TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தாய் தமிழகத்துக்கு ஈழத்தவரின் உயிர் வலி இது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கைகளிலிருந்து...

Go down

தாய் தமிழகத்துக்கு ஈழத்தவரின் உயிர் வலி இது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கைகளிலிருந்து... Empty தாய் தமிழகத்துக்கு ஈழத்தவரின் உயிர் வலி இது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கைகளிலிருந்து...

Post by mmani Wed Mar 13, 2013 9:03 am

தாய் தமிழகத்துக்கு ஈழத்தவரின் உயிர் வலி இது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கைகளிலிருந்து...
******************************
*********************
தாய் தமிழகத்துக்கு ஈழத்தவரின் உயிர் வலி இது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கைகளிலிருந்து... 735114_339553972832766_544325177_n
கல் தோன்றி மண் தோன்றா
காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் அன்னை ஈன்றெடுத்த நீண்ட நெடிய வரலாற்று
சிறப்பு மிக்க இனம் எம் தமிழ் இனம். தமிழகத்தையும் ஈழத்தையும் பூர்வீக தாய்
நிலமாக கொண்ட எமது இனம் ஈழத்தில் ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளாக
தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் போராடி வருகின்றனர்.

1921 ம்
இனப்பிரதிநிதித்துவம் தொடர்பாக தேசிய காங்கிரசால் தமிழர்களுக்கு
கொடுக்கப்பட வாக்குறுதி மீறப்பட்டபோது அதில் இருந்து விழகி தமிழரின்
தனித்துவத்தையும் அரசியல் உரிமைகளையும் பெறுவதற்கென 1923 ம் ஆண்டு
தமிழ் தலைமைகளால் தமிழ்மகஜன சபை உருவாக்கப்படுகின்றது இதுவே சிங்கள
பேரினவாத்தை எதிர்த்த முதலாவது உரிமை முழக்கம். இதன் வளர்ச்சியும்
நீட்சியுமாய் 1976 ல் தனிநாட்டு பிரகடனம் செய்யப்பட்டு இன்று வரை அதற்காக
போராடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் அகிம்சை வழியிலும் பின்னர் கடந்த
மூன்று தசாப்தங்களாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால்
ஆயுதவழியிலும் போராடி 2009 ல் ஆயுத போராட்டம் மௌநிக்கப்பட்டது. வெற்றி
மமதையில் மேலும் மேலும் தமிழர்களை அடக்குவதற்கான செயற்பாடுகளையே சிங்கள
அரசு செய்து வருகின்றது.

தமிழ் அன்னையின் ஒருதாய் வயிற்று
பிள்ளைகளாகிய தமிழக உறவுகள் அன்று தொடக்கம் இன்றுவரை தொப்புள்கொடி உறவுகளான
ஈழத்தமிழரின் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்மாலான பங்களிப்பை செய்து
வருகிறீர்கள். அண்மைய சில காலங்களாக தன்னின மான வீரமற ஈகை தமிழர்
முத்துக்குமார் தொடங்கி மணி வரை பலர் தமது இன்னுயிர்களை ஈழ விடுதலைக்க
ஈந்திருக்கிரார்கள். ஈழத்தாய் எப்போதும் அவர்களை தன் நெஞ்சறையில்
காவியபுருசர்களாக சுமந்திருப்பாள்.
தமிழீழ ஆத்மா தன் சரீரமாகிய
பூர்வீக பூமியை இழந்து என்றும் இல்லாதவாறு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு
நிற்கிறது. மாற்றான் தாய் தமிழ் பூமியில் கோரநர்த்தனம்
ஆடிக்கொண்டிருக்கிறான். இதுவரையில் ஏறத்தாழ இரண்டரை இலட்சத்துக்கும்
மேற்பட்ட உறவுகளை சிங்கள அரசு போரால் கொன்று குவித்திருக்கிறது.


இறுதியாக முள்ளிவாய்க்காலில் நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை
இனப்படுகொலை செய்தும் இதுவரை அதன் வெறி தீர்வதாக தெரியவில்லை. போர் நிறைவு
பெற்ற பின்னும் இதுவரையில் போர் தொடங்கியதற்கான காரணங்கள்
தீர்க்கப்படுவதற்கான எந்த முயற்சிகளையும் சிங்கள அரசு மேற்கொள்ளவில்லை.
மாறாக மீண்டுமொரு போருக்கு எமது சந்ததியை இட்டுச்செல்வதற்கான
செயற்பாடுகளையே அது தொடர்ந்து செய்து வருகின்றது.

அதன் மூலம்
ஈழத்தமிழர் வன்முறையாளர்கள் என்பதை காட்டுவதற்கு கடும் பிரயத்தனம் எடுத்து
வருகின்றது. ஈழத்தமிழர் வன்முறையாளர்கள் அல்ல ஆயுத விரும்பிகள் அல்ல,
தமிழையும், தமிழ்மண்ணையும், தமிழ் மக்களையும், சிங்களம் ஆயுதத்தாலும்,
வன்முறையாலும், கொன்று குவித்த வேளையில் வேறு வழி இன்றி தமிழ் அன்னையை
காக்க ஆயுதமேந்தியவர்களே ஈழத்தமிழர்கள் இதனை உலகம் நன்கு புரிந்தும்
புரியாதது போல் நடிப்பது தமிழர்களுக்கு பெரும் வேதனையாக ஏக்கமாக
இருக்கின்றது.
இன்றும் நாளுக்கு நாள் ஈழ மக்கள் பல இன்னல்களை
எதிர்கொள்கின்றனர் இராணுவ ஆட்சிக்குள் அடக்குமுறைக்குள்லேயே மக்கள்
வாழ்ந்து வருகின்றனர். சொந்தங்கள் சமைந்த சடங்கைகூட இசைப்பிரியவை போன்று
பலரை கற்பழித்து கொலைசெய்த அந்த இராணுவ காமவெறி அரக்கர்களிடம் அனுமதி
கேட்டு செய்யும் அருவருப்பான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த
மயமாக்கல் தமிழர் நிலத்தை அகல வாய் விரித்து விழுங்கிக்கொண்டிருக்கிறது.

வவுனியா முல்லைத்தீவு இயாழ்ப்பாணம் என்று மிகவேகமாக சிங்கள குடியேற்றங்கள்
திட்டமிட்டு மேற்கொள்ளபடுகின்றன. எங்கு பார்த்தாலும் புத்தர் சமாதிகள்
எழுகின்றன. தமிழர்களின் புனித பூமியாகவும் சிங்களவர் ஒருவர் கூட இல்லாத
இடமான திருக்கேதீச்சரத்தில் புத்தர் முளைத்திருக்கிறார். இவ்வாறு செய்வதன்
ஊடக தமிழரை அரசியல் பலம் இழக்க செய்வதே சிங்கள அரசின் நோக்கமாகும்.

மக்களின் நிலங்கள் இரானுவப்படையால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின்
தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ரது. அடாத்தாக இராணுவம் காணிகளை
மக்களிடம் பறித்து எடுக்கின்றது. இதனை மீற்க அகிம்சை முறயில் போராடிய
மக்கள்மீது அரச ராணுவம் தாக்குதலை மேற்கொள்கிறது. அதற்கு மேலாக ஒரு
இலட்சத்து ஜம்பதுனாயிரம் சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றப்போவதாக அரசு
தெரிவித்திருக்கின்றது.

தமிழரின் கலாச்சாரம்
மரபுரிமைச்சொத்துக்கள் வரலாற்று எச்சங்கள் சான்றாதாரங்கள்
சிதைக்கப்படுகின்றன. மறைக்கப்படுகின்றன அழிக்கப்படுகின்றன. போதைப்பொருட்கள்
விபச்சாரம் என்பவற்றை அரசஆட்கூலிகள்மிகவும் சுதந்திரமாக தங்கு தடை இன்றி
செய்து வருகிறார்கள். தமிழர் வரலாறு சொல்லும் மரபுரிமை சொத்துக்கள்
திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டும் சிலவற்றுக்கு சிங்கள
வியாக்கியானங்களும் கற்பிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் காவல்
தெய்வங்களாக நினைக்கும் மாவீரர் துயிலுகின்ற ஆலயங்களினை ஒன்றுவிடாது
அழிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான கருத்துரிமை வட கிழக்கில்
எங்குமே காணமுடியாத சூழல் நிலவுகின்றது.மக்களுக்கான குரல்
நசுக்கப்படுகின்றது. ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் .மக்களுக்காக குரல்
கொடுக்கும் சிவில் சமுக அமைப்புக்கள் என பலரும் இலக்கு வைத்து
தாக்கப்படுகின்றனர கடத்தபடுகின்றனர். உதயன் தினக்குரல் தாக்குதல் யாழ்
பல்கலைகழக மாணவர் மீதான அரசபயங்கரவாத செயற்பாடு என்பன இதற்கு அண்மைய
சான்றாகும்.

பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் பல
பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இரானுவத்தின் பாலியல் துன்புறுத்தல்
பொருளாதார கஸ்ற்றங்கள் என அவர்களின் நிலை படு மோசமாக உள்ளது. இதுவரையில்
அவர்களை மேபடுத்துவத்ற்கான எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக அவர்களை துன்புறுத்தும் செயற்பாடுகளையே சிங்கள அரசின் இராணுவப்படை
மேற்கொண்டு வருகின்றது.

தமிழரின் தொழில் வளங்கள் வேகமாக
அபகரிக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் கரையோரப்பகுதியில் சிங்கள மீனவர்கள்
இராணுவத்தின் துணையோடு வந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றார்கள் இதனால்
தமிழ் மீனவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். கிளிநொச்சியில்
வணிகம் அரசால் பெரிதும் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது.


பெறுமதிமிக்க அருமையான மரங்கள் வேட்டையாடப்படுகிறது மணல் வளம்
சூறையாடப்படுகின்றது. மாணவர்களுக்கு முகாமைத்துவ பயிற்சி என்னும் பெயரில்
கட்டாய இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது அரசாங்கத்துக்கும் ஈ.பி.டி.பி
க்கும் பிடித்தவர்களே வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

இவ்வாறான ஒரு
அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தமிழ் மக்களால் இனப்படுகொலை இபோர்க்குற்றம்
தொடர்பாக நீதியை பெறுவதற்கு அவர்களால் குரல்கொடுக்கமுடியாத சூழல்
நிலவுகிறது. மற்றொருபுறம் விடுதலைப்புலிகள் மீள் எழுகின்றனர், மாணவர்கள்,
இளைஞர்கள் இந்தியா சென்று பயிற்சி பெறுகின்றனர், என்று ஒரு மாயையை சர்வேதேச
அரங்கிற்கு காட்டி சர்வதேச நிகழ்ச்சி நிரலை தம்பக்கம் திருப்பி
போர்க்குற்றத்தில் இருந்து தப்பிவிட சிங்கள அரசு துடிக்கிறது.


ஈழத்தமிழரால் ஒரு ஆயுதப்போரை தற்சமயம் தொடங்க முடியாது என்பது யதார்த்த
நிலையில் உண்மையான விடயமே ஆனால் இனி எப்போதும் போராட்டம் ஒன்றை தொடங்க
முடியாது என்று எண்ணுபவர்கள் அதனை அடியோடு மறந்துவிட வேண்டும். வரலாறு
இடைவெளிகளை விட்டுவைத்ததில்லை இப்போதுள்ள இடைவெளி எப்படி நிரப்பபடுகின்றது
என்பதை பொறுத்துதான் மக்களின் போரட்ட வடிவம் அமையப்போகின்றது. இதனை
சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசுமே முடிவு செய்யப்போகின்றது.
இந்நிலையில்
ஈழத்தமிழருக்கு உண்மையாக குரல் கொடுக்கக்கூடியவர்கள் அதற்கு மிகமிக
பொருத்தமானவர்கள் உரித்துடையவர்கள் என்று ஈழமக்கள் கருதுவது தாய் தமிழக
மக்களையே இதுவரை நீங்கள் உயிராய் ஈழத்தவரை நேசித்து வருகிறீர்கள் இதனாலேயே
உயிரையும் அவர்களுக்காக கொடுத்தீர்கள். இப்படியான உயிரான உறவு
இருக்கையில் இன்று சில அரசியல் தலைமைகள் சொந்த அரசியல் நலன்களுக்காக எம்மை
பயன்படுத்துவது வேதனை தருகின்றது.

காரணம் உயிரைக்கொடுத்து
எம்மண்ணின் விடுதலைக்காக தமிழக உறவுகள் வீரமரணம் அடைய சுயநல அரசியல்
தலைமைகளின் செயற்பாடுகள் ஈழவிடுதலைப்போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் புற
நிலை எதிர்த்தாக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் இனியாவது தம்
மக்களின் உண்மையான உணர்வினை புரிந்து ஈழமக்களின் விடிவிற்கான தமிழக
மக்களின் போராட்டத்தில் இருதய சுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும்.
போர்க்குற்ற விசாரணை ஈழமண்ணின் விடுதலை என்பன எப்படி அமையப்போகின்றது
என்பதை தீர்மானிக்கும் தீர்மானிக்க வைக்கும் மிகப்பெரிய சக்தியாக காலம்
இன்று உங்களை உருவாக்கி இருக்கின்றது.

உலகில் தமிழனுக்கு
நியாயத்தையும் அவனுக்கு என்று ஒரு தனி நாட்டையும் உருவாக்கி அங்கே தமிழ்
அன்னையை அரியாசனத்தில் இருத்தி தமிழால் தேசிய கீதம் இசைத்து உலக
வரைபடத்தில் தமிழ் கொடியை நாட்டவேண்டிய தேசிய விடுதலைப்போரட்டத்தில்
உங்களுக்கான தார்மீக கடமையை ஈழமக்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

உலகில் பல்வேறு புரட்சிகளுக்கும் சுதந்திரப்போரடங்களுக்கும் நாடுகளின்
விடுதலைக்கும் அடிப்படையாக அமைந்தவர்கள் மாணவர்களே இது உலக சரித்திரத்தில்
வரலாற்று உண்மை இன்று லயோலா கல்லூரி மாணவர்களால் பற்றவைத்திருக்கும்
தமிழீழ விடுதலைக்கான தீ உலகத்தமிழரை தட்டி எழுப்பியுள்ளது தமிழக மாணவர்
சமுதாயம் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றுபட்டு எழவேண்டும் எந்த புற லாபங்களும்
நினைக்காத மாணவர்களால்தான் மக்களை அணிதிரட்டி இலட்சியங்களை வென்றெடுக்க
முடியும் அந்த கடமையை ஈழத்தமிழரின் இரத்த உறவுகள் செய்து காட்ட வேண்டும்.

இருதி யுத்தத்தில் பல்லாயிர கணக்கான மக்களை இனப்படுகொலை செய்து
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோரை சுட்டு கொன்று பல பெண்களை
வன்புணர்வுக்குற்படுத்தி கொலைசெய்து தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவனை செய்து
பாலச்சந்திரன் போன்ற பாலகர்களை கொன்றுகுவித்து கைது செய்த பல ஆயிரம்
உறவுகளை காணமல் போகச்செய்து எம்மினத்தின் ஆத்மாவை கருவறுத்த சிங்கள அரசை
போர்க்குற்றத்தில் இருந்து தப்பிக்க விடுதல் நியாயமற்றது.
இன்றைய
தமிழக உறவுகளின் எழுச்சியானது பலம் இழந்து போயுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு
பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கின்றது இந்நிலையில்
சாதி மத வர்க்க கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழர் மனிதநேயம் மிக்க மனிதர்
என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒருகுரலாய் ஈழத்தமிழருக்காக
ஒலிக்கவேண்டும் என்பதே தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழரின் இன்றைய
எதிர்பார்ப்பாகும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். பல்கலைக்கழக இடம்பெயர் மாணவனும் மாணவியும் சடலங்களாக மீட்பு
» யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்; அச்சத்தில் மாணவர்கள்
» யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் நேற்றிரவு இராணுவம் குவிப்பு-
» யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சாகும்வரை உண்ணாரவிரதம்
» "யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் கைது"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum