TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மதிப்பு மிகுந்த மலர்

2 posters

Go down

மதிப்பு மிகுந்த மலர் Empty மதிப்பு மிகுந்த மலர்

Post by udhayam72 Mon Jun 10, 2013 4:25 pm

மதிப்பு மிகுந்த மலர்




மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார்.
நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன.
அவர்களில் சிலர் பொழுது போக்குவதற்கு என்று 'ரிக்ரியேஷன் கிளப் ' ஒன்று அமைத்திருந்தார்கள். அத்ற்குத் தனிக் கட்டிடம் இருந்தது.
அழகான, சிறு கட்டிடம். அந்த கட்டிடத்தில் மாலை நேரத்திலும் இரவிலும் உயிரோட்டம் இருக்கும். சீட்டாட்டம், கேரம், பேட்மிட்டன் என்று விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள் பலர். சிலர் ஈசிச்சேரில் வெறுமனே சாய்ந்து ஓய்ந்திருப்பார்கள்.
பொதுவாக மாலை உலா வருகிறவர்களைத் தவிர வேறு யாரையும் வெளியே காண முடியாது. அந்த மேட்டு நிலத்தில், பரந்து கிடக்கும் பெருவெளி அது. எங்கும் காய்ந்து உலர்ந்த புல்லும், கொழிஞ்சி தும்பை போன்ற செடிகளுமே தென்படும். அங்கங்கே ஆவாரம் செடிகளும் பொன் குவியல்களாய் பூத்துச் சிரித்துக் குலுங்குவதும் பார்வையில் படும். ஒன்றிரண்டு மரங்களும் உண்டு.
சுந்தரம் அடிக்கடி அங்கே உலா வருகிறவர். அவரை அறிமுகம் செய்துகொள்ள விரும்பியவர்கள், அல்லது அவராக நெருங்கித் தெரிந்து கொள்வதற்கானவர்கள் அன்றுவரை அங்கே எவரும் குறுக்கிட்டதில்லை.
இப்போது அங்கே, அந்த பெரிய ஆலமரத்தடியில் ஒரு சிறு பெண் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அது அவருக்கு ஒரு அதிசயமாகவே பட்டது.
அச் சிறுமிக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். நாகரீக ஜவுளிக்கடையில் அலங்காரமாக புது டிசைன் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கும் அழகு பொம்மை மாதிரி இருந்தாள் அவள். உணர்ச்சித் துடிப்பும் உயிரியக்கமும் பெற்ற பொம்மை இது. தானாகவே சிரித்துக்கொண்டு, வேறு யாருடனோ பேசுவது போலவும் பாவனைகள் செய்துகொண்டு, அவள் தனக்காக ஒரு தனி உலகம் அமைத்து அதில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனந்தமாக திரியும் வண்ணத்துப் பூச்சி. கவலையின்றி ஆடிப் பாடிச் சிறகடிக்கும் சிறுபறவை. அழகான பூங்கொத்து. நல்ல குழந்தை – சுந்தரம் அச்சிறுமியை இப்படி வியந்து நின்றார்.
சும்மா வேடிக்கை பார்த்தார்.
சிறுமி அவரைப் பார்த்தாள். அவளது ஒளி நிறைந்த கண்கள் மேலும் சுடரிட்டன. அவள் சிநேகமாகச் சிரித்தாள். இளம் வெயில்போல் அழகாக இருந்தது. அவள் சிரிப்பு.
இது வித்தியாசமான குழந்தை என்று அவர் மனம் சொன்னது. புதியவர்களைப் பார்த்து கூச்சப்படுகிற குழந்தைகள், வெட்கப்படுகிற குழந்தைகள், அநாவசியமாக பயப்படுகிற குழந்தைகள், அழுகிற குழந்தைகள் – இப்படி குழந்தைகள் பல விதம். பயமோ கூச்சமோ கொள்ளாது சிநேகமாகச் சிரிக்கிற குழந்தைகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன. இவளும் ஒரு அபூர்வப் பிறவி என்று சுந்தரம் எண்ணினார்.
சுற்று முற்றும் பார்த்தார். பெரியவர்கள் யாரையும் காணவில்லை. காரில் அல்லது வேறு ரக வாகனங்களில் மேட்டு நில வட்டாரத்துக்கு 'காற்று வாங்க ' வருகிற பெரியவர்கள் எப்பவாவது தங்களோடு குழந்தைகளையும் கூட்டி வருவது உண்டு. அவர்கள் பிள்ளைகளை தாராளமாக வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இப்படித் தன்னந் தனியாக ரொம்ப நேரம் விளையாட விடுவதில்லை.
இவள் யாருடன் வந்திருப்பாள் என்று சுந்தரம் சந்தேகப்பட்டார். அச்சிறுமியிடம் கேட்டார் -
'உன் கூட யார் வந்திருக்கா ? '
யாரும் வரலே. நானாத்தான் வந்திருக்கேன் என்று தயங்காமல் கூறினாள் அவள்.
'உனக்கு பயமாக இல்லே ? '
'பயம் என்ன பயம் ' ' என்று கூறிய சிறு பெண் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
'நீ தனியாக வந்திருக்கியே, '
அப்பா அம்மா உன்னை தேடமாட்டார்களா ? கோபிக்க மாட்டார்களா ? என்று சுந்தரம் விசாரித்தார்.
அப்பா என்ன பண்ணுவாரோ, எனக்குத் தெரியாது. நான் என் அப்பாவைப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அம்மா என்னை கோபிக்க மாட்டா. அம்மா தேடுறதுக்கு முந்தி நான் வீட்டுக்குப் போயிடுவேன் என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.
இது அதிசயமான குழந்தைதான் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது அவருக்கு. 'உன் வீடு எங்கே இருக்கு ? ' என்று கேட்டார்.
'அதோ… அங்கே… என்று குரலை நீட்டி இழுத்து கையையும் ஒரு திசையில் நீட்டினாள் அவள்.
அவள் காட்டிய பக்கம்தான் பெரிய மனிதர்களின் பொழுதுபோக்கு கிளப் இருந்தது. அது அவளுடைய வீடாக இருக்கமுடியாது. அதற்குச் சிறிது தள்ளி ஒரு சிறு வீடு. ஓடு வேய்ந்த சின்ன வீடு. சில அறைகளே கொண்ட கட்டிடம். இச் சிறுவீடு எனது இருப்பிடமாக இருக்கலாம் என்று சுந்தரத்தின் மனம், அதைப் பார்க்கிறபோதெல்லாம் ஆசைப்படுவது வழக்கம். அது சதா பூட்டியே கிடக்கும். அதிலா இந்தச் சிறுமியும் அம்மாவும் குடியிருக்கிறார்கள் ? எத்தனை காலமாக ?
நீ அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சி ? என்று அவர் கேட்டார்.
'நாலு நாள்தானாச்சு. இன்னமே இங்கேயேதான் இருப்போம் ' என்று அவள் சொன்னாள்.
உடனேயே திடுமென நினைத்துக்கொண்டவள் போல 'நேரமாச்சு நான் போகனும் ' என்று அறிவித்தாள். குதித்துக் குதித்து ஓடிப்போனாள் ; வீட்டை நோக்கி அவள் போவதையே பார்த்து நின்றார் அவர்; சிறுமி அந்தச் சிறிய வீட்டினுள்தான் போனாள்; இந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு ஏதாவது சீக்காக இருக்கும்; ஆரோக்கியம் தேடி இங்கே வசிக்க வந்திருப்பாள் என்று அவர் எண்ணிக் கொண்டார்.
அதன் பிறகு சுந்தரம் அந்தப் பக்கம் உலா வந்த போதெல்லாம் அச்சிறுமியைத் தவறாது சந்திக்க முடிந்தது: அவள் பெயர் உஷா என்றும் தெரிந்தது.
உஷா அழகான பெயர். உதயம் போல் ஒளியோடு, கலகலப்பாக, ஜீவத்துடிப்போடு தான் இந்தக் குழந்தையும் இருக்கிறது. விடியற்காலத்தின் பொன்னொளி இதன் கண்களில் மின்னுகிறது. இதன் சிரிப்பில் பளீரிடுகிறது; ஒளியின் வைரரேகை மாதிரித்தான் இதன் உருவமும் இருக்கிறது; இப்படிக் கவிதை பேசிக் களித்தது அவர் வனம். ஒவ்வொரு சந்திப்பின் போது உஷா அவருடைய ஆச்சர்யத்தை அதிகப்படுத்தி வந்தாள்; எப்பவும் அவள் தனியாகத்தான் காணப்பட்டாள்; சதா சிரித்த முகமாகவே காட்சி தந்தாள்; அவளுடைய சின்ன வாய் எப்போதும் வார்த்தைகளை கலகலப்பாக அள்ளித் தெறிக்கும் ஊற்றாக விளங்கியது. உஷாவுக்கு பூக்களின் மீது அதிக ஆசை. சுற்றித் திரிந்து ஆவாரஞ் செடிகளின் பொன்னிறப் பூக்களை அதிகம் அதிகமாக சேகரிப்பது அவளுக்கு சந்தோஷம் தரும் காரியமாக இருந்தது. சில பங்களாக்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் செடிகளில் குலுங்கிப் பளிச்சிடும் பிங்க் நிற போகன்வில்லாப் பூக்களும் அவளுக்குப் பிடித்தமானவைதான்; செம்பரத்தம் பூக்கள் அவளது ஆனந்தத்தை அதிகப்படுத்தின. அவற்றை நிறைய நிறையப் பறித்து வைத்து அவள் விளையாடினாள். உங்களுக்கு எந்தப் பூ மாமா பிடிச்சிருக்கு ? என்று உஷா ஒரு நாள் சுந்தரத்தைக் கேட்டாள். எல்லாப் பூக்களும் எனக்குப் பிடிச்சிருக்கு என்றார் அவர். 'ஊம்ம், எது ரொம்ப புடிச்சிருக்கு ? ' 'ரொம்ப ரொம்ப எனக்குப் பிடிச்ச பூ எது தெரியுமா ? ' என்று அவர் அவள் ஆவலைத் தூண்டும் விதத்தில் கேட்டு நிறுத்தினார். 'எது மாமா, எந்தப் பூ ? ' என்று அவள் அவசரப் படுத்தினாள். 'எல்லாப் பூக்களையும் விட அழகாக இருக்கிற உஷா தான் எனக்குப் பிடித்த பூ; உஷா ஒரு பெரிய பூச்செண்டு ' இனிய பூந்தோட்டம்னே சொல்லலாம்; என்று சுந்தரம் கூறினார். சிரித்தார். 'போங்க மாமா ' கேலி பண்றீங்க ' ' என்று செல்லச் சிணுங்கல் சிணுங்கினாள் உஷா. 'நிஜம்மா நீ ரொம்ப பெரிய பூ தான்; உன் முகம் ஜோரான ரோஜாப்பூ. உன் கைகள்கூட சிறு சிறு ரோஜாக்கள்தான்; கண்கள் கருநீலப்பூ; பாதங்கள் தாமரைப்பூ; உன் மூக்குக்கூட அழகான ஒரு பூதான். அதுக்குப் பேரு தான் எனக்குத் தெரியலே ' என்று சொல்லி, அவர் தன் விரல்கள் இரண்டினால் அவள் குமிழ் மூக்கைப் பிடித்து ஆட்டினார். 'போங்க மாமா, நீங்க நல்ல மாமா இல்லே ? ' என்றாள் பிறகு ஏதோ சிந்திப்பவள் போல அமைதியில் மூழ்கி நின்றாள். 'உஷாவுக்கு என்ன திடார் யோசனை ? ' என்று சுந்தரம் கேட்டார். 'பூக்கள் ஜோராக இருக்கு; அழகு அழகாச் சிரிக்கும் குட்டிக் குட்டி தேவதைகள் போல் தோணுது; அழகாப் பூத்து சந்தோஷம் தருகிற பூக்கள் ஏன் எப்பவும் இப்படியே இருக்கக்கூடாது ? ஏன் வாடிப்போகனும் ? என்று 'சீரியஸ் ' ஆகவே கேட்டாள் அவள். 'ஊம்ங், அப்புறம் ? ' என்று கிண்டல் தொனியில் அவர் தலையை ஆட்டியபடி வினவினார். 'அழகானது எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போகுது. அல்லது தேய்ஞ்சு மறைஞ்சு போகுது. பூக்கள் அதுக்கு உதாரணம் இல்லையா ? ' 'ஆ. டாயர் பிலாசபர் இன் பாவாடை ' அதாவது பாவாடையில் காட்சி தருகிற அருமை தத்துவதரிசியே ' நீ உன் வயசுக்கு மீறி உன் மூளைக்கு வேலை கொடுக்கிறாய். நீ சின்னபிள்ளையாய், சிட்டுக் குருவியாய், வண்ணத்துப் பூச்சியாய், கவலை இல்லாமல் உல்லாசமாகவே விளையாடிக் கொண்டிரு ' என்று உபதேசியார் மாதிரிப் பேசினார் சுந்தரம். 'வவ்வவ்வே ' ' என்று வாயைக் கோணலாக்கி பழிப்புக் காட்டினாள் சிறுமி. பூக்களைச் சிதறி வீசி விட்டு ஓடிப் போனாள். 'குரங்கு ' செங்குரங்கு ' ' என்று உரத்துக் கூவினார் சுந்தரம். அழகிய பூக்களை அப்படி அந்தப் பெண் நாசப்படுத்தியது அவருக்கு எரிச்சல் தந்தது. உஷா திரும்பிப் பார்க்காமலே போய் விட்டாள்.
நாளைக்கு அவளுக்கு அழகான, பூக்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்; அவள் முகமே பெரிய ரோஜாப் பூவாய் சிரிப்பதைக் காண வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார்.
'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் ' என்பது வாழ்க்கையில் சகஜமாக நடப்பதுதான். சுந்தரத்தின் விஷயத்திலும் அப்படித்தான் ஆச்சு.
மறுநாள் மேட்டு நிலம் பக்கம் அவர் உலாப் போக முடியவில்லை. அவரைக் கண்டு சில முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கென்று சிலர் வந்துவிட்டார்கள். அதுக்கு அடுத்த நாளும்…. அப்புறம்….. தொடர்ந்து பத்து நாட்கள் அவர் அங்கே போக முடியாமலே போச்சு. வெளியூர் போக நேரிட்டது.
சுந்தரம் திரும்பி வந்ததும் மாலை உலா கிளம்பினார். வழக்கமான இடத்துக்குத்தான். உஷா விளையாடிக் கொண்டிருப்பாள்; தன்னைப் பார்த்ததும் மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பாள்; ஏன் இத்தனை நாள் வரலே என்றுக் கேட்பாள்… இப்படி மனம் எண்ணக் காற்றாடியை மேலே மேலே பறக்கவிட, அவர் வேகமாக நடந்தார்.
பெரிய ஆலமரத்தின் கீழே, ஒளிப்பெருக்கின் வைர ஊசிபோல் திகழக்கூடிய சிறுமி இல்லை. அவளது விளையாட்டுப் பொருள்களும் காணப்படவில்லை. அந்தப் பூங்கொத்து வண்ண வண்ணப் பூக்கள் சேகரிப்பதற்காக அலைந்து திரிகிறதோ என்ற சந்தேகத்தில் அவர் கண்கள் அங்குமிங்கும் தாவித் திரிந்தன.
எங்குமே அந்த உயிர்க் கவிதை இல்லை.
இந்த நேரத்தில் உஷா வீட்டுக்குள் அடைந்து கிடக்க மாட்டாளே ? விசேஷ காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அவர் மனசில் ஓர் பதைப்பு.
சுந்தரம் அந்தச் சிறிய வீட்டை, பெரிய மனிதர்களின் பொழுது போக்கு மன்றம் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த எடுப்பான கட்டிடத்துக்கு அருகில் இருந்த அழகிய வீட்டை நோக்கி நடந்தார்.
'கிளப் ' ஜீவனோடுதான் தென்பட்டது. பக்கத்துச் சிறிய வீட்டில் ஒளி குன்றிப் போனதாக அவருக்குத் தோன்றியது.
அன்னியமான வீடு. அந்த அம்மாள் அறிமுகமானவளும் இல்லை. சிறு பெண் உஷாவை அவள் விளையாடும் மரத்தடியில் சந்தித்துப் பேசியதுதான். அவளுடன் அவள் வீட்டை எட்டிப் பார்க்க அவர் வந்ததுகூட இல்லையே '
சுந்தரம் வெளி 'கேட் ' மீது கை பதித்தவாறு தயங்கி நின்றார். உஷா என்று அவர் உள்ளம் கூவியது. குரல் கொடுக்கவில்லை அவர்.
உஷாவின் அம்மா வெளியே வந்தாள். எதேச்சையாக வந்தவள், தயங்கி நிற்கும் அவரை பார்த்ததும் அவசரமாக வந்தாள். 'வாங்க, உள்ளே வாங்க ' என்று அழைத்தாள்.
'உஷா உங்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பாளே; சரியான தொண தொணப்பு இல்லையா ? '
அம்மா அவளாகவே கருத்து தெரிவித்தாள்.
'அப்படி எல்லாம் இல்லை. உஷா அதிசயமான பெண். உற்சாகமான சிறுமி. துள்ளித் திரியும் கவிதை. அவள் செயல்கள், பேச்சு எல்லாம் எனக்கு சந்தோஷமே தரும். அவளை எங்கே காணோம் ? '
சடக்கெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டு விருட்டென அந்த அம்மாள் ஏன் வீட்டுக்குள் போக வேண்டும் ? அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவள் கண்கள் கலங்கியிருந்தன.
உஷாவின் கடைசி காலத்தில் அவள் சந்தோஷத்தை அதிகப்படுத்தியவர் நீங்கள். உங்களைப் பற்றி அவள் வாய் ஓயாது பேசுவாள். நீங்கள் தேடி வந்தால், இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் என்று ஒரு கவரை அவள் அவரிடம் தந்தாள்.
அவர் திகைத்தார். 'உஷா…உஷா எங்கே ? ' என்று குழறினார்.
'அந்தப் பூ வாடிவிட்டது ' ' அவள் விம்மினாள்.
மின்னாமல், உறுமாது, பேரிடி ஒன்று விழுந்தது போலிருந்தது சுந்தரத்துக்கு. 'என்னது ? என்ன ? என்று கதறினார்.
'உஷாவுக்கு இருதயக் கோளாறு. எதோ பலவீனம். சிகிச்சைக்காகத்தான் இங்கே வந்து தங்கினோம். அவள் ரொம்ப காலம் வாழ முடியாது என்பது தெரிந்த முடிவுதான். அதனால் இருக்கிற வரை 'அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று விட்டிருந்தேன். நீங்களும் உங்களாலான உதவி செய்தீங்க. அவ சந்தோஷப்பட்டாள். மூன்று நாட்களுக்கு முன் உஷா போய்விட்டாள். '
அழுகையை அடக்க இயலாதவளாக அவள் உள்ளே போனாள்.
சுந்தரம் தன் கையிலிருந்த கவரைக் பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு படம் இருந்தது. வெள்ளைத்தாளில், வானவில் வர்ணங்களில் பளிச்சிட்ட ஒரு பூவின் படம். உஷா வரைந்தது. அதன் மேலே மதிப்பு மிக்க மலர் என்று அவள் எழுதியிருந்தாள். கீழே அன்பு நட்பு என்றும் எழுதியிருந்தாள்.
ஆனால் அவ்வார்த்தைகளை அன்பூ – நட்பூ என்று உஷா எழுதியிருந்தாள். வேண்டுமென்றே–தெரிந்தே–செய்யப்பட்ட இலக்கணப் பிழைதான் என்று எண்ணிக்கொண்டார் சுந்தரம்.
அவர் கண்ணிலிருந்து கண்ணீர்ப்பூக்கள் உதிரலாயின.
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

மதிப்பு மிகுந்த மலர் Empty Re: மதிப்பு மிகுந்த மலர்

Post by ஜனனி Mon Jun 10, 2013 6:29 pm

மதிப்பு மிகுந்த மலர் 28284 மதிப்பு மிகுந்த மலர் 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மதிப்பு மிகுந்த மலர் Empty Re: மதிப்பு மிகுந்த மலர்

Post by ஜனனி Mon Jun 10, 2013 6:47 pm


Play free games at onlinegames
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மதிப்பு மிகுந்த மலர் Empty Re: மதிப்பு மிகுந்த மலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum