TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கலையுலகில் கலகம்? -முதல்வர் வைத்த முற்றுப்புள்ளி

Go down

கலையுலகில் கலகம்? -முதல்வர் வைத்த முற்றுப்புள்ளி Empty கலையுலகில் கலகம்? -முதல்வர் வைத்த முற்றுப்புள்ளி

Post by logu Sat Feb 27, 2010 9:57 pm

கலையுலகில் கலகம்? -முதல்வர் வைத்த முற்றுப்புள்ளி Karunanidhi


"இனிமேல்
எவர் ஒருவரும் கலை உலகில் சிறுகலகமும் விளைவித்திட முடியாது என்று
திரைஉலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும்'' என முதல்-அமைச்சர் கருணாநிதி
கூறி உள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீராத
பிரச்சினையாக திரையுலகில் இருந்து வரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக
இருப்பவை அசூயை-ஏமாற்றம்-அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர்
பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என்மீது-என்தலைமையில் உள்ள அரசின் மீது
நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு
அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலே கூட என் கலைவாழ்வுக்கு
பொன்விழா-பவளவிழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு
ஊக்கமளித்திருக்கிறார்கள்.

கலை
உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே
சறுக்கல் வராமல் அழுத்தமாக பதியவைத்து, அதே வேளையில் கலையுலகில்
நலிந்தோர்க்கு நலநிதி வழங்கியும் -அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில்
கலையுலகத்தினரின் கஷ்டநஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றியும்-திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை
உருவாக்கியும்-படப்பிடிப்பு கட்டண சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை
அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும்-``திரைப்படத்துறையினர் நல வாரியம்''
அமைத்தும்-அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக்கொண்டிருப்பதால்-தான் பெற்ற
குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும்-தன்னை காத்திடும்
கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும்-நான் எங்கிருந்தாலும் அதாவது
அரசுப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில்
இரண்டையும் ஒன்றாகக்கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை
எடுத்துள்ளனர்.

கடற்கரையில்
14-4-1996 அன்று எனக்கு கலையுலகப்பொன் விழாவினை கோலாகலமாக தம்பி
விஜயகாந்த் மற்றும் கலையுலகச்செல்வர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து
நடத்திய விழாவும்- அளித்த பரிசும்-அதன் பின்னர் நினைத்தாலே இன்னமும் என்
நெஞ்சை நெகிழ வைக்கும் இனிய நண்பர் சிவாஜி தலைமையில் எனது ஐம்பதாண்டு கால
கலையுலக பணியை முன்னிட்டும்-75-வது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே
பொன்விழாவும்-பவளவிழாவும் 27-9-1998 அன்று சென்னை நேரு அரங்கத்தில்
நடந்ததும்-வழங்கிய பரிசுகளும்-கண்ணீரோடு கலந்த வாழ்த்துக்களும் மறக்கக்
கூடியதா?

அந்த விழாவிலே தலைமையுரை
ஆற்றிய போது-நடிகர் திலகம், "தமிழே! உன் தலைமகனை-என் அருமை நண்பனை-இந்த
நாட்டின் சிறந்த அறிவாளியை-உயர்ந்த அரசியல்வாதியை-வாழ வை. தமிழினமே,
கலைஞரை வாழ்த்துங்கள். உங்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் கலைஞர் அவர்களுக்கு-என் உயிர் நண்பனுக்கு-ஒரு சிறந்த
விழா எடுத்து, எவ்வளவோ பெரியவர்கள் இருந்தும்-இதற்கு என்னைத்தலைமை தாங்க
பணித்தார்களே, இதைவிட அவர்கள் எனக்கு மாபெரும் சிறப்பினை செய்ய முடியாது.

கோடி
கோடியாக எனக்கு கொட்டிக்கொடுத்தாலும் இதைவிட சிறப்பு எனக்கு கிடைக்காது.
எப்போது கலையுலகம் கலைஞர் அவர்களுக்கு மாபெரும் கலை விழா எடுப்பது? நான்
எப்போது அதற்கு தலைமை தாங்குவது? அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்கு
கிடைக்கலாம் - எனக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ? இந்த விழாவிற்கு கலைஞர்,
சிவாஜி தலைமை தாங்கலாம் என்று பெருமையோடு ஒரு நண்பனுக்கு வாய்ப்பு
கொடுத்தாரே, அதை நான் மனமார வரவேற்கிறேன்'' என்றுதான் தன் பேச்சினை
தொடங்கினார்.

கலைஞனின் பேச்சு
பொய்க்காது என்பார்கள். அவர்கள் அன்று ஆற்றிய உரையில் கூறியவாறு அந்த
விழாவிற்கு பிறகு எனக்கு பல விழாக்கள் நடைபெற்றபோதிலும், அவர் அன்று
கூறியவாறே அப்படி ஒரு சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கிறதோ இல்லையோ என்று
சொன்னபடி-அந்த மாபெரும் கலைஞன் மறைந்தே போய்விட்டார்.

பின்னர்,
23-9-2006 அன்று திரையுலகத்தினரும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து
வரிவிலக்கு அளித்தமைக்காக நடத்திய பாராட்டு விழாவும்-9-10-2009 அன்று அகில
இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் "உலக கலைப்படைப்பாளி'' என்ற
விருதினை வழங்குவதற்காக நடத்திய விழாவும் - இன்னமும் என் இல்லத்திலே
மட்டுமல்ல; உள்ளத்திலும் மறையாமல் இருக்கின்றன.

நான்
மறைந்தாலும் மறைய முடியாத அந்த அன்புரைகளை-இனிய வாழ்த்துக்களை-அந்த
விழாக்கள் நடைபெற்ற மண்டபங்கள் எப்போதும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்!
இப்போது எனக்கு கலையுலகத்தினர் எடுத்து நன்றி தெரிவிக்கும்விழா கூட-என்னை
விளம்பரப்படுத்துவதற்காகவோ-அல்லது யாரும் தங்களை விளம்பரப்படுத்தி
கொள்வதற்காகவோ எடுக்கப்பட்ட விழா அல்ல. "நன்றி மறப்பது நன்றன்று'' எனும்
வள்ளுவரின் குறள் மொழிப்படி நடந்து கொள்வதற்காக நமது கலைஞர்கள்,
திரையுலகத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய விழா தான்!

"எல்லா
முதல் அமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள்'' என்று
வக்கணையோடு சொல்லி எரிச்சலை தணித்துக்கொள்வோர் சிலர் உண்டு. அந்த
வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதல்-அமைச்சர்களுக்கும் எடுக்கின்ற
விழா வரிசையிலே ஒன்றல்ல-அதாவது பத்தோடு பதினொன்று அல்ல!
திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும்
நண்பர்களுக்கு-தோழர்களுக்கு அவர்தம் குடும்பங்கள் குறைவின்றி
வாழ்வதற்கு-அவர்கள் விடுத்த கோரிக்கையையேற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை
முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக-அவர்கள் காட்டிய நன்றிப்பெருக்கு
அந்த விழா!

சென்னை மாநகரத்தில் ஒரு
பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை
உணர்ந்து-மகிழ்ந்து-உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக்காட்டி கொள்ள எடுத்த
விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.

அழகான
குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய்-அதன் கன்னத்தில்
ஒரு சிறிய கருப்புப்பொட்டு வைத்து அனுப்புவதை பார்க்கிறோமே-அதைப்போன்றதொரு
பொட்டு-அந்த விழாவில் வைக்கப்பட்டதை பெரிதுபடுத்தி-அந்தப்பொட்டின்
வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல ஒரு
நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.

அகில
இந்தியப்புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதாப்பச்சன்-நமது சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த்-கலைஞானி கமலஹாசன்-இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து
அள்ளித்தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல்
விழுந்து-அது மாசற்ற மலர் எனினும்-அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய
விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி -அதைத்தொடர்ந்து
எழுந்த கையலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் "இதுதான் சமயம்'' என்று
சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று- "இருக்கவே
இருக்கின்றனவே சில பத்திரிகைகள்-அவைகள் அதனைப் பூதாகரமாக உருவாக்கிட
முனைந்தபோது-அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து,
முற்றுப்புள்ளி வைத்திடும் முயற்சியாக-அஜித் என்னை சந்தித்து
விளக்கமளித்தார். "நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல-இதற்கு முன்பு
நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி தான்
குறிப்பிட்டதாக'' அவர் விளக்கம் அளித்ததும் -இதனை பெரிதுபடுத்தக்கூடாது
என்று பெருந்தன்மை பூண்டு ரஜினி போன்றவர்கள் அமைதி காத்ததும்-திரையுலக
தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும்-பெரிதாக
வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம்-புஸ்வாணமாகி விட்ட
கதையாயிற்று! கலாம் விளையும் கலையுலகத்தில்-அதற்கு இந்த விழாவை ஒரு காரணம்
ஆக்கலாம் என்று கருதியோர்தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து
நிற்கின்றனர்.

உடன்பிறப்பே, இந்த
கடிதத்தின் நோக்கத்தையும்-இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் விழாவிலே
கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன்நின்று நடத்திய ராமநாராயணன்,
குகநாதன், தம்பிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரும், அவர்களோடு உடனிருந்து
உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலாம்
விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால்-அது
அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு
அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum