TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேவை, இரும்புக் கரம்!

Go down

தேவை, இரும்புக் கரம்! Empty தேவை, இரும்புக் கரம்!

Post by மாலதி Mon Apr 23, 2012 7:49 am


தேவை, இரும்புக் கரம்! Edi





சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய
தமிழ்நாட்டுக்காரர் அலெக்ஸ் பால் மேனன் இருநாள்களுக்கு முன்பாக மாவோயிஸ்டுகளால்
கடத்தப்பட்டார். அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடமையுணர்வுடன், பழங்குடியின
மக்களின் நன்மைக்காகச் செயலாற்றியவர் என்று எல்லாரும் சொல்கின்றனர். அப்படிப்பட்ட
ஓர் அதிகாரியை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைக்க வேண்டிய அவசியம்
என்ன? அதிலும் குறிப்பாக, பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் வழங்கும்
நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த மாவட்ட ஆட்சியரைக் கடத்தியிருப்பதன் மூலம் இரண்டு
செய்திகளை மாவோயிஸ்டுகள் உணர்த்துகிறார்கள்.
எந்தவிதப் பேச்சுவார்த்தை, ஜனநாயக முறைகளுக்கும் கட்டுப்பட மாட்டோம் என்பது
முதலாவது செய்தி. "இது எங்களது ஆளுமைக்குட்பட்ட பகுதி. இதற்குள் நுழையக்கூடாது,
உள்ளே வராதே' என்பது இரண்டாவது செய்தி. இந்த இரண்டுமே எந்தவொரு ஆட்சி அமைப்பாக
இருந்தாலும், ஓர் அரசுக்கு ஏற்புடையதல்ல.
கடத்தப்பட்ட எம்எல்ஏ-வை விடுவிக்காமல், கட்டப்பஞ்சாயத்தில் நிறுத்தி வைப்பது,
மாவோயிஸ்டுகளின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது என்றால், மக்களுக்கு நன்மை செய்யும்
அதிகாரியைக் கடத்திச் செல்வது, அந்தப் பகுதிக்குள் அரசு அதிகாரிகள் யாரும் பணியாற்ற
முன்வரவே கூடாது, அஞ்சி ஓடிவிட வேண்டும் என்கிற மிரட்டல் உத்தியைத்தான்
வெளிப்படுத்துகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று
தமிழக அரசுப் பணியில் சேர்ந்த பெண் அதிகாரி, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் அந்தப்
பணியை ஏற்கவில்லை. அவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றச் சொன்னதுதான் அதற்குக்
காரணம். அங்கே மாவோயிஸ்டுகள் தொல்லை அதிகம் என்பதால், ஐஏஎஸ் பணியை மறுத்துவிட்டு,
தமிழக அரசிலேயே நீடிக்க விரும்புவதாக அவர் கூறிவிட்டார். அவருக்கு ஏற்பட்ட அதே
தயக்கம், அச்ச உணர்வை எல்லா அதிகாரிகள் மனதிலும் ஏற்படுத்தி, யாரையும் சத்தீஸ்கர்
மாநிலத்தில் பணியாற்ற வரவிடாமல் செய்வதுதான் மாவோயிஸ்டுகளின் நோக்கம் என்று
தெரிகிறது.
இந்திய அதிகாரிகள் யாரும் அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று
அந்தப் பகுதியைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயற்சிப்பதன் மூலம் மக்களுக்காக
ஆயுதம் ஏந்துவதாக மார்தட்டிக்கொள்ளும் மாவோயிஸ்டுகளின் நோக்கம் கேள்விக்குரியதாகிறது.
பழங்குடியினரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதுதான்
இதன் பொருள். அப்படியானால், பழங்குடியினரை இந்திய அரசு சுரண்டுவதாகக் குற்றம்
சாட்டும் தார்மிக உரிமை இவர்களுக்கு ஏது? இவர்கள் எதைத் தவறு என்று சொல்கிறார்களோ
அதை இவர்களே கடைப்பிடிப்பது மட்டும் என்ன நியாயம்?
இப்படிப்பட்ட மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்று, சிறையில் இருக்கும் எல்லா
மாவோயிஸ்டுகளையும் விடுவித்துவிட்டால் மட்டும் இவர்கள் கடத்தலை நிறுத்தி விடுவார்களா
என்ன?
மாவோயிஸ்ட் பிரச்னை பூதாகரமாகி இருப்பதற்கு சில அடிப்படைக் காரணங்கள்
இருக்கின்றன. நிம்மதியாகத் தாங்கள் உண்டு, தங்களது வாழ்க்கை உண்டு என்று இருந்த
ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் காடுகளை
அழித்து அங்கிருந்து கனிம வளங்களை வெட்டி எடுக்க முற்பட்டபோது, ஆதிவாசிகளுக்காகக்
குரல் கொடுக்க யாருமே இல்லாத நிலைமை ஏற்பட்டதுதான் முதல் காரணம்.
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கைவிடும் நிலையில், மக்களின்
பிரச்னைக்காகக் குரலெழுப்ப ஒரு மாற்றுக் கட்சியும் இல்லாமல் போனால் அந்த வெற்றிடத்தை
நிரப்ப மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள் என்கிற ஆபத்து
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே இருக்கிறது. கல்வி அறிவு, பொருளாதார வளர்ச்சி
இரண்டுமே இல்லாத நிலையில் ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அவர்களது வலையில்
விழுவதில் வியப்பொன்றும் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களை நாம் நுழையவிடும்போது, அவர்களது தொழில் எதிரிகள்
தங்களது பகையைத் தீர்த்துக் கொள்ள இதுபோன்ற மாவோயிஸ்டுகளைத் தூண்டி விடுவதும்,
அவர்களுக்கு ஆயுத உதவி செய்து தங்கள் தொழில் எதிரிக்குத் தொந்தரவு கொடுப்பதும்
எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. எத்தனையோ எச்சரித்தும் இந்தியாவை ஆண்ட கூட்டணியும்,
ஆளும் கூட்டணியும் காதில் போட்டுக் கொள்ளாததன் விளைவுதான் இன்று ஏறத்தாழ மூன்றில்
ஒரு பகுதி மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இந்திய அரசு தனது நடவடிக்கையை ராணுவத்தின் உதவியுடன் முடுக்கியபோது
அறிவுஜீவிகள் எழுப்பிய எதிர்ப்பு, மனித உரிமை மற்றும் மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு நிலை
காரணமாக மத்திய அரசு சற்று தயக்கத்துடன் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.
இடைப்பட்ட கால அவகாசத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு
விட்டார்கள்.
மத்திய அரசு அப்போதே உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொண்டிருந்தால், இந்நேரம்
மாவோயிஸ்டுகளின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும். மத்திய அரசு
இக்கடமையில் தவறிவிட்டது. அதன் விளைவுதான் இப்போதைய கடத்தல் எண்ணிக்கை அதிகரிப்பதன்
காரணம்.
இந்திய அரசு தங்கள் பகுதியில் செயல்படவே கூடாது என்பதுதான் மாவோயிஸ்டுகள்
சொல்ல வரும் கருத்து. நம் நாட்டுக்குள் இருந்துகொண்டு, இந்திய அரசின்
அதிகாரவரம்புக்கு உள்பட்டதல்ல இந்தப் பகுதி என்று சொன்னால், அத்தகைய மாவோயிஸ்டுகள்
மீது ஓர் எதிரி நாட்டுப் படைகள் மீது எப்படிப் போர்த் தொடுப்போமோ அதே ஆக்ரோஷத்துடன்
தாக்குதலை நடத்தி, அவர்களை ஒடுக்குவதுதான் எந்தவொரு அரசும் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கை. சீனா தனது எல்லையிலிருந்து தரும் தொல்லையைவிட இது மிகவும் ஆபத்தானது.
இனியும் இதை மனிதஉரிமைப் பிரச்னையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்திய அரசின் மேலதிகாரத்தை நிலைநிறுத்த மாவோயிஸ்டுகளுக்கு எதிராக முனைப்புடன் போர்
தொடுக்க அரசு தவறினால், அதன் விளைவு நாளை இந்தியாவே மாவோயிஸ்டுகளின் பிணைப்
பொருளாக்கப்பட்டுவிடும்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
» சித்தி கொடுமை: சிதைந்த பிஞ்சுகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய மருத்துவர்கள்!
» மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
» சினேகாவை கரம் பிடித்தார் பிரசன்னா! சென்னையில் திருமணம் கோலாகலம்!!
» இந்திய முறையில், மதுரை இன்ஜினியரை கரம் பிடித்த ஜப்பான் பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum