TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வெற்றிப்பாதையில் திருப்பூர்: தொழில் மறுமலர்ச்சிக்கு புதிய முயற்சி

Go down

வெற்றிப்பாதையில் திருப்பூர்: தொழில் மறுமலர்ச்சிக்கு புதிய முயற்சி Empty வெற்றிப்பாதையில் திருப்பூர்: தொழில் மறுமலர்ச்சிக்கு புதிய முயற்சி

Post by ஜனனி Thu Jul 26, 2012 8:35 am

சர்வதேச பின்னலாடை ஜவுளி வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு 2.5
சதவீதம் மட்டுமே; அவற்றில், 1.5 சதவீதம் வர்த்தகம், திருப்பூரை தலைமையிடமாக
கொண்டு நடக்கிறது. எதிர்காலத்தில், உலக வர்த்தகத்தில் திருப்பூர்
நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. அதற்குரிய
சாதகமான சூழல் நிலவுவதால், அத்தகைய இலக்கை எளிதாக எட்ட முடியும்.
திருப்பூரின் பின்னலாடை வர்த்தகமும், வேலைவாய்ப்பும் தற்போதுள்ள நிலையில்
இருந்து நான்கு மடங்கு உயரும். வரும் 2017க்குள் 40 ஆயிரம் கோடி ரூபாய்
அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது. இதற்கு அச்சாணியாக,
அனைத்து தொழில் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு, தொழில் மறுமலர்ச்சி
கருத்தரங்கை வரும் 28ல் நடத்துகின்றன. தொழில் துறையினர் மட்டுமின்றி, அரசு
துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதில் எடுக்கப்படும் முயற்சிகள், உலகை
"வளைத்து'க் காட்ட உதவும்!

திருப்பூரின் வளர்ச்சி: சிறிய கிராமமாக இருந்த திருப்பூர்,
இன்று மாநகராட்சியாகவும், மாவட்ட தலைநகராகவும் தரம் உயர காரணம், பின்னலாடை
வர்த்தகம். கோல்கட்டாவில் இருந்து திருப்பூர் வந்த பனியன் தொழிலுக்கு,
1984ல் ஏற்றுமதி வர்த்தக வாய்ப்பு கிட்டியது. 1985ல் 18 கோடி ரூபாயாக
இருந்த வர்த்தகம், 2012ல் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம், தொழில் துறையினரின் அயராத உழைப்பு!

"வந்தாரை வாழ வைக்கும்': தொழில் வளம் பெருகியதால், தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது.
"வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்' என போற்றும் அளவுக்கு,
வெளிமாநிலத்தவரும் வேலைவாய்ப்பு பெற்றனர். நேர்த்தியான சாயமிடல்,
உலகப்புகழ் பெற்ற பிரின்டிங் தொழில்நுட்பம் காரணமாக, பனியன் தொழில்
ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சி பெற்றது. தவறான பொருளாதார கொள்கையால், பஞ்சு
- நூல் ஏற்றுமதி காரணமாக, 2009ல், ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் தள்ளாடியது.
வரலாறு காணாத விலை உயர்வால், உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல்
ஏற்றுமதி மந்தமாகியது. அடுத்ததாக, சாயத்தொழில் பிரச்னையும் சோதனையை
ஏற்படுத்தியது.

சாதகமான சூழல்: தமிழக அரசு காட்டிய வழிகாட்டுதல்படி,
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு
பிரச்னை குறைந்து, 350க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கிக்
கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிய அப்பிரச்னை முடிவுக்கு
வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் உதவிக்கரம் நீண்டுள்ளது.
பனியன் தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில், சாதகமான காற்று
வீசத்துவங்கியுள்ளதால், பனியன் தொழில் துறையினர் புத்துணர்வு பெற்றுள்ளனர்.

மறுமலர்ச்சி கருத்தரங்கு: தொழில் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு
காணும் வகையில், அனைத்து தொழில் துறையினர் சார்பாக, தொழில் மறுமலர்ச்சி
கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் வேலாயுதசாமி
மண்டபத்தில், "வெற்றிப்பாதையில் திருப்பூர் 2012' என்ற கருத்தரங்கு, வரும்
28ல் நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு அரசின், தொழில் துறை முதன்மை
செயலர் சுந்தரதேவன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் சந்தானம்,
நிர்வாக சீர்திருத்த முதன்மை செயலர் (பயிற்சி) இறையன்பு உள்ளிட்டோர்
பங்கேற்கின்றனர். மேலும், பல்துறை வல்லுனர்களின் கருத்தரங்கமும் நடைபெற
உள்ளது.

10 சதவீதம் உயரும்! "நிப்ட்-டீ' கல்லூரி தலைவர் ராஜா சண்முகம்
கூறியதாவது: சர்வதேச பின்னலாடை ஜவுளி வர்த்தகத்தில், இந்தியாவின்
பங்களிப்பு 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. சீனா, வங்கதேசம், பாகிஸ்தான்,
இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி சந்தைகளில், இந்தியாவுக்கு கடும்
போட்டியை உருவாக்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் உதவியால்
மட்டுமின்றி, தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள்
மூலமாகவும், தொழில் பிரச்னைகளை கட்டுக்குள் வைக்க முடியும். உலக அளவிலான
வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு 2.5 சதவீதமாக இருந்தாலும், அவற்றில்
1.5 சதவீதம் வர்த்தகம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு நடக்கிறது. ஏற்றுமதி
தொழில் நகரமாக உயர்ந்துள்ளதால், அனைத்து உலக நாடுகளிலும் திருப்பூர்
பிரசித்தி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு வளர்ச்சியால், தொலைநோக்கு
பார்வையுடன் ஏற்றுமதி தொழில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி,
உலக வர்த்தகத்தில் திருப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உயர
வாய்ப்புள்ளது. தற்போது சாதகமான சூழல் நிலவுவதால், எளிதாக அத்தகைய இலக்கை
எட்டவும் முடியும். திருப்பூரின் பின்னலாடை வர்த்தகமும், வேலை வாய்ப்பும்
தற்போதுள்ள நிலையில் இருந்து நான்கு மடங்கு உயரும். அதன்படி, வரும்
2017க்குள் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் உயர
வாய்ப்புள்ளது. உற்பத்தி அளவு உயரும்போது, பருத்தி பஞ்சு, நூல் உள்ளிட்ட
மூலப்பொருட்கள் ஏற்றுமதி குறைந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளாக ஏற்றுமதி
நடப்பது அதிகரிக்கும். நாட்டின் அன்னிய செலாவணி மதிப்பும் உயரும். இவ்வாறு,
அவர் கூறினார்.

எதற்காக, கருத்தரங்கு? பனியன் தொழிலுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுத்தும் வகையில் வரும் 28ல் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அதில்,
வேஸ்ட்டை குறைக்கும் வழிகள், உற்பத்தி திறனை மேம்படுத்துதல், வங்கிகளின்
திட்டங்கள், புதிய முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சியின் பலன் ஆகிய
தலைப்புகளில் தொழில் துறை வல்லுனர்களின் உரை இடம் பெறும்.பனியன் வேஸ்ட்டை
குறைக்கும் வழிகள் என்ற தலைப்பில், பனியன் தயாரிப்பில் நூல் தயாரிப்பு,
"நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்' போன்ற பல்வேறு பிரிவுகளில் எவ்வாறு
விரையத்தை தடுக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
உதாரணமாக, "க்ரே பேப்ரிக்' எனப்படும் துணி ரோல் சாயமிட அனுப்பும்போது,
ரோலின் இரண்டு பக்கமும் மஞ்சள் மார்க்கர் பேனாவால், துணி குறித்த விவரங்கள்
எழுதும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால், துணியின் இரண்டு
முனைகளிலும் சுமார் 25 சென்டிமீட்டர் அளவுக்கு விரையமாகிறது. இதற்கு
பதிலாக, "ஸ்டிக்கரிங் மெஷின்' எனப்படும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான
ஒரு இயந்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம், துணி ரோலின் இரண்டு முனைகளிலும்
ஸ்டிக்கரில் துணி குறித்த விவரங்களை அச்சடித்து ஒட்டுவதன் மூலம், ஒவ்வொரு
முனையிலும் 15 சென்டி மீட்டர் துணி மிச்சப்படுத்தலாம்.

உதாரணமாக, 25 கிலோ ரோலில் மிச்சமாகும் துணி எடை 55 கிராம். தினமும்
சராசரியாக 10 டன் துணி உபயோகப்படுத்தும், ஒரு ஏற்றுமதி நிறுவனத்துக்கு 400
துணி ரோல் தேவைப்படும். இந்த 400 ரோல்களில் 55 கிராம் மிச்சப்படுத்தினால்,
தினமும் 22 கிலோ துணி மிச்சமாகும். இதன் மதிப்பு 7,700 ரூபாய். மாதம் 2.31
லட்சம் ரூபாய்; ஆண்டுக்கு 27.72 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. இந்த சிறு
மாறுதலே, மிகப்பெரிய தொகையை மிச்சப்படுத்தி தருகிறது. இதேபோல், ஒவ்வொரு
பிரிவிலும் , விரையத்தை தடுக்கவும், திறனை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இவ்விவரங்களை சரியானபடி, தொழில் முனைவோர் கவனத்துக்கு கொண்டு செல்வதன்
மூலம் மட்டுமே, சர்வதேச தொழில் போட்டிகளை சரியானபடி எதிர்கொள்ள ஏதுவாகும்.
அதற்காகவே, கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

பங்கேற்கும் அமைப்புகள்! தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கில், திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

* தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா)
* திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ)
* பனியன் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா)
* திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் (டெக்மா)
* திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா)
* தென்னிந்திய இறக்குமதி மெஷின் நிட்டிங் உரிமையாளர்கள் (சிம்கா)
* திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்
* திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்)
* திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கம்
* "நிட் காம்பாக்டிங்' உரிமையாளர்கள் சங்கம்
* திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன்
* திருப்பூர் தொழில் பாதுகாப்பு கமிட்டி
* திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரின்டிங் அசோசியேஷன் (டெக்பா)
* திருப்பூர் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் சங்கம்
* புதிய திருப்பூர் சிறு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்
* திருப்பூர் ஏற்றுமதியாளர் பின்னலாடை தொழில் வளாகம் (டெக்கிக்) மேலும், பல்வேறு தொழில் அமைப்புகள் கருத்தரங்கில் பங்கேற்கின்றன.

தொழில் நிலை என்ன? திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா
40 சதவீதம்; ஐரோப்பிய நாடுகள் 55 சதவீதம்; பிற நாடுகள் ஐந்து சதவீதம் பங்கு
வகிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளுடனான, எப்.டி.ஏ., (பிரீ டிரேடு அக்ரிமென்ட்)
ஒப்பந்தம் நிறைவேறும்போது, அந்நாட்டு வர்த்தகர்களுக்கு இறக்குமதி வரி
சலுகை கிடைக்கும்; அங்கிருந்து அதிகப்படியான ஆர்டர் திருப்பூருக்கு வரும்
வாய்ப்புள்ளது. மேலும், 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன்
மறுசீரமைப்பு செய்ய, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதும், பின்னலாடை தொழில்
துறையினருக்கு பேருதவியாக இருக்கும். பஞ்சு, நூல் விலையும் நிலையான
இடத்தில் உள்ளன. ஆர்டர் விசாரணையும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் ஏற்பட்ட தொழிலாளர் கூலி உயர்வு பிரச்னையால்,
அந்நாட்டு நிறுவனங்களுக்கு எட்டு சதவீத ஆர்டர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
அவற்றில் கணிசமான ஆர்டர்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் தொழில்
துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதனால், திருப்பூர் பனியன் தொழில்,
மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது, தொழில் முனைவோர் இடையே
மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"மிஸ்' பண்ணாதீங்க...: பனியன் தொழில் என்பது பருத்தி பஞ்சில்
துவங்கி, ஆடையாகி, நுகர்வோருக்கு செல்வது வரை பல்வேறு படி நிலைகளை கொண்டது.
ஒன்றில் இருந்து ஒன்று என சங்கிலி தொடர்போல் பின்னி, பிணைந்த, பல உப
தொழில்களை உள்ளடக்கியது. இத்தொழில் புத்துணர்ச்சியுடன் சர்வதேச அளவிலான
சாதனைக்கு வழிகாட்டும் வகையில் கருத்தரங்கு அமைய உள்ளது. இதில், தொழில்
முனைவோர் மட்டுமன்றி, தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், "ஜாப் ஒர்க்' நிறுவன
உரிமையாளர்கள் என தொழிலில் ஒவ்வொரு அங்கமாக இருக்கும் அனைத்து தரப்பினரும்
தவறாமல் பங்கேற்க வேண்டும். ஆலோசனைகளை பெறுவது மட்டுமன்றி, தங்களது
கருத்துகளையும் பதிவு செய்து, தொழில் வளர்ச்சிக்கு உரமிட வேண்டும்.
பின்னலாடை தொழிலை நம்பி, மளிகை, பேக்கரி, வாகன போக்கு வரத்து, அரிசி
வியாபாரம், ஓட்டல்கள் என எண்ணற்ற தொழில்கள் உள்ளன. அனைத்து தொழில்
துறையினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பூர் மாவட்ட எல்லையில் 2500ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த தொழில் நகரம்
» சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பாரம்பரியப் பண்பாடு வளர்க்கும் புதிய முயற்சி நலிந்து வரும் கிராமியக் கலைகளை வளர்க்கும் முயற்சி .வாருங்கள் கண்டு களியுங்கள்
» முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்
» ACCELERATED MOBILE PAGES (AMP) கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய தொழில் நுட்பம்
» புலிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த “பாப்பா” செய்யும் புதிய தொழில்.!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum