக்கும் இவர் தனது பணியினை செவ்வனே செய்திருந்தார்.
2003 ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஈழநாதத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வில் இவரது பணியின் சிறப்புக்காக தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இயந்திரப்பகுதியில் முகாமையாளராக பணிபுரிந்த இவர் ஈழநாதம் பத்திரிகை பலத்த எறிகணைத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் நாளாந்தம் வெளிவருவதற்கு இவரின் உழைப்பு மிகவும் முக்கியமானது.
அதாவது சுதந்திரபுரம் பகுதியில் ஈழநாதம் இயங்கி வந்த போது பகுதி நேர வேலையில் ஈழநாதம் பத்திரிகை அச்சுடும் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவர் ஏனைய அச்சு இயந்திரங்களை நகர்த்தும் பணியில் உடையார்கட்டுப்பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது சுதந்திரபுரம் பகுதியின் மேற்பகுதியில் கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன் போது பத்திரிகை அச்சுடும் பணி உடன்; நிறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் பத்திரிகை நின்று விடக்கூடாது என்பதற்காக பலத்த எறிகணைத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் அங்கு சென்ற இவர் ஈழநாதம் பத்திரிகையினை அச்சிட்டு தானே விநியோகம் செய்தமை என்பது மிக முக்கியமானது.
பின்பு இடம்பெயர்ந்து இரட்டைவாய்க்கால் பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்தபோது 25.04.2009 அன்று காலை 9.30 மணியளவில் ஜெ.சுகந்தன் வலைஞர்மடம் தேவாலயப்பகுதிக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போதே சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
|| மரியருளப்பன் அன்ரனிக்குமார் (அன்ரனி-குரூஸ்)
களஞ்சியப்பகுதி முகாமையாளர்
1985 ஆம் ஆண்டு பிறந்த இவர் பரந்தன் 11 ஆம் ஒழுங்கையில் வசித்து இவர் 2006 ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் சாரதியாக கடமைபுரிந்து வந்தார். பின்னர் நிறுவனத்தின் களஞ்சியப்பகுதி முகாமையாளராக கடமை புரிந்து வந்தார். இவர் ஈழநாதம் ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் களஞ்சியத்தை நகர்த்துவதற்கு இரவு பகலாக உழைத்தவர்.
பின்னர் மே 14 அன்று சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
|| சங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்) – ( கனகபுரம்,கிளிநொச்சி )
இவர் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் கணனிப்பக்கவடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். இவரும் இறுதி நாள் வரைக்கும் ஈழநாதம்பத்திரிகை வெளிவருவதற்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. வீட்டில் ஒரே பிள்ளையாக இருந்த இவர் இறுதி இடம்பெயர்வு காலத்தில் ஈழநாதத்தின் நிறுவனத்துடனேயே தங்கியிருந்த பணிபுரிந்து வந்தவர்.
25.04.2009 அன்று இயந்திரப்பகுதி முகாமையாளர் சிறிலங்காப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டபின்பு இயந்திரப்பகுதியின் பணியையும் ஏற்றுக்கொண்டு இரவு பகலாக பணியாற்றி வந்தவர். அதாவது அச்சு இயந்திரத்தை இயக்குவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இவர் அன்ரனிக்குமாருடன் இருந்த போதே இவரும் கொல்லப்பட்டுள்ளார்.
|| ஈழநாதம் மக்கள் நாளிதழ் முன்னால் பொறுப்பாளர்களாக பணியாற்றி தாயக மீட்புப் போரில் ஈடுபட்டு வீரச்சாவினை தழுவிக்கொண்ட….
மேஐர்.அழகன், லெப்டினன்ட் கேணல் பார்த்தீபன், லெப்டினன்ட் கேணல் அன்புமணி மற்றும் உதவி ஆசிரியராக பணியாற்றிய….
கப்டன்.ஜெயேந்திரன், நீண்ட காலம் பணியாற்றிய இயந்திரப்பகுதி முகாமையாளரும் போர் உதவிப்படை வீரருமான சுகந்தன், மூத்த ஊடகவியலாலளரும் நாட்டுப்பற்றாளருமான வ.அருள்சோதிநாதன் ஈழநாதம் மக்கள் நாளிதழின் வார வெளியீடான வெள்ளிநாதத்தின் உதவி ஆசிரியரும் நாட்டுப்பற்றாளருமான திரு.ஜெயசீலன், ஆகியோருடன்…
பத்திரிகை பணியில் ஈடுபட்டிருந்த காலங்களில் சிறிலங்கா இராணுவத்தினரது குண்டுவீச்சுக்களில் சிக்கி படுகொலையான சசிமதன், நல்லையா மகேஸ்வரன், மரியநாயகம் அன்ரன்பெனடிக், வவா மேரிடென்சி, மரியருளப்பன் அன்ரனிக்குமார், சங்கரசிவம் சிவதர்சன், சத்தியநாதன் ஆகியோரையும் இவ்வேளையில் நினைவு கூருவதுடன் இப்பத்திரிகை இறுதிவரை வெளிவருவதற்கு அயராது பாடுபட்ட பணியாளர்கள், போரளிகள், பொதுமக்களிற்கும் நன்றி கூறிநிற்கின்றோம்.
- இரா.மயூதரன்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
![-](https://2img.net/i/empty.gif)
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» தமிழீழ விடுதலைப்புலிகளில் உள்ள துறைகள்
» தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!
» தமிழீழ வேங்கை: தமிழீழ உந்துருளி படையணியின் ஆல்பம்.
» தமிழீழ விடுதலைப்புலிகளில் உள்ள துறைகள்
» தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!
» தமிழீழ வேங்கை: தமிழீழ உந்துருளி படையணியின் ஆல்பம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|