TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன?

2 posters

Go down

டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன? Empty டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன?

Post by sakthy Mon Aug 27, 2012 12:58 am

டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன?

டெசொ தீர்மானங்கள் பற்றி பலரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை வைத்து வரும் நிலையில்,டெசொ தீர்மான விளக்கவுரைக் கூட்டங்களும்,கண்ணீர் மல்கும் பேச்சுக்களும் தொடருகின்றன.இந்த டெசொ தீர்மானங்கள் என்ன சொல்கின்றன,அதன் தாக்கம் என்ன,ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது பலன் உண்டா என்பதை நாமும் தெரிந்து கொள்ளலமே.

முதலில் டெசொ பற்றிய கருத்துக்கள் என்ன? தமிழக இன உணர்வாளர்கள், இது கருணாநிதியின் வழமையான அரசியலை திசை திருப்பும் செயல் என்றும்,ராஜபக்சேயை கூட நம்பலாம் கருணாநிதியை நம்ப முடியாது என ஈழத்தில் உள்ள தமிழர்களும்,எப்படி இருக்கும், ஏதாவது நல்ல செய்தி கிடைக்குமா என ஆவலுடன் மாநாட்டுக்கு வந்த புலம்பெயர் தமிழர்கள், தங்கள் கருத்தைக் கூட சொல்லவிடாது பாலுவும்,கனிமொழி போன்றோரும் தடுத்து விட்டனர் என்ற ஏமாற்றத்துடன் இருந்த நிலையும் இப்படி பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்த நிலையில், இந்த டெசொ தீர்மானங்களில் உள்ள முக்கிய சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, தீர்மானங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

தீர்மானம் 1. ஐ.நா தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தும், அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் சொல்கிறது.

தீர்மானம் 2. 2009 போர் பற்றிய ஐ.நா.அறிக்கையை சுட்டிக் காட்டி,ஒரு குழுவை அனுப்பி விசாரணை செய்து,போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும் என்று சொல்கிறது.

தீர்மானம் 3. குடியேற்றம்,சிங்களப் பெயர் மாற்றம்,வணக்கத் ஸ்தலங்கள் அழிக்கப்படுவது போன்வற்றை இலங்கை நிறுத்த, ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தீர்மானம் 4. தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தெரிவு செய்யக் கூடிய வகையில் இந்தியா ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

தீர்மானம் 5. அடிப்படை வசதிகள் இன்றி வாழும் அவர்களுக்கு வசதி செய்து தரவும்,அதே சமயம் நிலங்கள் பறிக்கப்பட்டு வருவதை ஐ.நா. அதை தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

தீர்மானம் 6. இராணுவத்தால் பறிக்கப்படும் வீடுகள்,கடத்தல்,சித்திரவதை முகாம்கள்,பாலியல் தொல்லைகள்,உள்ள நிலையில் தமிழ் ஈழம் ஒரு இராணுவ முகாமாக காட்சி தருகிறது.90 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்று பிரித்தானிய அறிக்கை குறிப்பிட்ட நிலையில் அவர்கள் பாலியல் வன்முறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் தொடர்ந்து உள்ளாகி வருகின்றனர். ஐ.நா. இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுத்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம் 7. வணிகம்,தொழில்,கடைகள் அனைத்தையும் இராணுவம் நடத்தி அவர்களின் தொழிலை முடக்கி உள்ள நிலையில்,ஏ-9 நெடுஞ்சாலை,நல்லூர் கோயில் கடைகளை சிங்களவர்கள் கைபற்றி உள்ளனர். கனிவளம், வனவளங்களை சுறண்டி தெற்குக்கு கொண்டு செல்கின்றனர். தமிழ் மீனவர்களை அகற்றி சிங்கள மீனவர்களை குடியேற்றி வருகின்றனர். குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களையும்,சிங்கள மீனவர்களையும் திருப்பி அனுப்புவதுடன்,தொழில்,வணிகம் போன்றவை மீண்டும் தமிழர்கள் கைகளுக்கு வந்து அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஐ.நா. இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

தீர்மானம் 8. இராணுவ கொடுமைகளுக்கு அஞ்சி,வெளி நாடுகளுக்கு சென்று, சிறையில் இருப்பவர்களை ஐ.நா.ஆணையம் பொறுப்பேற்று அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

தீர்மானம் 9. இந்தியாவில் வாழும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி இந்தியாவைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10. அடிப்படை வாழ்வுரிமை,ஜனநாயக உரிமைகள் வழங்கப்படாத வரை மறுவாழ்வு வெறும் கண் துடைப்பாகும்.இது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சனையாக கருதி, ஐ.நா.வுக்கு ஊடாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும்.தமிழர் கலாச்சாரமும் மொழியும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இலங்கை அதை அழித்து வருகிறது.சிறையில் உள்ள ஆயிரக் கணக்கானவர்களை விடுதலை செய்ய வேண்டும். வாழ்வாதாரங்களை இழந்து வெளியே சென்றவர்கள் பாதுகாப்பாக இலங்கை வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.ஆசிரியர்களை நியமித்து கல்வி அறிவு மேம்படுத்த வகை செய்ய வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகளையும்,மன ரீதியிலான பாதிப்படந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்படல் வேண்டும்.இந்தியா வழங்கிய 500 கோடி உதவிகள் உரிய முறையில் தமிழர்களுக்கு சென்றடைய உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும்.

தீர்மானம் 11. இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் அதே சமயம், இந்திய மீனவர்களுக்கும் பாதுகாப்பு தரப்படல் வேண்டும்.கச்சைதீவு திரும்பப் பெறப்படுவதுடன்,தனுஷ்கோடியில் இந்திய கடற்படைத்தளம் ஒன்றையும் நிறுவ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 12. இந்தியாவில் எங்கும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி தரக் கூடாது என இந்தியாவைக் கேட்கிறது.

தீர்மானம் 13. இந்த மாநாட்டை சட்டவிரோதமானது என்று இலங்கை கூறியதையும்,வர முயலுபவர்களை மிரட்டியதையும் கண்டிக்கிறது.

தீர்மானம் 14. இலங்கை தமிழர்களுக்கு எதிரான கொள்கை கொண்ட அதிமுக வும்,அதிமுக ஆட்சியாளர்களும் மா நாடு நடத்த விடாதும்,காவல்துறை அனுமதி கொடுக்க விடாது தடுத்ததையும் இம் மாநாடு கண்டிக்கிறது.

இந்த தீர்மானங்கள் பற்றி பொதுவான ஈழத்தமிழர்களினதும்,உலகத் தமிழர்களினதும் கருத்து இதுதான். இரண்டு தீர்மானகளை அவர்கள் வரவேற்றுள்ளனர்.தீர்மானம் -1 ஐயும் தீர்மானம்-10 ல் உள்ள பொது வாக்கெடுப்பையும் பொதுவாக அனைவரும் வரவேற்றுள்ளனர்.
One called for the United Nations to hold a referendum for Tamils in Sri Lanka to decide their political future. Another thanked the nations that supported the UNHRC resolution on Sri Lanka and requested active follow up and the appointment of an overseeing agency.

ஐ.நா தீர்மானத்தில் பெரிதாக எதுவும் இல்லை என்பது தெரிந்ததே,இருந்தும் அதை நடைமுறைப்படுத்த
அமெரிக்காவும்,ஐரோப்பிய நாடுகளும் பெரிதும் முயற்சி செய்கின்றன. அவை நடமுறைப் படுத்தப்படா விட்டால், அது அந்த நாடுகளையும் ஐ.நா.வையும் அவமதித்ததாகவே கருதப்படும் என்று அவை எண்ணுவதால்,சில தடைகளை கொண்டுவரவும் அந்த நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில், இந்த டெசொ தீர்மானம் பற்றி யாரும் அக்கறை கொள்ளும் நிலையில் இல்லை.வைக்கோ போன்றவர்களும், வேறு பல இயக்கங்களும் இதற்கு முன்னரே இவை பற்றி அமெரிக்காவுக்கும் ஐ.நா.வுக்கும் தெரிவித்திருக்கின்றன. அது தவிர, மத்திய அரசோ அன்றி குறைந்த பட்சம் மாநில அரசாலோ அனுப்பப்படும் தீர்மானங்கள் ஓரளவிற்கு கண்ணை திருப்ப முயலுமே தவிர, டெசொ போன்றவையினால் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே என்பதும் கருத்தாக உள்ளது.காரணம்,இறுதி யுத்தத்தின் போது உலகம் முழுவதும் பலத்த உரத்த போராட்டங்களும்,குரல்களும் உலக மக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தும் கூட, இந்தியாவின் குரல் இலங்கைக்கு சாதகமாக இருந்ததால், எல்லாப் போராட்டங்களும் தூக்கி வீசப்பட்டு,பல ஆயிரக் கணக்கான உயிர் அழிவுக்கும்,சொத்துக்கள் அழிவிற்கும்,சித்திரவதைகளுக்கும் காரணமாகி விட்டது.இந்திய அரசு முன் வந்து உண்மையுடன் செயல்படாத வரையில்,இராணுவ பயிற்சி,மீனவர் பிரச்சனை போன்றவற்றுக்கு அனுபப்படும் கடிதங்கள் போல், டெசொ ஒரு வெற்றுக் காகிதமே.

அதே சமயம்,ஏற்கனவே நவநீதம்பிள்ளை குழுவினர் இலங்கைக்கு வர இருப்பது அறிவிக்கப்பட்ட நிலையில், மனித உரிமை மீறல்கள் பற்றி அவர்கள் கண்டறிய முயற்சி செய்யலாம்.ஆனாலும் இன்று ஈழ மக்கள், வாழ்வாதாரத்திற்கு முன்,போர்குற்ற தண்டனைக்கு முன்,அரசியல் தீர்வையும்,சுதந்திரமாக இராணுவ அச்சுறுத்தல் இன்றி வாழவுமே விரும்புகின்றனர்.

அதே சமயம், கருணாநிதி பற்றி ஆழமாக தமிழர்களின் மனத்தில் வேரூண்றிய சில செயல்கள்,பலத்த சந்தேகத்தை உருவாக்கியதையும் சொல்லியே ஆக வேண்டும்.

2009 போரில் கருணாநிதி பதவி,ஊழலில் இருந்து தப்ப சோனியா அரசுக்கு எதிராக செயல்படாததும், பொய்யான உண்ணாவிரத நாடகமும்,அமைச்சர்களின் ராஜினாமாக் கடிதக் கிழிப்பும், போன்றவை இதயத்தில் குத்திய ஊசி போன்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.அதே சமயம் தற்போது வந்து கொண்டிருக்கும் ஊழல் புகார்கள்,அடுத்த பாராளுமன்றத் தேர்தல்,குடும்ப சண்டை இவற்றில் இருந்து திசை திருப்பி தற்காலிகமாவது விடுபடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதையும்,இது முதலைக் கண்ணீராகவுமே அனைவரும் பார்க்கிறார்கள்.இந்த நிலையில் தான், டெசொ வின் தீர்மானங்கள் மீது ஈழத் தமிழர்களும்,உலகத் தமிழர்களும் அவற்றை போலியாக, சுயநலத்திற்காக ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடுவதாக, சந்தேகக் கண்களுடன் பார்க்கின்றனர்.சமீபத்தில் பழ நெடுமாறனை செத்துத் தொலை என்றும்,கம்யூனிஸ்ட் ராஜாவை உண்ணாவிரதம் இருந்து செத்திருக்கலாமே என்று குறிப்பிட்டதையும் குறிப்பிட்டு, கருணாநிதியின் உண்மை முகத்தை இவை காட்டுகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

நாம் கண்ணை மூடாத வரையில் உண்மை அழிவதில்லை.ஆனாலும் வரலாறுகள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன? Empty Re: டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன?

Post by ஜனனி Mon Aug 27, 2012 7:08 am

அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது டெசொ தீர்மானங்கள் சொல்வது என்ன? 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum