TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!'' - மூத்த போராளி சத்தியசீலன்.

Go down

பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!'' - மூத்த போராளி சத்தியசீலன். Empty பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!'' - மூத்த போராளி சத்தியசீலன்.

Post by Tamil Fri Jul 05, 2013 7:07 am

பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!'' - மூத்த போராளி சத்தியசீலன். 1010973_598219886884678_168733154_n
 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவை’ அமைப்பை நிறுவிய சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

அவரைச் சந்தித்தபோது...

இலங்கையில் சிறுபான்மை தமிழ்ச் சமூகம் அரசுத் துறைகளில் செல்வாக்குச் செலுத்தியது, ஒரு பொறாமையாக சிங்களர்களிடையே உருவானது. இதனால், தமிழர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அடுத்தடுத்து தமிழர் விரோதச் சட்டங்களைக் கொண்டுவந்தனர்.

இந்த அதிருப்திக்குள் மாணவர்கள் அழைத்து வரப்படக் காரணமாக இருந்ததுதான், 1970-ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்துதல் சட்டம். அப்போது நான், அரியரட்ணம், முதல் தற்கொலைப் போராளியான சிவக்குமாரன், முத்துக்குமாரசாமி, வில்வராஜா, இலங்கை மன்னன் என இன்னும் பலரும் இணைந்து 'தமிழ் மாணவர் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினோம்.

அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் ஒன்றை நடத்தினோம். ஆனால், அது போலீஸாரால் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

சேகுவேராவின் சிந்தனையும் கம்யூனிசமும் தமிழ் இளைஞர்களிடையே செல்வாக்குச் செலுத்த... அதன் போக்கில் ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் அடைந்தது. ஆயுதம் வாங்க, அமைப்பைக் கட்டமைக்கப் பணம் தேவைப்பட்டது.

இந்த எண்ணம் வேர் விட்டபோது பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்களின் உதவியும் ஆதரவும் முதன்முதலாக எங்களுக்குக் கிடைத்தது. கொஞ்சம் டைனமைட் வாங்கவும், ஈழத்துக்கான தேசிய கீதம் பண்ணவும் நான் சென்னை வந்தேன்.

பிரபாகரன், அவரது அண்ணன் மனோகரன், ஜோதிலிங்கம், ஜெகன், குட்டிமணி, தங்கதுரை அனைவரும் ஒருங்கிணைந்தோம். அதில் மிகவும் இளையவர் தம்பி பிரபாகரன்.

அப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் 'பர்னிங்’ என்றொரு கட்டுரை வந்தது. அதில் மொலாக்கோ என்பவர் கண்டுபிடித்த 'மொலாக்கோ காக்டெயில்’ என்ற குண்டை எப்படித் தயாரிப்பது என்ற கட்டுரை வந்தது.

அதைவைத்து குண்டு செய்தோம். ஓர் அறையில் வைத்து குண்டு தயாரித்தபோது பிரபாகரனின் கால் பட்டு அந்தக் குண்டு வெடித்தது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார். பிரபாகரனுக்கு அதிலிருந்துதான் கரிகாலன் என்ற பெயர் வந்தது.

1972-க்கு முன்னரே இலங்கை அமைச்சர் சோம வீர சந்திரசிறி, யாழ் மேயரும் மக்கள் விரோதியுமான ஆல்பிரட் துரையப்பா போன்றோரைக் கொல்லத் திட்டம் தீட்டினோம். அது தோல்வியில் முடிந்தாலும்கூட, அது உருவாக்கிய மன எழுச்சி, பெரும் அரசியல் நெருப்பாக உருவானது.

அந்த வேட்கையை 1975-ல் அல்பிரட் துரையப்பாவைக் கொன்று நிறைவேற்றினார் பிரபாகரன். அடுத்தடுத்து பல வங்கிக் கொள்ளைகள் நடந்தன. தேடப்படும் குற்றவாளியான நான், 1973-ல் கைது செய்யப்பட்டேன்.

கோப்பாய் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு சிவகுமாரன், முதல் சயனைட் போராளி ஆனார். நான் கைது செய்யப்பட்டதோடு 'தமிழ் மாணவர் பேரவை’யின் வரலாறு முடிந்தாலும், புதிய போராளிக் குழுக்களின் தொடக்கமாக அது இருந்தது!'' - பெருமூச்சோடு வரலாற்றை நினைவு கூருகிறார் சத்தியசீலன்.

கேள்வி - உங்களுக்கு அப்போது உலகம் முழுக்க ஆதரவு இருந்ததுதானே?

பதில் - ஆமாம்... 'சோஷலிசத் தமிழீழம்’ என்னும் கோஷமே இருந்தது. அதுவரை அரசியல் செய்த தமிழரசுக் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவை என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்தது. அதுதான் 'சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி’ என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதிய ஆன்டன் பாலசிங்கத்தை பிரபாகரனிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

தமிழகம் நோக்கி வந்த எங்கள் இளைஞர்கள் பாலஸ்தீனம் வரை சென்று ஆயுதப் பயிற்சி பெற்றார்கள். 2,000 ரூபாய்க்கு டைனமைட் வாங்க அலைந்த காலம் மாறி, கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆயுதங்கள் எங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்தன!

கேள்வி - தமிழீழம் மலர்ந்தால், அதை ஆதரிப்பவர்கள்கூட அந்த தேசத்தில் வாழ முடியாது’ என அமெரிக்கத் தூதர் 1987-ல் செய்தி அனுப்பியதாக 'விக்கிலீக்ஸ்’ கூறுகிறதே?

பதில் - அதிநவீன ஆயுதங்கள் எங்களுக்குக் கிடைத்தன. மக்கள் நடமாடும் வீதிகளிலும், சந்தைப் பகுதிகளிலும் உடல் முழுக்க ஆயுதங்களைச்சுற்றிக் கொண்டு இளைஞர்கள் வலம் வந்தார்கள். அது மக்களிடம் பொடியள் (போராளி இளைஞர்கள்) பற்றிய பெரிய கவர்ச்சியை உருவாக்கியது. அதன் ஆபத்தை அப்போது மக்கள் உணரவில்லை.

1985-ம் ஆண்டிலேயே சகோதரப் படுகொலைகள் தொடங்கிவிட்டன. சகிப்புத் தன்மை இல்லாமல் போய் சின்னச் சின்னக் கருத்து முரண்களைக்கூட ஆயுதங்களால் தீர்த்துக்கொண்டார்கள். எல்லா இயக்கங்களும் இணைய வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள்.

ஆனால், நிலைமை கை மீறிச் சென்றுவிட்டது. ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் வகைதொகை இல்லாமல் இளைஞர்களும், முக்கியச் சிறப்பு வாய்ந்த தலைவர்களும் கொல்லப்பட்டார்கள். அப்போதே எங்களுடைய தோல்வி தொடங்கிவிட்டது!

கேள்வி - மற்ற போராளித் தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்?

பதில் - வயதில் சிறியவராக இருந்தாலும் பக்குவப்பட்டவராக அவர் இருந்தார். தான் நம்பிய விஷயங்களில் தன்னோடு இருப்பவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்று முன்மாதிரியாக இருந்தார். பல அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் அவர் இசைந்துபோனாலும்கூட, தமிழீழம் என்ற ஒற்றைக் கோரிக்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தது பிரபாகரன் மட்டுமே. மற்றவர்கள் இலங்கை அரசோடு சமரசமாக செல்லத் தயாராகவே இருந்தனர்!

கேள்வி - உலகிலேயே செல்வத்திலும் செல்வாக்கிலும் வசதியான அமைப்பு புலிகள் இயக்கம். இன்று அவர்களுடைய சொத்துகள் என்னவாகின?

பதில் - ஐரோப்பிய நாடுகள் முழுக்க மக்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். அமைப்பில் நிதிப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ இன்று இல்லாத நிலையில், பல மில்லியன் டொலர் மதிப்பிலான அசையும், அசையாச் சொத்துகளை வைத்திருந்தவர்கள், இன்று பொறுப்பு ஏற்கவில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பொறுப்பாளர் இருந்தார். போர் ஆரம்பித்த பின்பு, அவசர கால நிதி என்று திரட்டினார்கள். உணர்ச்சி வசப்பட்ட மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி பல பத்தாயிரம் பவுண்ட்ஸ்களையும், யூரோக்களையும், டாலர்களையும் கொட்டிக் கொடுத்தார்கள். வீடுகளை அடகுவைத்துக் கொடுத்தவர்கள் எல்லாம் இப்போது வட்டி கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

ஆனால், வசூலித்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள். ஈழத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்ட மக்களுக்குப் பணத்தைப் பிரித்துக் கொடுத்தால் கூடப் பல நூறு கோடி ரூபாய் மிச்சம் இருக்கும். அந்த அளவுக்குப் புலிகளுக்குச் சொத்து இருந்தது. ஆனால், பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!

கேள்வி - ஈழத் தமிழர்களுக்கு இன்று நம்பிக்கை தரும் அமைப்பு எது?

பதில் - சில அமைப்புகள் சடங்கார்ந்த விழாக்களை நடத்துவதோடு சரி. பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற சில அமைப்புகள் அரசியல்ரீதியாகச் செயல்படுகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகெங்கும் வாழும் ஈழ மக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக உள்ளது.

இதெல்லாம் ஏதோ ஒரு வகையில் தாயகத்துக்கு வெளியில் செயல்படும் அமைப்புகள். ஈழத்துக்குள் முறையான அரசியல் அமைப்புகள் உருவாகாமல்போனால், அது தமிழ் மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும்!

கேள்வி - பிரபாகரன் மற்றும் ஐந்தாவது ஈழப் போர் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில் - போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது இலங்கை அரசு நடத்திக் கொண்டிருப்பது உளவியல் போர். அந்தப் போரின் ஓர் அம்சமாக பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது.

அவர் விரைவில் வருவார்’ என்கிற பிரசாரத்தின் வாயிலாக 'அவர் வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளட்டுமே என்கிற தயக்கத்தை உருவாக்கி வருகிறார்கள். கசப்பானதாகவே இருந்தாலும், யதார்த்த சூழலை எதிர்கொள்ள வேண்டும்.

போராட்டத்தைக் கைவிட்டு யாருக்காகவும் காத்திருந்தால், தமிழர் என்ற ஓர் இனமே அழிந்துவிடும் என்கிற சூழல்தான் இருக்கிறது!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நிதி வசூல்: எல்டிடிஈ மூத்த தலைவர் நெடியவன் நார்வேயில் கைது-நெதர்லாந்து புகாரால் நடவடிக்கை
»  என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம்: மோடி கட்டாய உத்தரவு!
» மஹிந்தரை பயன்படுத்தி பிரபாகரனைப் பழிவாங்கிய சோனியா!
» பிரபாகரனைப் பிடித்துத் தருவோம்: கோட்டாவிடம் உறுதியளித்த பிளேக் - விக்கிலீக்ஸ்
» புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பழிதீர்க்கத் தவறிய இந்தியா! – அமெரிக்க தூதரக அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum