TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:05 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

3 posters

Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by KAPILS Thu Jan 03, 2013 7:41 am

அம்மா ஊட்டாத பாலை ஆவினம் ஊட்டும்’ என்பார்கள். தூய்மையானதாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதி குழந்தைகளுக்கு பசும்பாலை புகட்டும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கிறது. அதிலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், முழுக்க முழுக்க நம்புவது பசும்பாலைத்தான். பல நூற்றாண்டுகளாக பசும்பாலோடு மனித சமூகத்துக்கு பந்தம் உண்டு. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய குடும்ப நல சர்வே, ‘பசும்பால் குழந்தைகளுக்கு உகந்ததல்ல...’ என்று பீதி கிளப்பியிருக்கிறது.

கடைசிச்சொட்டு பாலையும் கறந்து விற்பதற்காக மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போடுவதாக ஏற்கனவே புகார்கள் உண்டு. ஹார்மோன் ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைக் குடிப்பதால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் கூட பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த லட்சணத்தில், ‘குழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் சிறுநீரகம் செயலிழக்கும்’ என்ற குடும்ப நல சர்வேயின் அறிக்கையால் தாய்மார்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பசும்பாலில் என்னதான் பிரச்னை..?

அப்போலோ மருத்துவமனையின் தலைமை உணவு ஆலோசகர் புவனேஸ்வரியிடம் கேட்டோம். ‘‘உலக சுகாதார நிறுவனம், ‘பிறந்தது முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறெதையும் தரக்கூடாது’ என்கிறது. ஆனால் பல பெண்கள் 3 மாதங்கள் மட்டும் தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பிறகு பசும்பால், பாக்கெட் பால் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். பசும்பாலை விட பாக்கெட் பால் பெரிய விபரீதம். எருமை, பசு என பல மாடுகளின் பாலை ஒன்றாகக் கலந்து, கொழுப்பைக் குறைத்து, அதிக வெப்பம், அதிக குளிர்ச்சியில் வைத்து பதப்படுத்தி பாக்கெட்டில் அடைக்கிறார்கள்.

பொதுவாக குழந்தையின் நீளம், எடை, தலை, மார்புச் சுற்றளவு எல்லாவற்றையும் பார்த்து, அதன் தன்மையை ஆராய்ந்துதான் உணவைத் தீர்மானிக்க வேண்டும். தாய்ப்பாலைப் பொறுத்தவரை குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் தன்மையும், சத்து அளவுகளும் மாறிக்கொண்டே இருக்கும். இது இயற்கையே கொடுத்த வரம். ஆனால் பசும்பால் அப்படியல்ல. குழந்தையின் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ சத்துகளைக் கொண்டிருக்கும். குழந்தையின் உறுப்புகளால் பசும்பாலை ஜீரணிக்க முடியாது. எல்லாம் சிறுநீரகத்தில் படிந்துவிடும். தாய்ப்பால் சுரக்கவில்லை என்று குழந்தைக்கு வேறு உணவுகளைத் தேடுவதை விட, தாய்க்கு பால் சுரக்கத் தேவையான அளவுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு கொடுப்பதற்கு பதிலாக தாய் நிறைய பசும்பால் குடிக்கலாம். பால்சுரப்பு அதிகரிக்கும். பூண்டு, பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி வகைகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். வேலைகளை அளவாக செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தாய்ப்பால் சுரந்தால் வேறு உணவுகளை நாட வேண்டிய தேவையே இருக்காது...’’ என்கிறார் புவனேஸ்வரி.

குழந்தைகள் இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் தனசேகர் கேசவலுவும், ‘ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் ஏற்றதல்ல’ என்று உறுதியாகக் கூறுகிறார்.

‘‘ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு வளர்ச்சியடையாது. இந்த நேரத்தில் எவ்வளவு சத்துகள் தேவை என்பதை அறிந்து சரியான முறையில் உணவு தரவேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். தாய்ப்பாலை விட சரியான உணவு வேறில்லை. ஆனால் பசும்பாலில் போதுமான அளவு சத்துகள் இல்லை. அதன் ஜீரணத் தன்மையும் வேறுபடும். பசும்பாலால் ஏற்படும் பிரச்னையை ‘கௌஸ் மில்க் புரோட்டின் அலர்ஜி’ என்று சொல்வோம். அண்மைக்காலமாக இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகள் சிகிச்சைக்காக வருகிறார்கள்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உணவைப் பரிந்துரைக்கும்போது, ‘நோ ஆடட் சுகர்... நோ ஆடட் சால்ட்... நோ ஆடட் கௌ மில்க்...’ என்று சொல்வோம். 1 வருடம் வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக பசும்பால் மட்டுமே கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் தரமுடியாத நிலை ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று உணவுகளைக் கொடுக்கலாம்.

தொடர்ந்து பசும்பால் மட்டுமே கொடுத்தால், ரத்தசோகை ஏற்படலாம். போதிய கால்சியம் கிடைக்காததால் ‘ரிக்கெட்ஸ்’ எனப்படும் எலும்புநோய் வரலாம். கை, கால் எலும்புகள் வளைந்து, வளர்ச்சி குறைந்துவிடும். மலச்சிக்கல், உடல் பருமன், பற்சிதைவு, வயிற்றுப்போக்கு, குடலில் ரத்தக்கசிவும் ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து போகவும் நேரலாம். சிலர் பாலை காய்ச்சாமல் அப்படியே குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். அதுவும் தவறு. காய்ச்சாமல் குடிக்கிறபோது, மாட்டில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ‘போவைன் டி.பி’ எனப்படும் காசநோய் வரலாம்...’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் தனசேகர் கேசவலு. வெளுத்ததெல்லாம் தாய்ப்பாலாகாது. கவனத்தில் கொள்ளுங்கள் தாய்மார்களே..!
நன்றி :தினகரன்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty Re: உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by ஜனனி Thu Jan 03, 2013 7:52 am

கடைசியில் பார்தால் மனிதன் அனைத்திலும் கலப்படம் செய்து எதையும் பயன்படுத்த முடியாத படி செய்து விடுவான் உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty Re: உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by KAPILS Thu Jan 03, 2013 7:54 am

சரிதான் தோழி............... அறிவிப்பு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty Re: உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by ஜனனி Thu Jan 03, 2013 7:58 am

கலப்படம் செய்தால் மரண தண்டனை வழங்க பட வேண்டும் என்று சட்டம் வேண்டும் அப்பொழுதுதான் அடுத்தவர்களின் உயிரை பறிக்கும் காரியங்களை செய்யமாட்டார்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty Re: உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by KAPILS Thu Jan 03, 2013 8:01 am

145 145
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty Re: உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by அருள் Thu Jan 03, 2013 12:33 pm

janani wrote:கலப்படம் செய்தால் மரண தண்டனை வழங்க பட வேண்டும் என்று சட்டம் வேண்டும் அப்பொழுதுதான் அடுத்தவர்களின் உயிரை பறிக்கும் காரியங்களை செய்யமாட்டார்கள்
உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே 135634 உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே 135634 உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே 135634 உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே Empty Re: உங்க செல்ல குழந்தைகளுக்கு பசும்பால் ஊட்டுறீங்களா தாய்மார்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!
» பெரியோர்களே, தாய்மார்களே!: தமிழில் பேசிய மோடி!
» காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள்!
» காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking
»  காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள்! [ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் ]

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum