TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடவுள் கடவுளாகிப்போனார்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 12:04 pm

கடவுள் – 1

எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி
சலூன்காரன் முன்
கடவுளின் முகத்தைக்
கண்ணாடியில் பிரதிபலித்தது.
சலூன்காரன்
கடவுளுக்கு
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by ஜனனி Tue Jan 29, 2013 12:38 pm

கடவுள் கடவுளாகிப்போனார்! 336442 கடவுள் கடவுளாகிப்போனார்! 254248
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 12:39 pm

கடவுள் – 2

மழையே இல்லையே!
‘பொங்க வைப்போம் வாங்க!
அப்பவாவது கடவுள்
கண்ணு தொறக்கறாரான்னு பாப்போம்.’
பொங்க வைத்தார்கள்.
மழை கொட்டியதில்
இடி விழுந்து
ஒருத்தி இறந்துபோனாள்!
இப்போது ஒருத்தி
இன்னொருத்திக்குச் சொல்லிப்
புலம்பிக்கொண்டாள்
‘கடவுளுக்குக் கண்ணே கெடையாது!’
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by ஜனனி Tue Jan 29, 2013 12:44 pm

நல்ல கற்பனை கடவுள் கடவுளாகிப்போனார்! 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 30, 2013 7:25 am

கடவுள் – 3

கடவுளின் முகவரி
இன்னும் மாறாமல்
அதே வார்டில்
வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தது.
தனக்கு இறப்பு இல்லை என்பதை
நினைப்பதற்கு முன்
கடவுளின் விரலில் மை வைக்கப்பட்டது.
மின்னனு எந்திரத்தில்
பட்டன் அழுத்தியதும்
நினைத்துக்கொண்டார்
ஓட்டு யாருக்குப் பதிந்ததோ
கடவுளுக்கே வெளிச்சம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 7:03 am

கடவுள் – 4

பேரூந்தில்
முன் இருக்கையில் அமர்ந்து
பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்தார்
கடவுள்.
சில்லரை இல்லையென்றால்
இறங்கிக்கொள் என்று
கடவுளையே எச்சரித்த நடத்துநர்
மீதிச் சில்லரையைத் தராமல்
கடவுளையே ஏமாற்றினார்!
செல்போன் சிணுங்க
கால் மேல் கால் வர
முக்கால் மணி நேரமாகப்
பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்
பேரூந்து ஓட்டுநர்!
முந்தும்போதும்… ஒதுங்கும்போதும்…
கடவுளே நடுநடுங்கிட
பயணிகளுக்குப் பழக்கப்பட்டதால் பயமின்றி
பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by அருள் Thu Jan 31, 2013 7:04 am

கடவுள் கடவுளாகிப்போனார்! 28284 கடவுள் கடவுளாகிப்போனார்! 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 2:25 pm

கடவுள் – 5

பிணம் எரிக்கக்கூட
கான்கிரெட் கூரையாக்கிவிட்ட சூழலில்
கிராமத்தின் ஓட்டைக் குடிசையில்
கடவுள் நிம்மதியாக உறங்கி எழுந்தார்!
சாலை சரியில்லை
கேபிள் டீவி இல்லை
இன்டர்நெட் இணைப்பு இல்லையென்று
நகரத்துக்குப் போக முடிவைடுத்து
நகரத்தில்
வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்!
பவர் கட்டால்
கடவுளின் உடல்
வியர்வையால் விழிப்புற்றே இருந்து எழுந்தார்!
சமையல் செய்யலாமென
ஆரம்பிக்கும்போது இருந்த மின்சாரம்
சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 05, 2013 12:03 pm

கடவுள் – 7

கடவுளிடம் பணம் இல்லாததால்
திருட்டு ரயில் ஏறி
சென்னை வந்து இரங்கினார்.
சமாதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு
கடற்கரையில்
காதலர்களை ரசித்துவிட்டு
கோடம்பாக்கம் வந்து சேர்ந்தார்.
நடிகன் நடிகையைக்
கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருந்ததும்
கடற்கரையில் கண்டதும்
வேறுவேறாக இருந்தது.
நடிகனுக்கு அரசரமாகச்
சண்டைக் காட்சிக்கு
டூப் தேவைப்பட்டதால்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கடவுளை பிடித்து இழுத்து!
நடிகனாக மேக்கப் செய்தார்கள்.
பைட்டர்களைத் தும்சம் செய்து
நின்றபோது ஆங்காங்கே
கடவுளுக்கு ரத்த காயங்கள்!
ஆச்சரியமாகப் பார்த்தார் கடவுள்
உண்மையான நடிகனும்
மேக்கப் ரத்தக் காயங்களோடு
மருத்துவமனை செட்டுக்குள்
நடிகை கைதாங்களாக
அழைத்துச் செல்வதுபோன்று
அடுத்தக் காட்சி படமாக்கப்பட்டது.
பேசாம இவனையே அவருக்கு
பைட்டுக்கு டூப்பாக்கி விடலாம்.
கொடுத்த 1000 ரூபாயை வாங்கிக் கொண்டு
கடவுள் வெளியேறி
கையேந்தி பவனை நோட்டமிட்டார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by மாலதி Tue Feb 05, 2013 1:07 pm

கடவுள் கடவுளாகிப்போனார்! 28284 கடவுள் கடவுளாகிப்போனார்! 28284


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 06, 2013 5:18 am

கடவுள் – 8

புத்தகத்தைக் கையில் எடுக்காமல்
குழந்தைத் தொழிலாளியானார் கடவுள்.
கல்வி உரிமைச் சட்டம் இருக்கிறதே!
ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல்
வீடுவீடாகச் சென்றார்கள்!
கடவுளின் வீட்டுக்கும் சென்று
“நீ படிக்கத்தான் வர வேண்டும்.”
“எனக்குப் படிப்பு ஏறவில்லை!”
“பத்தாம் வகுப்பு வரை
படிக்காவிட்டாலும் பாஸாக்கிவிடுகிறோம்!”
“அதற்குமேல்?”
“நீதான் படிக்க வேண்டும்!”
“பத்தாவது வரை படிக்காதவனால்
பதினொன்னாவதிலிருந்து எப்படி படிக்கமுடியும்?”
“அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை.”
“ஏன் அதற்கும் சேர்த்து
தேர்தல் வாக்குறுதி கொடுக்கச் சொல்லுங்களேன்!”
“முடிவா என்னதான்டா சொல்ற?”
“அதான் சொல்லிட்டேனே
என்னால் படிக்க முடியாதுன்னு!”
நீ எங்கிட்ட தைரியமா சொல்லிட்ட
நான் எப்படிப் போய்
மேலதிகாரியிடம் சொல்வேன்.
“கடவுளே
என்ன ஏன்தான் வாத்தியாராக்கினியோ தெரியலையே!”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by logu Wed Feb 06, 2013 7:42 am

கடவுளே அட கடவுளே கடவுள் கடவுளாகிப்போனார்! 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 10:41 am

கடவுள் – 9

ஏர்பிடித்து உழ ஆரம்பித்தார் கடவுள்.
வறண்டு இருந்தது பூமி.
கடவுளே மழை பெய்ய வெக்கக்கூடாதா?
மழை பெய்தது.
ஏர்பிடித்த பாதி வயல்
மழையால் சேறாகிப் போனது.
3 நாள் கழித்து
ஏர் பூட்டி
முன்பு உழுத இடத்திலிருந்தே
ஏர் பிடிக்கத் தொடங்கியதும்
பூமி ரொம்ப ஈரமா இருக்கு என்று
சலித்துக்கொண்டார்.
டிராக்டர் பிடித்து உழவு செய்தார்
விதைத்தார்.
நாற்றுநடவும் களை எடுக்கவும்
100 நாள் வேலையால் பாதிக்கப்பட்டதாக
வருந்திக்கொண்டார்.
அறுவடைக்கும் யாரும் வரவில்லை
அறுவை எந்திரம்கொண்டு காரியத்தை முடித்தார்.
கணக்குச் சரி பார்த்தலில்
செலவே அதிகம் இருந்தது.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
நிலத்தை வீட்டுமனைபோடுவோரிடம்
5 கோடிகளுக்கு விற்றுவிட்டு
நகரத்தில் வீடு கட்டி குடியேறிவிட்டார்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by அருள் Thu Feb 07, 2013 2:23 pm

கடவுள் கடவுளாகிப்போனார்! 28284 கடவுள் கடவுளாகிப்போனார்! 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by அருள் Thu Feb 07, 2013 2:36 pm

கடவுள் கடவுளாகிப்போனார் - கடவுள் – 19




பூ பழம் தேங்காய் உடன்

கோயிலுக்குச் சென்றார் கடவுள்!

பீய்ந்த செருப்பை விட

கட்டணமாக 5 ரூபாய் தண்டம் -

கற்பூரம் ஊதுவத்தி 10க்கு
வாங்கி


கோயில் வாசப்படிக்கு வந்தவர் அதிர்ந்தார்!

“எந்தச் சாமி இத்தன பேரின்

கண்ணைக் குத்தியிருக்கும்!

பள்ளிக்குச் செல்லாத அவர்கள்

மனப்பாடம் செய்து வைத்திருந்த

டீக்குப் பணம் 5 ரூபாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்!

கடவுளுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை

விரைவு அர்ச்சனை சீட்டை

10 ரூபாய் கொடுத்து வாங்கியவர்

மறுபடியும் அதிர்ந்தார்

அந்த வரிசையிலும் நீண்ட கூட்டம்!

முதியவர்கள் ஏதோ தெரிந்த மந்திரத்தை

முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்

கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி

அந்த வாரத்தில் புதிதாக வந்த

திரைப்படத்தின் குத்துப்பாடலை

சப்தமாகப் பாடிக்கொண்டிருந்தது!

காதலர்கள் கைகளை இறுக்கமாகப் பிடித்துகொண்டு

தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு

முன்னால் போக அனுமதியளித்து

நின்ற இடம்விட்டு நகராமல் இருந்தார்கள்.

கடவுள் கொஞ்சம்கொஞ்சமாய் முன்னேறி

4 மணிநேரத்துக்குப் பின்

ஓரிரண்டு வினாடியே தரிசித்துவிட்டு வெளியேறினார்.

பசியெடுத்ததோ என்னவோ

வேற்று மதத்தினர் கொடுத்துக்கொண்டிருந்த

பிரசாத்ததை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்!

வெளியேறியபோது வாங்கிவந்த

பிரசாத்ததை 5 ரூபாய் கேட்டவர்களுக்குக் கொடுக்க

கூட்டத்தில் ஒருவர்

முறைத்த பின் வாங்கிக்கொண்டார்!

நெரிசல். அமைதிக்காகச் சென்ற இடத்தில் சப்தம்.

கழிவுகள்.

பயணம் முடிவதற்குள் பேரூந்து விபத்து

நான்கு பேர் பலியாக

அதிஷ்டவசமாக

மயிரிழையில் உயிர்ப் பிழைத்தார் கடவுள்!

வருத்தத்தோடு தெரு முனையில் வந்தபோது

இளைஞன் ஒருவன்

வேப்பமரத்தடியில் இருந்த

கல்லை வணங்கி

மகிழ்ச்சியோடு திரும்பியதைக் கண்டார்.

பேசாம நாமும் இங்கேயே

சாமி கும்பிட்டு

இருக்கும் வேலையைக்

கவனித்திருக்கலாம்…

கடவுளுக்கும் புத்தி வந்தது!!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by அருள் Thu Feb 07, 2013 3:02 pm

திரைப்படத்தில்
நடிக்க ஆசைப்பட்டார் கடவுள்
.

முதல்
வேலையாக



முதிர்க்கன்னி
பட்டம் தராத


40
வயது நடிகைக்குத் திருமணம் என்ற


ரகசியத்
தகவலை அறிந்ததும்


அவள்
வயிற்றில்தான் பிறக்க முடிவெடுத்தார்
.

அப்படி
முடிவெடுத்ததற்காக
ப் பின்னர் வருந்தினார்.

மூன்றாம்
மாதம் வயிற்றில்
இருக்கும்போதுகூட

குத்தாட்டத்துக்கு
ஒப்புக்கொண்ட
தால்

வயிற்றில்
இருந்து சிரித்துக்கொண்டார் கடவுள்
.

முன்னாள்
நடிகை
யோ

குழந்தை
உதைப்பதாகச் சிலிர்த்துப்போனாள்


பெண்
குழந்தையாகப் பிறந்தார் கடவுள்
.

பொத்தி
பொத்தி வளர்த்ததில்



வளர்ந்து
நின்றாள்
.

அவளை
நடிகையாக்கக்கூடாது என்ற


இறுக்கம்
தளர்ந்தது
.

முதல்
படத்திலேயே



தனக்கு
நண்பனாக


காதலனாக-

கணவனாக-

நான்
அவனுக்குத் தாயாக


பாட்டியாக

நடித்த
அந்த நடிகனுக்கு


இவள்
காதலனாக நடிக்கும்


வாய்ப்புக்
கிடைத்ததில் மகிழ்ந்துபோனாள்
.

நான்
யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லையென்று


செய்தித்தாள்களில்
பேட்டிகள்


முதல்
படம் பிளாப்


என்ன
காரணம் என்று ஜோசியம் பார்த்தாள்.


கவர்ச்சி
குறைவாம்.


தராளமாக்கினாள்

படங்கள்
வெள்ளி விழா கொண்டாடப்பட்டன


பணத்
தேவைக்காக


எல்லா
மொழிப் படங்களிலும்


நடித்தான்… நடித்தாள்… நடித்தாள்…

திருமண
வயதைத் தாண்டியும் நடித்தாள்.


ஐந்தாறு
நடிகன்களுடனும்


பத்து
பதினைந்து தொழிலதிபர்களுடனும்


நான்கு
கிரிக்கெட் வீரர்களுடனும்


கிசுகிசுக்கப்பட்டாள்

நாற்பது
வயதைக் கடந்தாள்


அம்மா
மாதிரியே பொண்ணுன்னு


பேசப்பட்ட
சூழ்நிலையில்தான்


செய்தித்தாள்களில்
முதல்பக்கச் செய்தியானாள்


தனி
அறையில் தற்கொலை!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by அருள் Thu Feb 07, 2013 3:08 pm

ME
படித்து

மாதம்ஒன்
லேக் சம்பளம் வாங்கும்


மணப்பெண்ணாக
மாறி


பெண்
பார்க்கும் படலத்திற்காகக்


கையில்
டீ கிளாஸ்களுடன் நின்றிருந்தார் கடவுள்
!

இப்படி
நிற்பது நான்காவது தடவையென்று


தங்கச்சிக்காரி
சிரித்துக்கொண்டாள்
.

அதிகம்
படிச்சிட்டாகூட



மாப்பிள்ளை
அமைவது கஷ்டம்தான்போல


ஒரு
வழியாக மாப்பிள்ளை ஓகே சொல்ல


திருமணம்
சிறப்பாக நடந்தேறியது
.

பின்னர்
அறங்கேறியது நாடகம்
.

அதான்
ஆச

60 நாள்


மோகம் 30 நாளுன்னு சொல்வாங்களே!

எல்லாம்
முடிஞ்சதும்


ஆரம்பமானது
சமையல் செய்யும் பிரச்சினை


என்னத்தான்
சமையல் செய்யறையோ
?

ஏன்
நானும்தான் சம்பாதிக்கிறேன்


நீங்களும்
சமையல் செய்யுங்கள்


பொண்ணுங்க
மட்டும்தான் செய்யனுமோ
?

சரி
இல்லையின்னா சமையல்காரியை வைத்துக்கொள்ளலாம்
.

பிரச்சினை
இப்படி வந்தது
:

நீங்க
சமையல்காரியை வெச்சிட்ட கீறிங்கன்னு


டவுட்

லட்ச
லட்சமா சம்பாதித்து என்ன பிரயோசனம்


விவாகரத்தில்
வந்து நின்றது கடவுளின் வாழ்க்கை.


கணவனுக்குத்
துரோகம் செய்யாத


வேலைக்காரியின்
கற்பு


கலங்கப்படுத்தப்பட்டது.

வேலைக்காரியின்
கணவன் சொன்னான்
:

நீ
ஏன்டி அழற


பாத்திரம்
கழுவும்போது


உன்
கைகள்தான் கறைபடும்


உன்
கற்புக்கு கறை படாது!


நீ
வேற வீட்ட பாரு


பையனையும்
பொண்ணையும்


படிக்க
வெக்க



நமக்கு
வேற என்ன வேலை தெரியும்
?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by அருள் Thu Feb 07, 2013 3:13 pm

இளைஞனான


கடவுள் டீவியைப் போட்டான்…

அட என்ன ஒரு விளம்பரம்!

ஒரு பொண்ண பிக்கப் பண்ணணுமுன்னா

ஒரு பைக் வாங்கினாலே போதும்போல

எப்படி லிப்ட் கேக்கிறாள் பாறேன்.

மறு நாளே


அப்பா காலேஜ் போனனுமுன்னா

பைக் வேணும்


அதுவும் இந்த மாதிரி பைக் தான் வேணும்

ஏங்க உங்க புள்ள சாப்பிடமாட்டின்றான்

சரிடா நாளைக்கு வாங்கிக்கலாம்

ஏன் இன்னிக்கே வாங்கிக் கொடுத்தா என்னவாம்

முரண்டு பிடித்தார் கடவுள்.

பைக் வாங்கியாகிவிட்டது

7 நாள் சுத்தியாகிவிட்டது

காலேஜியில் கூட படிக்கிற

பொண்ணுங்க கூட லிப்ட் கேக்கல

கோபத்தில் டீவியைப் போட்டார் கடவுள்.

அட அதே பொண்ணுதான்


இப்ப காருல லிப்ட் கேட்டு போறாளே!

ஆசை யாரை விட்டது.

அப்பாவிடம் பிட் போட்டார்

கார் வாங்கியாகிவிட்டது.

பொண்ணுங்க ரோட்டுல

நிற்பதைப் பார்த்தால் சைடாக வந்து

லிப்ட் வேணுமான்னு வாலன்டரியா கேட்டான்

எந்தப் பொண்ணும் ஏறவேயில்லை

நம்மள இந்த விளம்பரக்காரனுங்க

நல்லாதான் ஏமாத்துறானுங்களோ என்று

நினைத்துக்கொண்டே


டீவியைப் போட்டான்

அடப்பாவி அந்தப் பொண்ணு

ஆமாம் அதே பொண்ணுதான்!

மேலே போற ப்ளைட்டுக்கு

லிப்ட் கேட்பதுபோல நின்றிருந்தால்!

அப்பாவிடம் ப்ளைட் வேணுமுன்னு

கேட்க முடியாதே என்று


பஸ்லிலேயே போக ஆரம்பித்தார்

ஆச்சரியம்


முதல் பார்வையிலேயே


ஒரு பெண் சிக்கிக்கொண்டாள்!

துள்ளிக் குதிக்க நினைத்ததில்

கடவுளும் அருகில் இருந்தவனும்

பஸ் படிக்கெட்டிலிருந்து விழுந்து

பரிதாபமாகச் செத்தே போனார்கள்

அவரின் அப்பாவும் அம்மாவும்

அழுதுக் கொண்டு நின்றிருந்தார்கள்.

காரியம் முடிந்ததும்

அப்பா டீவியைப் போட்டார்


அதே பைக் விளம்பரம்

ரிமோட்டை எழுத்து வீசினார்

டீவி உடைந்தது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 08, 2013 5:56 pm

கடவுள் – 10

கடவுள்
விமானப் பயணத்தில் நம்பிக்கையற்று
புஷ்பக விமானத்தில்
நேரடியாகக் கூடங்குளம் வந்திறங்கினார்.
ஓராண்டு அமைதியாகப் போராடியும்
நீதி கிடைக்கவில்லையா?
உயர்நீதி மன்றம்கூட
கைவிரித்துவிட்டது என்ற உதயகுமார்
உச்சநீதி மன்றத்தை நம்பி இருக்கிறோம் என்றார்.
ஆய்வாளர்கள்
உச்சநீதி மன்றத்துக்குக்கூட பொய் அறிக்கை
சமர்பிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.
அப்படியென்றால் என்னால்கூட
இனி தடுத்துநிறுத்த முடியாது என்று
கை விரித்தார் கடவுள்.
சரி… அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
ஓட்டுக்காக முன்னுக்குப் பின்
பேச்சை மாற்றிக் கொள்கிறார்கள்.
பணம் போனால் என்ன
சம்பாதித்துக் கொள்ளலாம்
உயிர் போனால்…
வாட்டமுற்ற கடவுள்
அறிவியலில் முன்னேறிவிட்டார்கள்
என்பதைக் காட்ட உயிரோடு விளையாடுவதா!
அணு எல்லாம் வேண்டாம் என்றுதானே
இயற்கை சக்திகளைப் படைத்தேன்.
சோம்பேறிகள் தான்
இயற்கைக்கு மாற மாட்டார்கள் என்று
கோபமுற்றுப் பேசியபோது
உதயகுமார் சிரித்துக்கொண்டார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 11, 2013 8:05 am

கடவுள் – 11

பூங்காவில் அமர்ந்து
வண்ணத்துப்பூச்சியை
ரசித்துக்கொண்டிருந்தார் கடவுள்.
பூக்கள் அழகா?
வண்ணத்துப்பூச்சி அழகா?
கடவுளே நடுவராகவும்
வலது இடது பேச்சாளராகவும் இருந்து
ஒரு மணி நேரம்
வெற்றுப் பேச்சு பேசி முடிவெடுக்கப்பட்டது
இரண்டுமே அழகென்று!
சிறுவர்கள் ஓடிவிளையாடினார்கள்.
பூக்கள் அழகு என்றான் காதலன்!
பறிக்க முடியாத வண்ணத்துப்பூச்சிதான்
மிகவும் அழகு என்றாள் காதலி!
அந்தக் காதலர்கள் சிறிது இடைவெளியில்
முத்தத்தோடு கொஞ்சிக் கொண்டார்கள்.
முதியவர்கள் கைதாங்களாக நடந்தார்கள்.
விவாகரத்தானவளின் பார்வை –
விவாகரத்தானவனின் புது மனைவி
ஊனமுற்றவனின் தன்னம்பிக்கை –
போதையில் தடுமாறிய நடை -
ச்சி… என்ன அது
வண்ணத்துப் பூச்சியைத்தானே
ரசித்துக்கொண்டிருந்தேன்.
கடவுளே!
“மனசு ஏன் கட்டுப்பாட்டுக்குள்
வரமாட்டேன்கிறது” என்று
நொந்துகொண்டார் கடவுள்!!!
--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...

தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 12, 2013 7:19 am

கடவுள் – 12

ஒற்றைக் காற்சிலம்போடு
கண்ணகியாக மாறி
பாண்டியன் அவை சென்றார் கடவுள்.
என்ன அது மீண்டும் கண்ணகி!
மதுரை தீக்கு இரையாகப்போகிறதா?
அன்றேதான் அழித்துவிட்டாளே!
கோயில்கூட கட்டியாகிவிட்டதே!
தவறு செய்யாதபோதும்
நடுநடுங்கிக்கொண்டிருந்தார் பாண்டியன்.
பக்கத்தில் மனைவி நம்பிக்கையற்று
என்ன தவறு செய்தாரோ!
“மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி” வீழ்வதற்குமுன்
“தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது”
இந்த முறை நான் அவருக்கு முன்பாகச்
செத்துவிட எண்ணி மரணித்துப் போனாள்…
இன்னும் என்னென்ன நடக்குமோ என்று
அவையோர் அஞ்சும்முன்
கண்ணகி பாண்டியனிடம்,
“கோவலனைத் திருத்த முடியாமல்
மதுரையை எரித்ததற்கு
மன்னித்திடுங்கள்” என்றாள்!
மகிழ்ச்சியோடு கையில் இருந்த
மற்றொரு சிலம்பைக் கொடுத்து
என்னால் எரிந்த மதுரையை
புணரமைத்துக்கொள்ளுங்கள் என்றாள்!
மயானத்தில் சந்தனக் கட்டையின்மேல்
எப்போதும்
தவறே செய்யாத
கோப்பெருந்தேவி எரிந்துகொண்டிருந்தாள்!
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 18, 2013 9:34 am

கடவுள் – 13

கடவுள்
கிரிக்கெட் பேட்டுடன்
கேப்டனால் களத்தில் இறக்கப்பட்டார்.
முதல் போட்டியிலேயே
பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தார்.
இந்திய அணிக்கும் கேப்டனாகிவிட்டார்.
முதல் சீர்திருத்தமாக வாய்ப்புக்கொடுத்த
முன்னாள் கேப்டனை வெளியேற்றினார்.
பல வெற்றிகள்… பல தோல்விகள்
வெற்றிகள் கொண்டாடப்பட்டன
தோல்விகள் பரிசோதனை முயற்சி என்று
பொருந்தா விளக்கங்கள் கூறப்பட்டன
இந்தியர்கள் நம்பிக் கொண்டார்கள்.
கிரிக்கெட்டில் விளையாடி சம்பாதிப்பதைவிட
உண்டியலில் பணம் விழுவதைவிட
விளம்பரத்தில் சம்பாதிப்பது
எளிமையாகவும் அதிகமாகவும் இருந்தது.
புகழின் உச்சியில் கடவுள்.
பாகிஸ்தானுடனான போட்டியில்
வெற்றி பெற
இந்தியாவோடு சேர்ந்து
கடவுளும் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்!
லீக் மேச்சில் வெற்றியும் கிடைத்தது.
தோற்ற பாக்கிஸ்தான்
மற்ற அணிகளிடம் விளையாடும்போதும்
தோற்க வேண்டும் என்று வேண்டுதல்கள்!
கடவுளின் வேண்டுதலே நிராகரிக்கப்பட்டு
பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டது!


(யாருடைய மனத்தையும் புண்படுத்துவதற்காகப் படைக்கப்பட்டதல்ல இது... - சினிமாவுல கூட இப்படித்தான் போடுங்க.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 10:38 am

கடவுள் – 14

முதியவன் தோற்றம் தரித்து
கடவுள் முதியோர் இல்லத்தில்
அடைக்கலமானார்!
பணம்தான் குறையாக இருந்தது
அன்பும் பாசமும்
கொட்டிக் கிடைத்த
குடும்ப வாழ்க்கையில்
இன்று அனாதையாகக் கடவுள்!
பெற்றப் பிள்ளைகள்
கையில் பணம் இருக்கிறது என்பதற்காகப்
பெற்றோர்களை அனாதையாக்குவதா? என்றதற்கு
அங்கிருந்தவர்கள்
மகனைத் திட்டாதீர்கள் என்றார்கள்.
அவர்களுக்குப் பாடம்
கற்பிக்க வேண்டும் என்றார்.
அவர்கள்
“நாங்கள் படிக்க வைத்த
ஆங்கிலப் பாடமும் சரி இல்லை
அவர்களாகப் படித்தப் பாடமும்
சரி இல்லை” என்றார்கள்.
பிறகு தண்டிக்காமல் இருப்பதா?
விட்டுவிடுங்கள்… அவர்கள் தம் பிள்ளைகளுக்கு
நாங்கள் தராத கல்வியைத்தானே தருகிறார்கள்.
தாமதமாக அவர்களும் இங்கு வருபவர்கள்தான்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 20, 2013 5:40 pm

கடவுள் – 15

கவிதை எழுத
பேப்பர் தேடிக்கொண்டிருந்தார் கடவுள்.
பேப்பர் கிடைத்ததும்
பேனாவில் மை தீர்ந்திருந்தது.
அதையே கவிதையாக்கி
“பேனா இருக்கும்
எழுத மை இருக்காது.
பக்கத்தில் காதலி இருப்பாள்
உதட்டில் முத்தம் இருக்காது” என்று எழுதி
கவிஞராகிவிட்டார்!
அடுத்தடுத்த இரண்டு படைப்புகள்
சாகித்திய அகாதெமி விருதுக்கான
தகுதியைப் பெற்றிருந்தும்
விருது கை நழுவிப்போனது.
ஐந்தாம் ஆண்டு -
கருவற்ற கவிதைத் தொகுதிக்கு
சாகித்திய அகாதெமி விருது கொடுக்கப்பட்டது!
இந்த ஆண்டு
இவருக்குக் கொடுக்க வேண்டும் என்று
ஏதோ ஒரு காரணத்துக்காக
விருது கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்த
கடவுள் மகிழ்ச்சியின்றி
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி
பேட்டிக் கொடுத்தார்.
பத்திரிகையில்
பணம் கொடுத்து வாங்கிவிட்டாரென்று
மறுநாள் தலைப்புச் செய்தியானது.
இன்றும் பரிசுக்குரிய படைப்புகள்
பரிசு பெறாமல் போவது
அரசியலால்தான் என்பதை உணர்ந்தார்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by ஜனனி Wed Feb 20, 2013 7:32 pm

கடவுள் கடவுளாகிப்போனார்! 28284 கடவுள் கடவுளாகிப்போனார்! 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கடவுள் கடவுளாகிப்போனார்! Empty Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum