TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15

2 posters

Go down

அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 Empty அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15

Post by logu Sat Sep 15, 2012 7:36 am

அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15
****************************************
அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 Anna10
திராவிடக் கழகத்தின் தலைவராக பெரியாரும், தளபதியாக அண்ணாவும் இருந்து கட்சியை வளர்த்தனர்.

இந்த நேரத்தில் பெரியார் மணியம்மை திருமணத்தினால் அண்ணா பெரியார் உறவு முறிந்தது.

தி.மு.கழகத்தை அண்ணா தொடங்கினார்.புதிதாக அமைக்கப்பட்ட தி.மு.கழகம் வளருமா என்று சந்தேகப்பட்டவர்கள், பலர்.

குறிப்பாக காங்கிரஸ்காரர்கள், எதிர்காலத்தில் தி.மு.கழகம் பலம் மிக்க ஒரு
எதிர்ப்பு சக்தியாக விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அதற்கு அண்ணாவின் பேச்சும் எழுத்தும்தான் காரணம் என்றால் மிகையல்ல்.!

குறிப்பாக அண்ணா பேசும் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில்
கூடினர். எதுகை மோனையுடன் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், மக்களை மயக்கின.

"தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்", "மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர்" என்று புகழ் பெற்றார். .

சிறுவயதில் அண்ணாவுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் இல்லை. விளையாட்டில் அதிக நாட்டம் செலுத்தினார்.

அதன் விளைவாக, அண்ணா எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் தேறவில்லை.
பிற்காலத்தில் பெரிய மேதையாகத் திகழ்ந்த அண்ணா, எஸ். எஸ்.எல்.சி. பரீட்சையை
மூன்று முறை எழுத நேரிட்டது என்றால், நம்பமுடியவில்லை அல்லவா?
எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரியில் படிக்கும் போதே, பட்டிமன்றங்களில் பங்கு கொண்டார். அவருடைய பேச்சுத்திறமை அப்போதே வெளிப்பட்டது.

பி.ஏ.ஆனர்ஸ் (எம்.ஏ) பரீட்சையில் தேறினார். பட்டம் பெற்ற பிறகும் நூல்கள்
படிப்பதை அண்ணா நிறுத்தவில்லை. இலக்கியங்கள், வரலாறுகள், புராணங்கள்
அனைத்தையும் படித்தார். பேரறிஞராக உருவானார்.

அண்ணாவுக்கு 1930
ம் ஆண்டில் திருமணம் நடந்தது. . அதனால், வேலை தேடி அலைந்தார். பாரிமுனை
அருகில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

ஆனால், சுதந்திர மனப்பான்மை உடைய அண்ணா, 4 மாதங்களுக்கு மேல் அந்த வேலையில் நீடிக்கவில்லை.

இந்த நேரத்தில், அரசியல் பக்கம் அவர் கவனம் திரும்பியது. நீதிக்கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

நீதிக்கட்சியின் பெரிய தலைவர்களுக்குத் தமிழில் நன்றாக பேசவராது. ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.

அவர்களுடைய பேச்சை தமிழில் மொழி பெயர்ப்பார், அண்ணா. அவருடைய மொழிபெயர்ப்பின் அழகைக்கண்டு, தலைவர்கள் பிரமித்தனர்.

அண்ணாவின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவத் தொடங்கியது.

இந்நிலையில் திருப்பூரில் நடந்த இளைஞர் மாநாடு ஒன்றுக்கு, அண்ணா சென்றிருந்தார். அந்த மாநாட்டுக்குப் பெரியாரும் வந்திருந்தார்.

அந்த மாநாட்டில்தான் இருவரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர்.

அண்ணா, பெரியாரின் சீடரானார். நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற "விடுதலை" பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

அதில் அண்ணா எழுதிய கட்டுரைகள், அவர் புகழை மேலும் உயர்த்தின. 1944 ல் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது.

நீதிக்கட்சி தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவதையும், ஆங்கிலேயர்களுடனேயே
உறவாடி வருவதையும் வெள்ளையர்கள் கொடுத்த "சர்" "ராவ் பகதூர்" போன்ற
பட்டங்களைப் பெருமையோடு சுமப்பதையும் கண்டு மனம் நொந்தார்.

ஆங்கிலேயர் கொடுத்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றார்.

பெயருக்குப்பின்னால் சாதிப் பெயர் போட்டுக்கொள்வதை நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம்,
சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில்
அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 Empty Re: அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15

Post by ஜனனி Sat Sep 15, 2012 12:33 pm

அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 336442 அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 336442 அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 336442
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 Empty Re: அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15

Post by ஜனனி Sat Sep 15, 2012 12:56 pm

செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இதையொட்டிய பகிர்வு...
அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 246752_423561824369280_1764803940_n
அண்ணா 25

அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!

* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு
அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது
அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!

* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில்
வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல்
ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
இருந்தது!

* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே
தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக்
கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே
வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர்
அறிவிக்கப்படவே இல்லை!

* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள்,
புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த
ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற
விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!

* அண்ணா - ராணி
தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின்
மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து
எடுத்து வளர்த்தார்!

* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி
- சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று
நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!

* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை.
கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம்
பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று
சொல்லிக்கொண்டார்!

* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர்
நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு -
மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!

*
முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன்
வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய்
அவரது கணக்கில் இருந்தன!

* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத்
தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல்
அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான்
கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!

* புற்றுநோய்
பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர்
சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க
மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!

* அண்ணா பல மணி
நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில்
ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை...
உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப்
பேச்சு!

* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்
வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ்
மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும்
அண்ணாவின் சாதனைகள்!

* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான்
முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத்
தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!

* உலகம் பழையதும் புதியதும்,
நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று
தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும்
தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட்
வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!

* 'எதையும்
தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு',
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு',
'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்',
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை',
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும்
அவருக்குச் சொந்தமானவை!

* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர்,
கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை
என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!

* மூர்மார்க்கெட்
யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும்
வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ்
எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும்,
அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!

* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு
இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில்
குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம்
எப்போதும் இருந்திருக்கிறது!

* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!

* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில்
பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக்
கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது''
என்றார்!

'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!

* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார்.
''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால்,
ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில்
வருகிறேன்'' என்பார்!

* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக
சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி
நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர்
ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான்
என்கிறது கின்னஸ்!

* போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா
விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை
விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல
சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்துபோயிருந்தார். இப்படி அண்ணாவின்
வாழ்க்கை, தூரத்தில் இருப்பவர்களுக்காகப் பிரதிபலன் பார்க்காததாகவே
இருந்தது!

- ப.திருமாவேலன்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15 Empty Re: அறிஞ்ர் அண்ணாவின் பிறந்த நாள் ; செ-15

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» படைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர் அண்ணாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்.
» இன்றைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்
»  இன்றைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்
» செப்டம்பர் 5 ஆம் நாள். நமது போற்றுதலுக்குரிய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், வான் புகழ் தத்துவஞானி டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் திருநாள்.
» வீரமாமுனிவருக்கு பிறந்த நாள்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum