TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரேயொரு படத்துக்கு 31 மாவட்டங்களில் 144 தடை!” கமல் வக்கீல் கிண்டல்(நீதி மன்றத்தில் நடந்த ஒரு முழு நீள விஸ்வரூபம்)

Go down

ஒரேயொரு படத்துக்கு 31 மாவட்டங்களில் 144 தடை!” கமல் வக்கீல் கிண்டல்(நீதி மன்றத்தில் நடந்த ஒரு முழு நீள விஸ்வரூபம்)  Empty ஒரேயொரு படத்துக்கு 31 மாவட்டங்களில் 144 தடை!” கமல் வக்கீல் கிண்டல்(நீதி மன்றத்தில் நடந்த ஒரு முழு நீள விஸ்வரூபம்)

Post by மாலதி Tue Jan 29, 2013 9:51 pm


ஒரேயொரு படத்துக்கு 31 மாவட்டங்களில் 144 தடை!” கமல் வக்கீல் கிண்டல்(நீதி மன்றத்தில் நடந்த ஒரு முழு நீள விஸ்வரூபம்)  Images

விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது தவறு” என கமல் தொடர்ந்துள்ள
வழக்கில், அந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுத்தது தவறு என தமிழக
அரசின் சார்பில் வாதிட்ட அரசு வக்கீல், அடுத்த அடியை வீசியிருக்கிறார்.



“ஆமா.. இந்தப் படத்தை கமல் விநியோகஸ்தர்களுக்கு விற்று விட்டாரே…
அப்படியானால், இந்தப் படத்துக்கு இப்போது அவர் உரிமையாளர் அல்ல.
உரிமையில்லாத படம் பற்றி அவர் எப்படி வழக்கு தொடர முடியும்?” என ஒரே
போடாகப் போட்டுவிட்டார், அரசு வக்கீல்!

இந்த வாத திறனை பார்த்து, ஒட்டுமொத்த நீதித்துறையே மூக்கில் விரலை வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐயா… காவிரி வழக்கு நடைபெற்ற போது நீர் எங்கேயிருந்தீர்? கோர்ட்டில்
இருந்திருந்தால், இப்போது காவிரி நதியையே சுருட்டிக் கொண்டு
வந்திருக்கலாமே!


“விஸ்வரூபத்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என அம்மா நினைத்தார்” சீமான் போட்டு உடைக்கிறார்!




“கமலின் விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, சட்டம் ஒழுங்கு, மத
நல்லிணக்கம் போன்ற முக்கிய விஷயங்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது” என
இன்று கருத்து தெரிவித்துள்ளார் சீமான். அதேநேரத்தில், சட்டம் ஒழுங்கை
காரணம் காட்டுவதை தவிர்த்து, மத்திய தணிக்கைத் துறையை காரணம்
காட்டியுள்ளது, தமிழக அரசு.



தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமானிடம்,
விஸ்வரூபம் குறித்து கேட்கப்பட்டது. “தமிழக அரசின் தடையை கமல் ஏற்று,
காட்சிகளை மாற்ற வேண்டும் என நீங்கள் கருத்து கூறியதாக செய்தி வந்துள்ளதே”
என செய்தியளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சீமான், “நான் அப்படிச் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு,
மத நல்லிணக்கம் போன்ற முக்கிய விஷயங்களை முன்னிறுத்தி தமிழக அரசு
எடுத்திருக்கும் முடிவு இது. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை பார்க்காமல்
எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. இஸ்லாமியர்களும், கமல்ஹாசனும்
இதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் அப்போதும் சொன்னேன்”
என்றார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என சீமான் சொல்லியிருப்பதை, இன்று
விஸ்வரூபம் வழக்கில் வாதாடும் தமிழக அரசு வக்கீல் அறிந்தால் என்னாகும்?
அம்மாவிடம் சொல்ல மாட்டாரா?

விஸ்வரூபம்: ஜெ. அரசுக்கு புண்ணில் வேல் பாய்ச்சியது கர்நாடகா! பாதுகாப்பு கொடுக்கிறோம்!!





விஸ்வரூபம் படத்தை தடை செய்தது செல்லாது என்ற வழக்கு சென்னையில்
நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், கர்நாடகா மாநில காவல்துறை ஒரு
அறிவித்தல் அறிவித்தல் விடுத்துள்ளது. அதுவும், தமிழக அரசின் வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சும் அறிவிப்பு.

“இன்று முதல் கர்நாடகாவில் விஸ்வரூபம் திரையிடப்படும் 40
தியேட்டர்களிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தலைநகர்
பெங்களூருவில் 17 தியேட்டர்களில் இன்று மதியக் காட்சி முதல் படம் போலீஸ்
பாதுகாப்புடன் திரையிடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் சட்டம் ஒழுங்கு
பாதுகாக்கப்பட்டுள்ளது” என்கிறது, கர்நாடகா போலீஸின் அறிவிப்பு.

கர்நாடகா மாநில் விஸ்வரூபம் விநியோகஸ்தர் கங்காராஜூ, தற்போது
ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் படம் ஹவுஸ்ஃபுல்லாக
ஓடிக்கொண்டு உள்ளது என்றார்.

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என 31 மாவட்டங்களிலும்
144 தடை உத்தரவு கொடுத்திருக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காத
மாநிலங்கள், விஸ்வரூபம் படத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளன.








விஸ்வரூபம்: “ஒரேயொரு படத்துக்கு 31 மாவட்டங்களில் 144 தடை!” கமல் வக்கீல் கிண்டல்!



விஸ்வரூபம் விசாரணையின்போது, கமல் தரப்பில் இருந்து இப்படி வாதம்
செய்வார்கள் என்று தமிழக அரசு தரப்பில் எதிர்பார்த்தே இருக்க மாட்டார்கள்.
அந்தளவுக்கு, தமிழக அரசை கோர்ட்டில் வைத்து திணறடித்தது கமலின் வக்கீல்
டீம்.

“விஸ்வரூபம் படத்துக்கு 31 மாவட்டங்களிலும் கலெக்டர்கள் மூலம் 144
தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில்கூட, சட்டம் ஒழுங்கை பேண
முடியாத நிலையிலா உள்ளது தமிழக அரசு? ஒட்டுமொத்த தமிழகத்திலும், சட்டம்
ஒழுங்கு நிலைமை அவ்வளவு மோசமாகவா உள்ளது?” என்று கமலின் வக்கீல்
பி.எஸ்.ராமன் கேட்டு திணறடித்தார்.

நிலைமை இப்படி பாதகமாக திரும்புகிறது என்று தெரிந்த பின்னரே, மத்திய
தணிக்கை துறையை போட்டுத் தாக்கத் தொடங்கினர் தமிழக அரசு வக்கீல்கள். ஆனால்,
லாங்-ரன்னில் அதுகூட பேக்-ஃபயர் பண்ணிவிடும் போலிருக்கிறது.


விஸ்வரூபம்: கமல் தமிழக அரசுடன் போசாமல் ஒதுங்கிய காரணம்.. பிளஸ் பாயின்ட்!



விஸ்வரூபம் படம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றபோது, நாளை (இன்று)
விசாரணைக்கு முன், அரசு அதிகாரிகளுடன் கமல் பேசி சுமுகமான முடிவுக்கு
வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறிவிட்டே, விசாரணையை
இன்றைக்கு ஒத்தி வைத்தது.

அதையடுத்து, கமல் தலைமைச் செயலகத்துக்கு வருவார் என அங்கு செய்தியாளர்கள் காத்திருந்தனர்.

ஆனால், கமல் வரவில்லை.

இந்த படத்துக்கு தடை விதித்ததில் தமிழக அரசுக்குதான் சிக்கல்
ஏற்பட்டுள்ளது என கமலுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாக தகவல். டில்லியில்
இருந்தும் இந்த விஷயத்தில் கமலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது என்றும்
கூறுகிறார்கள்.

தமிழக அரசு சட்டரீதியான தகுந்த காரணங்கள் இல்லாமல் செய்த தடை என்பதில்
கமல் தரப்புக்கு ஒரு பிளஸ் உள்ளது. எனவே இன்றைய விசாரணைக்கு முன்,
தேவையில்லாமல் தமிழக அரசிடம் போய் எதற்காக உங்களுக்கு உள்ள பிளஸ் பாயின்டை
இழக்க வேண்டும் என அட்வைஸ் கொடுக்கப்பட்டதாம்.

தமிழக அரசை சந்திப்பது என்றால், இன்றைய விசாரணையின் போக்கை பார்த்துவிட்டு முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டதாம்.

அத்துடன், இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி, சுப்ரீம் கோர்ட்வரை கமல் செல்ல முடியும் என்கிறார்கள்

“விஸ்வரூபத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுத்தது செல்லுபடியாகாது” தமிழக அரசு வாதம்!



“விஸ்வரூபம் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், அது சரியான விதிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்ட சான்றிதழ் அல்ல. அந்த
சான்றிதழை தமிழக அரசு ஏற்றுக் கொள்வது பற்றி யோசிக்கவே கால அவகாசம்
கேட்டு, 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என தமிழக அரசு சார்பில்
வாதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது தவறு என கமல்ஹாசனின்
ராஜ்கமல் பிலிம்ஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஹைகோர்ட்டில் நடக்கிறது.

படத்துக்கு மத்திய தணிக்கைதுறை சான்றிதழ் வழங்கியதை அடுத்தே, படம் மற்ற
மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ் ‘ஒன்னும்
சொகமாயில்ல’ என தமிழக அரசு கோர்ட்டில் அதிரடியாக கூறியுள்ளதாக
தெரியவருகிறது.

இந்த வாதம் எங்கே போய் முடியப் போகிறதோ!

விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கை!



தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல்,
“விஸ்வரூபம் படத்தை தடைசெய்த காரணத்தால், திருட்டு வீடியோ வெளியாகி வசூல்
பாதிக்கப்பட போகிறது. இதனால், படத்தை தடைசெய்த தமிழக அரசு இழப்பீடாக 100
கோடி ரூபா பணத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும்” என்று வாதம் செய்ததாக
தெரிகிறது.

“மத்திய தணிக்கை சபையால் தணிக்கை சான்றிதழ் கொடுத்த படத்தை தமிழக அரசு,
மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தியேட்டரில் வெளியிட முடியாமல் தடை செய்த
காரணத்தாலேயே, இந்த நஷ்டம் ஏற்படப் போகின்றது. எனவே, தமிழக அரசே
நஷ்டத்துக்கு பதில் சொல்ல வேண்டும்” எனவும் வாதம் செய்யப்பட்டுள்ளதாக
தெரிகிறது.

படத்தின் வசூலில் கிடைக்கும் தொகை 100 கோடி ரூபாவுக்கு அதிகமாக போனால்,
தமிழக அரசு கோர்ட்டில் செலுத்தும் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்
எனவும் கூறப்பட்டுள்ளது.

“விஸ்வரூபம் படத்தின் 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் காட்சிகளை வெட்ட தயாரா?” கோர்ட்டில் கேள்வி!



தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பிடம், “விஸ்வரூபம்
படத்தில் 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் இடம்பெறும் காட்சிகளை வெட்ட
முடியுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.

விசாரணை தொடங்கும் முன்னர் சேம்பருக்கு வெளியே வைத்தே இந்த கேள்வி கேட்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இப்படியொரு கேள்வி விழுப்பப்பட்ட காரணம், விசாரணையில் இதே கோரிக்கை
வந்தால், கமல் தரப்பு அதற்கான பதிலுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே.

அதேநேரத்தில், இந்த 26 நிமிடங்கள், 23 செக்கன்டுகள் இடம்பெறும்
காட்சிகள் எவை என்று தெரிவித்ததாகவோ, பட்டியல் கொடுக்கப்பட்டதாகவோ
தெரியவில்லை.

“விஸ்வரூபம் படத்தில் உள்ள ஒரேயொரு இந்திய முஸ்லிம் நல்லவரே!” விசாரணையில் கமல் வக்கீல்



தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல் தனது
வாதத்தில், “விஸ்வரூபம் படத்தில் ஒரேயொரு இந்திய முஸ்லீம் கதாபாத்திரம்தான்
உள்ளது.

அந்த கதாபாத்திரம், படத்தின் கதாநாயகன் கமல்தான். இந்த பாத்திரம் நல்லவர் என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெறும் மற்றைய முஸ்லீம் கதாபாத்திரங்கள் அனைவரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பினர்.

அந்த தீவிரவாத இயக்கத்தை (தலிபான்) பயங்கரவாத இயக்கமாக ஐ.நா. பிரகடனம்
செய்துள்ளது. அப்படியான நிலையில், அவர்களை வேறு எப்படி காட்ட முடியும்?”
என்று கேள்வி எழுப்பினார்.

விசாரணையில், இந்தக் கருத்து கமல் தரப்புக்கு சாதகமான கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தலிபான் தலைவர் முல்லா ஓமரை மதுரையில் எங்கே பார்த்தார்? போடுய்யா வழக்கு!!





“ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா உமர்
மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்று கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில்
கூறியுள்ளார். எனவே, முல்லா ஓமர் மதுரையில் எங்கே வசித்தார் என்பது குறித்த
ஆதாரங்களை கமல்ஹாசனிடம் பெறுவதற்காக மதுரை போலீஸ் விசாரணை நடத்த
வேண்டும்” என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த
எழிலரசு சார்பில், வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் இந்த வழக்கை தாக்கல்
செய்துள்ளார்.

முல்லா ஓமரின் முழுப் பெயர், முல்லா மொஹம்மது ஓமர். இவர் ஆப்கான்
தலிபான்களின் தலைவர். அமெரிக்கா ஆப்கானுக்குள் படையெடுக்கும் முன்,
‘இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தானின் நம்பிக்கைக்குரிய தளபதி (Commander of
the Faithful of the Islamic Emirate of Afghanistan)’ என்று
அழைக்கப்பட்டவர். மூன்று நாடுகள் மட்டுமே அதை அங்கீகரித்தன. பாகிஸ்தான்,
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையே அந்த மூன்று நாடுகள்.

தற்போது தலைமவைாக உள்ள முல்லா உமர், பாகிஸ்தானில் எங்கோ வசிக்கிறார் என்கிறது சி.ஐ.ஏ.

காரைக்குடியை சேர்ந்த எழிலரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர்
கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் படத்தை
தயாரித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பல்வேறு
முஸ்லிம் அமைப்பினர் தமிழக போலீசாரிடம் மனு கொடுத்தனர். இதற்கிடையே
முஸ்லிம் சமுதாயம் குறித்து தவறாக விமரிசனம் செய்திருப்பதாக கூறி, இந்த
படத்திற்கு தமிழகத்தில் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்தை திரைப்பட தணிக்கை குழுவினர் பார்வையிட்டு, பொதுமக்கள்
அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது.
திரைப்பட தணிக்கைத் துறை சான்றளித்த பிறகு ஒரு படத்திற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் நடவடிக்கை, நாட்டில் கருத்துக்களை வெளியிடும் பேச்சு
சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது.

இதேபோலத்தான் சமீபத்தில் திரைக்கு வந்த துப்பாக்கி படத்திற்கும் ஒரு
தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த
படம் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் வெளியான ஒரு குறும்படத்திற்கு
எதிராகவும் இங்கு போராட்டம் நடத்தினார்கள்.

இது சுய விளம்பரங்களுக்காக செய்யும் போராட்டம்போல தோன்றுகிறது. எனவே
விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ்
பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் தலிபான் இயக்கத்தின் தளபதி முல்லா உமர் மதுரையிலும்,
கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள
ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்” என்று
கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வரவிருக்கிறது.


விஸ்வரூபத்தில் 14 காட்சிகளை நீக்கிய பிறகே சான்றிதழ் கொடுத்தோம் - சென்சார் போர்டு விளக்கம்



விஸ்வரூரபம் படத்தின் காட்சி அமைப்புகளுக்கான ஆதார
அடிப்படையில்தான் சான்றிதழ் கொடுத்தோம். படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட்ட
பிறகே சான்று அளிக்கப்பட்டது என்று மத்திய தணிக்கை வாரியம்
விளக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த படத்தின் தடை நீக்கம் தொடர்பான
வழக்கின் விசாரணையின்போது மத்திய தணிக்கை வாரியமும் தனது தரப்பு
விளக்கத்தைப் பதிவு செய்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், மொத்தம் 14
காட்சிகளை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டோம். அதன்படி நீக்கப்பட்டது.
மேலும், சர்ச்சைக்குரிய 1.8 நிமிட நேர காட்சி ஒன்றும் படத்திலிருந்து
நீக்கப்பட்டது.

காட்சி அமைப்புகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் படத்திற்கான
சான்றிதழை அளித்தோம். முற்றிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டே சான்றிதழ்
அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


யுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு!




கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று காலை திடீரென யுட்யூப் வீடியோ
தளத்தில் வெளியானது.

அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த வீடியோ
இடம்பெற்ற கணக்கு முடக்கப்பட்டது.

விஸ்வரூபம் படம் சில வெளிநாடுகளில் வெளியான இரண்டாம் நாள்
நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. மற்ற
நாடுகளைப் பொறுத்தவரை, படம் வெளியான இரண்டாவது வாரமே ஒரிஜினல் டிவிடிகளே
வந்துவிடும் நிலை உள்ளது.

இந்த சூழலில் தமிழகம் - புதுவையில் முழு தடையும், மற்ற மாநிலங்களில் பகுதி
தடையும் விதிக்கப்பட்டுள்ள விஸ்வரூபத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து திருட்டு
டிவிடிகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையில் மிக சுலபத்தில் ரூ 25-க்கே
டிவிடிக்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், விஸ்வரூபம் முழுப் படத்தையும் சிலர் இன்று யுட்யூப்
தளத்தில் பதிவேற்றிவிட்டனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு
உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக அந்தக் கணக்கு
முடக்கப்பட்டுள்ளது.

யூ டியூபில் விஸ்வரூபத்தை வெளியிட்டது யார் எனவும், அதை பதிவிறக்கம்
செய்தவர்கள் யார் எனவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி
வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் வழக்கில் இரவு 10 மணிக்கு தீர்ப்பு- உயர்நீதிமன்றம் அறிவிப்பு..........................








நன்றி :விறுவிறுப்பு.காம் /ONE இந்தியா
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் இரசித்த பாடல் - 25 – அசலும் நகலும் - கமல் vs கமல் -விஸ்வரூபம்
» விஸ்வரூபம் படத்துக்கு புதுச்சேரியிலும் தடை!
» விஸ்வரூபம் படத்தின் கதை என்ன? கமல் பதில்!!
» விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?
» விஸ்வரூபம் ஒளிபரப்பு நேரத்தில் கரண்ட் கட். எதிர்ப்பாளர்களின் சதியால் கமல் அதிர்ச்சி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum