TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஹெட்லி விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் கண்ணாமூச்சி

Go down

ஹெட்லி விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் கண்ணாமூச்சி Empty ஹெட்லி விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் கண்ணாமூச்சி

Post by Tamil Sun Mar 28, 2010 9:08 am

ஹெட்லி விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் கண்ணாமூச்சி Tblfpnnews_43507021666



மேலும் படங்கள் >>






கடந்த
2008 நவம்பர் 26ம் தேதியை, யாரும் அத்தனை எளிதாக மறந்து விட முடியாது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான்
பயங்கரவாதிகள், ரத்த வெறி தாண்டவம் ஆடிய நாள். இந்த கொடூர தாக்குதலில்,
விலை மதிப்பற்ற 164 உயிர்கள் பலியாகிவிட்டன; நூற்றுக்கணக்கனோர் படுகாயம்
அடைந்தனர். இந்தியாவை மட்டுமல்லாமல், உலகையே உலுக்கிய இந்த துயரச்
சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட டேவிட் ஹெட்லி என்ற பயங்கரவாதி,
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான்.

இதன் மூலம், பயங்கரவாத கும்பலின் ஆணி வேரையே
அடியோடு அழித்து விடலாம் என, இந்திய அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதற்கு
அமெரிக்கா பெரிதும் உதவும் என்றும் இந்திய தலைவர்கள் நம்பினர். ஆனால்,
நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக போய்விட்டது.பயங்கரவாத ஒழிப்பு
விஷயத்தில் பெரிதும் நம்பியிருந்த அமெரிக்கா, இந்தியாவிடம் தனது வழக்கமான
கண்ணாமூச்சி ஆட்டத்தை அரங் கேற்றி, ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தடம் மாறியதற்கு காரணம் என்ன? இதன் பின்னணி
என்ன என்பது தான், தற் போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

ஒபாமா ஏற்படுத்திய நம்பிக்கை:இந்தியாவுக்கும்
- அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு, நீண்ட காலமாகவே அத் தனை சிறப்பாக
இருந் தது இல்லை. ரஷ்யாவுக்கும், நமக்கும் இடையே இருந்த உறுதியான நட்பு
தான், இதற்கு காரணம். துவக் கம் முதலே, பாகிஸ்தானின் நட்பு நாடாகத் தான்,
அமெரிக்கா தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது. அமெரிக்காவின் உலக வர்த்தக
மையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பின், பயங்கரவாத ஒழிப்பு
என்ற விஷயத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பு வளர்ந்தது.இரு
நாடுகளின் நட்புறவின் உச்சகட்டமாக, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்ற பின், இந்த நம்பிக்கை மேலும்
அதிகரித்தது. தனது இஷ்ட தெய்வம் அனுமன் என, ஒபாமா பெருமையுடன் கூற,
இந்தியர்களுக்கு தலை கால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவுக்கும் -
அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப் போர் முடிவுக்கு வந்து விட்டதாகவே
கருதப்பட்டது. இன்னும் கூற வேண்டுமானால், ஒபாமா அதிபராக பதவியேற்றதை,
அமெரிக்கர்களை விட, அதிகமாகக் கொண்டாடியது இந்திய மக்கள் தான். ஏன்,
எதற்கு என தெரியாமல், விடிய விடிய விருந்து, ஆட்டம், பாட்டம் என,
இந்தியாவின் பெருநகரங்கள் களை கட்டின.

ஹெட்லி கைதால் அதிகரித்த நம்பிக்கை:இந்த
சூழ்நிலையில் தான், கடந்தாண்டு அக்டோபரில், சிகாகோ விமான நிலையத்தில்
டேவிட் ஹெட்லி, உசேன் ராணா என்ற இரு பயங்கரவாதிகளை, அமெரிக்க
உளவுத்துறையான எப்.பி.ஐ., கைது செய்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில்,
மும்பை மற்றும் டென்மார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்த
இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மும்பை தாக்குதல் வழக்கு
தொடர்பான விசாரணையில், அடுத்த கட்டமாக என்ன செய்வதென குழம்பிப் போயிருந்த
இந்திய அதிகாரிகள், ஹெட்லி கைதால் உற்சாகம் அடைந்தனர். அமெரிக்கா
உதவியுடன் ஹெட் லியை நாடு கடத் திக் கொண்டு வந்து விசாரிக்கலாம். இதன்
மூலம், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்து விடலாம் என,
மனக் கோட்டை கட்டினர்.

அமெரிக்காவின் உள்நோக்கம்:இந்திய
அதிகாரிகள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஹெட்லி விஷயத்தில்,
துவக்கம் முதலே அமெரிக்கா, உள்நோக்கத்துடன் தான் நடந்து கொண்டது.
இங்கிருந்து சென்ற விசாரணை அதிகாரிகளுக்கு, ஹெட்லியிடம் விசாரிக்க அனுமதி
கிடைக்கவில்லை. ஹெட்லி, ராணாவின் புகைப்படங்கள் கூட இந்திய அதிகாரிகளுக்கு
தரப்படவில்லை. ஹெட்லியைப் பற்றிய பல முக்கிய விஷயங்களை, பரம ரகசியமாகவே
பாதுகாத்து வந்தது அமெரிக்கா. இதனால், ஹெட்லி அமெரிக்காவின் உளவாளியாக
இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.

ஒப்பந்த வாக்குமூலம்:ஹெட்லி
விவகாரத்தில், அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெரியாமல்
இந்திய அதிகாரிகள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த விஷயத்தில்
அதிரடியான திருப்பம் ஏற்பட்டது. மும்பை தாக்குதலில் தொடர்பு உள்ளிட்ட, தன்
மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்த ஹெட்லி, பின்னர்
திடீரென, 'பல்டி' அடித்தான். தன் மீது சுமத்தப்பட்ட 12
குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டு, அமெரிக்க கோர்ட்டில் வாக்குமூலம்
அளித்தான். இந்த வாக்குமூலத்தின் பின்னணியில் நடந்த சம்பவங்களும், பல
திருப்பங்களும் ஆச்சர்யம் நிறைந்தவை.ஹெட்லி, அமெரிக்க கோர்ட்டில் ஒப்புதல்
வாக்குமூலம் அளித்தான் என்பதை விட, ஒப்பந்த வாக்குமூலம் அளித்தான் எனக்
கூறுவது தான் சரியாக இருக்கும்.

அமெரிக்காவுக்கும், ஹெட்லிக்கும் இடையே
ஏற்பட்ட ஒப்பந்தப்படி, விசாரணைக்காக, இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு
வெளிநாட்டுக்கும் ஹெட்லி அனுப்பி வைக்கப்பட மாட்டான்.இரண்டாவதாக,
ஹெட்லியின் தண்டனை குறைப்பு, தற்போது ஹெட்லி மீது கூறப்படும்
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும்.
குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டால், ஆயுள் தண்டனை மட்டுமே கிடைக்கும்.
இந்த விசித்திர ஒப்பந்த அடிப்படையில் தான், ஹெட்லி தன் மீதான
குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டான்.

சிதறிப் போன நம்பிக்கை:ஹெட்லியின்
இந்த ஒப்பந்த வாக்குமூலம், இந்தியா வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையையும்
சிதறடித்து விட்டது. எந்த சூழ்நிலையிலும், ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு
வந்து விசாரித்து, தண்டனை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
இருந்தாலும், இந்த விஷயத்தில் இந்தியாவை ஆறுதல் படுத்தும் வகையில்,
'இந்திய அதிகாரிகள், அமெரிக்காவுக்கு வந்து ஹெட்லியிடம் விசாரணை
நடத்தலாம்; அதற்கு அனுமதி அளிக்கப்படும்' என, அமெரிக்கா தரப்பில்
அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திய தரப்பு ஓரளவு நிம்மதி அடைந்தது.அடுத்த
சில நாட்களிலேயே, 'ஹெட்லியை, இந்திய அதிகாரிகள் நேரடியாக விசாரிக்க
அனுமதிப்பது குறித்து, இன் னும் அமெரிக்கா முடிவு எடுக்கவில்லை' என,
அடுத்த அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டார், இந்தியாவுக்கான அமெரிக்க
தூதர் திமோதி ரோமர். இதனால், இந்திய அதிகாரிகள் என்ன சொல்வது என்றே
தெரியாத தர்ம சங்கடத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

ஆனாலும், உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,
'ஹெட்லியை விசாரிக்க, இந்திய அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர் என்ற
அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருப்பதாக நான் கருதவில்லை'
என கூறியுள்ளார்.

ஆச்சர்யம் இல்லை:அமெரிக்காவின்
இந்த உள்நோக்கமான செயல்பாடு, பலருக்கும் ஆச்சர் யத்தை ஏற்படுத்தி
வந்தாலும், அமெரிக்க அரசியலை நீண்ட காலமாகக் கூர்ந்து கவனித்து வருவோர்,
இதை வழக்கமான ஒன்றாகத் தான் கருதுகின்றனர். தங்கள் நாட்டில் நடக்கும்
விசாரணை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் மற்ற நாடுகளுக்கு தொடர்பு
இருந்தாலும், அதில் அந்த நாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது என்ற
விஷயத்தில் அமெரிக்கா நீண்ட காலமாகவே உறுதியாக உள்ளது.ஹெட்லி
விவகாரத்திலும் அது தான் நடந்துள்ளது என, அவர்கள் கூறுகின்றனர். இது
மட்டுமல்லாமல், பயங்கரவாதம் தொடர்பான உளவுத் தகவல்களை பகிர்ந்து
கொள்வதிலும், இது போன்ற மெத்தனப் போக்கைத் தான், அமெரிக்கா
கடைப்பிடிக்கிறது. அமெரிக் காவை பொறுத்தவரை தனக்கு கிடைக்கும் பயங்கரவாதம்
தொடர் பான உளவுத் தகவல்களை, மற்ற நாடுகளிடம் பகிர்ந்து கொள்வதில்
வித்தியாசமான நடவடிக்கைகளை கையாள் கிறது.

கடந்த 2008ல் ஆப்கனில் உள்ள இந்திய
தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர்
கொல்லப்பட்டனர். இது தொடர்பான தகவல், அமெரிக்காவுக்கு முன்கூட்டியே
தெரிந்திருந்தது. இருந்தாலும், இதுகுறித்து இந்திய அதிகாரிகளுக்கு முதலில்
தகவல் தெரிவிக்காமல், ஆப்கனுக்குத் தான் தெரிவித்தது. மும்பை தாக்குதல்
விஷயத்திலும், உருப்படியான எச்சரிக்கை எதுவும், இந்தியாவுக்கு
அமெரிக்காவிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

விடை தெரியாத கேள்விகள்:ஹெட்லி
விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியாவுக்கு கண் ணாமூச்சி காட்டுகிறது என
கூறுவோர், அதற்கான காரணங்களையும், சில கேள்விகளையும் முன் வைக்கின்றனர்.
முதலாவதாக, ஹெட்லி தனது வாக்குமூலத்தில், 'கடந்த 2002ல் இருந்து 2005 வரை,
ஐந்து முறை பாகிஸ் தானுக்கு சென்று, லஷ்கர் -இ- தொய்பா பயிற்சி முகாமில்
பங்கேற் றேன். ஐந்து முறை மும்பை சென்று, தாக்குதல் திட்டம் குறித்து
ஆய்வு செய்தேன்' என கூறியுள்ளான்.

பயங்கரவாத நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து
வரும் அமெரிக்காவின் கண்களில், ஹெட்லியின் ரகசிய பயணங்கள் தட்டுப்
படவில்லையா? அல்லது ஹெட்லியின் பாகிஸ் தான் பயணங் கள் அமெரிக்காவுக்கு
தெரிந்தே நடந்ததா?
* ஹெட்லி அமெரிக்க உளவாளி என கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை?
* மும்பை தாக்குதல் வழக்கு விசாரணைக்காக ஹெட்லி, ராணா ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுப்பது ஏன்?
* ஹெட்லி, ராணாவின் புகைப்படங்களைக் கூட, வெளியிட மறுக்கும் ரகசியம் என்ன?
*
அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹெட் லியின் நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள்
கண்காணிக்கவில்லையா? அவரது நடவடிக்கைகளில் அமெரிக்க உளவு அதிகாரிகளுக்கு
கூட சந்தேகம் எழாதது ஏன்?
* ஹெட்லியிடம் ஒப்பந்த வாக்குமூலம் வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்பது போன்ற விடை தெரியாத கேள்விகள் ஏராளமாக உள்ளன.

இந்தியாவின் நிலை என்ன?இது தொடர் பாக இந்திய அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ஹெட்லி
விவகாரத்தின் மூலம், ஒபாமா மட்டுமல்லாமல், அமெரிக்காவின் அதிபராக யார்
வந்தாலும், இதுபோன்ற பிரச்னைகளில் 'பெரியண்ணன்' மனப்பான்மையுடன் தான்,
அமெரிக்கா செயல்படும் என தெரிய வந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்,
அமெரிக்காவுடன் எவ்வளவு அதிகமாக நெருக்கம் காட்டினாலும், இந்த நெருக்கத்தை
அமெரிக்கா, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, இந்தியாவுக்கு
இதனால் எந்த பயனும் கிடைத்ததாக தெரியவில்லை.அமெரிக்காவின்
நிர்பந்தத்துக்கு பணிந்து போக வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை
இந்தியாவுக்கு ஏற்பட்டு விட்டதோ என்றே கருத வேண்டியுள்ளது. பயங்கரவாதம்
என்ற பொதுவான விஷயத்தில் கூட, அமெரிக்கா சுயநலத்துடன் நடந்து கொண்டு,
இரண்டு விதமான போக்கை கடைப்பிடிப்பது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அரசியல்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெட்லியின் புகைப்படம் எங்கே?ஹெட்லியையும்,
ராணாவையும் கைது செய்து, ஐந்து மாதங்களாகி விட்டன. ஆனால், இன்னும்
அவர்களின் புகைப்படங்களைக் கூட, அமெரிக்க அதிகாரிகள் வெளியிடாமல் ரகசியமாக
வைத்துள்ளனர். ஹெட்லி, ராணா என்ற பெயரில் எப்போதோ, எங்கோ எடுக்கப்பட்ட
தெளிவற்ற ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே பத்திரிகைகளில்
பிரசுரிக்கப்படுகின்றன.இதுகுறித்து செய்தி வெளியிடும், 'டிவி' சேனல்கள்
கூட, ஹெட்லியையும், ராணாவையும் பற்றிய, 'கிராபிக்ஸ்' படங்களைத் தான்,
வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன. ஹெட்லி பற்றிய மர்ம முடிச்சை,
அமெரிக்க அதிகாரிகள் எப்போது முழுமையாக அவிழ்க்கப் போகின்றனர் எனத்
தெரியவில்லை.

யார் இந்த ஹெட்லி? அமெரிக்க
உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஹெட்லியும், ராணாவும் பாகிஸ்தானைச்
சேர்ந்தவர்கள். ஹெட்லி அமெரிக்க குடியுரிமையும், ராணா கனடா நாட்டு
குடியுரிமையும் பெற்றவர்கள். இவர்கள் இருவரும், பாகிஸ்தானில் உள்ள ராணுவக்
கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்ற தகவலும் உண்டு. இவர்களுக்கு,
பாகிஸ்தானில் உள்ள மூத்த ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு உண்டு.கடந்த 1997ல்
ப்ரூக்ளினுக்கு ஹெராயினை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டவர் ஹெட்லி.
அப்போது அவர் பெயர் ஹிலானி; 2006ல் தனது பெயரை, டேவிட் கோல்மேன் ஹெட்லி என
மாற்றிக் கொண்டார். அடிக்கடி பாகிஸ்தானுக்கு சென்று, பயங்கரவாத பயிற்சி
முகாம்களில் இருவரும் பங்கேற்றதுடன், இந்தியாவுக்கும் வந்து தாக்குதல்
நடத்துவதற்கான சதித் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

பாகிஸ்தானுடனும் அணு ஒப்பந்தம் :
'பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, சர்வதேச
நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இருந்தாலும்,
பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடக்கும் நாடாகக் கூறப்படும் பாகிஸ்தானுக்கு,
அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது; அதி நவீன ஆயுதங்களையும்
தொடர்ந்து அளித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுடன் செய்து கொண்ட
அணுசக்தி ஒப்பந்தம் போல், பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள,
அமெரிக்கா முயற்சிப்பதாக பேச்சு எழுந் துள்ளது.சமீபத்தில், பாகிஸ்தானுக்கு
சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, 'அணுசக்தி ஒப்பந்தம் செய்து
கொள்வது உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து கோரிக்கைகளையும், அமெரிக்கா
கவனத்தில் கொண்டுள்ளது' என, அதிரடியாக அறிவித்துள்ளார். இது, இந்த
விஷயத்திலும், அமெரிக்கா உள்நோக்கத் துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சந்திரன், செவ்வாய்க்கு செயற்கை கோள்: இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா
» சேரன் மகள் காதல் விவகாரத்தில் போலீஸ் நடந்தது போல் இளவரசன்- திவ்யா விவகாரத்தில் நடந்திருக்கலாமே: ராமதாஸ்
» பாக்., ராணுவத்தில் மகனை சேர்க்க ஹெட்லி விருப்பம்
» உயிர் பிழைக்க மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லி திட்டம்
» சித்தி வினாயகர் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கிய ஹெட்லி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum