TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

3 posters

Go down

நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம். Empty நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

Post by sakthy Sat Aug 25, 2012 5:06 pm

நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
என்று சொன்னால் மட்டும் போதுமா?
நடந்தவற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

அன்பு மகள் கனிமொழி கைதான போது, அந்தத் தந்தை சொன்னது, “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்திற்காக அவள் சிறை சென்றால் உங்களது மனது எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது எனது மனது”
ஆனால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது எத்தனை தாயும் தந்தைகளும் கதறி இருந்திருப்பார்களே,எண்ணிப் பார்க்கலையா கருணை உள்ள தந்தையே? முகாம்களிலும்,சித்திரவதை முகாம்களிலும்,ஏன் தற்போது சிறைச்சாலையிலும் செய்யாத குற்றங்களுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே,அவர்களின் பெற்றோர்களுக்கு கருணையே இல்லை என்று சொல்கிறீரா அன்புத் தந்தையே? இன்று ஈழத் தமிழரின் வாழ்வாதாரம் என்று பேசும் தாங்கள்,உங்கள் நாட்டிலேயே விசாரணைகள் இன்றி முகாம்களில் கொடுமையாக செய்யாத குற்றங்களுக்காக, வாடிக் கொண்டிருக்கிறார்களே அது உங்கள் கண்களில் படவில்லையா? சோனியாவை சமாதானப் படுத்த,ஈழத் தமிழர் பற்றியும்,மீனவர்கள் பற்றியும் பேசிய சீமானை, கொடூரமாக உள்ளே தள்ளிய போது,அவரின் பெற்றோர் மனது உங்களுக்கு அன்று புரியலையா?

உங்கள் குடும்பத்திற்காக சொத்துக்களைக் குவித்தீர்களே,அதில் எத்தனை ஏழைகளின் கண்ணீரும் கலந்திருக்குமென எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் ஆட்சியில் தானே கொலைகளும்,நில அபகரிப்பும், ஏமாற்றும், லஞ்சமும்,ஊழலும்,கொள்ளையும்,ஊடக அடக்குமுறையும்,என்கவுண்டர்களும் அதிகமாக நடந்திருக்கின்றனவே அதை எல்லாம் மறந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?

தந்தை பெரியாரிடம் இருந்து பல காரணங்களுக்காக பிரிந்திருந்தாலும்,முன் வைக்கப்பட்ட ஒரு காரணம்,வயது வித்தியாசத்தில் நடந்த பெரியார்-மணியம்மை திருமணம். அதைத் தொடர்ந்து தி.க. மீண்டும் உடைந்தது. கருணா நிதிக்கு சாமரை வீசும் கி.வீரமணி தலைமையில் ஒன்று உருவானது. பெரியார் -மணியம்மை திருமணம் பேசிய கருணாநிதி, பல துணைவிகளுடன் ஊழல் கூத்தடித்ததை சொல்லவும் இல்லை,நாம் கண்டு கொண்டதும் இல்லை. ஈழம் பற்றி எதுவுமே தெரியாத குஷ்பு டெசோ பற்றி விரைவில் விளக்கவுரை நடத்த இருக்கிறார் என கருணாநிதி அறிவிக்கிறார். TESO – ESO – ஆகி இனி SO ஆகப் போகிறது. எதைப் பற்றியும் நமக்கு கவலை இல்லை.
கட்சிகளுக்கு தொண்டர்களும்,நடிகர்களுக்கு இரசிகர் மன்றங்களும் பெருகுகின்றன. நானும் என் பெயரில் இரசிகர் மன்றம் அமைக்கப் போகிறேன். ஏன் நான் வைக்கக் கூடாதா? திருமணத்திற்கு முன் தமிழச்சிகளை துகிலுரிய சொன்ன குஷ்புவிற்கு இரசிகர் மன்றங்களும்,கோயிலும் கட்டுகிறீர்கள்.ஒன்றுமே தெரியாத அவர் டெசோ பற்றியும் ஈழ மக்கள் பிரச்சனை பற்றியும் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார். சமூகத்தின் துகிலைத் தானே நான் உரிக்கிறேன்.நான் மட்டும் இரசிகர் மன்றம் அமைக்கக் கூடாதா? ஆனால் என்னை, மறைந்த நடிகை காந்திமதி போல் திட்டத் தெரிந்தவர்கள் மட்டும் சேர அனுமதிக்கப்படுவார்கள், என்ற விதி ஒன்று உண்டு.
.
நாங்கள் இங்கே கொள்ளைக்காரர்களின் மத்தியில் மாட்டிகிட்டு இருக்கோம்.....

Everybody can be great…because anybody can serve. You don’t have to have a college degree to serve. You don’t have to make your subject and verb agree to serve. You only need a heart full of grace. A soul generated by love —Martin Luther King

state terrorism- அரச பங்கரவாதம்
இன்று இலங்கை,இந்திய நாடுகளில் நடந்து வருவது தான் இந்த அரச பயங்கரவாதம்.இலங்கையில் நடக்கும் அரச பயங்கரவாதம் உலகறிந்த விசயம்.ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் அரச பயங்கரவாதமா? இது சிந்திக்க வேண்டியது தான்.மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவரின் அல்லது ஒரு குழுவினரால் ஆளப்படும் அரசு, சர்வாதிகார ஆட்சியாகவோ கம்யூனிச ஆட்சியாகவோ கருதப்படும்.ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசு, தன்னால் இயற்றப்பட்ட சட்ட திட்டங்களையும்,மனித உரிமைகளையும் மீறி செயல்படுவது,தன்னை காத்துக் கொள்ள தேவையான சட்டங்களை இயற்றாமல் விடுவது,நீதியை,சட்டத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்துவது போன்றவையும் அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான். இந்த நிலையில் இந்தியாவில்,தமிழ் நாட்டில் அல்லது வேறு மாநிலங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டபூர்வமான அரசு, தனக்கு சாதகமான சட்டங்களை இயற்றுவதும்,சாதகமற்ற சட்டங்களை இயற்றாது கண்ணை மூடிக் கொள்வதும்,தனக்கு சாதகமாக நீதியை சரிய வைப்பதும், காவல்துறையை நடு நிலை தவறி நடக்க வைப்பதும், ஊடகங்களை கையகப்படுத்துவதும், ஊடக அடக்குமுறை,அல்லது அதை தனக்கு சாதமாக செயல்பட வைப்பதும் போன்றவைகளும் அரச பயங்கரவாததிற்குள் அடங்கும். இவை ஜனநாயகத்தின் நான்கு தூண்களான நாடாளுமன்றம்,நீதித்துறை,அரச இயந்திரம், ஊடகத்துறை ஆகியவற்றை ஆட்டம் காண வைத்து விடும்.

இதை கூர்ந்து கவனிப்போமானால் இந்தியாவில் ஏன் தமிழ் நாட்டிலும் நடப்பது அரச பயங்கரவாதமே.80 களில் தொடங்கிய அசாம் பிரச்சனையை அரசு அன்றே கையாண்டிருக்குமானால் இன்றைய நிலையோ இதை விட மோசமாக இனிமேல் வரப்போகும் பிரச்சனைகளையோ தடுத்திருக்கலாம்.ஆனால் இப்போது கூட ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு மூட நினைக்கிறதே தவிர பிரச்சனைகளை தீர்க்க எண்ணவில்லை.

தொடர்ந்து வரும் ஊழல்களை கையாள விரும்பாது,தனக்கு உரியவர்களை காப்பாற்ற சட்டம் இயற்ற தயங்குகிறது.நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. தட்டிக் கேட்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் படுகிறார்கள். நீதிச் சேவை பல சந்தர்ப்பங்களில் அரசுக்கு சார்பாக செயல்படுகிறது. காவல்துறையையோ கேட்க வேண்டியதில்லை. ஊடகங்கள் அச்சம் கொள்கின்றன.நக்கீரன்,புதிய தலைமுறை ஊடகங்கள் போன்று தாக்குதலுக்கு உள்ளாவோமோ அல்லது வழக்குகளை சந்திக்க நேரிடுமோ என அச்சமடைகின்றன.

இந்த நிலையில் இருந்து கொள்ளையர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற என்ன செய்யலாம்?
கிரணயிட் ஊழல் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.எத்தனை ஊழல்கள் லஞ்சம்,நில அபகரிப்பு மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.தேர்தலில் வாக்களித்ததுடன் நம் வேலை முடிந்தது என இருந்து விட்டார்களே.இரட்சகர் வருவார் என காத்திருப்பது நியாயமா? அப்படி காத்திருந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதும் காத்திருந்தாலும் விடிவு கிடையாது. பரிதாபத்தினால் கிடைப்பது வெற்றி அல்ல தலைகுனிவு. சிபார்சினால் வேலை பெறுபவர் எப்போதும் சிபார்சு செய்தவர் முன்னால் தலை குனிய வேண்டும்.

If you feel you need organizational and financial backing for this work. You will be waiting all your life in expectation of support but actually not doing anything. Only thing you need to start is "you". The rest will automatically fall in line.

முதலில் நாம் அறியாமையையும் சகிப்புத் தன்மையையும் ஒரு புறத்தில் வைத்துப் பூட்டிவிட வேண்டும்.நாமே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.போராட்டம் பல வடிவம் பெறும்.உங்களுக்கு தெரிந்தவற்றை நண்பர்கள், உறவினர் என முடிந்தவரை பரப்புங்கள்.அடிக்கு மேல் அடி, மாறாதவரும்,சிந்திக்காதவரும் ஒரு நாள் சிந்திப்பார்கள். கொடுக்கும் செய்திகளில் பின்னூட்டம் இடுங்கள்.படிப்பவர்கள் ஒரு முறை சிந்திக்கவே செய்வார்கள். இதுவும் போராட்டத்தின் ஒரு வடிவமே. கொள்ளைக்காரங்க கிட்டே மாட்டிக் கிட்டிருக்கோம் என்றால் போதுமா? அவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டாமா? சிங்கத்தின் வாயில் அகப்பட்ட மானும்,பாம்பின் வாயில் அகப்பட்ட எலியும் கூட போராடுகின்றன.மற்ற மான்களையோ,எலிகளையோ உதவிக்கு அழிப்பதில்லை.முடியும் வரை போராடுகிறது. ஆறறிவுடைய மனிதன் மட்டும் மற்றவர்கள் வரமாட்டார்களா என்று காத்திருக்கிறான்.

போகும் பாதையில் கற்கள் முட்கள் தடைகள் இருக்கும் அதை இனம் கண்டு விலகி செல்ல வேண்டும். இல்லையேல் குத்தி கிழித்து விடும். என்ன செய்யப் போகிறோம். தொடர்ந்து கண்களை மூடிக் கொண்டு செல்லப் போகிறோமா இல்லை முட்களை இனம் கண்டு,பின்னால் வருபவர்களுக்கும் அதை காட்டி எச்சரிக்கப் போகிறோமா?
புத்தரின் எலும்புகள் என்று இந்தியா ஏமாற்றுகிறது.அதை இலங்கை புனிதமாக பார்க்கிறது. நாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம். இலங்கை இந்திய நாடுகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மத்திய அரசின் கைகளில் இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை. எந்த தனிப்பட்ட நபரும் ஆய்வுகளை சுதந்திரமாக நடத்தலாம்.மொஹென்சதாரோவில்,எகிப்தில்,ஜெருசலேமில் உலகின் பல நாட்டவரும் ஆய்வுகளை நடத்தினார்கள். இங்கே மத்திய அரசு சொல்வதை நாம் கேட்க வேண்டும்.மறுவார்த்தை கிடையாது. சமீபத்தில் கடோற்கசன் என்றோரு உடலை கண்டெடுத்ததாக செய்தி வந்தது. மறு கணமே பூட்டுப் போட்டு பூட்டி விட்டார்கள். ஆனால் தனியார் ஆய்வுகள் பாகிஸ்தானில் கூட முடியும்,இங்கு முடியாது. இவை எல்லாம் தான் அரச பயங்கரவாதம்.

உலகின் சர்ச்சைக்கு உரிய தலைவர்களுள் ஈரானிய அதிபரும் ஒருவர். இன்று கோடி கோடியாக ஊழல்,லஞ்சம் செய்து ஆட்சி நடத்தும் இன்றைய அரசுகள் ஊழல் சட்டத்தைக் கொண்டு வரவே அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த நாளில் வெறும் 1200 டாலர்களை மட்டும் ஊதியமாக பெறுபவர் இந்த ஈரானிய அதிபர். மாத முடிவில் ஒரு சில டாலர்களை மட்டும் வங்கி கணக்கில் வைத்திருக்கிறார். ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும்...?

மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் இவை எல்லாம் அரச பங்கரவாதத்திற்குள் அடங்கும்.திருட வழி சொல்லிக் கொடுத்து விட்டு கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதை விட,திருட சொல்லிக் கொடுத்த நாமே அவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டும்.Only thing you need to start is "you" –இது ஒன்றே வழி.
அசினை அடித்து விரட்டுவோம் என்றீர்கள்.எத்தனை பேர் விரட்டினீர்கள்? சிங்களத்திற்கு துணை போனவர்களின் அலைபேசிகளை புறக்கணிப்போம் என்றீர்கள்.எத்தனை பேர் புறக்கணித்தீர்கள்? உன்னி கிருஷ்னன்,இலங்கை மேடையில் தமிழர் மானத்தை அடகு வைத்து விட்டு வந்திருக்கிறார். மலையாளிகள் எப்போதும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று தெரிந்தும், இவருக்கு பொன்னாடை தரப் போவது நீங்கள் தானே.

போராட்டத்தை கையில் எடுப்போம். ஒருவர் பத்துப் பேரை மாற்றுவோம்.கொள்ளையர்களை ஓட ஓட விரட்டுவோம்.கொலம்பஸின் படுகொலைகளை,ஈழத்தின் இனப்படுகொலைகளை,கருணாநிதியின் சுய உருவத்தை,ஊழல் பெருச்சாளிகளை எத்தனை பேருக்கு சொல்லப் போகிறீர்கள்?அப்படி சொல்லும் போது போராட்டம் தானாகவே ஆரம்பமாகி விடும்.
The rest will automatically fall in line.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம். Empty Re: நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

Post by மாலதி Sat Aug 25, 2012 5:11 pm

போராட்டத்தை கையில் எடுப்போம். ஒருவர் பத்துப் பேரை
மாற்றுவோம்.கொள்ளையர்களை ஓட ஓட விரட்டுவோம்.கொலம்பஸின் படுகொலைகளை,ஈழத்தின்
இனப்படுகொலைகளை,கருணாநிதியின் சுய உருவத்தை,ஊழல் பெருச்சாளிகளை எத்தனை
பேருக்கு சொல்லப் போகிறீர்கள்?அப்படி சொல்லும் போது போராட்டம் தானாகவே
ஆரம்பமாகி விடும்.
The rest will automatically fall in line.

சக்தி.
நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம். 917304 நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம். 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம். Empty Re: நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

Post by ஜனனி Mon Sep 03, 2012 9:14 pm

ஆளுங்கட்சியோடு
இணைந்து பயன்பெற வேண்டும் என்பதே பழ.நெடுமாறனின் குறிக்கோளாக இருக்கிறது.
அதற்காக திமுகவைத் தாக்கினால் அதிமுகவில் தக்க இடம் கிடைக்கும் என்று
நெடுமாறன் கருதுகிறார். - கலைஞர்.

எதிரொலி :- கலைஞர் எவ்வளவு
மட்டகரமான அரசியல்வாதி என்பதற்கு இந்த அறிக்கையே சாட்சி. 1989 இல் திமுக
சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் எவரும் வெற்றி பெற வில்லை. அப்போது கூட
தன்னுடைய குடும்ப உறுப்பினரான மாறனுக்கு மத்திய மந்திரி பதவி விபிசிங்கிடம்
கேட்டு பெற்றார். எங்கள் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்,
கலைஞரின் மட்டகரமான, இழிவான எண்ணங்களை அறிந்தே, கலைஞரிடமிருந்து ஒதுங்கி
இருந்தார். அது எவ்வளவு உண்மை. கலைஞர், அய்யா நெடுமாறன் அவர்களை
கொச்சைபடுத்தி தன் மீது விழுந்த கறையை போக்க நினைப்பது என்பது தன் மீது
வர்ணம் பூசிக்கொண்ட நரியின் கதைதான், சாயம் வெளுத்துப்போகும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம். Empty Re: நாம் இங்கே கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "இனிய தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போ
» காய்ச்சல் கிட்ட நெருங்காது!
» நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம்
» நாம் சிந்திக்க,அதனால் நாம் தலைகுனிய ஒரு வீடியோ.
» இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! - ஈழவேந்தன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum