Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:13 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
பிரியாணி தம் போடும் டிப்ஸ்
5 posters
Page 1 of 1
பிரியாணி தம் போடும் டிப்ஸ்
பிரியாணி என்றாலே இஸ்லாமியர்களின் கல்யாண பிரியாணி என்றால் அனைவருக்கும் விருப்பமே.
நிறைய
பேருக்கு இந்த பிரியாணி தம் சந்தேகம் உண்டு இதில் சில டிப்ஸ்கள் கொடுத்து
எனக்கு தெரிந்ததை விளக்கி உள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும் என்று
நினைக்கிறேன்.
பேருக்கு இந்த பிரியாணி தம் சந்தேகம் உண்டு இதில் சில டிப்ஸ்கள் கொடுத்து
எனக்கு தெரிந்ததை விளக்கி உள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும் என்று
நினைக்கிறேன்.
மற்ற சமையலை விட இது தான் செய்வது ரொம்ப சுலபம், ஈசியும் கூட.
பிரியாணிக்கு
கூட்டு கிரேவி தயாரித்து விட்டு. கிரேவி தயாரிகும் போதே அரிசியை ஊற
போட்டு விடவேண்டும்.20 நிமிடம் என்பது போதுமானது, அதற்கு அதிகமாக
ஊறினாலும் பரவாயில்லை. உலை கொதிக்கும் போது சீக்கிரத்தில் எடுத்து
விடலாம்.
வடித்து தம் போட்டால் தான் ருசியான பிரியாணி.
பிரியாணி
செய்ய தாளிக்க உலை கொதிக்க என்று இரண்டு சமமான சட்டி தேவை., சின்ன
சட்டியில் உலை கொதிக்க போட்டால் அரிசி சிக்கி பாதி வெந்து வேகாமல்
இருக்கும்.
தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசியை
தட்டவேண்டும்.உடனே 7 லிருந்து பத்து நிமிடத்திற்குள் முக்கால் பாகம்
வெந்து விடும், உடனே பெரிய கண் வடிகட்டியில் ஊற்றி கஞ்சியை தனியாக
எடுத்து வைக்கனும்.
தம் போடும் கருவி தனியாக விற்கிறது, அது கிடைக்காதவர்கள்.
கனமான தோசைக்கல்லை கேஸ் அடுப்பின் மேல் வைக்கலாம்.
அரிசி கொதிக்க வைக்க அதே அளவு சட்டி கிடைக்காதவர்கள்.
ஒரே அளவில் இரண்டு சட்டியில் சமமாக கொதிக்கவைத்தும் வடித்து தம் போடலாம்.
சாதம் ரொம்ப வெந்த பிறகு தம் போட்டால் குழைந்து பிரியாணி களி, கஞ்சியாகி விடும்.
சாதம் ரொம்ப வெந்த பிறகு தம் போட்டால் குழைந்து பிரியாணி களி, கஞ்சியாகி விடும்.
கேஸ்
அடுப்பில் தீயின் தனலை மிக மெல்லிய அளவில் வைத்து அதன் மேல் தம்
போடும் கருவி (அ) கனமான தோசைகல்லை வைத்து அதற்கு மேல் பிரியாணி
சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த சுடு கஞ்சியை சட்டியில் மேல்
வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
வெந்ததும் எடுத்து ரொம்ப போட்டு கிளறக்கூடாது. லேசாக பிரட்டி விடவேண்டும்.
இது பிரியாணி பதிவில் ரிஷி கேட்ட கேள்வி
(1. இந்த பாத்திரம் வைத்தாலும் பிரியாணி வெந்து கீழிறக்கும் வரை அடுப்பு சிம்மில் எரிய வேண்டுமா?
2.
நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும்
என்ன வித்தியாசம்? நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு மட்டும் செல்லும்
என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல்
பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும்
அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை. )
நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும்
என்ன வித்தியாசம்? நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு மட்டும் செல்லும்
என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல்
பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும்
அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை. )
1. தாளித்த கூட்டு தனியாக முதலே வைத்திருந்தால். அரிசி கொதித்து வடிக்கும்
சமையத்தில் சிம்மில் வைத்து சூட்டுபடுத்தி தம்மில் ஏற்றும் போது முழுவதும்
20 நிமிடமும் தீ சிம்மில் எரிய வேண்டும்.
2. தம் போடும் கருவி அல்லது தோசை தவ்வா வைத்தால் அடிபிடிக்காது.நெருப்பு நேராக படாது.
சிலர்
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை மேலே வைப்பார்கள். இது தண்ணீர்
இல்லை வடித்த சூடான கஞ்சி. அப்படி இல்லையானால் கனமான பாத்திரமும்
வைக்கலாம்.
சாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை மேலே வைப்பார்கள். இது தண்ணீர்
இல்லை வடித்த சூடான கஞ்சி. அப்படி இல்லையானால் கனமான பாத்திரமும்
வைக்கலாம்.
சாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.
நிறைய சாதம் வைக்கும் போது தம் ஆகிக்கொண்டு இருக்கும் போது பாதியில் எடுத்து கிளறி பிரட்டி விட்டு மீண்டும் வைக்கவும்.
அரிசி
கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை
அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை
சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்
அரிசி
கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை
அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை
சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்
இதே
ஹைத்ராபாத் பிரியாணி ஒரு தனி வகை, அதில் வெங்காயத்தை பொரித்து
போடுவார்கள், தக்காளி சேர்க்கமாட்டார்கள், தக்காளிக்கு பதில் தயிர் அதிகம்
சேர்ப்பார்கள். மற்றும் வாசனை பொருள்கள் அதிகம் இருக்கும்
குக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.
ஹைத்ராபாத் பிரியாணி ஒரு தனி வகை, அதில் வெங்காயத்தை பொரித்து
போடுவார்கள், தக்காளி சேர்க்கமாட்டார்கள், தக்காளிக்கு பதில் தயிர் அதிகம்
சேர்ப்பார்கள். மற்றும் வாசனை பொருள்கள் அதிகம் இருக்கும்
குக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.
செட்டி
நாடு பிரியாணி வகைகள் மிளகு, தேங்காய் பால், மற்ற மசாலாக்களை எல்லாம்
அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி செய்வார்கள்.
நாடு பிரியாணி வகைகள் மிளகு, தேங்காய் பால், மற்ற மசாலாக்களை எல்லாம்
அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி செய்வார்கள்.
கீழே உள்ள லிங்கில் முன்று வகையான பிரியாணி உள்ளது அதில் குக்கர் முறையும் இருக்குthanks:allinalljaleela.blogspot.com
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மட்டன் - 1 கிலோஅரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்டால்டா - 150 கிராம்
பட்டை - இரண்டு அங்குல துண்டு இரண்டு
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - முன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி - ஒரு கட்டு
புதினா - 1/2 கட்டுப. மிள்காய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1 பின்ச்
ரெட்கலர் பொடி - 1 பின்ச்
எலுமிச்சை பழம் - 1நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் சட்டி காய்ந்ததும்எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.
அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.
நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.
ஓவ்வொரு
தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேன்டும்.அடுப்பை
சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்
அதன்
பின் தக்காளி ப.மிளகாய் போடவும்.இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள்,
மஞ்ஜள் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வேகவிடவும்.நல்ல எண்ணையில் எல்லா
பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும்.
போட்டு தீயை அதிகபடுத்தி
நன்றாக முன்று நிமிடம் கிளறவும்.பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து
ஊற்றவும்.அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.வெந்ததற்கு
அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.தீயின் அளவை குறைத்து வைத்து செய்வதால்
அடி பிடிக்காது.
அரிசியை
20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும் .உலை
கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.
வெந்ததும்நல்ல
பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே
சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும்.
கொட்டி
சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி
வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி
சட்டியை வைத்து தம்மில் விடவும்
ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.
அதன்
பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில்
விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல
உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்
குறிப்பு:
வீட்டில்
சாதாரணமாக செய்யும் போது டால்டாவின் அளவை குறைத்து கொண்டு எண்ணையை
செர்த்து கொள்ளலாம். கறியின் அளவும் குறைத்துக் கொள்ளலாம். விரிவாக எழுதி
உள்ளேன் மெதுவாக படித்து புரிந்து கொண்டு செய்து பார்க்கவும். நம்மால்
முடிந்தால் தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா, பீட்ரூட் ஹல்வா செய்து கொள்ளலாம்.
இந்த ஈதுபெரு நாளுக்கு டிரை பண்ணி பாருங்கள்.தொட்டுக்கொள்ள எண்ணக்
கத்திரிக்காய், தயிர் சட்னி, கேசரி, மிட்டாகான முதலியவை.மிட்டாகானா thanks:allinalljaleela.blogspot.com
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பிரியாணி தம் போடும் டிப்ஸ்
Fish Biriyani (மீன் பிரியாணி)
//இது டயட்டில் உள்ளவர்கள், பிரியாணி சாப்பிட ஆசை பட்டால் இது போல் மீன் பிரியாணி செய்து சாப்பிடலாம்.
மீன்
பொரிக்க ஆலிவ் ஆயிலை பயன் பயன் படுத்தவும்.தாளிக்கும் போது எண்ணை
கூட சிறிது கம்மியாக ஊற்றி கொள்ளலாம். நெய் தேவையில்லை./
தேவையான பொருட்கள்
சீலா மீன் - அரை கிலோ
அரிசி அரை கிலோ
வெங்காயம் - முன்று பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு மேசை கரண்டி
தக்காளி - ஐந்து பெரியதுதயிர் = இரண்டு மேசை கரண்டி
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு - ஒன்று ஒன்று
எண்ணை அரை கப்
நெய் - ஒரு மேசை கரண்டி
எலுமிச்சை - அரை பழம்
ரெடி கலர் பொடி - ஒரு பின்ச்
கொத்து மல்லி, புதினா கால் கட்டு
மீன் மசாலா போட்டு பொரிக்க
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - ஒரு மேசை கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - கால் தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - மீன் பொரிக்க தேவையானது
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து முன்றில் ஒரு பங்கை முள்ளெடுத்து விடவேண்டும்.
மீனில்
போட வேண்டிய மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து.
முள்ளெடுத்ததை லேசாகாவும், மீதியை நல்ல பொரித்து எடுத்து தனியாக
வைக்கவும்.
அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்.
மீனில்
போட வேண்டிய மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து.
முள்ளெடுத்ததை லேசாகாவும், மீதியை நல்ல பொரித்து எடுத்து தனியாக
வைக்கவும்.
அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்.
தாளிக்க
சட்டியை
காய வைத்து பட்டை ,கிராம்பு,ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு
வதக்குங்கள்.வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல கிளறி சிம்மில்
வைக்கவும்.
காய வைத்து பட்டை ,கிராம்பு,ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு
வதக்குங்கள்.வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல கிளறி சிம்மில்
வைக்கவும்.
பிறகு கொத்து மல்லி புதினா போட்டு இரண்டு நிம்டம் கழித்து தக்காளி,பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
இப்போது தக்காளியில்,மிள்காய் தூள்,மஞ்சல் துள் போடு வதக்கவும்.
பிறகு தக்காளி கூட்டாக வெந்ததும் தயிர், லேசாக பொரித்து வைத்த மீனை சேர்த்து லேசாக கிளறி, அரை லெமென் பிழியவும்.
உலை
கொதிக்கவிட்டு அரிசியை தட்டி அதில் தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது
கொத்துமல்லி புதினாவை சேர்த்து முக்கால் பதத்தில் வடிக்கவும்.
இப்போது கிரேவியை முன்றாக பிரிக்கவும்.பொரித்து வைத்துள்ள மீனை இரண்டாக பிரிக்கவும்.
ஒரு
பெரிய சட்டியில் முதலில் கொஞ்சம் கிரேவி,ரைஸ், பொரித்த மீன். கொஞ்சம்
நெய்.அடுத்து கொஞ்சம் கிரேவி ,சாதம் பொரித்த மீன், கொஞ்சம் நெய்.அடுத்து
கொஞ்சம் கிரேவி,மீதி ஊள்ள சாதம் மேலே ரெட் கலர் பொடியை கரைத்து தெளித்து
மீதி சமப்படுத்தி 20 நிமிடம் தம்மில் வைக்கவும்.
இரக்கியதும் உடையாமல் நல்ல கிளறி சாப்பிடவும்.சுவையான் மீன் பிரியானி ரெடி
குறிப்பு
மற்ற பிரியாணியை விட மீன் பிரியாணிக்கு கொஞ்சம் வேலை அதிகம் மீன் என்பதால்பொரித்து லேயராக வைத்து தம் போட்டு இரக்கனும்.
இது சரியாக செய்ய வராதவர்கள் ஃபிரைட் ரைஸுக்கு செய்வது போல் கூட செய்யலாம்.
இதுக்கு பாப்புலட் மீனும், ஹமூர் மீனும் கூட நல்ல இருக்கும்.thanks:allinalljaleela.blogspot.com
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
சப்ஜி பிரியாணி (இரண்டு வகை) Two types of vej biriyani
வெஜ் பிரியாணி (குக்கரில் செய்வது), வெஜ் பச்சடி, சாலட்
குக்கர் முறை
தரமான பாசுமதி அரிசி ஒன்னறை ஆழாக்கு (1 1/2டம்ளர்)
எண்ணெய் கால் டம்ளர்
நெய் அரை மேசை கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
வெங்காயம் முன்று
இஞ்சி பூண்டு = ஒன்னறை மேசை கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை சிறிது
புதினா சிறிது
பழுத்த தக்காளி = முன்று
உருளை ஒன்று
கேரட் ஒன்று
பட்டாணி, பீன்ஸ், கார்ன் = தலா ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
தயிர் = கால் கப்
எலுமிச்சை பழம் அரை பழம்
அரிசியை
களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி
கொள்ளவும். உருளை கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற காய் களையும்
ரெடியாக வைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணை + நெய் ஊற்றி பட்டை கிராம்பு,ஏலம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு கலர் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம்
வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்,
பிறகு கொத்துமல்லி, புதினா, பச்சமிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு கிளறவும்.
உருளை, கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு, பிறகு மற்ற காய்கறிகளை சேர்க்கவும்.
அடுத்து
மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு தூள் சேர்த்து தயிரையும் சேர்த்து கிளறி
தீயின் அளவை சிம்மில் வைத்து கிரேவி கெட்டியாகி எண்ணை தெளிந்து வரும் போது
ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறிய
அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து எலுமிச்சை பழத்தையும் பிழிந்து
கொதிக்கவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு உடனே இரக்கவும். இது குக்கரில் இருந்து இரக்கியதும் உடனே வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடனும், இல்லை என்றால் கெட்டியாகிவிடும்.
தம் போட்டு செய்யும் முறை
வெஜ் பிரியாணி (தம் போட்டு செய்வது),சிக்கன் லாலி பாப், தயிர் பச்சடி,ஊறுகாய்,ஸ்வீட் லஸ்ஸி.
இதே
குக்கரில் தண்ணீர் அளந்து விட்டு செய்யாமல் கிரேவி தனியாக தாளித்து
சாதத்தை முக்கால் பதமாக வடித்து கிரேவியில் கொட்டி 20 நிமிடம் தம் போட்டு
இரக்கவும்.
.
இந்த இரண்டு வகையுமே சுவை வித்தியாசப்படும். இதே பிரியாணியை அரைத்து விட்டும் புலாவ் போல செய்யலாம்.
வெஜிடேரியன்கள்,காலிபிளவர் 65 வுடன் சாப்பிடலாம்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பிரியாணி தம் போடும் டிப்ஸ்
பிரபாகரன் wrote:நன்றிகள் மாலதி ...மிகவும் பயன்படும் அனைவருக்கும்
நன்றி
Re: பிரியாணி தம் போடும் டிப்ஸ்
Tamil wrote:நன்றிகள் மாலதி ...மிகவும் பயன்படும் அனைவருக்கும்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: பிரியாணி தம் போடும் டிப்ஸ்
krishnaamma wrote:Tamil wrote:நன்றிகள் மாலதி ...மிகவும் பயன்படும் அனைவருக்கும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» Sunday Special - மட்டன் பிரியாணி இஸ்லாமிய தோழியிடம் அவர்களின் பிரியாணி செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணி செய்முறை உங்களுக்காகவும்
» 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ்
» 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|