TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விக்கலை நிறுத்துவது எப்படி?

2 posters

Go down

விக்கலை நிறுத்துவது எப்படி? Empty விக்கலை நிறுத்துவது எப்படி?

Post by மாலதி Wed Aug 07, 2013 8:11 pm

[You must be registered and logged in to see this image.]
 
விக்கலை நிறுத்துவது எப்படி?

“டயாஃப்ரம்” (Diaphragm) என்கிற தோல் போன்ற ஒரு தசை நம் மார்பில் உள்ளது. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது. விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவதற்கான‌ காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள். இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது அளவுக்கு அதிகமாக‌ வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, “எபிக்லாட்டிஸ்” என்னும் சுவாசக்குழாயின் மூடியானது டக்கென்று மூடிக்கொள்ளும். அதனால் ஏற்படும் ஒரு வித “விக் விக்” எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்

விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்

நாட்டு மாதுளம் பழத்தை சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும் என்கிறது ஒரு ஆய்வு.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

விக்கலை நிறுத்துவது எப்படி? Empty Re: விக்கலை நிறுத்துவது எப்படி?

Post by mmani Tue Sep 17, 2013 3:32 pm

நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

விக்கலை நிறுத்துவது எப்படி? Empty Re: விக்கலை நிறுத்துவது எப்படி?

Post by mmani Sun Sep 22, 2013 6:59 am

[You must be registered and logged in to see this image.]

சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது காற்றை உள் இழுக்கிறோமல்லவா? அப்போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்துவிடுகிறது. இது இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தைத் தூண்டினால், அது தன்னிச்சையாகச் சுருங்கி விரியும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்..’ என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

என்ன காரணம்?

விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு ‘ஹிஸ்டிரிக்கல் விக்கல்’ என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால் விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங்கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும்.

என்ன முதலுதவி?

அடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமிலவாயுவின் அளவை அதிகரித்தால் போதும், விக்கல் நின்றுவிடும். அதற்கு என்ன செய்வது?

விக்கலால் அவதிப்படும் நபரை நாற்காலியில் அமைதியாக அமரச் செய்யுங்கள். அவரை மூச்சை நன்றாக உள் இழுக்கச் சொல்லுங்கள். பிறகு, மூச்சை நன்றாக அடக்கிக்கொள்ளச் சொல்லுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில் விட வேண்டும். இவ்வாறு 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

இன்னொரு வழி இது. ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்.

ஒருவருக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, அதிக நேரம் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

புரையேறுதல்:

உணவை உண்ணும்போது, தொண்டையிலிருந்து இறங்கும் உணவு, உணவுக்குழாய்க்குள் செல்வதற்குப் பதிலாக, சுவாசக்குழாய்க்குள் சென்று விடுவதைப் ‘புரையேறுதல்’ என்கிறோம்.

என்ன காரணம்?

அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே உணவு உண்பது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, உணவுக்குழாய்ப் புற்று நோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும். குழந்தைகளின் உணவுக்குழாயும் சுவாசக்குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப்பொருள்கள்கூட சுவாசக்குழாயை மிக எளிதாக அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புரையேறியவுடன் இருமல் வரும். மூச்சுத்திணறும். பேசமுடியாது. முகத்தில் ரத்தம் தேங்கி, முகம் சிவக்கும். நெடு நேரம் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் உடல் நீலநிறமாக மாறும். அப்போது உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

புரையேறியவுடன் அதை வெளியேற்றுவதற்கு நம் உடலில் இயற்கையாகவே ஒரு வழிமுறை உள்ளது. அதுதான் இருமல். இருமும்போது, சுவாசப் பைகளிலிருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால், சுவாசக்குழாய்க்குள் சென்ற உணவு உந்தி வெளியே தள்ளப்படும்.

ஆகவே, பாதிக்கப்பட்ட நபரை அழுத்தமாக இருமச் சொல்லுங்கள். சிலமுறை இருமினாலே பெரும்பாலான உணவுப்பொருள்கள் உடனே வெளியேறிவிடும்; மூச்சுத்திணறல் குறைந்து விடும்.

இதில் குறையாவிட்டால், அந்த நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கி குனியச் சொல்லுங்கள். இப்போது நீங்கள் அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

இதிலும் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அடுத்த முயற்சியில் இறங்குங்கள். அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்தம் கொடுங்கள். உணவுப் பொருள் வெளியேறும் வரை முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாற்றி மாற்றி செய்யுங்கள். உணவுப்பொருள் வெளியேறிவிடும். இதிலும் உணவுப்பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘மூச்சுக்குழல் அக நோக்கி’ மூலம் உணவுப்பொருளை வெளியே எடுத்து விடுவார், மருத்துவர்.

டாக்டர் கு.கணேசன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

விக்கலை நிறுத்துவது எப்படி? Empty Re: விக்கலை நிறுத்துவது எப்படி?

Post by mmani Sun Sep 22, 2013 7:00 am

பலருக்கும் தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும். அப்படி நிற்கவில்லை என்றால் சற்று போராடத்தான் வேண்டும். 

சிறிது சர்க்கரையை (சீனி.. நாட்டுச் சர்க்கரையில்லை) வாயில் போட்டுக் கொண்டு அது கரையும் முன் சிறிது தண்ணீருடன் விழுங்கி விடுங்கள். விக்கல் உடனே நிற்கக் கூடும். 

நிற்காத விக்கலை நிறுத்த உங்களுக்கு வேண்டியவர்கள் சில முயற்சிகள் செய்து பார்க்கலாம் : 

ஏதாவது அதிர்ச்சியான தகவலைச் சொல்லலாம்.. 

திடீரென முதுகில் தட்டலாம். 

நீங்கள் எதிர்பாராத (?) ஒன்றைச் செய்யலாம். 

சிறுவர்களானால் "அந்தக் காணாமல் போன பொருளை நீதானே திருடினாய்" என்பது போலக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். 

விக்கல் உடனே நின்று விடும். 

அப்படியும் நிற்காத விக்கலுக்கு நீங்கள் இன்னும் சற்று தீவிர முயற்சி செய்ய வேண்டும். 

உங்கள் மூக்கையும் வாயையும் நீங்களே அழுத்தி மூடிக் கொண்டு சற்று நேரம் (குறைந்தது ஒரு நிமிடம்) மூச்சை நிறுத்திப் பார்க்கலாம்.. அல்லது நாக்கை முடிந்த வரை வெளியே நீட்டி விரல்களால் பற்றி இழுத்துக் கொள்ளலாம். 

ஒரு பெரிய கோப்பை நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டு மெதுவாக ஆனால் மூச்சு விடாமல் அதனைக் குடிக்கலாம். 

எலுமிச்சை ஒன்றை உரித்துக் கொண்டு அதைப் பாதியாக வெட்டி அதில் சீனியைத் துாவிச் சாப்பிடலாம். 

நல்ல புளிப்பான ஊறுகாய் எதையாவது சிறிது சாப்பிடலாம்.. 

விக்கல் நின்று விட்டதா? இல்லையா? இல்லையென்றால் இந்தத் தளங்களுக்குச் சென்று இன்னும் விரிவான விளக்கங்களைப் பெறுங்கள்: 



[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.] 


[You must be registered and logged in to see this link.] 


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

விக்கலை நிறுத்துவது எப்படி? Empty Re: விக்கலை நிறுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விக்கலை நிறுத்துவது எப்படி...?
» சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலியை குறைப்பது எப்படி? பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
» காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.
» திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி?கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி?
» இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum