TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான்

3 posters

Go down

ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் Empty ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான்

Post by மாலதி Sat Apr 27, 2013 9:15 pm

தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் மறக்கமுடியாத
அனுபவமாக பழம்பெரும் பாடகர் எம்.எஸ். விஸ்வநாதன் உடன் தில்லு முல்லு
படத்தில் ஜோடி சேர்ந்தது அமைந்தது.

ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் Rahman_yuvan_bharathbala_001இதேபோல் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா கைகோர்க்கின்றனர்.

மரியான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் யுவன் சங்கர் ராஜா குரலில் நடிகர் தனுஷின் பாடல் வரிகள் அமைந்துள்ளது.

மரியான் படத்தின் இயக்குனர் பரத் பாலா கூறுகையில், யுவன் சங்கர் ராஜா,
தனுஷ் மூலம் ஏஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பிரமாதமாக அமைந்துள்ளது.

விரைவில் மரியான் படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடலுக்கான புதிய டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் மே 3ம் திகதி வெளியிடப்பட உள்ளது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் Empty Re: ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான்

Post by மாலதி Thu May 16, 2013 3:10 pm


மரியான் -ஏ.ஆர்.ரஹ்மான் + யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி!!









.ரஹ்மானிடம் பேசி எவ்வளவு நாட்களாகிவிட்டன?







''என் கால்ல
எத்தனை சக்கரங்கள் கட்டப்பட்டிருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஓடிக்கிட்டே
இருக்கேன். அதான்... இந்த வருஷம் 'மரியான்’, 'கோச்சடையான்’, 'ஐ’னு தமிழ்ப்
படங்கள் அடுத்தடுத்துப் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப நல்ல
விஷயம்ல!'' எனப் புன்னகைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.








'' 'வந்தே மாதரம்’ தொடங்கி இப்போ 'மரியான்’ வரை இயக்குநர் பரத்பாலான்னா உங்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தானே?''










''அப்படியும் வெச்சுக்கலாம். எனக்கு அமைஞ்ச நல்ல
விஷயங்களில் என் நண்பர்களும் உண்டு. பரத்பாலா, மணிரத்னம், திருலோக், ராஜீவ்
மேனன்னு நிறைய நல்ல நண்பர்களைக் கடவுள் எனக்குப் பரிசாகக்
கொடுத்திருக்கார்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு மைல்கல் இருக்கும். அப்படி
என்னோட மைல்கல்லைத் தாண்டியும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுபோனது
இந்த நண்பர்கள்தான்.










நான் ஜிங்கிள்ஸ் பண்ணும்போதே அது சுமாரா இருந்தா, என்
நண்பர்கள் யாரும் திருப்தி அடைய மாட்டாங்க. 'இன்னும் நல்லா வேணும்’னு
சொல்லிச் சொல்லி என்னைக் கடுமையா உழைக்கவெச்சாங்க. 'வந்தே மாதரம்’ ஆல்பம்
இயக்கியவர் பரத்பாலா. இப்ப அவரே 'மரியான்’ பண்றதால், நிறைய எதிர்பார்ப்பு
வந்துருச்சு. சினிமாவை இயக்குறதுக்காகக் கிட்டத்தட்ட 10 வருஷம்
உழைச்சிருக்கார். அந்தஉழைப்பின் பலன் 'மரியான்’ல தெரியும். பரத் பாலாவுக்கு
இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் நிறையச் சாதிப்பார்!''










ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் P10

'' 'மரியான்’ படத்தில் உங்க இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கார். எப்படி அமைஞ்சது இந்தக் கூட்டணி?''










''கடல்ராசா பாட்டைக் கேக்கறீங்களா? யுவனோட குரல்ல
எப்பவுமே ஒரு ஜீவன் இருக்கும். அவரோட குரலைக் கேட்கும்போது எல்லாம் 'இவரை
எப்படியாவது நம்ம இசையில் ஒரு தடவை பாட வெச்சி டணும்’னு நினைச்சுட்டே
இருப்பேன். அது இப்போதான் அமைஞ்சது. யுவனே கடல்ராசாவா மாறிப் பாடி
அசத்திட்டார்!''










ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் P10b''வீட்டுக்குள்ளேயே சத்தம் இல்லாம இசை வாரிசு உருவாகுதா? திரைப்பட விழாவில் உங்க மகன் அமீன் பிரமாதமா பியானோ வாசிச்சாரே?''










''அவர் அந்த திரைப்பட விழாவில் பியானோ வாசிச்சது எனக்கே
தெரியாது. என்கிட்ட அவர் சொல்லவும் இல்லை. இன்டெர்நெட்ல பார்த்துதான்
தெரிஞ்சுக்கிட்டேன். முதல் மேடையிலேயே அசத்திட் டார். கடவுள்தான் அவரை
வழிநடத்தணும். இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கார். கத்துக்க வேண்டியது
இன்னும் நிறைய இருக்கு!''







''இளம்
இசையமைப்பாளர்கள் ஒருபக்கம் மிரட்டுறாங்க. இன்னொரு பக்கம் நிறைய இளைஞர்கள்
குட்டிக் குட்டியா ஜிங்கிள்ஸ் போட்டு யூ டியூப்ல ஹிட் ஆகிடுறாங்களே?''








''ஆமா, நல்லதுதானே? இப்ப வர்ற இளைஞர்களுக்கு நிறையத்
திறமை, தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கிற துக்கு
அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நான் சின்னப் பையனா இருந்தப்போ, அண்ணா
சாலையில் ஒரே ஒரு கடையில்தான் 'மியூஸிக் மேக்கர்’ங்கிற புத்தகம்
கிடைக்கும். அதை வாங்க நான் சைக்கிள் எடுத்துட்டு அலைவேன். இப்போ உள்ள
பசங்களுக்கு கூகுள், யூ டியூப் மூலமா எல்லாத்தையும் எளிதாக் கத்துக்க
முடியுது. அட, அரேபியன் ஸ்டைல் மேக்அப்பைக்கூட வீட்ல உட்கார்ந்துக் கிட்டே
பண்ணிடுறாங்க. இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா உழைச்சா, அதில்
அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்!''










''இசை
படிக்கிறவங்க எல்லாரோட கனவும் பெரும்பாலும் சினிமாவாதான் இருக்கு. ஆனா
ஹாலிவுட், இரானியப் படங்கள் எல்லாம் பாடல்களே இல்லாமல் வந்தாலும்
ரசிக்கவைக்குது. இந்திய சினிமாவில் மட்டும்தான் பாடல்கள் இருக்கு.
சினிமாவுக்கு இன்னும் பாடல்கள் தேவையா?''








ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் P10a''இந்திய
சினிமாவில் பாட்டு இருக் கிறதால்தான் இன்னும் கெட்டுப் போகாம இருக்கு.
(சிரிக்கிறார்) ஒரு நல்ல பாட்டு நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது.
ஒரு பாட்டைப் பாடினாலே நம்மோட காதல், சோகம், மனைவி, குடும்பம்னு எல்லா
உணர்வுகளும் வந்துட்டுப் போகுது.







அதனால பாட்டு எப்பவுமே நல்ல விஷயம்தான்.
ஆனா, இப்போபாடல் களும் ஒரு மாதிரி ஃபார்முலாவுக்கு உள்ளே சிக்கிக்கிச்சு.
அதை உடைக்கணும்னு நான் ஆசைப்படுறேன். மத்த வங்க கதையில் நான் வேலை
பார்க்கும்போது அது சாத்தியம் இல்லை. அதனால், நானே கதை பண்ண
ஆரம்பிச்சிட்டேன்!''










''இயக்குநர் ரஹ்மான்..! ஆச்சர்யமா இருக்கே?''







''இயக்குநர் ஆகணும்னு ஆசை தான். ஆனா, அதுக்கு இசையை
மறந்து நிறைய விஷயங்களில் கவனம் செலுத் தணும். அதில் எனக்கு இஷ்டம் இல்லை.
அதனால் கதை, திரைக்கதை மட்டும் பண்ணியிருக்கேன். என் நண்பர்கள்கிட்ட முதல்ல
சொல்லிப் பார்த்தேன். அவங்களுக்கு கதை பிடிச்சிருந்தது. தயாரிப்பாளரும்
கிடைச்சிட் டாங்க. அடுத்த வருஷம் என் கதையை யாராவது இயக்குவாங்க. படம் இசை,
குடும்பம் சம்பந்தப்பட்டதா இருக்கும். ஹீரோ, ஹீரோ யின் மாதிரியான
ஃபார்முலா விஷயங்கள் இருக்காது. ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்!''







''நீங்க மலையாளப் படத்தில் நடிக்கப்போறதா நியூஸ் வந்துச்சே?''










''அப்படியா... எனக்கு அப்படி எந்த ஐடி யாவும் இல்லை.
இருக்கிற வேலைகளைப் பார்க்கவே எனக்கு நேரம்இல்லை. இதில் எங்கே நடிக்க? அதே
மாதிரிஅமெரிக்கா வில் செட்டில் ஆகப்போறேன்னு எழுது றாங்க. அமெரிக்காவில்
எனக்கு ஒரு வீடு, ஒரு ஸ்டுடியோ இருக்கு. இங்கே என்ன வேலை செய்றேனோ, அதையே
அங்கேயும் செய்றேன். அமெரிக்கா எனக்கு வசதியா இருக்கு. ரோட்லஃப்ரீயா நடந்து
போக லாம். ரோட்டுக் கடையில் காபி சாப்பிட லாம். யாரும் தொந்தரவு
பண்றதில்லை. எனக்கு அதுதான் வேணும். அதனால் வருஷத்தில் பாதி நாட்கள்
அமெரிக்காவில் இருக்கிறேன். அவ்ளோதான்!''







ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் P10c''எங்க எல்லாருக்குமே ரிலாக்ஸ் பண்ண ரஹ்மான் பாடல்கள் இருக்கு. நீங்க ரிலாக்ஸ் பண்ண என்ன பண்ணுவீங்க?''










''(சிரிக்கிறார்) பாட்டே கேட்க மாட்டேன்... ஒரு ரூம்ல அமைதியா உட்கார்ந்து சும்மா யோசிப்பேன். செம ரிலாக்ஸ் ஆகிருவேன்!''







''இத்தனை வருஷம் ஆகியும் இன்னொரு ரஹ்மான் வரவே இல்லை. உங்க இடத்தை யார் பிடிக்க முடியும்னு நினைக்கிறீங்க?''







''யார் நினைச்சாலும் பிடிக்க முடியும். என் இடத்தைப்
பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த அளவுகோலும் கிடையாது.
ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும்
மக்களோட அலைவரிசையும் சிங்க் ஆச்சுன்னா, நாளைக்கு என் இடத்தில் நீங்க
இருப்பீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள் கேட்டா, அது நல்ல பாட்டு.
அவங்க கேக்கலைன்னா, அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான். அதை மனசுல
வெச்சுட்டுதான் வேலை பார்க்கிறேன்!''







''பாடல்களுக்கு ரொம்ப மெனக்கெடுவீங்க. மாறுவேஷத்தில் விதவிதமான சத்தங்களைத் தேடிச் சுத்துவீங்கன்னு கேள்விப்பட்டோம்?''







''நானா? நான் ஒண்ணும் ரஜினிகாந்த் இல்லைங்க. அவர்தான்
அமைதியான இடம் தேடி அப்படி எல்லாம் விதவிதமா சுத்துவார். எனக்கு டியூன்
வேணும்னா, இருக்கிற இடத்திலேயே அமைதி ஆகிருவேன். எவ்வளவு நேரம் அப்படி
இருப்பேன்னு கணக்கு எதுவும் இல்லை. அமைதியா இருக்கும்போது கிடைக்கிற சக்தி
வேற எதிலேயும் கிடைக்காது!''







''ரஜினி, கமல் ரெண்டு பேரிடமுமே பழகி யிருக்கீங்க... அவங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயம் என்ன?''







ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் P10d''ரஜினி
சார் எந்த முடிவையும் யோசிச்சு எடுக்கமாட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள
இருக்கிற ஆன்மிக மனசு என்ன சொல்லுதோ அதைவெச்சு முடிவு எடுப்பார். அவர் என்ன
முடிவு எடுத்தாலும் அதில் மனிதத்தன்மைஇருக் கும். அது எனக்கு ரொம்பப்
பிடிக்கும்.







கமல் சார் மூணு தலைமுறைக்கு சாதிக்க வேண்டியதை ஒரே ஆளா
சாதிச்சுட்டார். அப்புறம் நீங்க நம்புவீங்களான்னு தெரியலை... ரெண்டு
பேர்கிட்டயும் நான் அவ்வளவாப் பேசினதே இல்லை. 'கோச்சடையான்’ பாட்டுகளுக்காக
டியூன் ரெடி பண்ணும்போது ரஜினி சார்கிட்ட கொஞ்சம் பழகினேன். ஒரு பாட்டில்
அவரைப் புகழ்ந்து அவரே சொல்ற மாதிரி ஒரு வசனம் வரும். அதைச் சொல்றதுக்கு
அவ்ளோ கூச்சப்பட்டார். ரொம்ப வற்புறுத்தி அந்த வசனத்தைப் பேசவெச்சோம். அந்த
எளிமைதான் ரஜினி!''










''கலையில் சாதிச்ச பலரும் அடுத்த கட்டமா ஏதோ ஒண்ணைத் தேடுறாங்க. ரஹ்மான் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கிற விஷயம் என்ன?''







''அது தெரிஞ்சாதான் தேடிப் பிடிச்சிருவேனே? ஏதோ ஒண்ணைத்
தேடி ஓடிட்டே இருக்கேன். என்னோட தேடல் முடியும்போது எல்லாமே போதும்னு நானே
நின்னுடுவேன். எனக்குனு எந்த ஏக்கமோ, ஆசையோ கிடையாது. எல்லாத்தையும்
இறைவன் கையில் கொடுத்தாச்சு. அவர் வழிநடத்துவதால்... சந்தோஷம், துக்கம்
எல்லாம் ஒரே மாதிரிதான் கடந்துபோகுது.







கோபம், சோகம், பொறாமை எல்லாமே நம்மைப் பலவீனப்படுத்தும்
விஷயங்கள். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தும்போது, இந்தக் குணங்கள்
கொஞ்சம்கொஞ்சமாக் கரைஞ்சுபோயிடும். நாமளும் வேலையில் கவனம் செலுத்தி
ஜெயிக்கலாம்!''







''என்ன இருந்தாலும், இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்குறது கஷ்டமாச்சே?''







''நானும் மனுஷன்தான். எனக்கும் தடுமாற்றங்கள் வரும்.
ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புகளைப் பத்தி யோசிக்கும்போது நாமெல்லாம்
ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப் போட்டுட்டு வேலை பார்க்கக்
கிளம்பிடுவேன்!''







thanx - vikatan







readers view




1.ரஹ்மானோட தன்னடக்கம் எந்த இசையமைப்பாளருக்கும் கிடையாது என்பதை தான் இந்த
கட்டுரை சொல்கிறது. வாழ்த்துக்கள் ரஹ்மான். இந்திய இசையை முதன் முதலாக உலக
அரங்கிற்கு எடுத்துசென்று, உலக நாயகனுக்கு முன்னதாக ஆஸ்கர் வாங்கி ஆப்பு
வைத்து, நிறைய பாடகர்களுக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கொடுத்து,
எண்ணிலடங்கா வாத்தியங்களின் வெளிப்பாடுகளை செவிக்கு தந்த நீங்கள் ஒரு
'Break Thru'.







2/ இளையராஜாவை வம்பிழுக்காமல் இருக்க முடியவில்லை.....

ஒரு பொங்கல் நாள் சன் டிவி நிகழ்ச்சியில் இளையராஜா சொன்னார்... நன்கு
நினைவு இருக்கிறது. எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று க்யூவில்
நிற்கிறார்கள். வேறு நாதியே இன்றைக்கு இசைத் துறையில் கிடையாது, அப்படி
ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால், நான் அமைப்பது தான் இசை, அதை கேட்க
வேண்டியது உங்கள் தலைவிதி.. வேறு வழியில்லை.... என்றார்....

அன்றைக்கு நினைத்தேன்... கடவுள் என்று ஒருவர் இருப்பதை மறந்து இப்படிச்
சொல்கிறாரே என்று... அதன் பிறகு அவர் மேல் இருந்த மரியாதையே போச்சு...

இந்த பேட்டியைப் படிக்கும் போது ரஹ்மானின் அடக்கம் பிரமிப்பூட்டுகிறது....
அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது... வாழ்க வளமுடன்.










3. இசைஞானியின் சாதனையை ஒரு காலத்திலும் எந்த ஒரு ரகுமானாலும் தொட்டு பார்க்க
கூட முடியாது என்பதே உண்மை.... சிறிய உதாரணமாக எடுத்து கொள்ளுங்கள், ரஜினி
படமாகட்டும், கமல் படமாகட்டும், மணிரத்தினத்தின் படமாகட்டும்...
இசைஞானியின் இசையில் வெளிவந்தது போல் மற்ற இசைஅமைப்பாளர்கள் இசையில் வந்தவை
நிலைத்து நிற்கவில்லை என்பதே உண்மை... ரஜினியின் சொந்த படமான வள்ளி
படத்தில் வந்த யாதொரு பாடலுக்கு இணையாக , மற்ற இசை அமைப்பாளர்கள் இசை
அமைத்த ரஜினி படங்களில் பாடல்கள் நிலைக்க வில்லையே... ரகுமானின் இசையில்
பாடல்கள் தற்காலிக வெற்றி நிச்சயம்... ஆனால் இசைஞானி இசையில் தான் பாடல்கள்
மனதில் அப்படியே படிந்து விடும்... அதாவது, பிறந்தவருக்கும் ,
வளர்பவர்களுக்கும், வளர்ந்து முதிந்தவர்களுக்கும், இசைஞானி அவர்களின்
தாலாட்டு இல்லாது உறக்கம் கிடையாது...


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் Empty Re: ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான்

Post by KAPILS Thu May 16, 2013 10:05 pm

தொடரட்டும் இவர்களின் இசை பயணம் : 024
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் Empty Re: ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான்

Post by Tamil Thu May 16, 2013 10:15 pm

KAPILS wrote:தொடரட்டும் இவர்களின் இசை பயணம் : ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் 340807
ஆம் ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான் Empty Re: ஏ.ஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா இணையும் மரியான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவாவுடன் இணையும் வடிவேலு?
» யுவன்-வைரமுத்து முதன்முறையாக இணையும் ‘இடம் பொருள் ஏவல்’
» யுவன்சங்கர் ராஜா நடிக்கணும்... - அமீர் விருப்பமும், யுவன் பதிலும்?
»  டூப்ளிகேட் 'தில்லு முல்லு' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள்.
» யுவன் சங்கர் ராஜாக்கு இரண்டவது திருமணம்!.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum