TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சுதந்திரத் தமிழ்ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! - வைகோ அறிக்கை

2 posters

Go down

 சுதந்திரத் தமிழ்ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! - வைகோ அறிக்கை  Empty சுதந்திரத் தமிழ்ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! - வைகோ அறிக்கை

Post by KAPILS Wed Jul 03, 2013 9:16 pm

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வும், மருந்தும் ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றான ஈழத்தமிழர் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசின் போர்முகங்களில் ஒருவனான பசில் ராஜபட்சேவை புது தில்லிக்கு வரவழைத்து, ஜூலை 4 ஆம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.


இல்லாத ஊருக்கு, போகாத வழியைக் காட்டுவது போல, ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு, 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஒரு தீர்வைத் தருவது போன்ற மாய்மால வேலையை, இந்திய அரசு செய்து வருகிறது. சிங்கள அதிபர் ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தால், போஃபர்ஸ் ஊழலில் சிக்கி இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மக்கள் கவனத்தைத் திசை திருப்ப ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்தான், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகும்.அந்த ஒப்பந்தத்தில், வடக்கு மாகாணத்தோடு கிழக்கு மாகாணத்தை இணைப்பது குறித்து, கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத காலத்துக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்து மை உலர்வதற்கு உள்ளாக, இணைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்று ஜெயவர்த்தன அறிவித்ததும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றக் கோரி திலீபன் துளிநீரும் பருகாமல் அறப்போர் நடத்தி, செப்டெம்பர் 26 இல் உயிர் நீத்ததும், ஒப்பந்தத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் 17 பேர்களை, சிங்களக் கடற்படையினர் கைது செய்து, பலாலி விமான தளத்தில் காவலில் வைத்ததும், அவர்களைப் பாதுகாக்க முனைந்த இந்திய இராணுவத்தின் கட்டுக்காவலை இந்திய அரசு விலக்கச் செய்ததால், குமரப்பா,புலேந்திரன் உள்ளிட்ட 12 தளபதிகள் நச்சுக்குப்பி கடித்து மாண்டதும், விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி, செய்தித்தாள் நிறுவனங்களை இந்திய இராணுவம் வெடிகுண்டு வைத்து அழித்ததும், புலிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் தொடுத்ததும், அதனைப் புலிகள் எதிர்கொள்ள நேர்ந்ததும், இந்திய அரசின் துரோகச் செயல்கள் ஆகும்.

எனவே, அந்தக் காலகட்டத்திலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை, இருநாட்டு அரசுகளும் தீயிட்டு, அதன் சாம்பல் வங்கக் கடலில் கரைக்கப்பட்டு விட்டது. 13 ஆவது சட்டத்திருத்தம் என்பது, இந்திய இராணுவம், சிங்களருக்குத் துணையாக ஈழத்தமிழர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்தில், 1987 நவம்பர் 14 இல், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் ஆகும். தமிழ் ஈழ மக்களுக்கு எந்த அதிகாரமும் இதில் தரப்படவில்லை.

மாகாணக் கவுன்சில்களை நிர்வகிக்க, ஆளுநர்களை நியமிக்கவும்; எந்த நேரத்திலும் அவர்களைப் பதவியில் இருந்து நீக்கவும், இத்திருத்தம் இலங்கை அதிபருக்குஅதிகாரம் வழங்கியது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில், சட்டம், பொது ஒழுங்கு, தமிழர்கள் வாழும் நிலம் குறித்த அனைத்து அதிகாரங்களும், சிங்கள அதிபருக்குத்தான் உண்டு. அம்மாகாணங்களுக்கு எவ்வித அதிகாரங்களும் தராத, ஒற்றை ஆட்சி முறைதான், சிங்கள அரசின் சட்டம் ஆகும். 13 ஆவது சட்டத் திருத்தத்தை, விடுதலைப்புலிகள் மட்டும் அல்ல, அனைத்துத் தமிழர் அமைப்புகளும் அப்போதே நிராகரித்து விட்டன. கடந்த ஆண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், 13 ஆவது சட்டத்திருத்தம் குறித்து, இலங்கை அதிபரோடு பேசியதாகச் சொன்னதை, சிங்கள அரசு உடனே மறுத்தது.

தலைக்குமேல் தொங்கும் கத்தியாக, சிங்கள அரசின் அடக்குமுறை அச்சுறுத்தும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.ஈழத்தமிழர்களுக்குத் துளியும் நீதி வழங்காத 13 ஆவது சட்டத்திருத்தத்தை முற்றிலும் நீர்த்துப் போக வைக்கும் நோக்கில், ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்றிரண்டு சொற்ப அதிகாரங்களைக் கூடப் பறிக்கும் விதத்தில், இச்சட்டத் திருத்தத்தைத் தேர்வுக்குழுவுக்கு சிங்கள அரசு அனுப்புகிறது.

13 ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற இலங்கை அரசுக்குத் தெரிவிப்போம் என்று, இந்தியப் பிரதமர் தங்களிடம் கூறியதாக, தில்லி சென்று திரும்பிய சம்பந்தன் குழுவினர் கூறியதை மறுத்து, அப்படி எதுவும் இந்திய அரசு எங்களுக்குச் சொல்லவில்லை என்று, அதிபர் ராஜபட்ச அறிவித்தான். ஈழத்தமிழர்களின் குருதி படிந்த மயானபீடத்தில், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், இலங்கையில் நடத்த இருக்கும் செயல், மாபாதகக் கொடுமை ஆகும். அப்படி நடந்தால், அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு, கொலைகாரச் சிங்கள அதிபரே காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை வகிப்பார்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவவும், காமன்வெல்த் நாடுகளில் சிங்கள அரசு மீதான குற்றங்களை மறைக்கவும், முன்னோட்ட ஏமாற்று வேலையாக, 13 ஆம் சட்டத் திருத்தத்தைப் பற்றி, ஒரு கருத்தாடலை, விவாதத்தை முன்வைக்கும் மோசடி வேலையில், இந்திய-இலங்கை அரசுகள் ஈடுபட்டு உள்ளன.இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிகள், ஜூலை 4 ஆம் தேதி தில்லியில் சந்திக்கிறார்கள் என்பதைத்தான், தாய்த்தமிழகத்து மக்களும், தரணிவாழ் தமிழர்களும் நினைவில் கொள்ள வேண்டும். வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்றை ஏற்பாரோ? என்றான் கவிஞன் பாரதி. சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வும், மருந்தும் ஆகும்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 சுதந்திரத் தமிழ்ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! - வைகோ அறிக்கை  Empty Re: சுதந்திரத் தமிழ்ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! - வைகோ அறிக்கை

Post by logu Wed Jul 03, 2013 9:45 pm

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வும், மருந்தும் ஆகும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினைக்குத் தீர்வு காண குழு அமைப்பு- பிரதமர் ஒப்புதல்
» ஈழத்தமிழர் போர்வையில் பொய்ப் பிரசார முயற்சி:வைகோ
» ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு - ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து வலியுறுத்தல்
» நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் ! மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கை.
» கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்!வைகோ அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum