TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5

Go down

எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5 Empty எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5

Post by அருள் Mon Nov 05, 2012 1:15 pm

எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5
************************************************
எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5 521755_366302810131465_1648280808_n
வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால்,
அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

விஷ்யம் தெரிந்து கூடி விட்ட பத்திரிகை
யாளர்களிடம்அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி,
"எம்.ஜி.ஆருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி (ஜலதோஷம்) இருந்தது. காய்ச்சல்
இருந்தது. சிறிது ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து வருகிறார்.என்று கூறினார்.

இதற்கிடையில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வந்தது. சட்டசபையில்
சித்தன் (இ.காங்கிரஸ்) பேசும்போது, "எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய
விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நெடுஞ்செழியன்,
"5.10.1984 வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு "ஆஸ்துமா" போன்று
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
ஓய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் சேர்க்கப்பட்டார்.

சென்னை
ஜெனரல் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்பல்லோ
ஆஸ்பத்தி ரியை சேர்ந்த டாக்டர் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி
மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகிய டாக்டர்கள் குழுவினர் முதல்
அமைச்சரின் உடல் நிலை குறித்து கவனித்து வருகிறார்கள்.

மறுநாள்
முதல் அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நல்ல
முறையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மூச்சு விடுவதில் இருந்த சிரமம்
நீங்கிவிட்டது. இன்று காலையில் முதல் அமைச்சரின் உடல் நிலையில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கிறார்.

மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசீஸ்)
நல்ல உதவியை செய்துள்ளது. சிறு நீரகத்தை கிட்னி என்ற உறுப்பில் இந்த
டயாலிசீஸ்' இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. வயிற்று குடலில் உள்ள
ஜவ்வில்தான் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது." என்று நெடுஞ்செழியன்
கூறினார்..

பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப்
சி.ரெட்டி,"நுரையீரலில் ஒரு வகை திரவம் சேர்ந்ததால் அவருக்கு மூச்சு திணறல்
ஏற்பட்டது. அந்த திரவத்தை "பெரிடோனியல் டயாலி சீஸ்" முறை மூலம் முழுவதுமாக
வெளி எடுத்துவிட்டோம்.

இது போன்றவற்றால் சிறுநீரகத்தில்
மிகச்சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்துக்கு அதிக வேலை
கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே "டயாலிசீஸ்" மூலம் திரவத்தை வெளியேற்றினோம்.


அவருக்கு இனி சிகிச்சை தேவை இல்லை. எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு
தேவை. எனவே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்கவேண்டும்.
ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பாரே தவிர
சிகிச்சைக்காக அல்ல." என்று அவர் கூறினார்..

இப்படி எம்.ஜி.ஆர்.
உடல் நிலை தேறி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் 14ந்தேதி
அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர்.

அன்று மாலை டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கை,”
"13ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச்செல்லும்போது சிரமம் இல்லாமலும், நல்ல
உணர்வுடனும் இருந்தார். இரவில் அவரது வலது பக்க கை, கால் அசைவில் பாதிப்பு
ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனே நரம்பியல் பேராசிரியர்
டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உடல் நிலையை ஆராய்ந்தார்.

தலைப்பகுதியை `எக்ஸ்ரே' படம் பிடித்து பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில்
ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை.
எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது. ரத்த
சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர் பிரிவதில் அபிவிருத்தி
ஏற்பட்டுள்ளது." என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது..


சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று
கூறப்பட்டு வந்தது. இதற்காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க பம்பாயில் இருந்து டாக்டர்கள்
வரவழைக்கப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற வெளிநாட்டிற்கோ
அல்லது அமெரிக்காவுக்கோ அனுப்புவதாக இருந்தாலோ அதற்கு உதவிகளை செய்வதாக
கவர்னருக்கு பிரதமர் இந்திரா காந்தி தகவல் அனுப்பினார்.

அமைச்சர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தவண்ணம் இருந்தனர்.

திரை உலக பிரமுகர்கள், நடிகர்_ நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு படை யெடுத்தனர். எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

கோவில்களில் எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன.
எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கை சட்டசபையில் தினமும்
தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

ஆஸ்பத்திரி சார்பிலும் மருத்துவ
அறிக்கை அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. 16ந்தேதி மாலை 4 மணிக்கு
பிரதமர் இந்திராகாந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

நேராக
அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அறைக்கு
சென்று 10 நிமிடம் இருந்து எம்.ஜி.ஆரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

அப்போது அந்த அறையில் எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் மற்றும் டாக்டர்கள்
இருந்தனர். பிறகு டாக்டர்களுடன் இந்திரா 15 நிமிடம் பேசி எம்.ஜி.ஆருக்கு
அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந் தார். மொத்தம் 30 நிமிடம்
இருந்துவிட்டு இந்திரா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் சந்தித்தபோது நடந்த கேள்வி - பதில் :.

கேள்வி:- எம்.ஜி.ஆர். உடல் நிலை எப்படி இருக்கிறது?

பதில்:-அவரை பார்க்கப்போன எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு
கொண்டார். நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். "நீங்கள் ஒரு தைரியசாலி.
கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றை சமாளித்து
இருக்கிறீர்கள்.

அதுபோல இப்போது மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும்
இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டுமல் லாமல் இந்தியாவில் உள்ள
மக்கள் எல்லோரும் நீங்கள் விரைவில் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்"
என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார்.

நாங்கள்
அவர் இருக்கிற அறைக்கு போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி
செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள்
சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள்.

கேள்வி:- மேற்கொண்டு சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரா?

பதில்:-வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வருகிறார்கள். எம்.ஜி.ஆரை
பரிசோதித்துவிட்டு, அவரை வெளி நாட்டுக்கு கொண்டுபோகவேண்டுமா என்பதை முடிவு
செய்வார்கள். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய
அரசு தயாராக இருக்கிறது." என்று இந்திராகாந்தி கூறினார்.

பின்னர் அமைச்சர் ஹண்டேயையும் இந்திரா டெல்லிக்கு அழைத்துச்சென்றார் -சில சுப்பீரியர் டாக்டர்களிடம் கன்சல்ட் செய்யதான்.

ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமராவ், கர்நாடக முதல் மந்திரி ஹெக்டே,
மத்திய மந்திரிகள் பலர் எம்.ஜி.ஆர். உடல் நிலைபற்றி விசாரித்தபடி
இருந்தார்கள். ஜெயலலிதா, மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்,
திரை உலகத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி
கேட்டறிந்தனர்.

அக்டோபர் 17ந்தேதி காலையில் எம்.ஜி.ஆர். உடல்
நிலையை பரிசோதிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் பிரீட்மேன் (நியூயார்க்
நகரில் புரூக்லீன் என்ற இடத்தில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனை சிறுநீரகப்
பிரிவு தலைவர்), டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் (வாஷிங்டன் பல்கலைக்கழக
மருத்துவ பேராசிரியர்), டாக்டர் ஸ்ரீபரதராவ் (புருக்லீன் டவுன் ஸ்டேட்
ஆஸ்பத்திரி டயாலிசீஸ் பிரிவு டைரக்டர்), டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர்
(டெக்சாஸ் நகர மருத்துவ கல்லூரி நரம்பியல் பேராசிரியர்) ஆகியோர் சென்னை
வந்தார்கள்.

அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த அவர்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹண்டே வரவேற்று தனி விமானத்தில் சென்னைக்கு
அழைத்து வந்தார். காலை 8.20 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அமெரிக்க
டாக்டர்கள் வந்து எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர்.

பின்பு இதுவரை
சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்பு அமெரிக்க
டாக்டர்களை நிருபர்கள் மீட் பண்ணிய போது,””எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி,
சிறுநீரக கோளாறு ஆகியவை உள்ளன. வலதுபுற கை, கால் செயல் இழந்து உள்ளன.

இங்குள்ள டாக்டர்கள் சிறப்பாக அளித்த சிகிச்சையால் அவரது உயிரை காப்பாற்றி
குணம் அடையும் பாதையில் செல்ல வழிவகுத்துள்ளன. மூளையில் உள்ள வீக்கம்
குறைந்து இருக்கிறது. எனவே அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.”இவ்வாறு
டாக்டர்கள் கூறினார்கள்.....

டாக்டர் பிரீட்மேன் கூறும்போது,
"எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மாற்று
சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்.
டாக்டர் ஸ்டிரிலிங் மேயர் சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து
சிகிச்சை அளித்தார். மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை பரிசோதனை நடத்திவிட்டு
மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள்.


அமெரிக்க டாக்டர் பிரீட்மேன் அமெரிக்கா புறப்படும் முன்பு விசேஷ பேட்டி
அளித்தார். "எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பழைய
நிலையை அடைந்து வழக்கமான வாழ்க்கையை தொடர முடியும்.

அவர் 67
வயதிலும் இளமையுடன் இருக்கிறார். அவர் குணம் அடைய சிறிது காலம்
பிடிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் அவரால் நடக்கமுடியும்" என்று கூறினார்.

இதன் தொடர்ச்சி மாலையில்...!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5 Empty Re: எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5

Post by அருள் Tue Nov 13, 2012 5:14 pm

எம். ஜி. ஆர் . அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் போது தமிழகத்திலும் நடந்த சில காட்சிகள்!
***********************************************
எம்.ஜி.ஆர் உடல் நlaம் குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5 306837_369747359787010_338437625_n

பாராளுமன்றத்தின் பதவிக்காலம், 1985 ஜனவரி 20ந்தேதி வரை இருந்தது.
எனினும், பிரதமராக பதவி ஏற்ற ராஜீவ் காந்தி, பாராளுமன்றத்தைக்
கலைத்துவிட்டு திடீர் தேர்தல் நடத்த தீர்மானித்தார்.



இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 13.11.1984 அன்று வெளியாயிற்று.
டிசம்பர் 24, 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று "தேர்தல் கமிஷன்"
அறிவித்தது.

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்த அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

இதுகுறித்து பிரதமர் ராஜீவ் காந்தியுடன் அமைச்சர் நெடுஞ்செழியன்
ஆலோசித்தார். இதற்கு ராஜீவ் காந்தி சம்மதித்தார். இ.காங்கிரசும்,
அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

தொகுதி
பங்கீடு பற்றி பேச்சு நடத்த அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள்
நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ.கிருஷ்ணசாமி,
ஆர்.எம்.வீரப்பன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ப.உ.சண்முகம் ஆகியோர் கொண்ட
ஐவர் குழு அமைக்கப்பட்டது.

இந்த 5 பேரும் டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காந்தி, துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.

காங்கிரஸ் தரப்பில் பழனியாண்டி, மரகதம் சந்திரசேகர், எம்.பி.
சுப்பிரமணியம், காஜாசெரீப் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையில்
தொகுதி பங்கீடு பற்றி உடன்பாடு ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில்
மொத்த இடமான 234 தொகுதிகளில், 162 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுவது
என்றும், 72 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் முடிவு
செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 26
தொகுதிகளில் இ.காங்கிரசும் (மூன்றில் இரு பங்கு) 13 தொகுதிகளில்
அ.தி.மு.க.வும் (ஒரு பங்கு) போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி இ.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
நெடுஞ்செழியன் மற்றும் அமைச்சர்கள் சென்னை திரும்பியதும் தமிழ்நாடு
அமைச்சரவை கூட்டம் நடந்தது.

"தமிழக சட்டசபையை கலைத்துவிட்டு,
பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்தவேண்டும்" என்று ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அமைச்சர்கள்
நெடுஞ்செழியன், கே.ஏ.கிருஷ்ணசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன்,
ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் கவர்னர் குரானாவை சந்தித்தார்கள். சட்டசபையை
கலைக்க கோரும் தீர்மானத்தை கவர்னரிடம் கொடுத்தனர்.

அதை
பெற்றுக்கொண்ட கவர்னர் குரானா அதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தார். தமிழக
அமைச்சரவை சிபாரிசை ஏற்று தமிழக சட்டசபையை கலைத்து 15.11.1984 அன்று
கவர்னர் குரானா உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு சட்டசபை
கலைக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுபற்றி கருணாநிதி ,””"எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று வரும் வரையில்
ஜனநாயக ரீதியில் ஒருவரை தற்காலிக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து
இருக்கலாம். சட்டசபையை கலைக்க வேண்டியதில்லை. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.
வந்தபிறகு ஜுன் மாதம் தேர்தலை நடத்தி இருக்கலாம்.

சட்ட சபையை
கலைக்கவேண்டும் என்ற முடிவு எடுக்கிற உரிமை முதல் அமைச்சருக்கே உண்டு.
ஆனால் முதல் அமைச்சரின் அறிவுரை இல்லாமல் கவர்னர் இப்படி முடிவு எடுத்து
அறிவித்தது, மிகத்தவறான முன்மாதிரியை உருவாக்கிவிட்டது என்பதை
வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்." என்று கருணாநிதி கூறினார்.


இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு டிசம்பர் 24ந்தேதி ஒரே நாளில்
நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி ஓசா அறிவித்தார்.


தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூனிஸ்டு, வ.கம்யூனிஸ்டு, ஜனதா, முஸ்லிம் லீக்,
தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் (நெடுமாறன் கட்சி), உழவர் உழைப்பாளர் கட்சி
(நாராயணசாமி நாயுடு கட்சி), தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இடம்
பெற்றன.

தமிழ்நாட்டில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கும்
தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டது.
"நீங்கள் தேர்தலில் போட்டியிடவேண்டும்" என்று அனைவரும் விரும்புகிறோம்
என்று தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்துவிட்டு "சரி" என்று
எம்.ஜி.ஆர். தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தார்.

இந்த தகவல்களை
அமெரிக்காவில் எம்.ஜி.ஆருடன் இருந்த அமைச்சர் ஹண்டே தெரிவித்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 22 ந்தேதி வெளியிடப்பட்டது.


எம்.ஜி.ஆர். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று
அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதி பட்டியலும் வெளியானது.

எம்.ஜி.ஆருக்கான வேட்பு மனு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் கையெழுத்துடன் வேட்பு மனுவை அமெரிக்காவில் இருந்து கொண்டு
வந்து தாக்கல் செய்ய ஏற்பாடு ஆகியிருந்தது.

தேர்தல் சட்டப்படி
தேர்தலில் போட்டியிடுகிறவர் "சத்தியபிர மாணம்" எடுக்க வேண்டும்.
`சத்தியபிரமாணம்' அந்த நாட்டு தூதரிடம் கொடுக்கலாம்.

அதன் படி
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் அருண் பட்வர்தன், எம்.ஜி.ஆருக்கு
சத்தியபிரமாணம் செய்து வைத்தார். அவர் முன்னிலையில் வேட்பு மனு பூர்த்தி
செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்தபடி தேர்தலில் போட்டியிட்ட
எம்.ஜி.ஆருக்கு அனுமதி வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


இதற்கு இந்திய துணை தலைமை தேர்தல் அதிகாரி வி.ராமகிருஷ்ணன்
விளக்கம் அளித்தார். ,”” "1951 ம் ஆண்டு பிரதிநிதித்துவ சட்டத்தின் 33 வது
பிரிவின்படி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் தனது மனுவை தேர்தல்
அதிகாரியிடம் நேரில் வந்து தாக்கல் செய்யலாம்.

அல்லது தான்
விரும்பும் நபரிடம் வேட்பு மனுவை கொடுத்தனுப்பியும் தாக்கல் செய்யலாம்.
எம்.ஜி.ஆர். தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்
தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட
இக்கட்டான சூழ்நிலைக்கும் அரசியல் சட்டத்தில் வழி உள்ளது. அதன்படி
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர் சிகிச்சை தரும் டாக்டர் முன்பு
அல்லது ஆஸ்பத்திரி சூப்பிரண்டு முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

வேட்பு மனுவிலும், உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டு அனுப்பினால் அந்த வேட்பு மனு செல்லும். அதை ஏற்றுக்கொள்ளலாம்.


வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தால் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதர்
முன்பாக அல்லது தேர்தல் கமிஷன் நியமிக்கும் அதிகாரி முன்பாக உறுதிமொழி
எடுத்துக்கொள்ளலாம். அந்த வழிமுறைகளை தமிழக தேர்தல் அதிகாரிக்கு
தெரிவித்துள்ளோம்.””இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆரின் வேட்பு மனுவுடன் 22 ந்தேதி காலை விமானம் மூலம் ஹண்டே சென்னை
வந்து சேர்ந்தார். "எம்.ஜி.ஆருக்கு இரண்டு வாரத்தில் மாற்று சிறுநீரக
ஆபரேஷன் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

23.11.1984 அன்று காலை எம்.ஜி.ஆரின் வேட்பு மனு ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரி அழகிரி ராஜாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக நெடுஞ்செழியன் தலைமையில் 8 அமைச்சர்களும், பொதுச்செயலாளர்
ப.உ.சண்முகம், பொருளாளர் மாதவன், ஜேப்பியார் ஆகியோர் பெரும் திரளான
தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்கள்.

ஆண்டிப்பட்டி தொகுதியில்
எம்.ஜி.ஆரை எதிர்த்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த
பி.என்.வல்லரசு மனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனு பரிசீலனையின்போது, எம்.ஜி.ஆரின் மனுவுக்கு வல்லரசு சில ஆட்சேபனைகளை தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். வேட்பு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறினார்.
முடிவில் அந்த ஆட்சேபனைகளை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.
"எம்.ஜி.ஆர். வேட்பு மனு, முறைப்படி உள்ளது" என்று கூறி எம்.ஜி.ஆர் மனு
ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நரம்பு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லம்-சல்மான்
» ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா போவாரா?; நடிகர் தனுஷ் பேட்டி
» வார்த்தைகளை மடக்கிப் போட்டுக் காட்டி இதுதான் கவிதை என்று சுட்டி காட்டப் பட்ட காலக் கட்டத்தில் வாழ்க்கையை மடக்கிப் போட்டு க் காட்டிய நிஜக் கவிஞ்ன் மி. மேத்தாவின் பிறந்த நாள்= இன்று-செப்-5
» நவம்பர் 05 : பேஸ் புக்கின் அந்திமத்துக்கு நாள் குறிப்பு !
» இன்று நவம்பர் 21 - உலக மீனவர் தினம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum