TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசின் அடுத்த பலி யார்? டக்ளஸா, கருணாவா?

Go down

அரசின் அடுத்த பலி யார்? டக்ளஸா, கருணாவா? Empty அரசின் அடுத்த பலி யார்? டக்ளஸா, கருணாவா?

Post by மாலதி Sun Dec 30, 2012 8:59 pm

அரசின் அடுத்த பலி யார்? டக்ளஸா, கருணாவா?
**********************************************

அரசின் அடுத்த பலி யார்? டக்ளஸா, கருணாவா? 397624_298756356912528_2121928946_n
இலங்கைக்கு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும்போதேல்லம் தம்மோடு
இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை பலி கொடுத்து புலிகள் மீது பழியைப்
போட்டுவிட்டு அதிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். கடந்த காலங்களில்
மகிந்த அரசின் இந்தத் திட்டம் வெகு கச்சிதமாக மிகப் புத்திசாலித்தனமாக
நிறைவேற்றப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தை அழிப்பதற்கு சிங்கள அரசு கையாண்ட
மிகப் பெரிய தந்திரம். சிங்கள அரசிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்த
முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை
செய்தது சிங்கள அரசு.

ஆனால் அவற்றை புலிகள்தான் செய்தார்கள்
என்பதை மிகத்திறமான பரப்புரையின் மூலம் உலகை நம்ப வைத்தது சிங்கள அரசு.
அந்தக் கொலைகளை நாங்கள் செய்யவில்i என புலிகள் உரத்த குரலில் கூறியபோதும்
உலகம் இதனை நம்பவில்லை.

சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்ட சிங்கள
அரசை, பயங்கரவாத அரசாக பிரகடனப்படுத்துவதற்கு பதிலாக தமிழரின்
விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக உலகம்
பிரகடனப்படுத்தியது தமிழருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.


மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பல தமிழ் இளைஞர்களின் கொலைக்கு காரணமாக இருந்தவர்
என்பது உண்மைதான். ஆனால் அவரை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை.

அவர் மேல்மாகாணசபைத் தேர்தலின்போது ஐ.தே.க.வின் சார்பில் போட்டியிட்டவர்.
அவருக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாயிருந்தது. அங்கு நிச்சயம் வெற்றிபெற
முடியாது என்பதை அரசு உறுதிசெய்ததின் பின்பே அவரைக் கொலை செய்யத்திட்டம்
வகுக்கப்பட்டது.

அந்தத் திட்டத்திற்கு கருணா தலைமை தாங்கினார்.
குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு வைத்தே அவர் கொல்லப்பட்டார்.
அவருடன் 60 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறான கொலைகளை அதாவது ஒருவரைக் கொலை
செய்வதற்காக 59 பொதுமக்களை பலி கொடுப்பதை விடுதலைப் புலிகள் செய்ய
மாட்டார்கள்.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டதற்கு அடுத்த
நாள் கருணா நியமன எம்.பி.யாக மகிந்தவினால் நியமிக்கப்பட்டார். மகிந்த அரசு
எதிர்பார்த்ததைப் போன்றே அப்போது மேல்மாகாண சபைத் தேர்தலில் அவரின் கட்சி
வெற்றிபெற்றது.

புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் ஜானக பெரேரா
கொல்லப்பட்டதாக மகிந்த அரசு செய்த பரப்புரையை ஐ.தே. கட்சியும்
நம்பிவிட்டது. அவர்களும் புலிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததினால் உலகம்
புலிகளை பயங்கரவாதிகளென தவறாகக் கணித்துவிட்டது. இவ்வாறானதொரு சந்தர்ப்பம்
மகிந்த அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் பல
பிரச்சனைகள். வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் குறைவில்லை. பிரதம நீதியரசர்
விவிகாரம், யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்து
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது, வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலைகள்
என பல பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மகிந்த அரசு திணறுகின்றது.

அதேநேரத்தில் கடந்த மூன்றரை ஆண்டு காலமாக மனித உரிமை பேரவையை ஏமாற்றி வந்த
மகிந்த அடுத்து வரும் மார்ச் மாத மகாநாட்டில் பெரும் சிக்கலை எதிர்நோக்க
வேண்டியுள்ளது. இவற்றிலிருந்து மகிந்த தப்பிக்க வேண்டுமானால்,
ஆபத்பாந்தவனாக விடுதலைப் புலிகள் வந்தேயாக வேண்டும். இது எப்படிச்
சாத்தியமாகும்.

அரசுடன் மிக நெருக்கமாகவுள்ள தமிழர் ஒருவரை
தீர்த்துக்கட்ட வேண்டும். அதை அப்படியே புலிகள் மீது சுமத்த வேண்டும்.
அதனால்தான் மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் என மகிந்த முழு உலகமும்
கேட்கும் வண்ணம் ஒப்பாரி வைக்க வேண்டும்.

அந்த நடிப்பை உலகம்
ஏற்றுக்கொண்டால் மகிந்த ஓரளவு தப்ப முடியும். ஆனால், மீண்டும் தமிழ்
இளைஞர்களை மகிந்த அரசு ஆயுதம் ஏந்தத் தூண்டுகின்றது என ஒருசில நாடுகளே
குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளதால் நடிப்பு எடுபடும் என்று சொல்வதற்கில்லை.

ஆனால், யாரைப் பலியெடுப்பது என்பதில் மகிந்த அரசு ஆலோசித்து வருகின்றது.
மகிந்தவின் உடனடி ஆலோசனைக்கு டக்ளஸ், கருணா ஆகிய இருவர் மாத்திரமே
உட்படுத்தப்பட்டுள்ளனர். இருவரில் யார் என்பதை அறிய ‘பூவா தலையா’
போடப்பட்டாலும் வியப்பதற்கில்லை.

டக்ளஸ் முள்ளிவாய்க்காலின் பின்
கூடுதலான தமிழர்களை கொலை செய்துள்ளார். பாலியல் வல்லுறவு, கொள்ளை,
ஆட்கடத்தல், சிங்களக் குடியேற்றத்துக்கு உதவி செய்தல் போன்ற தமிழருக்கு
எதிரான குற்றங்களைப் புரிந்தவர். தமிழரிடம் கொள்ளையடித்த பணத்தை
மகிந்தவுக்கு கிடைக்கும்படி செய்தவர்.

கருணா ஜானக பெரேராவைக் கொலை
செய்ததுடன், பல தமிழர்களையும் கொலை செய்தவர். அவ்வாறான சந்தர்ப்பங்களில்
அவர் புலிகளின் இராணுவ உடையுடனேயே இருந்துள்ளார். போரின் இறுதிக்
கட்டங்களில் புலிகளின் இராணுவு உடையுடன் மேலும் சிலரையும் அழைத்து வந்து
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய தமிழர்களில் சிலரை
சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டை ஏற்படுத்தியவரும் அவரே. தமிழர்களைப்
பாதுகாத்து வந்த புலிகள் ஏன் அவர்களைக் கொலை செய்ய வேண்டும்?


மகிந்த அரசு மார்ச் மாதத்துக்கு முன்பாக டக்ளஸ் அல்லது கருணாவை அல்லது
இருவரையுமே மறைந்திருந்து கொலைசெய்து விட்டு அதனை புலிகள் மீது சுமத்த
தயாராகி வருவதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அதைத் தவிர வேறு
வழியேதும் அரசுக்குத் தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணா பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ததின் பின்பே
பிரதி அமைச்சராகும் தகுதியைப் பெற்றார். ஆனால், இப்போது மாத்திரமல்ல
இனிமேலும் தமக்குப் பயன்பட மாட்டார் என மகிந்த முடிவெடுத்து விட்டாராம்.
அப்படியானால் கருணா விரைவில் கொல்லப்பட்டு விடுவாரா?

சர்வதேச
மன்னிப்புச்சபைப் பொறுப்பாளர் திருமதி. நவநீதம் பிள்ளையிடம் உலகின் பிரதான
இருபதிற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் இலங்கையைப் பற்றி மனித உரிமை
மீறல்கள் தொடர்பாக அறிக்கைகளை புதிதாகத் தாக்கல் செய்துள்ளதாக ‘இன்னர்
சிட்டி பிரஸ்’ தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரில் செல்லாமலேயே அவர் இலங்கை
பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமளவுக்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள்
அங்கு இடம்பெறுவதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சுருக்கமாகக்
குறிப்பிடுவதாக இருந்தால், மார்ச் மாதம் கூடும் ஐ.நா. மனித உரிமைப்
பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு
சந்தர்ப்பம் வழங்குவதற்கு உதவும் பல தவறுகளை இலங்கை புரிந்து வருகின்றது
என்றே குறிப்பிடப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்
விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவு
செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்விவகாரத்தில் தன்னிச்சையாக
நடந்துகொள்வதனால் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுவதன் மூலம்
இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தலையிட முடியும் என கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.

இறந்தவர்களுக்கான வணக்க நிகழ்வைக் காரணம் காட்டி
அது ஒரு பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட முடியாது என உயர்நீதிமன்றம்
தீர்ப்பளிக்க வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே,
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை தவறானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி
பிரதம நீதியரசரே மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவின் மீது சபாநாயகர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக் கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால் அது
மற்றொரு பாரிய சட்டப் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். தீர்புகள் எங்ஙனம்
அமைந்தாலும், இலங்கை அரசின் மீதான உலகின் பெரும்பான்மை நாடுகளின்
நம்பிக்கைக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் பலர்
தெரிவித்துள்ளார்கள்.

வட பகுதியில் கைது செய்யப்பட்ட 45
இளைஞர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் என இலங்கையின் காவற்றுறையினர்
தற்போது அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள்
முன்னாள் போராளிகள் என பாதுகாப்பு அமைச்சு மூன்றரை வருடங்களுக்கு முன்பே
தெரிவித்திருந்தது.

ஆனால், அவர்கள் பாரதூரமான குற்றம்
புரிந்தவர்கள் அல்லர் என்பதனால், விசாரணையின் பின் அவர்கள்
தடுப்புக்காவலில் இருந்து புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக
பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

பின்பு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டு பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டனர். இதனை இலங்கை அரசு
வெளிநாடுகளில் பெரும் பரப்புரையாகவே மேற்கொண்டது. ஆனால், அவர்களில் 45 பேரை
இரகசியமான முறையில் மீண்டும் கைது செய்து அவர்கள் விடுதலைப் புலிகள் என்று
மீண்டும் அடையாளம் காட்டுவது பெரும் கேலிக்கூத்தாக இருப்பதாக
கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவர்கள் தொடர்பான சகல
விசாரணைகளையும் மூன்றரை ஆண்டு காலமாக காவலில் வைத்து விசாரணை செய்துவிட்டு,
விடுதலையான ஒருசில நாட்களுக்குள் மீண்டும் கைது செய்துவிட்டு ‘அவர்கள்
விடுதலைப் புலிகள். அதனாற்றான் கைது செய்யப்படுகிறார்கள்’ எனக்
குறிப்பிடுவது எந்தச் சட்டத்தின் கீழ் சாத்தியம் என்ற கேள்வியை எழுப்புவதாக
பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேநேரத்தில் அவர்கள்
காவற்றுறையினரிடம் சிக்காமல் மறைந்து வாழ்ந்தவர்கள் என காவற்றுறைப்
பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார். முன்பு அவர்கள் கைது
செய்யப்பட்டவர்களோ, புனர்வாழ்வு முகாம்களில் இருந்தவர்களோ அல்லர் என அவர்
குறிப்பிடுகிறார்.

எனவே, இதில் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது நீதிமன்ற விசாரணைகளின் மூலமே தெரியவரும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். கைதானவர்களில் மூன்று பெண்களும், பத்தொன்பது வயது பல்கலைக்கழக மாணவரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வீ.ஆர். வரதராஜா


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum