TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!!

Go down

நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!! Empty நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!!

Post by மாலதி Sat Apr 14, 2012 3:40 pm

ஈழத்தில் இந்தியாவினால் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாகச்
சொல்லப்படுகின்றது. நாங்கள் அங்கு வீடு கேட்கவில்லை, மாறாக நாடு தான்
கேட்கின்றோம் என உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார் காசி ஆனந்தன்.

பழ.நெடுமாறானால் எழுதப்பட்ட பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற
நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்
உணர்ச்சிவசப் பேசியுள்ளார் காசி ஆனந்தன்.

அத்துடன் ஈழத்தில் சிங்களக் குடியேற்றம், சிங்களவர்கள் போடும் ஆட்டம்
கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனை கொடுமைகளும் தாயக மண்ணில் நடந்தேறிக்
கொண்டிருக்கின்றன. எங்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என
உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பழ. நெடுமாறன் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அவரது
மூத்தமகன் என்று பாராட்டப்பட்டவர், விடுதலைப் போருடன் தொடர்புடைய ஒரு தலைவி
தன்னுடைய மூத்தமகன் என்று அழைத்த பழ.நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் இன்று வெளியிடப்படுகின்றது.

இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் இருந்திருக்க
வாய்ப்புக்கள் உள்ளதை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்திராகாந்தி அவர்கள் மறைந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் கறுப்பு
கொடியினை பறக்க விடுவதற்காக இரண்டு விடுதலைப்புலிகள் கொடிக்கம்பத்தில்
ஏறியபோது சிங்கள வெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். அப்போது
யாழ்ப்பாண மக்கள் குமுறி அழுதார்கள். அவ்வாறு இந்திர காந்தி அவர்களின்
இழப்பு அன்று தமிழ்மக்கள் மத்தியில் காணப்பட்டது.

இன்று ஐ.நாவின் மனித உரிமைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒரு
நிறைவான அறிக்கை அல்ல ஆனாலும் அமெரிக்கா உலக அரங்கில் முதல் முதல்
தமிழர்களின் அந்த மண்ணில் நிகழ்ந்த நிகழ்வினை குறித்த ஒரு கருத்தினை
முதன்முதல் ஓங்கி ஒலித்ததால் அது உலக அரங்கில் தமிழர்களின் போர்முனைக்கு
ஒரு தொடக்கமாக எங்கோ கதவை தட்டுகின்ற நிகழ்வாக இருப்பதால் நாங்கள் அதனை
வரவேற்கின்றோம்.

ஆனாலும் அது முழுமையான அறிக்கை அல்ல. அதற்கு முன்னர் ஐ.நா அறிக்கை குழு
வெளியிட்ட அறிக்கையிலும் இனஅழிப்பு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இந்த
அறிக்கையிலும் அவ்வாறு இல்லை. மனித உரிமை மீறல் என்று தான்
குறிப்பிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம் ஒருசிறிய தொடக்கம் போல தமிழர்களுக்கு
பட்டாலும் அதில் பெரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில்
அமெரிக்கா தன்னுடைய இந்த கருத்தினை மாற்றிக்கொள்ளும் காலம் வரும். இந்த
தீர்மானத்தில் பாரிய கொடுமை காணப்படுகின்றது.

இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று
சொல்லப்படுகின்றது. தமிழர் வாழும் நிலப்பரப்பு ஒருதாயகம் அந்த தாயகம் தான்
வடக்கு கிழக்கு ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கையில் வடக்கு என்று
சுருக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இது ஒரு பாரிய கொடுமை. ராஜீவ் காந்தி
உடன்படிக்கையில்கூட தமிழர் தாயகம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது.

பிரபாகரன் ஒரு ஈடிணையற்ற தலைவன். என்மீது அவர் வைத்திருப்பது பாசம்.
ஆனால் நெடுமாறன் அவர்கள்மீது வைத்திருப்பது மரியாதை. தலைவர் அவர்கள்
நெஞ்சத்தில் நெடுமாறன் அவர்கள் இடம்பிடித்திருக்கின்றார் என்பது எனக்கு
நீண்ட நெடுங்காலமாக தெரியும், நெடுமாறன் அவர்கள் மீது தலைவர் அவர்கள்
மிகப்பெரிய உயர்வான எண்ணத்தை கொண்டுள்ளார்.

ஆகவே தமிழர்களது வரலாறு படைத்தவர் எங்கள் தலைவர் அவர்கள். துப்பாக்கி
ஏந்திய பெண் என்ற வரலாற்றை பிரபாகரன் அவர்கள்தான் படைத்தார். அது
தமிழர்களின் வரலாற்றில் பெரிய வரலாறு.

சேரன்,சோழன்,பாண்டியனிடம் படைகள் இருந்தான ஆனால் தமிழருக்கு வான்படையினை
தலைவர் அவர்கள்தான் படைத்தார். அது வரலாறு. அதனை யாரும் மறக்கமுடியாது.
உலக விடுதலையாளரின் வரலாற்றில் முதல் முதல் போராளியின் கழுத்தில் நஞ்சை
கட்டியவர் தலைவர் அவர்கள். ஒரு போராளியின் சாவுக்கு அஞ்சாத அந்த உறுதியினை
நிலைநாட்டியவர் எங்கள் தலைவர் அவர்கள்,

உலக விடுதலைப் போராளிகளுடைய வரலாற்றில் ஒவ்வொரு நாடுகளின் உதவியுடன்
தான் களத்தில் நின்றார்கள். அதனை இந்த நுலில் மிகச்சிறப்பாக
சொல்லுகின்றார்.

வியட்நாம் போராளிகள் களத்தில் நின்றார்கள் என்றால் சீனா, ரஸ்ய நாடுகளின்
ஆதரவுடன் தான் களத்தில் நின்றார்கள், பாலஸ்தீனம் களத்தில் நின்றது என்றால்
அதனை சுற்றியுள்ள அரபு நாடுகளின் உதவியுடன் தான் அவர்கள் களத்தில்
நின்றார்கள்,நேதாஜி களத்தில் இறங்கினார் என்றால் அதற்கு ஜெர்மனி இத்தாலி
போன்ற நாடுகளின் உதவி இருந்தது,

ஆனால் எந்த நாட்டின் எந்த அரசின் உதவி இல்லை என்றாலும் விடுதலைப் போராளி
தன்னுடைய விடுதலை உணர்வினை கொச்சைப்படுத்த மாட்டான். தனித்து களத்தில்
நின்று விடுதலைப்போராட்ட வரலாற்றினை நிகழ்த்திக் காட்டிய ஈடு இணையற்ற
போராளியாக தலைவர் அவர்களை பாக்கின்றோம்.

என்றும் எதற்கும் வளைந்ததில்லை அப்படி ஒரு தலைவர். அப்படிப்பட்ட
அற்புதமான தலைவர் அவர்களை பற்றிய பல செய்திகளை இந்த நூலில் நெடுமாறன்
அவர்கள் எழுதியுள்ளார்.

உலகில் உள்ள அத்தனை விடுதலையாளர்களுக்கும் வழிகாட்டியாக இந்த நூல்
இருக்கின்றது. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த கருத்துக்கள்
உலகம் எங்கும் பரவவேண்டும்,

தலைவர் அவர்கள் ஆயுதத்தினை மட்டும் வைத்திருந்தவர் அல்ல அவரிடம் அறிவு,
ஆற்றல், கருத்து வலிமை,அவர் உருவாக்கிய போராளிகளிடமும் அதே கருத்து
வலிமைகொண்ட போராளிகளாக உருவாக்கும் திறமையினை கொண்டவர் எங்கள் தலைவர்.

இப்படிப்பட்ட விடுதலைப் பேராட்டம் தொடர்பான புதிய புதிய தகவல்களை
கருத்துக்களை கொண்ட நூலாக இந்த நூல் காணப்படுகின்றது. தலைவர் அவர்கள்
உண்மையில் பல நிலைகளில் ஈடுஇணையற்ற இயக்கத்தை உருவாக்கினார். அவர் படைத்த
வரலாறு யாரும் படைக்கவில்லை. அவர் உருவாக்கிய வீரர்களை போல் உலகத்தில் அந்த
வீரர்களுக்கு இணையான வீரர்கள் இல்லை .

தற்போது தமிழர் தாயகத்தில் மிகக்கொடுமையான நிலமை சிங்களக் குடியேற்றம்.
இன்னும் 10 ஆண்டுகள் தமிழீழத்தில் சிங்கள குடியேற்றம் தொடர்ந்து
நிகழுமானால் அதற்கு பிறகு தமிழீழம் என்ற தாயகம் இருக்காது.

ஆகவேதான் தொடக்கத்தில் இருந்து தாயக கொள்கையினை தலைவர் அவர்கள் வலியுறுத்தி வருகின்றார் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்களவர் அடிக்கும் கொலைவெறி கூத்து கொஞ்ச
நஞ்சமல்ல. தலைவர் அவர்கள் ஆயுதத்துடன் களத்தில் நின்ற 2009 வரையான 33
ஆண்டுகள் அதற்கு பிறகு இந்த மூன்று ஆண்டுகள் சிங்களவர்கள் தமிழீழத்தில்
போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல சிங்களக் குடியேற்றம் மிக கொடுமையாக தாயக
மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது

இங்கு ஜம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொல்கின்றார்கள் நாங்கள்
ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்த கேடும் நினைத்ததில்லை. தமிழர்
மண்ணை துலைத்து கட்டுங்கள் என்று சிங்களவர்கள் தான் சொல்கின்றார்கள்.
இவ்வாறு தான் தற்போதைய ஈழத்தின் நிலமை காணப்படுகின்றது.

தமிழகத்தில் தமிழக அரசும் ஈழத்தமிழர் விடயத்தில் துணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்

பழ நெடுமாறன் அவர்களின் இந்த நூலினை படித்தால் எதிர்காலத்தில்
இந்தியஅரசின் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் கூட அவர்களிடம் மாற்றம் வருவதற்கு
இந்த நூல் பெரியளவில் அமைகிறது அறிவூட்டும் நூலாக இந்தநூல் அமைகிறது
சீண்டிப்பாக்கும் நூலாக அல்ல வாசிப்பவர்களை தொட்டுஉலுக்கும் நூலாக
காணப்படுகின்றது.

இந்தநூல் ஒரு அரும்பெரும்நூல் இதுவரை வெளிவந்த ஈழத்தமிழர்களின் வரலாற்று
பொறித்த நூலில் இந்த நூல் முதன்மையானது. இதனை அனைவரும் வாங்கிப்
படியுங்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு
நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்
தெரிவித்துள்ளார்.



நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!! Kasi01

நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!! Kasi012


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!! Empty Re: நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடல்ல! நாடுதான்!! உணர்ச்சி பொங்கப் பேசிய காசி ஆனந்தன்!!!

Post by மாலதி Sat Apr 14, 2012 3:41 pm