TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12

2 posters

Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12 Empty ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12

Post by மாலதி Thu Jun 21, 2012 4:05 pm

அத்தியாயம் 12



ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12 LTTE-Viruvirupu-20120621-1




கிட்டு பயணம் செய்த MV Yahata கப்பல் நடுக் கடலுக்கு சென்றதும்,
AHAT என்ற பெயருக்கு மாறியதையும், கப்பலில் இருந்த சட்டலைட் டெலக்ஸ் வேலை
செய்யாத நிலையில், YESU-747 தொலைத் தொடர்பு செட் மூலம் கப்பலில் இருந்து
தகவல் அனுப்பத் துவங்கியதையும், இந்த புதிய அலைவரிசையில் மெசேஜ் போவதை,
அந்த ஏரியாவில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்
ஆட்டோ-ட்ராக் பண்ணி ஒட்டுக் கேட்டதையும், கடந்த அத்தியாயத்தில்
எழுதியிருந்தோம் (அதை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்)

குறிப்பிட்ட அந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல், அந்தமானில் உள்ள இந்தியக்
கடற்படை தளத்தில் இருந்து, தாய்லாந்து கடலுக்குள் வந்திருந்தது.
(தாய்லாந்து அரசுக்கு தெரியாமல்தான்) AHAT கப்பலில் இருந்து வந்த
சிக்னல்களை டிடெக்ட் பண்ணியதும், இந்திய நீர்மூழ்கிக் கப்பல், நீருக்கு
அடியே, கிட்டு பயணித்த AHAT கப்பலை பின்தொடரத் துவங்கியது.

அதாவது நீருக்கு மேலே AHAT கப்பல் இலங்கையை நோக்கி சென்று
கொண்டிருந்தது. அக் கப்பலில் உள்ளவர்களுக்கு தெரியாமல், நீருக்கு அடியே
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பின் தொடர்ந்தது. AHAT கப்பலில் கிட்டு வரும்
விபரம், இந்திய உளவுத் துறைக்கு துல்லியமாக தெரிந்திருந்த காரணத்தாலேயே,
கப்பலை பின் தொடர்ந்து சென்று, மடக்கினார்கள்.

அந்தக் கப்பலில் பயணித்து, தற்போதும் உயிருடன் உள்ள கப்பல் சிப்பந்தி
ஒருவரின் தகவலின்படி, இரவு நேரங்களில் கப்பலுக்கு பின் தொலைவில் மலைபோல ஒரு
உருவம் தெரிந்திருக்கிறது. அதிகாலையில் அந்த உருவம் மறைந்து
போயிருக்கிறது. பின்னாட்களில் யோசித்துப் பார்த்தபோதுதான், அது புலிகளின்
கப்பலை பின் தொடர்ந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல் என்பதை அவர் உணர்ந்து
கொண்டார்.

இப்போது ஒரு மில்லியன் டாலர் கேள்வி உள்ளது.

AHAT கப்பலில் கிட்டு இருக்கிறார் என்ற விபரம் இந்திய உளவுத்துறைக்கு,
கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட மெசேஜ்களில் இருந்து மட்டும்தானா தெரிய
வந்தது? வேறு வழியில் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கவே இல்லையா?

இது ஒரு பெரிய சந்தேகத்துக்குரிய கேள்வி. AHAT கப்பலில் இருந்து தொலைத்
தொடர்பு செட்டை இயக்கியவர்கள், கிட்டுவின் பெயரை வெளிப்படையாகச்
சொல்லவில்லை. கோர்ட் வேர்ட்களில் கூறப்பட்ட சில விபரங்களை, இந்திய
நீர்மூழ்கிக் கப்பலில் ஒட்டுக் கேட்டு… உடனடியாக டீ-கோடிங் செய்து…
கப்பலில் கிட்டு செல்வதை கன்பர்ம் செய்துகொண்டு… அதன்பின், பின்தொடர்வது
என்ற முடிவை எடுத்தது என்று சொன்னால், அது அதீத கற்பனையாகத்தான் இருக்க
வேண்டும்.

கொஞ்சம் லாட்டிரல் திங்கிங்கில் யோசித்துப் பாருங்கள். கிட்டு
தாய்லாந்தில் இருந்து ஒரு கப்பலில் இலங்கை செல்லப்போகும் விஷயம், இந்திய
உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரியும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி எடுத்துக் கொண்டால், அந்தமான் கடல் தளத்தில் இருந்து,
நீர்மூழ்கிக் கப்பல், தாய்லாந்தின் புக்கெட் கடலோரம் நடமாடுவது சாத்தியம்.
கிட்டு செல்லும் கப்பலை டெயில் செய்வதற்காகவே நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பி
வைக்கப்பட்டிருப்பதும் சாத்தியம். அப்படி இருந்தால்தான், கிட்டு சென்ற
கப்பலில் இருந்து சிக்னல்களை இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பிக் பண்ணியவுடன்,
கப்பலை பின் தொடர்வது சாத்தியமாகும்.

இப்போது, நாம் குறிப்பிட்ட மில்லியன் டாலர் கேள்வியை மீண்டும் கேட்டுப்
பாருங்கள். “கப்பலில் கிட்டு உள்ள விஷயம், இந்திய உளவுத்துறைக்கு ‘வேறு
விதத்தில்’ கிடைத்ததா?”

அதற்கும் ஒரு சான்ஸ் உள்ளது. அந்த தகவல் புலிகள் இயக்கத்துக்கு உள்ளே இருந்தே போயிருக்கலாம் என்பதற்கும் சான்ஸ் உள்ளது.

அந்த விபரங்களை சொல்வதற்கு, இந்த இடத்தை விட்டால், வேறு இடம்
கிடைக்காது. எனவே தொடரில் இருந்து சற்று விலகி, சில விஷயங்களை சொல்லி
விடலாம். இந்த விபரங்கள், உங்களுக்க புதியவையாக இருக்கலாம். புலிகளின்
கப்பல்கள் அடுத்தடுத்து அடி வாங்கியது குறித்து உங்களுக்கு இதுவரை
இருந்துவந்த சில கேள்விகளுக்கு பதிலையும் கொடுக்கலாம்.

இது நடைபெற்ற காலப்பகுதியில் (90களின் துவக்கத்தில்) விடுதலைப்புலிகளின்
தலைவர் பிரபாகரனின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் குட்டி.
பிரபாகரனுக்கு வரும் தகவல்களும், பிரபாகரன் வெளியே அனுப்பம் தகவல்களும்
குட்டி மூலமாகவே போய் வந்துகொண்டு இருந்தன.

புலிகள் இயக்கத்தில் பல கம்யூனிகேஷன் பொறுப்பாளர்கள் இருந்தார்கள்.
அவர்கள் வெவ்வேறு தளபதிகளுடன் இணைக்கப்பட்டோ, வெவ்வேறு இலாகாக்களுடன்
இணைக்கப்பட்டோ இருந்தார்கள். அப்படி இருந்த மற்றொரு கம்யூனிகேஷன்
பொறுப்பாளரின் பெயர், கிருபன்.

யாழ்ப்பாணத்தில் புலிகளின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்த இந்த
கிருபன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட காலத்துக்கு முன், இந்திய அமைதிப்படை
இலங்கையில் யுத்தம் புரிந்தபோது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த இடத்தில் மற்றொரு விஷயம். கிருபனை, பிரபாகரனே நேரடியாக
இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். கிட்டு அப்போது சென்னையில் வீட்டுக்
காவலில் வைக்கப்பட்டிருந்தார். ‘ஏதோ காரணங்களுக்காக’ கிருபன் தமிழகத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்ட விஷயம், சென்னையில் இருந்த கிட்டுவுக்கு
தெரிவிக்கப்படிருக்கவில்லை.

தமிழகம் வந்த கிருபன் சென்னைக்கு செல்லவில்லை. மதுரையை தளமாக கொண்டு
இயங்கினார். மதுரை மற்றும் அதன் தெற்கே வேதாரண்யம் வரை அவரது செயல்பாடு
இருந்தது.

நாளடைவில், கிருபன் மதுரையில் இருந்து இயங்கும் விஷயம் கிட்டுவுக்கு
தெரியவந்தபோது, கிட்டுவுடன் கிருபன் முறைத்துக் கொண்டதாக தெரிகிறது.
மதுரையில் தாம் தங்கியிருந்து செயல்படுவது, கிட்டுவின் அதிகாரத்தின் கீழ்
அல்ல என்பது கிருபனின் நிலைப்பாடு. ஆனால், அந்த நேரத்தில் தமிழகத்தில்
(வீட்டுக்காவலில்) இருந்து இயங்கிய கிட்டு, கிருபனைவிட சீனியர்.

சுருக்கமாகச் சொன்னால் இருவருக்கம் இடையே முறுகல் நிலை இருந்தது.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த நேரத்திலேயே, கிட்டு
யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கிருபன் அதன் பின்னரும்
மதுரையில் தங்கியிருந்தார். பின், சென்னைக்கு சென்று இயங்கத் துவங்கினார்.
அப்போதும், வேதாரண்ய ஆபரேஷனை அவர் கவனித்துக் கொண்டார். அங்கிருந்துதான்
புலிகளின் பெரும்பாலான படகுகள் இலங்கைக்கு சென்றன.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு
நடத்திய ரவுன்ட்-அப்கள் ஒன்றில் கிருபன், ஒயர்லெஸ் கருவியுடன் சிக்கிக்
கொண்டார்.

அதையடுத்து, அப்போது தமிழகத்தில் சிக்கிக் கொண்ட மற்றைய புலிகள்
உறுப்பினர்களுடன் ஒருவராக இவரும் பூந்தமல்லி சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார். பூந்தமல்லியில் தனி செக்ஷன் ஒன்றில் புலிகள்
வைக்கப்பட்டிருந்தார்கள்.

திடீரென, தமிழக பத்திரிகையில் பூந்தமல்லி சிறையில் இருந்து விடுதலைப்
புலி ஒருவர் தப்பிய செய்தி வெளியானது. அப்படி தப்பியவர் இந்த கிருபன்தான்.
சிறையில் இருந்து நீதிமன்றத்துக்க அழைத்துச் சென்றபோது அவர் தப்பிவிட்டார்
என்பதே பத்திரிகைச் செய்தி. அவரை தமிழக போலீஸ் ‘வலை விரித்து’
தேடுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

தமிழக காவல்துறையின் வலையில் கிருபன் சிக்கவில்லை. யாருடைய கைகளிலும்
சிக்காத கிருபன் வேதாரண்யம் சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கை
சென்றுவிட்டார்.

பூந்தமல்லி சிறையில் இருந்து கிருபன் தப்பிய சாகசம் பற்றி சிறிது காலம்
புலிகள் இயக்கத்துக்குள் சிலாகித்துப் பேசப்பட்டது. இந்த ‘தகுதி’, அவரை
புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சர்க்கிள் வரை கொண்டுபோய்
சேர்த்தது. இயல்பில் ஒயர்லெஸ் ஆபரேட்டராக இருந்த கிருபன். பிரபாகரனின்
பிரத்தியேக ஒயர்லெஸ் ஆபரேட்டர் குட்டிக்கு உதவியாக நியமிக்கப்பட்டார்.

ஒயர்லெஸ் ஆபரேஷனில் ஒரே நபர், 24 மணி நேரமும் பணியில் இருப்பது
சாத்தியமில்லை. இதனால், குட்டி பணியில் இல்லாத நேரங்களில் கிருபனும்
பிரபாகரனுக்கு வரும் தகவல்களை ரிசீவ் பண்ணுவதுண்டு. பிரபாகரன் கொடுக்கும்
தகவல்களை அனுப்பி வைப்பதுமுண்டு.

இதுவரை சரி. இப்போது ஒரு ட்டுவிஸ்ட்.

கிருபன் பூந்தமல்லி சிறையில் இருந்து எப்படி தப்பினார்?

அந்த நாட்களில் சென்னை பத்திரிகைகளில் பணிபுரிந்த இரு செய்தியாளர்கள்
பின்னர் கூறிய தகவலின்படி, கிருபன் தப்பிய செய்திக்கு மீடியா கவரேஜ்
கிடைக்கும்படி பார்த்துக் கொண்டவர், யார் தெரியுமா? அப்போது உளவுத்துறை
றோவின் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர்தான்!

இது ஒரு சாதாரண ‘கைதி எஸ்கேப்’ என்ற அளவில்தான் மாலைப் பத்திரிகைகளில்
செய்தி வெளியானது. குறிப்பிட்ட றோ அதிகாரி, தமது மீடியா தொடர்புகள் மூலம்,
இந்த செய்திக்கு மறுநாள் காலைப் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுக்கும்
வகையில் சில ஏற்பாடுகளை செய்தார்.

அந்த வாரம் வெளியான வார சஞ்சிகை ஒன்றிலும், கிருபனின் எஸ்கேப் ஸ்டோரி
இடம்பெற்றது. அதை எழுதிய பத்திரிகையாளர் தற்போதும் மீடியாவில் உள்ளார்.
சஞ்சிகை வெளியிட்ட எஸ்கேப் ஸ்டோரிக்கு தகவல் சப்ளை செய்ததும், நாம்
குறிப்பிட்ட றோ அதிகாரிதான். (2000களில் ரிட்டயரான அந்த றோ அதிகாரி, ஓய்வு
பெற்றபின் சொந்த மாநிலம் சென்றபின், தற்போது வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார்)

கிருபன் தப்பிய ஸ்டோரி, விலாவாரியாக இந்திய மீடியாவில் வரவேண்டும் என்று குறிப்பிட்ட றோ அதிகாரி ஏன் விரும்பினார்?

இந்திய மீடியா செய்திகளை க்ளோஸாக ஃபாலோ செய்யும் புலிகளுக்கு அந்த
செய்தி தெரிய வர வேண்டும் என்பதற்காகவா? கிருபன் தப்பியது உண்மைதான் என்று
புலிகளை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவா? அது ஒரு சாகசச் செயல் என்று
புலிகளுக்கு காட்டி, புலிகள் இயக்கத்துக்கள் கிருபனுக்கு செல்வாக்கு
ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியா?

மேலேயுள்ள கேள்விகளுக்கான பதில், “ஆம்” என்பதாக இருந்தால், பூந்தமல்லி
சிறையில் இருந்து கிருபனின் எஸ்கேப், ஒரு செட்டப் நாடகம் என்றாகிறது. றோ
அவரை தப்ப வைத்து, தமிழக போலீஸிடம் சிக்காமல் வேதாரண்யத்தில் இருந்து
அனுப்பி வைத்தது என்றும் ஊகிக்க வைக்கிறது.

அந்த ஊகம் சரியாக இருந்தால், கிருபன், புலிகள் இயக்கத்துக்குள் ஊடுருவ விடப்பட்ட றோவின் ஸ்பை என்று அர்த்தமாகிறது.

அப்படியான ஒரு நபர், பிரபாகரனின் ஒயர்லெஸ் தொடர்புகளை ஹேன்டில் செய்தால்
என்னாகும்? தாய்லாந்தில் இருந்து கிட்டு இலங்கைக்கு கப்பல் ஒன்றில்
செல்லும் விபரம், இந்திய உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க சான்ஸ்
உள்ளது அல்லவா?

புலிகளின் கப்பல்கள் பற்றிய ரகசியங்கள் உளவுத்துறைகளுக்கு போவது பற்றி
இதுவரை வந்துவிட்டோம். வந்ததுதான் வந்தோம் மற்றொரு விஷயத்தையும்
தொட்டுவிட்டு போகலாம். இது கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்.

இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்ற காரணங்களில் முக்கியமானது,
யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்கள் வந்து சேராததுதான். வன்னியில் இறுதி
யுத்தம் நடைபெற்ற நாட்களில், ஆயுதங்களுடன் வந்த புலிகளின் கப்பல்கள்
ஒவ்வொன்றாக அடி வாங்கின. பல கப்பல்கள் சர்வதேச கடல் பகுதியில் வைத்துத்
தாக்கப்பட்டன. ஆயுதங்களுடன் மூழ்கடிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான டாலர்
பெறுமதியுள்ள ஆயுதங்கள் நீருக்கடியே போயின.

சரி. புலிகளின் கப்பல்கள் எங்கே, எப்போது வருகின்றன என்ற விபரங்கள் எப்படி இலங்கை கடற்படைக்கு சென்றன?

புலிகளின் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் வைத்து
தாக்கப்பட்டிருந்தால், இலங்கை கடற்படை ரோந்து சென்றபோது கண்ணில் பட்டது
என்று சொல்லலாம். ஆனால், அநேக கப்பல்கள் தாக்கப்பட்டது, இலங்கைக் கடல்
பகுதிக்கு வெளியே, இன்டர்நேஷனல் வாட்டரில். இந்தோனேசியாவுக்கு அருகே
வைத்துகூட புலிகளின் ஒரு கப்பல், இலங்கை கடற்படையால் தாக்கி,
மூழ்கடிக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு செல்வதற்கே இலங்கை கடற்படை கப்பல்களுக்கு குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவை.

புலிகளின் கப்பல் அங்கே வரப்போகும் விபரம் எப்படி இவ்வளவு துல்லியமாக
இலங்கை கடற்படைக்கு தெரிய வந்தது? யாராவது தகவல் கொடுத்தால்தான், அந்தப்
பகுதிக்கு இலங்கை கடற்படை கப்பல்கள் தாக்குதலுக்காக சென்றிருக்க முடியும்.

சர்வதேச கடலில் இலங்கை கடல்படை கப்பல்கள் தாக்க வந்தபோது, புலிகளின்
கப்பல்களால் ஏன் திரும்பித் தாக்க முடியவில்லை? ஏன் ஒவ்வொரு தடவையும்,
புலிகளின் கப்பல்கள்தான் மூழ்கின? புலிகளின் 16 கப்பல்கள் அடுத்தடுத்து
தாக்கி மூழ்கடிக்கப்பட்டனவே.. ஏன் ஒரு தடவைகூட அவற்றை தாக்கிய இலங்கை
கடல்படை கப்பல்கள் தாக்கப்படவில்லை? மூழ்கடிக்கப்படவில்லை?

‘16-க்கு 1’ என்ற சான்ஸில்கூட, இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றுக்குகூட
சேதம் ஏற்படவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? இதென்ன மாயமா?
மந்திரமா? இலங்கைக் கடற்படையினர் மாயாவிகளா?

இல்லை! இதற்கெகல்லாம் பின்னணி உண்டு. புலிகளின் இறுதி யுத்தம் தோற்றதற்கான அடிப்படைக் காரணம் அது. அதையும் தெரிந்து கொள்ளங்கள்.

புலிகள் யுத்தத்தில் வெற்றிகளை குவித்தபோது, அவர்களின் ஆயுதக் கப்பல்
ஆபரேஷன், கே.பி. தலைமையிலான வெளிநாட்டுப் பிரிவிடம் இருந்தது. அப்போது,
(சுமார் 15 ஆண்டுகளாக) வெளிநாட்டில் இயங்கிய பிரிவுக்கும், புலிகளின்
தலைவர் பிரபாகரனுக்கும் இடையே கம்யூனிகேஷன் தொடர்பாளராக இருந்தவரின் பெயர்
குமாரவேல்.

கே.பி. குரூப்-குமாரவேல்-பிரபாகரன் என்ற காம்பினேஷனில்தான், புலிகளுக்கு
ஆயுதங்கள் தடையில்லாமல் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. 2002-ம் ஆண்டு,
சமாதான பேச்சுக்கள் துவங்கிய பின், புலிகளின் ஆயுதக் கப்பல் ஆபரேஷனையும்,
கடல்புலிகள் பிரிவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்,
கடல்புலிகளின் தளபதி சூசை.

அதற்காக, பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த குமாரவேலை அணுகினார் சூசை. அங்கேதான் துவங்கியது எல்லாக் குழப்பங்களும்! (மீதி அடுத்த அத்தியாயத்தில்)


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12 Empty புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், அனுப்பிய ‘ரகசிய’ கப்பல்!

Post by ஜனனி Sun Jul 01, 2012 9:56 pm

அத்தியாயம் 13



ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? அத்தியாயம் 12 LTTE-Ship-20120630-12002-ம் ஆண்டு, புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான
பேச்சுக்கள் துவங்கிய நாட்கள்வரை, புலிகளின் ஆயுதக் கப்பல் ஆபரேஷன்,
வெளிநாட்டில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. கே.பி. என்று அறியப்படும்
குமரன் பத்மநாதன் தலைமையில் முழு ஆபரேஷனும் இயங்கியது.

புலிகளின் அநேக வெற்றிகளின் பின்னணியில் இருந்தது, இந்தக் கப்பல்களில்
சென்று இறங்கிய ஆயுதங்கள்தான். ‘ஆபரேஷன் ஜெயசிக்குறு’ என்ற இலங்கை ராணுவ
நடவடிக்கையில் புலிகள் வெற்றியடைந்த போது, தளபதிகள் மத்தியில் பேசிய
புலிகளின் தலைவர் பிரபாகரன், “இந்த வெற்றியின் முக்கிய காரணமே, சரியான
நேரத்தில் கே.பி. அனுப்பிய ஆயுதக் கப்பல்” என்றார்.

2002-ம் ஆண்டு வரை, வெளிநாட்டில் ஆயுதங்கள் வாங்குவது முதல், அவற்றை
கப்பல்களில் ஏற்றி, இலங்கை கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி, வெற்றிகரமாக
அனுப்பி வைத்தவர்கள் கே.பி.யின் கீழ் இயங்கிய குரூப்.

புலிகள் இயக்கத்தில் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட இவர்கள்,
இயங்கிய விதம் மிக தந்திரமானது. ஆயுதக் கப்பல்களின் நடமாட்டத்தை,
உளவுத்துறைகள் ட்ராக் பண்ண முடியாதபடி நடத்தியதுதான், இவர்களது வெற்றியின்
ரகசியம்.

ஆயுதங்களுடன் கப்பல் ஒன்று வன்னிக்கு புறப்படுகிறது என்றால், அந்த
விஷயங்களில் முற்று முழுதாக ரகசியம் காக்கப்படும். கப்பல் கிளம்பும் தேதி
எது என்பதைகூட, வன்னியில் இருந்த புலிகளுக்கு அறிவிப்பதில்லை.

“கப்பலில் ஆயுதங்கள் வரப்போகின்றன” என்பது மட்டுமே வன்னியில் புலிகளின்
முக்கிய தளபதிகள் சிலருக்கு தெரிந்திருக்கும். எந்த தேதியில் வந்து சேரும்?
கப்பலின் பெயர் என்ன? போன்ற எந்த விபரங்களும், புலிகளின் தலைவர்
பிரபாகரனுக்குகூட கே.பி.யிடம் இருந்து கூறப்பட்டதில்லை. அந்தளவு ரகசிய
ஆபரேஷன் அது!

அதுதான், ஆயுதங்கள் அடிபடாமல் போய் சேர்ந்தன.

ஆயுதங்களுடன் செல்லும் கப்பலுக்கும், வன்னியில் இருந்த புலிகளுக்கும்
இடையே கம்யூனிகேஷன் தொடர்புகள் ஏதும் இல்லாது பார்த்துக் கொண்டார்கள்.
கப்பல் நடுக்கடலில் செல்லும்போது, கப்பலின் கேப்டனுக்கும், தாய்லாந்தில்
இருந்த கே.பி.க்கும் மட்டுமே கம்யூனிகேஷன் தொடர்பு இருக்கும்.

கப்பல் இலங்கை கடல் பகுதிக்குள் பத்திரமாக சென்றவுடன், கேப்டன்,
தாய்லாந்தின் ஒரு நகரத்தில் இருந்த கே.பி.க்கு அறிவிப்பார். கே.பி. மற்றொரு
நகரத்துக்கு சென்று, மற்றொரு போன் மூலம், வன்னியில் இருந்த குமாரவேலுக்கு
அதை தெரியப்படுத்துவார். குமாரவேல் பிரபாகரனை நேரில் சந்தித்து விபரம்
கூறுவார்.

அதன்பின் பிரபாகரன், கடல் புலிகள் பிரிவின் தலைவர் சூசையை அழைத்து,
“கப்பல் விரைவில் வரும்” என்று கூறி, கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்க,
கடல் புலிகளின் படகுகளை ஏற்பாடு செய்ய சொல்வார். கடல் புலிகள் கப்பலுக்கு
அருகே படகுகளில் செல்லும்போதுதான், வந்த கப்பலுக்கு என்ன பெயர் என்ற
விபரம்கூட தெரியவரும்.

இப்படி கே.பி. டிபார்ட்மென்ட்-குமாரவேல்-பிரபாகரன் என்ற
காம்பினேஷனில்தான், புலிகளின் வெற்றிகளின் பின்னணியில் இருந்த ஆயுதங்கள்,
வன்னி வரை போய்ச் சேர்ந்தன.

புலிகளின் இந்த ஆயுதக் கப்பல் ஆபரேஷனைதான், கடல் புலிகள் பிரிவின் தளபதி
சூசை தமது பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று
விரும்பினார். அதற்கு காரணம், கே.பி. அனுப்பும் கப்பல்களை செலுத்திய
மாலுமிகளில் அநேகர், கடல் புலிகள் பிரிவில் இருந்து கே.பி.-யிடம் அனுப்பி
வைக்கப்பட்டவர்களே!

புலிகளுக்கு சொந்தமான கப்பல்களின் ஆரம்ப கால வர்த்தக நடவடிக்கைகளுக்கு
புலிகள் இயக்கத்தைச் சேராத வெளி மாலுமிகள் பயன்படுத்தப் பட்டனர். அதன்பின்,
ஆயுதங்களை ஏற்றி அனுப்பும் வேலைகள் அதிகரித்தன. ரகசியமான அந்த வேலைக்கு,
வெளி ஆட்களை பயன்படுத்த விரும்பவில்லை கே.பி.

இது பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விவாதித்ததில், கப்பல்களுக்கான
மாலுமிகளாக புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களை பயன்படுத்துவது என்று முடிவு
செய்யப்பட்டது. ஆழ்கடல் கப்பல் ஆபரேஷனுக்கு தகுதியான நபர்களை இலங்கையில்
புலிகள் இயக்கத்தில் இருந்து தேர்ந்தெடுத்து, கே.பி.-யிடம் அனுப்பி
வைக்கும் நடைமுறை துவங்கியது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆட்களுக்கு, வெளிநாடுகளில் கே.பி. ஏற்பாடு செய்த இடங்களில் மாலுமி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கே.பி.-யிடம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலிகளில், பல்வேறு
பிரிவுகளை சேர்ந்தவர்களும் இருந்தாலும், கடல் புலிகள் பிரிவில் இருந்து
அனுப்பி வைக்கப்பட்டவர்களே அதிகம். இந்த ஆபரேஷன் அதி ரகசியமானது என்பதால்,
கப்பலில் ஏற்றப்பட்ட மாலுமிகளில் ‘ரகசியம் தெரிந்தவர்கள்’ (சில கேப்டன்கள்
உட்பட) தரையிறங்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஆயுதக் கப்பல் ரகசியம் தெரிந்த சிலரை 5 வருடங்கள் வரை கப்பலில் இருந்து
இறங்கவே கே.பி. அனுமதிக்காத சம்பவங்களும் இருந்தன. ரகசியம் தெரிந்தவர்கள்
புலிகள் இயக்கத்தவர் என்பதால், அவர்களும், தரையிறங்க வேண்டும் என்று அடம்
பிடிப்பதில்லை.

இந்த இடத்தில் மற்றொரு சிறிய சம்பவத்தையும் சொல்லி விடலாம்.

2000-ம் ஆண்டு, புலிகளின் கேப்டன் ஒருவர், தரையிறங்க அனுமதி கோரினார்.
வன்னியில் கடல்புலிகளின் தளபதி சூசையிடம் பேசிய கே.பி., குறிப்பிட்ட
கேப்டனை வன்னிப் பகுதிக்கு உள்ளேயே சகல வசதிகளுடனும் வைத்திருந்துவிட்டு,
கப்பல் அடுத்த தடவை வரும்போது ஏற்றி விடுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.

கேப்டனும், சூசையின் பாதுகாப்பில் தரையில் இறக்கி விடப்பட்டார். குறிப்பிட்ட கேப்டனின் குடும்பம், அப்போது இந்தியாவில் வசித்தது.

ஆனால், அதன்பின் அவர் சூசையிடம் என்ன டீல் வைத்துக் கொண்டாரோ, படகு
ஒன்றில் ஏறி குடும்பத்திரைப் பார்ப்பதற்கு இந்தியா சென்று விட்டார். அங்கே
இந்திய உளவுத்துறை றோ-விடம் சிக்கிக் கொண்டார். அவர் மூலமாக, கே.பி.
டிபார்ட்மென்டின் ரகசியங்கள் சில றோ-விடம் போய் சேர்ந்தது. அதன்பின் றோ
என்ன செய்தது என்பதை, தொடரின் வேறு பகுதியில் தருகிறோம்.

நாம் சொல்லவந்த விஷயம் என்னவென்றால், புலிகளின் கப்பல் ஒன்று
ஆயுதங்களுடன் வெற்றிகரமாக இலங்கை கரையை அடையும்போது, அதன் மாலுமிகளில் 80%
பேர், கடல் புலிகள் பிரிவில் இருந்து சென்றவர்களாக இருப்பார்கள்.

இந்த இடத்தில்தான், ஈகோ யுத்தம் துவங்கியது.

கடல் புலிகளின் தளபதி சூசையின் ஆட்கள், வெளிநாடு சென்றதும், கே.பி.
டிப்பார்ட்மென்ட் ஆட்களாக மாறினார்கள். ரகசியம் காக்கப்பட வேண்டிய ஆபரேஷன்
என்பதால், அவர்களது நடவடிக்கைகள் கடல் புலிகளுக்கு தெரியவராது.

திடீரென ஒருநாள், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்தும் மாலுமிகளாக
அவர்களை, ஆயுதங்களை இறக்குவதற்கு செல்லும் மற்றைய கடல் புலிகள் (அவர்களது
பழைய சகாக்கள்) பார்ப்பார்கள். இந்தக் கதைகள் சூசை வரை செல்லும். கடல்
புலிகளுக்குள் ஈகோ தலையெடுத்தது.

கடல் புலிகளில் திறமைசாலிகள் சிலர், “கே.பி. டிபார்ட்மென்டுக்கு போக
விரும்புகிறேன்” என்று பிரபாகரனுக்கு வேண்டுகோள் கடிதங்களை அனுப்ப துவங்க,
பொறியாக இருந்த ஈகோ, தீயாக பற்றிக் கொண்டது.

இந்த விவகாரம் பெரிதாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் கண்டிப்பான
உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். “கரையில் நடப்பவை கப்பல் ஆட்களுக்கு தெரிய
வேண்டியதில்லை. அதேபோல கப்பலில் நடப்பவை கரையில் உள்ள ஆட்களுக்கு
தெரியக்கூடாது” என்பதே அந்த உத்தரவு. சில நாட்களுக்கு இந்த உத்தரவு
நேர்த்தியாக கடைப்பிடிக்கப்பட்டது. நாளடைவில், மீண்டும் பழைய நிலையே
திரும்பிவிட்டது.

அதையடுத்தே, ஆயுதக் கப்பல் ஆபரேஷனை தமது பிரிவின் வசம் எடுத்துக்
கொள்ளும் முயற்சியில் இறங்கினார் கடல் புலிகளின் தளபதி சூசை. அதற்காக சில
‘உள்ளடி வேலைகள்’ வன்னியில் நடைபெற்றன. சூசையின் முயற்சி வெற்றி பெற்றது.
2002-ம் ஆண்டு சமாதான காலத்தோடு, ஆயுதக் கப்பல் ஆபரேஷன், கே.பி.
டிபார்ட்மென்டில் இருந்து கடல் புலிகளுக்கு கைமாறியது.

அதற்கான ‘உள்ளடி வேலைகளின்’ பின் விழத் துவங்கியதுதான், அடி-மேல்-அடி.

வன்னியில் இறுதி யுத்தம் துவங்கியபோது, புலிகளுக்கு ஆயுதங்கள்
தேவைப்பட்டன. கடல் புலிகளால் இயக்கப்பட்ட ஆயுதக் கப்பல்கள் ஒவ்வொன்றாக
வருவதும், நடுக்கடலில் அடி வாங்குவதுமாக இருந்தன.

போதிய ஆயுதங்கள் இல்லாமல், மன்னார் பகுதியில் இருந்து புலிகள்
பின்வாங்கத் துவங்கினார்கள். “அவசரமாக மேலதிக ஆயுதங்கள் வேண்டும்” என்று
யுத்த கள முனையில் இருந்து தளபதிகள் தகவல் மேல் தகவலாக பிரபாகரனுக்கு
அனுப்ப, பிரபாகரன் சூசையிடம் சொல்ல, கடல் புலிகளின் ஒவ்வொரு கப்பலும்,
வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு புறப்படும்.

பாதி வழியில், சொல்லி வைத்தாற்போல இலங்கை கடற்படையால் தாக்கப்படும்.
கப்பல் எரிந்து போகும். மில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான ஆயுதங்கள்
கடலடியே போய்ச் சேரும்.

யுத்த முனையில், மன்னாரில் துவங்கிய புலிகளின் பின்வாங்கல் (தந்திரோபாய
பின்வாங்கல் என்றார்கள் சில புத்திசாலி ஆய்வாளர்கள்), மன்னார் மாவட்டத்தை
முழுமையாக இழந்து, அடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தையும் இழந்து, முல்லைத்
தீவு மாவட்டத்தின் பகுதிகளையும் கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருக்க…

“ஆயுதங்களை தாருங்கள். இல்லாவிட்டால் பின்வாங்குவதே ஒரே வழி” என்று புலிகளின் தளபதிகள் அபாய எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்க….

கடல் புலிகளின் கப்பல்கள், ஆயுதங்களுடன் கடலில மூழ்கிக் கொண்டிருந்தன.

ஒன்று.. இரண்டு.. மூன்று என்று துவங்கி, பத்துக்கு மேற்பட்ட கப்பல்கள் கடலடியே போயின!

புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருக்க,
வெளிநாட்டு தமிழர்களின் பல மில்லியன் டாலர் பணத்தில் வாங்கப்பட்ட
ஆயுதங்கள், புலிகளின் கப்பல்களோடு கடல் அடியே புதைந்தன. அது மட்டுமல்ல,
அத்துடன் 30 வருட கால ஆயுதப் போராட்டமும், கடல் அடியே போய்ச் சேர்ந்தது.

வன்னியின் பெரிய நிலப் பகுதியை தமது அதிகாரத்தில் வைத்திருந்த புலிகள்,
கடல் புலிகளினால் இயக்கப்பட்ட இறுதி ஆயுதக் கப்பல் நடுக் கடலில் அடிபட்ட
நேரத்தில், புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மற்றும் அதைச்
சுற்றியுள்ள சிறிய பகுதிக்குள் வந்து சேர்ந்திருந்தனர்.

யுத்தத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வி, புலிகளின் தளபதிகளிடையே புயலை
ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ஆயுதங்கள் இல்லாத விவகாரம் பற்றி
தளபதிகளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

புதுக்குடியிருப்பில், பிரபாகரனும், தளபதிகளும் கலந்துகொண்ட அவசர
ஆலோசனைக் கூட்டத்தில், காரசார விமர்சனங்கள் தளபதிகளால் முன்வைக்கப்பட்டன.

“கடல் புலிகளின் கப்பல் ஆபரேஷன் காரணமாக ஏற்பட்ட நிலையே இந்த தொடர்
தோல்விகள்” என மிக காரசாரமாக, கடல் புலிகளின் தளபதி சூசையை விமர்சித்த
தளபதி யார் தெரியுமா? புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்!

இந்த இடத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது.

“ஆயுதங்களை கொண்டுவந்து சேர்க்க எங்களால் (கடல் புலிகள்) முடியாது
என்றால், நீங்கள் அதை வெற்றிகரமாக செய்து காட்டலாமே” என்று சவால் விட்டார்
சூசை.

அதற்கு பொட்டு அம்மான், “எங்களிடம் (உளவுப் பிரிவு) பொறுப்பை
கொடுத்திருந்தால், ஆயுதங்களை கொண்டு வந்திருப்போம்” என்று பதிலுக்கு எகிற,
“முடிந்தால், செய்து காட்டுங்கள்” என்றார் சூசை.

யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட நேரத்தில், இதற்கு அனுமதி
கொடுத்தார் பிரபாகரன். அதையடுத்து, சோலோ முயற்சி ஒன்றில் இறங்கினார் உளவுப்
பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்.

வெளிநாடுகளில் இயங்கிய புலிகளின் உளவுப் பிரிவின் ஆட்கள் களத்தில்
இறங்கினர். அதுவரை நடந்த கடல் புலிகளின் தோல்விகரமான கப்பல் ஆபரேஷனுக்கு
தலைகீழான திட்டம் ஒன்றை செயல்படுத்தினார் பொட்டு அம்மான்.

அவரது ஆட்கள் வன்னிக்கு அனுப்பவதற்காக (உளவுப் பிரிவின் பாவனைக்கு) சில
பொருட்களை வைத்திருந்தார்கள். அந்தப் பொருட்களை ஒரு கப்பல் மூலம் பத்திரமாக
கொண்டுவந்து காட்டுவதே பொட்டு அம்மானின் திட்டம்.

உளவுப் பிரிவின் பொருட்களை ஏற்றுவதற்கு கார்கோ கப்பல் ஒன்றை
பயன்படுத்தாமல், பெரிய மீன்பிடி கப்பல் ஒன்றை லீஸ் செய்தார்கள் அவரது
ஆட்கள். அந்த மீன்படி கப்பலில் ஏற்றப்பட்டன பொருட்கள். கப்பலை
செலுத்துவதற்கு கடல் புலிகள் மாலுமிகள் யாரையும் பயன்படுத்தாமல்,
இந்தோனேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் பணிக்கு அமர்த்தப் பட்டனர்.

இந்தோனேசியா மாலுமிகளுடன், பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரேயொரு நபர் மட்டும் ஏறிக் கொண்டார்.

அடுத்து செய்ததுதான் அட்டகாச வேலை.

கே.பி. வெற்றிகரமாக ஆயுதங்கள் அனுப்பியபோது, தொலைத் தொடர்பில்
ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொண்ட பொட்டு அம்மான், அதே
பாணியைப் பின்பற்றினார். இந்தோனேசிய கப்பலில் ஏறிய உளவுப் பிரிவின்
நபருக்கு, தம்முடன் தொடர்பு கொள்ள கூடாது என உத்தரவிட்டார். கப்பலில்
இருப்பவர்கள் தொடர்பு கொள்வதற்கு, புலிகள் இருந்த வன்னிப் பகுதிக்கு வெளியே
கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த தொடர்பு மையம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா? கனடாவில்!

தொடர்பு சாதனங்கள் எவை தெரியுமா? 20 சட்டலைட் செல் போன்கள்!

ரகசிய கப்பல் போக்குவரத்தில் யாராலும் ஊகிக்க முடியாத உத்தி அது.
கனடாவில் இருந்த ஆபரேஷன் சென்டர் நபரிடம் 10 வெவ்வேறு இலக்கமுடைய சட்டலைட்
செல்போன்கள் கொடுக்கப்பட்டன. கப்பலில் 10 சட்டலைட் செல்போன்கள்
ஏற்றப்பட்டன.
வெவ்வேறு இலக்கங்களில் மாறிமாறி பேசியபடி, கப்பல் இலங்கையை நோக்கி நகர்ந்தது.

ஒரே செல்போன் தொடர்ச்சியாக ஒரே இடத்துக்கு பேசவில்லை என்பதால்,
வெளிநாட்டு உளவுத்துறைகள் எதுவும், உடனடியாக இவர்களது தொடர்புகளை
ட்ராக்-டவுன் செய்யவில்லை.

தவிர, சில சமயங்களில் அதே செல்போன்களில் பேசியவர்கள், இந்தோனேசிய
மாலுமிகள். அவர்கள், இந்தோனேசியாவில் உள்ள உறவினர்களுடன் பேசியது,
‘ஜாவானீஸ்’ மொழியில். இந்தோனேசிய, மலேசிய ரோந்துப் படகுகளுடன் ரேடியோ
தொடர்பு கொண்டது, ‘பாஷா இன்டோனேசியன்’ மொழியில்! (இது மலாய் மொழியின் சற்றே
மாறிய வடிவம். மலேசிய கடற்படை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்)

யாராலும் ஊகிக்க முடியாத கப்பல் ஆபரேஷன் அது. அதற்குள் இருந்தவைதான்,
வன்னியில் புலிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி செட் பொருட்கள்.

பொட்டு அம்மானின் கப்பலுக்கும், அதில் ஏற்றப்பட்ட பொருட்களுக்கும் என்ன நடந்தது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
» photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது என்ன குழந்தைன்னு தெரிய வேண்டுமா?
» போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை(!)
» போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை(!)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum