TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Post by mmani Sat Jun 29, 2013 8:04 am

 நோய் தடுப்பு என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன?


தடுப்பு மருந்துகள் அளிப்பதன் மூலம் மனிதர்களை நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பதே நோய் முன்தடுப்பு எனப்படுகிறது. இவை, பிற்காலத்தில் நோய்க்கிருமிகள் தாக்கினால் அவற்றை எதிர்த்து போரிட உடலை தயார் செய்கின்றன.
தாயிடமிருந்து பரம்பரையாக பெறுதல் மற்றும் தாய்ப்பால் மூலம் கிடைப்பதால், இயற்கையாகவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது. குழந்தைகள் வளர்ந்து, அவர்களின் சொந்த நோய் எதிர்புத்திறன் அதிகரிக்கும் போது, இந்த இயற்கையான திறன் படிப்படியாக குறைகிறது. குழந்தைகளுக்கு நோய் முன்தடுப்பு மருந்துகள் அளிப்பதன் மூலம் கொடிய நோய்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு பெறலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty அட்டவணையில் தடுப்பு மருந்தை ஒன்றரை மாதத்தில் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையை தாமதமாக அழைத்து வந்தால், அப்போதும் அட்டவணைப்படி மருந்து அளிக்கலாமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:04 am

கண்டிப்பாக அளிக்கலாம். தாமதமாக் அழைத்து வரப்பட்டாலும், குழந்தைக்கு அனைத்து முன்தடுப்பு மருந்துகளும் அட்டவணைப்படி அளிக்கப்பட வேண்டும். அட்டவணைப்படி மருந்துகள் அளிப்பது சிறப்பானது என்றாலும், தாமதம் என்ற காரணத்துக்காக மருந்துகள் மறுக்கப்படக் கூடாது. குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை, கண்டிப்பாக அட்டவணைப்படி மருந்துகள் அளிக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty தடுப்பு மருந்துகள் அளிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் யாவை?

Post by mmani Sat Jun 29, 2013 8:05 am

தடுப்பு மருந்துகள் அளித்தபின் ஒரு சில குழந்தைகள் மட்டுமே பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். பி.சி.ஜி அளிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். டி.பி.டி ஊசி மருந்து செலுத்தியவுடன், செலுத்தப்பட்ட இடம் வீங்குதல் மற்றும் காய்ச்சலும் ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்பட்டால், குழந்தைகளுக்கு ½ மாத்திரை அல்லது ½ மேசைக்கரண்டி பாரசிடமால் மருந்து தரலாம்.
மீசல்ஸ் ஊசி போட்ட பிறகு, மீசல்ஸ் போன்றே தோன்றும் புள்ளிகள் ஏற்படுவது இயற்கையானதே. மிக அரிதாக, குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அதிக காய்ச்சல் அல்லது நினைவு இழதல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். நோய் முன்தடுப்பு மருந்துகள் அளீப்போருக்கு, இவ்வாறு ஏற்படும் ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும். ஒவ்வாமை ஏற்பட்ட குழந்தைக்கு உடனடியாக சிகிச்சையளித்தால், குழந்தைகள் சீக்கிரம் நலம் பெற இயலும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty சில நேரங்களில், முதல் மருந்து அளித்து சரியாக ஒரு மாதத்தில் மீண்டும் அடுத்த மருந்துகளுக்கு அழைத்து வர இயலாவிட்டால், அந்த மருந்தை முதலிலிருந்து மீண்டும் துவக்க வேண்டுமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:06 am

தேவையில். சிறு தாமதத்தால் பாதிப்பில்லை. அட்டவணைப்படி மருந்தை தொடர்ந்து அளித்து முழுமை பெற வேண்டும். 1 பி.சி.ஜி ஊசி, 3 டி.பி.டி ஊசிகள், 3 வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் 1 மீசல்ஸ் ஊசி ஆகியவை பெற்ற பிறகே குழந்தைக்கு முழு முன்தடுப்பு மருந்துகள் அளித்ததாக கருத முடியும். எனவே, சரியான நேரத்தில் அழைத்துச் சென்று அனைத்து மருந்துகளையும் அட்டவணைப்படி அளிப்பது மிகவும் முக்கியமாகும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty குழந்தைக்கு தடுப்பு மருந்து அளிக்காமல் இருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏதாவது இருக்கின்றனவா?

Post by mmani Sat Jun 29, 2013 8:07 am

ஒரு சில சூழ்நிலைகளில் மட்டுமே ம்ருந்துகள் அளிக்க வேண்டியதில்லை. சாதாரணமாக ஏற்படும் காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தாலும், முன்தடுப்பு மருந்துகளை அளிக்கலாம்.
கீழ்கண்ட சூழ்னிலைகள் நிலவினால், மருந்து அளிக்கும் மருத்துவருக்கு குழந்தையின் நிலையை தெரிவிக்க வேண்டும்:

  • குழந்தைக்கு மிக அதிக காய்ச்சல் உள்ளது.
  • முன்னர் முன்தடுப்பு மருந்துகள் அளித்த போது ஒவ்வாமை ஏற்பட்ட்து
  • முட்டைகள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுகிறது
  • இதற்கு முன் வலிப்பு ஏற்பட்டுள்ளது (சரியான மருத்துவ உதவியுடன், வலிப்பு உள்ள குழந்தைகளுக்கும் முன்தடுப்பு மருந்துகள் அளிக்கலாம்)
  • புற்று நோய் உள்ளதால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
  • ஹெச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் போன்ற, நோய் எதிர்ப்பு காரணிகளை பாதிக்கும் நோய்கள் இருத்தல்
  • நோய் எதிர்ப்பு காரணிகளை செயலிழக்க வைக்கும் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளுதல் (உதாரணமாக், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்) அல்லது அதிக டோஸ் ஸ்டீராயிட் மருந்துகள் உட்கொள்ளுதல்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty Re: குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Post by mmani Sat Jun 29, 2013 8:16 am

தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை என்று எப்படி அறிவது?



மற்ற அனைத்து மருந்துகள் போலவே, முன்தடுப்பு மருந்துகளும் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்துகொண்ட பிறகே பயன்பாட்டு வெளியிடப்படுகின்றன. வெளியிட்ட பிறகும், தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்பில்லாத முன்தடுப்பு மருந்துகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty பிசிஜி மருந்தை ஏன் இடது கையின் மேற்புறத்தில் மட்டுமே செலுத்த வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:17 am

ஒரே மாதிரி தன்மையை கடைபிடிக்கவும், பி.சி.ஜி மருந்து அளிக்கப்பட்டதை உறுதி செய்துகொள்ள ஏதுவாகவும், அவ்வாறு இடது கையின் மேற்புறத்தில் மட்டுமே செலுத்தப்படுகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty பிறந்த மற்றும் 1 மாதத்திற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு ஏன் 0.05 மிலி டோஸில் பி.சி.ஜி அளிக்கப்படுகிறது?

Post by mmani Sat Jun 29, 2013 8:18 am

பிசிஜி தோலுக்கும் தசைக்கும் இடையில் செலுத்தப்படுகிறது. 0.1 மிலி-ஐ தக்கவைத்துக் கொள்ளும் அளவு தோல் மொத்தமாக இல்லாத்தால், அவை தசையில் ஊடுருவி, சீழ் பிடித்தல் மற்றும் நுண நீர் சுரப்பிகளில் வீக்கம் ஆகியவை ஏற்படுவதாலும், குறைவான அளவில் அளிக்கப்படுகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty பி.சி.ஜி ஏன் ஒரு வயது வரை மட்டுமே அளிக்கப்படுகிறது ?

Post by mmani Sat Jun 29, 2013 8:18 am

பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயதுக்குள் காசநோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர். இது, குழந்தைகளுக்கு ஏற்படும் டி.பி. மெனிஞ்சிடஸ் மற்றும் மிலிட்டரி நோய் போன்ற கொடுமையான நோய்களுக்கு எதிர்ப்புத்திறனை உண்டாக்குவதால், மேற்கொண்டு முன்தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுவதில்லை.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty பிசிஜி அளித்த தழும்பு ஏற்படாவிட்டால், மீண்டும் செலுத்த வேண்டுமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:19 am

தழும்பு ஏற்படாவிட்டாலும், மீண்டும் மருந்து அளிக்க தேவையில்லை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty எந்த வயது வரை குழந்தைகளுக்கு வாய்வழி போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:19 am

குழந்தைகளுக்கு 5 வயது ஆகும் வரை அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty வாய்வழி போலியோ சொட்டு அளித்த உடனே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:21 am

ஆம். ஊட்டலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty டி.பி.டி 1, 2, 3 மற்றும் வாய்வழி போலியோ சொட்டு 1, 2, 3 ஆகியவற்றை அட்டவைப்படி அளிக்கத் தவறியிருந்தால், எந்த வயது வரை அவற்றை அளிக்கலாம்?

Post by mmani Sat Jun 29, 2013 8:21 am

டி.பி.டி மருந்தை 2 வயது வரியிலும், வாய்வழி போலியோ சொட்டு மருந்தை 5 வயது வரையிலும் அளிக்கலாம். இவற்றின் சில டோஸ்கள் அளிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்தால், முதலிலிருந்து தொடங்காமல், விட்டுப்போன டோஸ்களை மட்டுமே அளித்தால் போதுமானது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty எந்தவித முன்தடுப்பு மருந்துகளும் அளிக்கப்படாத 2 முதல் 5 வயதுடைய குழந்தை அழைத்து வரப்பட்டால், எந்த மருந்துகளை அளிப்பது?

Post by mmani Sat Jun 29, 2013 8:22 am

டி.டி (DT) மருந்தின் இரண்டு டோஸ்களை வாய்வழி போலியோ சொட்டு மருந்துடன், குறந்தபட்சம் 4 வாரங்கள் இடைவெளியில் அளிக்கலாம். முதல் டோஸ் டி.டி (DT)-யுடன் மீசல்ஸ் தடுப்பு மருந்தும் அளிக்க வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty இரண்டு டி.பி.டி டோஸ்களுக்கிடையில் 4 வார இடைவெளி ஏன் இருக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:23 am

உடலின் நோய் எதிர்ப்புத்திறன் உண்டாவதில் தடை ஏற்படுமாதலால், 4 வார குறைந்தபட்ச இடைவெளி அளிக்கப்படுகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty டி.பி.டி முன்தடுப்பு மருந்தை ஏன் பிட்டப் பகுதியில் (gluteal region - buttocks) அளிக்காமல் தொடைப் பகுதியில் (antero-lateral mid thigh) அளிக்கப்படுகிறது?

Post by mmani Sat Jun 29, 2013 8:23 am

’சியாட்டிக் நரம்பு (sciatic nerve)’ பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, டி.பி.டி டொடைப் பகுதியில் இடப்படுகிறது. மேலும், பிட்டப் பகுதில் உள்ள கொழுப்புப் பகுதி, எதிர்பார்த்த அளவுக்கு நோய் எதிர்ப்புத்திறனை வளர விடாது என்பதும் முக்கிய காரணமாகும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty டி.பி.டி மருந்துக்கு ஒவ்வாமை அல்லது என்செபாலிடிஸ் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:24 am

பொதுவாக மருந்தின் P பகுதி (முழு செல் பெர்டூஸிஸ்) இவ்வாறான ஒவ்வாமையை உண்டாக்குவதால், ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு டி.பி.டி-க்குப் பதிலாக டி.டி (DT) மருந்தை, அடுத்தடுத்த டோஸ்களுக்கு அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty ஹெபடிடிஸ் B மற்றும் டி.பி.டி ஆகியவற்றை கலந்து ஒரே ஊசி மூலம் செலுத்தலாமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:25 am

கூடாது. இந்த மருந்துகள் தனித்தனியாக இருந்தால், அவற்றை கலந்து ஒரே ஊசி மூலம் அளிக்கக் கூடாது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty ஹெபடிடிஸ் B மருந்தை எந்த வயது வரை அளிக்கலாம்?

Post by mmani Sat Jun 29, 2013 8:25 am

தேசிய நோய் முன்தடுப்பு அட்டவணைப்படி, ஹெபடிடிஸ் B மருந்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் டோஸ்களை ஒரு வயது வரை அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty ஹெபடிடிஸ் B –ன் முதல் டோஸை பிறந்த 24 மணி நேரத்தில் ஏன் அளிக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:26 am

தாயிடமிருந்து பெறப்படும் ஹெபடிடிஸ் B –ஐ தடுப்பதில் இது சிறப்பாக செயல்படுவதால், பிறந்த 24-மணி நேரத்தில் அளிக்கப்படுகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty மீசல்ஸ் மருந்தை ஏன் இடது கையின் மேற்புறத்தில் மட்டுமே செலுத்த வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:27 am

ஒரே மாதிரி தன்மையை கடைபிடிக்கவும், மீசல்ஸ் மருந்து அளிக்கப்பட்டதை உறுதி செய்துகொள்ள ஏதுவாகவும், அவ்வாறு இடது கையின் மேற்புறத்தில் மட்டுமே செலுத்தப்படுகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty மீசல்ஸ் மருந்தை 9 மாதங்களுக்குள் பெற்ற குழந்தைக்கு, பின்னர் அவற்றை திரும்ப அளிக்க வேண்டுமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:27 am

ஆம், மீசல்ஸ் மருந்தை அட்டவணைப்படி 9 முதல் 12 மாதங்கள் வரை அளிக்க வேண்டும். சரியான நேரத்தில் அளிக்கப்படாவிட்டால், 5 வயது வரை அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty ஏற்கனவே ஜே.இ (JE) மருந்து அளிக்கப்பட்ட 16-24 மாத வயதுடைய குழந்தைக்கு, RI-ன் ஒரு பகுதியாக மீண்டும் அளிக்கப்பட வேண்டுமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:28 am

தேவையில்லை. இது தற்போது ஒரு முறை மட்டுமே அளிக்கபட வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Empty Re: குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum