TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிற்றுண்டி

Go down

சிற்றுண்டி Empty சிற்றுண்டி

Post by logu Tue Mar 23, 2010 3:13 pm

சிறிய அளவில் உண்ணப்படும் உணவு
வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் இட்லி,
தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகளும், வடை, போண்டா போன்ற பலகார வகைகளும்
சிற்றுண்டியாக உள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக இந்த
வகை உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன. இந்த அவசர யுகத்தில் பலர் மதிய
உணவிற்கும் சிற்றுண்டியை தேட வேண்டிய நிலை உள்ளது.
சிற்றுண்டி Tiffin_food
சப்பாத்தி மாவில் எண்ணெய், உப்பு சேர்த்து, வெந்நீரை ஊற்றி பிசைந்து
சிறிது நேரம் ஊற வைத்து பிறகு சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகவும்
மிருதுவாக இருக்கும். கீரை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் சாற்றினை மாவில்
பிழிந்து விட்டு பிசைந்து, வண்ண வண்ணமாக சப்பாத்திச் செய்யலாம். தோற்றமும்
நன்றாக இருக்கும். சத்தும் அதிகமாய் இருக்கும்.
பெரும்பாலும் சிற்றுண்டி வகை உணவுகள் தானியங்களைக் கொண்டு அல்லது
அரைத்த தானிய மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தானியங்களில் அதிக
அளவில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) இருக்கின்றது. புரதம் (Protein),
தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவையும் நிறைந்து உள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty பச்சைபயிறு அடை

Post by logu Tue Mar 23, 2010 3:13 pm

தேவையான பொருட்கள்




  • 1. புழுங்கல் அரிசி - 1/2 கப்
  • 2. பச்சரிசி - 1/2 கப்
  • 3. பச்சை பயிறு - 1/2 கப்
  • 4. தேங்காய் துருவல் - 1/4 கப்
  • 5. பச்சை மிளகாய் - 2
  • 6. உப்பு
  • 7. வெங்காயம் - 1
  • 8. உளுந்து - 2 தேக்கரண்டி
  • 9. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  • 10. எண்ணெய் - தேவைக்கு
  • 11. கறிவேப்பிலை, கொத்தமல்லி




செய்முறை




  • அரிசி மற்றும் பயிறை ஊற வைத்து தேங்காய் துருவல், மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
  • பாத்திரத்தில்
    எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும்,
    பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  • வதக்கியதை அடை மாவில் சேர்த்து உப்பு கலந்து தோசை போல் ஊற்றி இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.





குறிப்பு:


தேங்காய் சட்னி, கார சட்னி, குருமா போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



வழங்கியவர்


VaniVasu
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty அரிசி மாவு அடை

Post by logu Tue Mar 23, 2010 3:14 pm

தேவையானப் பொருட்கள்





  • அரிசி மாவு - ஒரு கப்
  • முழு உளுந்து - அரை கப்
  • கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
  • இஞ்சி - அரை அங்குலத் துண்டு
  • உப்பு - அரை தேக்கரண்டி+ஒரு சிட்டிகை



இஞ்சியை
தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதே போல
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


அரிசி
மாவு மற்றும் கடலைப்பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக
அரை மணி நேரம் ஊற வைக்கவும். முழு உளுந்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம்
ஊற வைக்கவும்.


ஊற வைத்த உளுந்தை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


அரிசி மாவில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரைத்த உளுந்து மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.


வாணலியில்
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல்
ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம் வதக்கி மாவில் போட்டு கிளறி விடவும்.


அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.


தோசைக்கல்லில்
அல்லது தவாவில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் மாவை ஒன்றரை கரண்டி
அளவு ஊற்றி நடுவில் லேசாக அழுத்தி வட்டமாக தேய்க்கவும்.


மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.


சுவையான அரிசிமாவு அடை ரெடி. இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.









logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty கோதுமை மாவு இனிப்பு தோசை

Post by logu Tue Mar 23, 2010 3:15 pm

தேவையான பொருட்கள்




  • கோதுமை மாவு -- 2 கப்
  • வாழைப்பழம் -- 2 என்னம்
  • வெல்லம்/ சர்க்கரை -- 3/4 கப்
  • உப்பு -- 1 சிட்டிகை
  • ஏலக்காய் -- 1 என்னம் (நசுக்கியது)




செய்முறை




  • வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • பின்
    கோதுமை மாவை உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனுடன்
    வெல்ல,வாழைப்பழ கலவையை சேர்த்து தண்ணீர் தேவை எனில் சேர்த்து தோசை மாவு
    பதத்திற்கு கரைத்து தோசையாக வார்த்து நெய்/ எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு
    எடுத்து சூடாக பரிமாறவும்.
  • ரெடி.





குறிப்பு:


நன்றாக பழுத்த வாழைப்பழமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.




வழங்கியவர்


Subha Jayaprakash





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



2 நபர்களுக்கு

10 min

10 min
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty புட்டு

Post by logu Tue Mar 23, 2010 3:16 pm

தேவையானப் பொருட்கள்





  • அரிசி மாவு - 3 கப்
  • கடலை பருப்பு - கால் கப்
  • சீனி - 1 1/2 கப்
  • ஏலக்காய் - 2
  • தேங்காய் - 1 1/4 கப்
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • முந்திரி - 8
  • நெய் - ஒரு மேசைக்கரண்டி



ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக விடவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.


வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


அரிசி மாவுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிசறவும்.


மாவு
லேசாக ஈரப்பதத்துடன் உருண்டு வரும் போது குக்கரில் வைத்து வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி மாவை உதிர்த்து விட்டு கிளறி விடவும்.


வேக வைத்த மாவுடன் வறுத்த முந்திரி, வேக வைத்த பருப்பு, சீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கிளறி விடவும்.


சுவையான
புட்டு ரெடி. விருப்பப்பட்டால் பரிமாறும் போது நெய் சேர்த்து கொள்ளவும்.
எளிமையாக செய்து விடக்கூடிய இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை
நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. ஹேமா அவர்கள்.


logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty வெஜிடபுள் கார போளி

Post by logu Tue Mar 23, 2010 3:17 pm

தேவையானப் பொருட்கள்





  • கோதுமை மாவு - ஒரு கப்
  • முட்டைக்கோஸ் - கால் பாகம்
  • காரட் - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் - 4
  • உருளைக்கிழங்கு - 2
  • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி



உருளைக்கிழங்கை
வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.
முட்டைக்கோஸ், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை கேரட் துருவலின் மூலம் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.



ஒரு
பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் காரட், முட்டைக்கோஸ்,
பச்சைமிளகாய், வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்துக்
கொள்ளவும்.


அதனுடன் உப்பு, கரம் மசாலாதூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.


தேவைப்பட்டால்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். ஏனெனில் காய்கறிகளில்
இருக்கும் தண்ணீர் மாவு பிசைவதற்கு போதுமானது. பிசைந்த மாவை ஊற வைக்க
வேண்டியதில்லை. பிசைந்தும் சப்பாத்தியாக இடலாம்.


இரண்டாக
மடிக்கும் படியான ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். சப்பாத்தி
செய்யும் ப்ரஸ்ஸரில் எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரை வைத்து அதில் ஒரு
பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து நடுவில் வைத்து அழுத்தி சப்பாத்தியாக
போடவும்.



தோசை
கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு எண்ணெய் மேலே ஊற்றி ஒரு நிமிடம்
கழித்து திருப்பி போடவும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.


சுவையான வெஜிடபுள் கார போளி ரெடி. இதை தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.


இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. கலா ரவிச்சந்திரன்
அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து
வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு
பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty ப்ரெட் ஊத்தாப்பம்

Post by logu Tue Mar 23, 2010 3:19 pm

தேவையானப் பொருட்கள்





  • ப்ரெட் - 4
  • இட்லி மாவு - ஒரு கப்
  • கொத்தமல்லித்தழை - 2 கொத்து
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி



கொத்தமல்லித்தழையை
ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும்
தனித்தனியாக பொடி செய்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து
வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும். பிறகு அதன் மேல் அலசிய கொத்தமல்லித் தழையை தூவி கலந்துக் கொள்ளவும்.


பின்னர் அதனுடன் பொடி செய்த மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.



கரைத்து
வைத்திருக்கும் மாவில் ஒரு ப்ரெட் ஸ்லைஸை எடுத்து மாவில் வைத்து
ப்ரெட்டின் இரண்டு புறங்களிலும் மாவு படரும்படி நன்கு தோய்த்துக்
கொள்ளவும்.


தோசைக்கல்லை
அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய வைக்கவும். காய்ந்ததும் தோய்த்து
வைத்திருக்கும் ப்ரெட்டை போட்டு மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.



2
நிமிடம் கழித்து வெந்ததும் திருப்பி போட்டு மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய்
ஊற்றவும். பிறகு மீண்டும் 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து எடுத்து
விடவும்.


ப்ரெட் ஊத்தாப்பம் தயார். மிக எளிதில் செய்ய கூடிய மாலை நேர சிற்றுண்டி. இதை சாஸுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.


இந்த எளிமையான குறிப்பை நமக்காக செய்து காட்டியவர் திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள்.
பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன்
வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில்
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty புளி உப்புமா

Post by logu Tue Mar 23, 2010 3:21 pm

தேவையானப் பொருட்கள்





  • உடைத்த புழுங்கல் அரிசி - 3 3/4 கப்
  • மிளகாய் வற்றல் - 12
  • பெருங்காயம் - சின்ன நெல்லிக்காய் அளவு
  • புளி - பெரிய எலுமிச்சை அளவு
  • கடலைப்பருப்பு - கால் கப்
  • கடுகு - அரை மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - 2 1/2 மேசைக்காண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி



உப்புமா செய்ய தேவையானவற்றை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.


வாணலியில்
எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு
கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டு 4 நொடி வதக்கவும்.


புளியுடன் 7 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் வதக்கியவற்றை சேர்க்கவும்.


அதன் பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.


கொதித்ததும் உடைத்த புழுங்கல் அரிசியை போட்டு கிளறி விடவும்.


நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.


உப்புமா நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும். இந்த புளி உப்புமா குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர் திருமதி. சசிகலா அய்யாசாமி அவர்கள்.














logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிற்றுண்டி Empty Re: சிற்றுண்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum