TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட ‘இமேஜ் தெரபி’ எனும் மனோதத்துவ சிகிச்சை பகுதி – 02.By டாக்டர். ராஜன்!

Go down

சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட ‘இமேஜ் தெரபி’ எனும் மனோதத்துவ சிகிச்சை பகுதி – 02.By டாக்டர். ராஜன்! Empty சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட ‘இமேஜ் தெரபி’ எனும் மனோதத்துவ சிகிச்சை பகுதி – 02.By டாக்டர். ராஜன்!

Post by ஜனனி Sat Mar 16, 2013 3:52 pm

நேற்று உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். பலர் படித்திருப்பீர்கள். எனக்குத் தெரியும், இது போதாது உங்கள் புகைத்தலை நிறுத்த.

நீங்கள் நிச்சயம் நிறுத்துவீர்கள்…நிறுத்தியபின் ஆயாசமாக மூச்சு விடுவீர்கள். அந்தப் பெருமூச்சில் ஒரு விடுதலை உணர்வு இருக்கும்.

இனி என் கதையையும் மற்றவர் கதைகளையும் கேட்கப் போகிறீர்கள்.

நேற்றைய தினம் எத்தனை பேர் இந்த
பழக்கத்தை கை விடுவதாக உறுதி பூண்டீர்கள்? இருந்தாலும் விட முடியவில்லை.
இன்று காலை எழுந்தவுடன் வாய் நம நம என்கிறது. டாய்லெட் போக முடியவில்லை.
காபி குடிக்கையில் கையில் சிகரெட் கேட்கிறது…


‘விட வேண்டும் என்று தோன்றுகிறது…ஆனால்
விட வேண்டாம் என்றும் தோன்றுகிறது. நமக்குத்தான் இதுவரை ஒன்றும்
ஆகவில்லையே…. சிகரெட் குடிப்பவன் 60 வயதில் தானே சாகிறான்…எனக்கென்ன வயது
34 தானே? என்ன வந்துவிடும்? டிமிடித் சொன்னது நல்ல விஷயம்தான்…. கண்டிப்பாக
விட்டு விடப் போகிறேன் அடுத்த வாரம்… அதுவரை டெய்லி ரெண்டே ரெண்டு சிகரெட்
மட்டுமே தான் … பிடித்துப் போகிறேன்’ ௦ என்று சொல்லும் கனவான்களே….


என் கதையை கேளுங்கள்…….

நானும் உங்களைப் போலத்தான்…. இதே உணர்வுகள் தான்.
[You must be registered and logged in to see this image.]
மார்ச் 3 , 2003 இரவு சுமார் 12 :45 …. குவைத் நாட்டில் என் அறைப்
படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தேன் …. திடீரென்று என் கனவில் என் தாயார்
எழுப்புகிறார்.. ‘ டேய் எழுந்திருடா..எழுந்திருடா’ என்று….. ஊரில்
இருக்கும் என் அம்மா குவைத்தில் வந்து என்னை எழுப்புவதாவது…. கனவாக
இருக்கும்…. ஐய்யயோ …. கனவு என்றால்? பலிக்குமோ? என் அம்மாவிற்கு என்னோ
ஆயிற்றோ? எனும் பதைப்பில் நான் எழுந்து உட்காருகிறேன்.

சுற்றிலும் பார்த்தால் அம்மா இல்லை… ஒ! கனவு அது….. ஆனால் … இதென்ன
நெஞ்சுக் குழியில் ஒரு வலி? இருக்கலாம் நேற்றிரவு உண்ட ரவா உப்புமா சரியாக
ஜீரணம் ஆகவில்லை போலிருக்கிறது…. அஜீரணம் காரணமாக ஒரு நெஞ்சு எரிச்சல்
வருமே அதுவாக இருக்கலாம்…..

அனால் இந்த வலி சற்றே வித்தியாசமாய் இருக்கிறதே? என் நெஞ்சுக் குழியில்
யாரோ ஒரு உளி வைத்து பிளந்தால் உண்டாகும் வலி போல இருக்கிறதே? இது போல
வலியை நான் என்றுமே உணர்ந்தது இல்லையே? என் ஒரு கையை வெட்டி எறிந்தாலும்
இத்தனை வலி உண்டாகப் போவதில்லை..

அத்தனை வலி. உயிர் போகும் ஒரு வலியை 100 என்று ஒரு அளவீடு எடுத்துப்
பார்த்தால் எனக்கு நூறில் தொண்ணூற்றி ஒன்பது பங்கு வலி…. இதில் நூறு என்பது
உங்கள் மீது ஒரு லாரி மேலே ஏறி அதன் பின்னும் அரை மணி நேரம் உயிரோடு
இருக்கையில் நேரும் மரண வலி… அதுதான் அதிக பட்ச வலி….

நான் படித்தவன் அல்லவா? எனக்குத்தெரியாதா? இந்த நெஞ்சு வலி மாரடைப்பாக
இருக்காது…. ஏனெனில் மார்பு வலி வரும்போது எத்தனை பேர் சினிமாவில் தங்கள்
இடது பக்கம் உள்ள இருதயத்தின் மேல் கை வைத்தபடி அல்லவா சாகிறார்கள்?
சினிமாக் காரனுக்குத் தெரியாதா? எது மாரடைப்பு எது அஜீரண வலி என்று? நான்
ஒரு கதாசிரியன், பொறியாளன் மற்றும் நானும் ஒரு சினிமாக் காரனல்லவா? இது
மாரடைப்பு அல்ல…..

சமையல் அறைக்குச் செல்கிறேன்… ஃ பிரிட்ஜின் உள்ளே இரண்டு லிட்டர் கோக
கோலா பாட்டில் இருக்கிறது… நிறைய வாயு அடைத்து…. குடித்தால் உடனே வாயு
அடைப்பு வெளியே வந்து விடுமே…. ஹஹஹா எனக்குத் தெரியாததா? நான் படித்தவன்
இல்லையா?

குடித்தேன்…! வாயு வெளிவந்தது ஏப்பமாக….! ஆனால் வலி குறைந்த பாடில்லை…
நம்புங்கள்…. முழு இரண்டு லிட்டர் கோலாவையும் குடித்தும் வலி நின்ற
பாடில்லை… அதைவிட முக்கியம் …. அந்த வலி நெஞ்சில் இருந்து முதுகிற்கு மெல்ல
நகர ஆரம்பித்தது…..

வலியின் உக்கிரம் குறையாமல் முதுகில் யாரோ பெரிய கோணி ஊசியால் ஓங்கிக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்….

என் மனைவியை எழுப்பினேன்… சொன்னேன்….

‘ஐயோ…மாரடைப்பாக இருக்குமோ? உடனே ஆஸ்பிடல் செல்லலாம்’ என்றாள்.

‘முட்டாள் வலி பாரு நெஞ்சுக் கூட்டின் மேலே… இருதயத்தில் இல்லை எனவே இது மாரடைப்பு இல்லை’ என்று அவளுக்குக் கூறினேன்…

சட்டென்று வாந்தி வந்தது…அது வரும் போதே எனக்கு நம்பர் டூவும் வந்தது… வலி இன்னும் அப்படியேதான் இருந்தது…

இப்போது மணி இரவு 2 :45 . வலி மெல்ல நகர்ந்து இப்போது என் இடது கையின்
தோளுக்கு வருகிறது… என் மனைவி என் உடலை தொட்டுப் பார்க்கிறாள்…. ‘அப்பாடா
வியர்க்கவில்லை….ஆகையால் மாரடைப்பாக இருக்காது’ என்கிறாள். அனால் என் உடல்
ஜில்லென்று உள்ளே உணர்ந்து கொண்டிருக்கிறேன் (this is called cold sweat ).
குளிர் பிரதேசங்களில் வியர்வை தண்ணீராய் வெளியில் வராது…ஆனால் உடல்
சில்லிடும்….

ஒருவேளை இருக்கலாமோ? எதற்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே
என்று என் மனைவிடம் சொல்கிறேன் ‘ எனக்கு கடன் என்று ஒன்றும் இல்லை…. என்
கணக்கில் உள்ள குவைதி தினார் ஒரு ஆயிரத்து ஐண்ணூறு… ஊரில் NRI பணம் சுமார்
ஒரு லட்சம் இருக்கும்’ என்கிறேன்…

‘எதற்கு இந்தக் கணக்கெல்லாம்?’ என்கிறாள்! ‘ ஒரு வேளை எனக்கு ….’ முடிக்கும் முன் பலமாக அழத்தொடங்குகிறாள்…

‘பாவி மனுஷா…பணத்துக்காகவா உன்னை நான் கலியாணம் செய்தேன்? ‘ கதறுகிறாள்…

‘இல்லை கீதா இது ஒரு சாத்தியம் மட்டுமே… என் ATM கார்டு இதோ இருக்கிறது
அதன் பின் நம்பர் **** …பணம் எடுத்துக் கொள்…. இதோ வெற்று செக் என்
கையெழுத்துடன்…

இதோ வெற்றுத்தாள் கையெழுத்து இடுகிறேன்’ என்றெல்லாம் சொல்லும் பொது அவளுக்கு மேலும் அழுகை வருகிறது…

காலையில் தன ஆறாவது வகுப்பின் முதல் தேர்வை எழுதப் போகும் என் மகனைப்
பார்க்கிறேன்…. உறங்கிக் கொண்டிருக்கிறான்…. எழுப்பலாமா? வேண்டாம்
உறங்கட்டும்… எனக்குத்தான் ஒன்றுமில்லையே! காலையில் சரியாகிவிடும்…..

என் மனைவி என்னை நச்சரிக்கிறாள்… ‘ஆஸ்பத்திரி போகலாம்’ என்று. நான் சொல்கிறேன்… ‘காலையில் பார்க்கலாம், அதுவரை படுத்துத் தூங்கு’ .

நான் வீட்டின் எஜமானன் அல்லவா? எப்போது நான் என் மனைவியின் பேச்சைக்
கேட்டிருக்கிறேன்? அவள் என் பேச்சைக் கேட்டு நடப்பதுதான் பதி பத்தினி
தர்மம் அல்லவா?

ஆகவே அவள் அரை மனதோடு நான் சொன்னால் சரியாக இருக்கும் என்று
(கனவான்களே….உங்களில் 99 % மனைவிகள் இந்த வகுப்பைத்தான் சேர்ந்தவர்கள்….
ஞாபகம் இருக்கட்டும்… அதாவது நீங்கள் அறிவாளிகள்… அவர்கள் உங்கள் பேச்சை
கேட்டு நடக்கும் ஒரு மனுஷி மட்டுமே…,.)

மணி இப்போது 3 : 45 விடி காலை….. கைகளை மார்பின் குறுக்காக கட்டி
கவிழ்ந்தபடி சோபாவில் படுத்து கிடக்கிறேன்… முடியவில்லை.. புரண்டு
படுக்கிறேன் முடியவில்லை… வலி என்னைக் கொல்கிறது…. என் மனைவியும் படுக்கச்
சென்று விட்டாள்….

மணி ஆறு ஆகும்போது என்னை நான் நம்பாமல், அல்லது என் சினிமா நடிப்புகளை நம்பாமல், முதல் முறையாக பய உணர்வு தோன்றியது……

ஆறு பத்திற்கு என் மனைவியை மீண்டும் எழுப்புகிறேன்…. ‘என்னால் முடியவில்லை…வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்!’
அப்போதும் அவள் சொல்கிறாள்… ‘வண்டியை நீங்க ஓட்டாதீங்க…சுப்புலதாவின் கணவர் கோபியை கூப்பிடுகிறேன்’
‘வேண்டாம் ஐந்து கிமீ தானே….நானே ஓட்டிச் செல்கிறேன்….’

என் மிட்ஷுபிஷி கேலன்ட் காரை ஓட்டிக் கொண்டு பக்கத்தில் உள்ள அல் ராஷித்
ஆஸ்பிடலுக்கு செல்கிறேன்… எமர்ஜென்சி மட்டுமே திறந்திருக்கிறது… ஒரு ரஷ்ய
டாக்டரிடம் விவரம் சொல்கிறேன்….
உடனே பட படவென என்னை சோதிக்கிறார்… ஈசீஜி எடுக்கிறார்… பல்ஸ் பார்க்கிறார்….

டாக்டர் பரபரப்பாகி ‘உடனே ஆம்புலன்சை கூப்பிடுங்கள்…. இந்த ஆளுக்கு
மேசிவ் ஹார்ட் அட்டாக்….பல்ஸ் 21 மட்டுமே….இறந்தது கொண்டிருக்கிறான்…..
இன்னும் 10 நிமிடங்களில் ப்ரைன் ஹெமரேஜ் ஆகி கோமாவிற்குப் போகப்
போகிறான்…ஓடுங்கள் உடனே……ஓடுங்கள்….காப்பாற்ற முடியும் என்று
தோன்றவில்லை…நர்ஸ்…ஷாக் ரெடி பண்ணுங்க… உடனே ஆஸ்ப்ரின் இன்ஜெக்ஷன்
குடுங்க…..’

என் மனைவி மயக்கம் போட்டு விழுகிறாள்… யாரோ அவளை தெளிவிக்கிறார்கள்…..
உடனே அவள் கோபிக்கு போன செய்கிறாள்.. மூன்றாவது நிமிடம் கோபி தன பென்ஸ்
காரில் வெளியில் நிற்கிறார்… …

மணி இப்போது ஏழு…காலையில் பள்ளிக்கூடம் நிரம்பிய இடத்தில் தான்
குவைத்தின் பிரதான ஆஸ்பத்திரி இருக்கிறது ‘முபாரக் ஆஸ்பத்திரி’. என்
மேலாளரின் மனைவி அங்கே டாக்டராக வேலை செய்கிறார்.. அவருக்கு விஷயம் தெரியப்
படுத்தப் படுகிறது… உடனே அவர் போன் மூலம் எமர்ஜென்சி கதவுகள் திறக்க
ஏற்பாடு செய்கிறார்… எனக்காக டாக்டர் சுரேஷ் வெளியே காத்து நிற்கிறார்…
கூடவே அவரின் உதவியாளர்களோடு…. ஒவ்வொரு வினாடியும் முக்கியமாயிற்றே…..

காரில் கோபி எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வருகிறார்’ ஒன்றும் ஆகாது
ராஜன்…கடவுள் இருக்கிறார்…விழித்துக் கொண்டிருங்கள்….உறங்காதீர்கள்’….

உலகத்தின் உள்ள எல்லா கார்களும் அன்று காலையில்தான் எங்கள் வழியில்
வந்தது போல அத்தனை டிராபிக் ஜாம் சாரா அம்மான் சாலையில்… கோபி
பிளாட்பாரத்தின் மீதெல்லாம் ஓட்டுகிறார்….
ஆஸ்பத்திரி வாசலை அடையும்போது டாக்டர் சுரேஷ் மின்னல் வேகத்தில் செயல்
பட்டு என்னை சக்கரப் படுக்கையில் வைத்து தள்ளிக் கொண்டு (அது தவறு…ஓட்டிக்
கொண்டு ) போனார்கள்…..
என்னை சோதனை செய்து என்னிடம் என்னவோ கேட்கிறார்…. எனக்கு அவர் உதடு அசைவது மட்டுமே தெரிகிறது… காது கேட்கவில்லை…..

மெல்ல மெல்ல என் கண்கள் இருள்கின்றது….. என் கடைசிப் பார்வையில் என் மனைவி அழுது கொண்டு…. கூடவே கோபியும் கண்ணீருடன்……

டாக்டர் சுரேஷ் சொல்வது கடைசியாகக் கேட்கிறது ‘ டூ லேட் ….. He mssed
his thrombolosis for 7.5 hours since his massive heart attack…. he will
go in coma and eventually to brain haemorage….’ …

என் கண்கள் என்னை அறியாமல் மூடி….. என்ன நடந்தது என்று தெரியவில்லை….

நான் இறந்திருந்தேன்.

அந்த வினாடிகளில் நான் உயிருடன் இல்லை… மார்பு துடிப்பு நின்று விட்டது.

எல்லாவற்றிற்கும் காரணம் ….. ஒரே ஒரு காரணம்…….
புகைப் பழக்கம்….. புகை… பகையை விடக் கொடிய புகை….. பகவைனை நம்பலாம் புகையை நம்பக் கூடாது எனும் புகைப் பழக்கம்…..

என் சொந்தங்களையும், என்னையே நம்பி வந்த மனைவியையும், என் ஜீனை
கொண்டிருக்கும் என் மகனையும், என்னைப் பெற்றவர்களையும், என் உடன்
பிறப்புகளையும்….இதோ என் முன் அழுது நிற்கும் என் நண்பர் கோபியைப் போல
பலரையும் …. இவ்வுலகில் விட்டு விட்டு நான் என் கடைசி பயணம் போகப்
போகிறேன்….எதற்கு இந்த உலகிற்கு நான் வந்தேன் ? என்ன சாதித்தேன் ?

விட்டு விடுங்கள் சார்…இந்தப் புகைப் பழக்கத்தை.. வேண்டாம்…அது ஒரு துரோகி…!

இனி இந்த வீடியோ பாருங்கள்.. நாளை இது பற்றி பேசலாம்:
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum