TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது. அதன் வரலாறு

Go down

1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது. அதன் வரலாறு  Empty 1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது. அதன் வரலாறு

Post by ஜனனி Sat Mar 30, 2013 9:40 pm

1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக
இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது. இதற்க்கு மக்கள் போராட்டம் ஒரு
காரணம் என்றாலும், அசுர பலம் கொண்ட உலகப்
பணக்காரன் அகர்வாலை எதிர்த்து, எவ்வித சமரசமும் இன்றி தன சொந்த செலவில்
நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வழக்கை நடத்தியவர் வைகோ.
பல சமயங்களில் உச்ச நீதி மன்றத்தில் தானே வாதாடியும் இருக்கிறார்.

ஒரு ஆதரவாளன் என்கிற முறையில், வைகோ மேற்கொண்ட தனிப்பட்ட முயற்சியின்
காரணமாகவும் இன்றைக்கு ஆலை மூடும் அளவிற்கு நிலை எட்டப் பட்டுள்ளது என
உறுதியாகச் சொல்வேன். அதற்கு அவர் மேற்கொண்ட சிரமங்களை ஓரளவு அறிவேன்.
முதல் நாள் குமரியில் ஒரு போராட்டத்தில் இருப்பார், மறுநாள் டெல்லியில்
வழக்கில் ஆஜராகி வாதாடுவார். அடுத்த நாள் காலை, கோவையில் போராட்டக்
களத்தில் நிர்ப்பார். இதை தூத்துக்குடி வட்டார மக்கள் நன்கு அறிவர்.
ஆனாலும் தனக்கென இதில் எவ்வித பெருமையும் தேடாது மக்கள் போராட்டத்திற்கு
மகத்தான வெற்றி என அறிக்கை தந்துள்ளார். ஆலைக்கு அனுமதி அளித்த அதிமுக
அரசையே ஆலையை மூட வைத்தவர் வைகோ. அனுமதித்த போது கண்டித்தார். மூடிய போது
பாராட்டுகிறார். அதுதான் ஒரு ஸ்டேட்ஸ்மேன் என்பதற்கு அடையாளம். கூட்டணியோ,
மிரட்டலோ, சமரசமோ அவரது நிலைப்பாட்டில் எவ்வித தொய்வும் ஏற்ப்படுத்த வில்லை
என்பது தெளிவாகிறது.

இறுதித் தீர்ப்பில் ஆலை நிரந்தரமாக மூடப்
படும் பட்சத்தில், அந்த வெற்றியை நாங்கள் உரிமை கொண்டாடப் போவதில்லை. அதை
தமிழக மக்களுக்கு, குறிப்பாக தூத்துக்குடி மக்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.

அறிக்கை:
மக்கள் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி!

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடிட முடிவு எடுத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டு!

தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும் நாசகார
நச்சு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று
மண்டலம் அனைத்தையும் நஞ்சாக ஆக்கி, மனித உயிர்களுக்கும், கடல்வாழ்
உயிரினங்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெரும் கேட்டினை, ஆபத்தை
ஏற்படுத்தும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து
அகற்றக்கோரி, கடந்த 17 ஆண்டுகளாக போராடி வந்தோம்.

விவசாயிகள், மீனவர்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் Þடெர்லைட்டை எதிர்த்து வந்தனர்.
1994 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தில்
அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, விவசாயிகள் போராடி, ஒரு
கட்டத்தில் உடைத்து நொறுங்கினார்கள். அன்றைய மராட்டிய மாநில சரத்பவார்
அரசு, லைசென்சை இரத்து செய்தது.

குஜராத் கோவா மாநிலங்கள், ஆலையை நிறுவ அனுமதிக்காததால், அதன் பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டெர்லைட் ஆலைiயை எதிர்த்து உறுதிமிக்க எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.

1996 மார்ச் 5 இல் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்.

1996 மார்ச் 12 இல் கடையடைப்பு கருப்புக்கொடி போராட்டம்.

1996 ஏப்ரல் 1 இல் Þடெர்லைட் எதிர்ப்புப் பேரணி.

1996 டிசம்பர் 09 இல் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்.

1997 பிப்ரவரி 24 இல் மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர் அலுவலகம் முற்றுகை,
மறியல் ஆயிரக்கணக்கானோர் கைது. ஜூன் 2, 3, 4 தேதிகளில் திருவைகுண்டத்தில்
இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக Þடெர்லைட் எதிர்ப்புப் பிரச்சார
நடைப்பயணம்.

1997 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, பத்து ஆயிரத்துக்கு
மேற்பட்டோர் பங்கு ஏற்ற Þடெர்லைட் முற்றுகைப் போராட்டம், கைது என,
மறுமலர்ச்சி தி.மு.கழகம் எனது தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தியது.
ஆகÞட் 30 முற்றுகைப் போராட்டத்தின்போது, Þடெர்லைட் ஆலையில் இரண்டு
தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததற்கு விடுதலைப்புலிகளின் சதி என்று நிர்வாகம்
பொய்யாக பழி சுமத்தியது.

உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல்
பாதுகாக்கும் அமைப்பின் சார்பில், ஏற்கனவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து ரிட் மனு
தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தின் மூலம் Þடெர்லைட்டை அகற்றப்
போராடுவோம் என முடிவு எடுத்து, நானும் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

1998 நவம்பர் 23 இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது.

1998 டிசம்பர் 9, 10, 11 தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதி லிபரான் அவர்கள் அமர்வில், Þடெர்லைட்டை எதிர்த்து நான் வாதாடினேன்.
வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதால்,
டிசம்பர் 14 ஆம் தேதி அன்றும் அங்கும் வாதாடினேன்.

1999 பிப்ரவரி 23 இல், ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் போராடி வந்தோம்.

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின்
நீதியரசர் எலிபி தர்மாராவ் அவர்களின் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூடச்சொல்லி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை
நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது.

2012
அக்டோபர் வரையில் உச்சநீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 அமர்வுகள் வாய்தா
நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு வாய்தாவிலும், நான் தவறாமல் பங்கு
ஏற்றேன். உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஸ்டெர்லைட் ஆலையில் நாக்பூர் நீரி
நிறுவனம் 2011 ஏப்ரல் 6, 7, 8 தேதிகளிலும், 19, 20, 21, 22 தேதிகளிலும்
ஏழு நாட்கள்நடத்திய ஆய்விலும் நான் பங்கு ஏற்றேன். 2012 அக்டோபர் 1 ஆம்
தேதியும், 9 ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பின் நிறைவு வாதங்கள்
எடுத்து வைக்கப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று
நான் மிகவும் முயற்சி எடுத்துத் திரட்டிய பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து,
இரண்டரை மணி நேரம் வாதாடினேன். Þடெர்லைட் ஆலை சுற்றுவட்டாரத்தில்
சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், Þடெர்லைட் கழிவுகளின் மாதிரிகளை,
அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர்
மார்க் செர்னைக் அவர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைத்து, அவர் தந்த அறிக்கையை
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

விளைநிலங்கள் அடியோடு நாசம்
ஆகும்; கால்நடைகள் நச்சுத் தண்ணீர் குடித்து இறந்துபோகும். மனிதர்களுக்கு
நுரையீரல் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, ஆயுள் காலம்
குறையும் என்பது அறிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பு, ஏப்ரல் 2 ஆம் தேதி வர இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக
மூடப்படும் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

இந்நிலையில்,
மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய
நச்சுப் புகையால், தூத்துக்குடியின் பல பகுதிகளில் மக்கள் மூச்சுத் திணறல்
ஏற்பட்டு, சுவாசிக்கச் சிரமப்பட்டு, இன்னலுக்கு ஆளானார்கள். பல இடங்களில்
மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின.


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு சார்பில், மார்ச் 28 ஆம் தேதி
ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். தூத்துக்குடி
வியாபாரிகள் சங்கமும், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கடைகளை
அடைக்கக் கோரிக்கை விடுத்தன. தூத்துக்குடி மாநகரத்தின் அனைத்துக் கடைகளும்
மூடப்பட்டன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்
தரப்பினரும் ஆயிரக்கணக்கில் 28 ஆம் தேதி Þடெலைட் முற்றுகை போரில் பங்கு
ஏற்றனர்.

ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு போராட்டக் களத்தில்
கோரிக்கை விடுத்தோம்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் போட்ட முதலீட்டை
விட 40 மடங்கு கொள்ளை இலாபம் அடித்து இருப்பதால், இந்த ஆலையில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

பொதுமக்கள்
நலனைக் காக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, Þடெர்லைட் ஆலையை மூடிட மிகச்
சரியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு,
தூத்துக்குடி மாநகர மக்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பிலும், 17
ஆண்டுகளாக Þடெர்லைட்டை எதிர்த்துப் போராடி வரும் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும்,
நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
30.03.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரித்தானியாவில் நடைபெற்ற தியாகி முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
» 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை
» 6 வயதில் இருந்து இன்றுவரை எத்தனை ஆண்கள் என்னை…
» ஜெயா டி வியின் 14ஆம் ஆண்டு விழாவில் அதன் ஒரிஜினல் நிர்வாக இயக்குநரான ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum